பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்த. பிரசாந்த் கிஷோர் வந்தது பலரும் புருவம் உயர்த்தி பார்க்கும் நிலை அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துத் தருவதில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். இவரது ‘ஐ பேக்’ நிறுவனம் அரசியல் கட்சி தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். அவரும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார்.
தனது நிறுவனத்துக்காக 150-க்கு மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து அவர்கள் மூலமாக இதற்கான பணிகளை தொடங்கினார். கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் நடந்தன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் பிரசாரமும் வியூகங்களும் எடுபட்டன. கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
தி.மு.க.வுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சுனில். அவர் தலைமையிலான குழு நமக்கு நாமே பிரசார பயணம் தொடங்கி, தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார யுக்தி மற்றும் ஸ்டாலினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அவரது பங்கும் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு பிறகு சுனில் மீதான நம்பிக்கை குறைந்து போனதால் சுனில் நீக்கப்பட்டார்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., ரஜினி, வியூகத்தை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகி வருகிறது. இதையடுத்து பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்து இதனை மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், 2021 சட்டசபை தேர்தலுக்காக ஐபேக் அமைப்பில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் திறமையாளர்கள் எங்களுடன் பணியாற்ற உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்
அத்துடன், நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் நிலைநிறுத்தி மீண்டும் மாநிலத்தில் முன்பிருந்த பெருமையை நிலைநாட்ட உதவுவார்கள்” என பதிவிட்டுள்ளார். இதற்கு ஐபேக் நிறுவனம் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பணியாற்றியதால் அவர் முதல்வராக பதவிக்கு வந்தார். தி.மு.க.வுடன் பிரசாந்த் கிஷோர் கை கோர்த்துள்ளது அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோருடன் இணைந்ததற்கு கட்சியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. பெரியார் கொள்கைகளை மூலதனமாக கொண்ட ஒரு கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவி தேவையா என்ற வாதம் எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகிறது.
மற்றொரு பக்கம், அரசியல் எதிரிகள் பலம் மிக்கவர்களாக மாறி வருவதால், அதை சமாளிக்க சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. ஆதரவாளர்களால் சொல்லப்படுகிறது.
2014 ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தபோது பிரசாந்த் கிஷோர் பெயர் பிரபலமாக அடிபட தொடங்கியது.
அந்த வெற்றியில் பா.ஜனதா வெற்றிக்கு உழைத்த பிரசாந்த் கிஷோர் அணியின் பங்களிப்பு கணிசமாக இருந்ததாக கூறப்பட்டது. 2015ம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கிஷோர் உதவியை நாடியது. அந்த அணிக்காக பணியாற்றிய போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் தன்னை இணைத்து கொண்டார். இதற்கு நடுவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காகவும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்காகவும் வியூகம் வகுத்துக் கொடுத்தார்.
2021ம் ஆண்டு எப்படி யாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கடும் முயற்சியை எடுத்து வரக்கூடிய ஸ்டாலினுக்கு, பிரசாந்த் கிஷோர் பக்கபலமாக இருப்பார் என்பதே தி.மு.க.வினரின் நம்பிக்கை.
தி.மு.க.வுக்கு மக்களிடம் எந்தெந்த பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது, எங்கே பலவீனமாக இருக்கிறது, கட்சியின் செல்வாக்கை முடிவு செய்யும் தனிப்பட்ட நபர்கள் யார், கட்சியின் செல்வாக்கை காலி பண்ணும் தனிப்பட்ட நபர்கள் யார், யாரை சேர்த்தால் கட்சி வளரும், யாரை ஒதுக்கிவைத்தால் கட்சி ஜெயிக்கும் என்பன போன்ற பல்வேறு நிலவரத்தை தனது ஆய்வாளர்கள் மூலம் அறிந்துகொள்ள பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படியே களத்துக்கு ஏற்ப உத்திகளை வகுக்கிறார். பிரசாந்த் கிஷோரின் வருகையால் இன்னும் சில நாட்களில் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கும் நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்