அரசு ஊழியர்கள் எனும் அலுவலர்கள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமா ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை எனும் பெயரில் சாமானிய மக்களிடமும், ஏழை எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியங்களாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்துச் செல்ல விட்டு விட்டு வியாபாரம் செய்து வாழும் மக்களைத் தான் பிடிக்கிறார்கள்..!தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படைக் குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு. எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக சிறப்புத் தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூபாய்.50,000- பணத்தை விட அதிகமாகப் பணம், நகை அல்லது பொருட்களை ஆவணங்களின்றி எடுத்துச் சென்றால் தான் அதனைப் பறிமுத
ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறை நீதிமன்றத்தில் தகவல். சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தென்காசி மாவட்டம் குலசேகரபட்டி விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதில், ‘என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராகய் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி, ஈஷா யோகா மையத்திலிருந்து என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?’ எனக் கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மைத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். அது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையத்தில் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசாரணையைத் துரித