சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் மீண்டும் தொடக்கம்.
இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை இந்தியா முழுவதும் வழங்கிவருகிறது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல்வேறு சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் ஏராளமான நாடுகளுக்கு இந்த சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி,
• விரைவு சர்வதேச தபால்- 67 நாடுகளுக்கும்,
• விமானம் மூலம் அனுப்பப்படும் பார்சல்கள்- 82 நாடுகளுக்கும்
• ஐடிபிஎஸ்- 15 நாடுகளுக்கும்
• பதிவு தபால்கள்- 82 நாடுகளுக்கும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள.
இந்தத் தகவல் சென்னை மாநகர வடக்கு பிரிவு தபால் நிலையங்களுக்கான மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்