இளநிலை பொறியாளர் [சிவில், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு, 2020 (தாள் 1)
இளநிலை பொறியாளர் [சிவில், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு, 2020 (தாள் 1)]-ஐ கணினி சார்ந்த முறையில் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்.
1,39,731 தேர்வர்கள் தென் மண்டலத்தில் இருந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிவில் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு 66 மையங்களிலும், இயந்திரவியல் தேர்வு 49 மையங்களிலும் மின்சாரவியல் தேர்வு 52 மையங்களிலும் நடைபெறும்.
இம்மையங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்நூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா விசாகப்பட்டினம் மற்றும் விஜய நகரம் ஆகிய நகரங்களிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், கரீம் நகர் மற்றும் வாரங்கல்லிலும், தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களிலும் என மொத்தம் 20 இடங்களில் அமைந்துள்ளன.
2021 மார்ச் 22 முதல் 24 வரை 3 நாட்களுக்கு இத்தேர்வு தென்மண்டலத்தில் நடைபெறும். ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்டுகள் என காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறும்.
தேர்வு தேதிக்கு நான்கு நாட்கள் முன்பு முதல் அனுமதி சீட்டை விண்ணப்பதாரர்கள் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறுந்தகவல் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு சீட்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (கைபேசிகள், ப்ளூடூத் சாதனங்கள், ஹெட்போன்கள், எழுதுகோல் மற்றும் பொத்தான் ஆகியவற்றில் பொருத்தக்கூடிய ஒளிப்பதிவுக் கருவிகள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள், உள்ளிட்டவை) ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.
மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசல் அடையாள சான்று ஆகியவை இல்லாமல் தேர்வு எழுத தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் விவரங்களுக்கு தென் பிராந்திய அலுவலகத்தின் உதவி எண்களை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் (044-28251139 & 9445195946).
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆணையம் எடுத்துள்ளதால், தேர்வு பாதுகாப்பான முறையிலும் எளிதாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை, பணியாளர் தேர்வாணையம் (தென் மண்டலம்), சென்னை, இணை செயலாளர் மற்றும் மண்டல இயக்குநர் திரு கே நாகராஜா செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்