இரத்த அணுக்களை அதிகரிக்க பப்பாளி இலை சாறு
இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் திடீரென வீழ்ச்சி ஏற்படுவது கோவிட்-19 அறிகுறியாக கூறப்படுகிறது. அப்படி ஏற்பட்டால், அவருக்கு பப்பாளி இலைச்சாறு கொடுப்பது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் போதும், இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு ஏற்படுகிறது. இரத்த அணுக்கள் விரைவாக குறைவது என்பது நோயின் தீவிர அறிகுறியாகும். அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சையளிக்க வேண்டும். இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் திடீரென வீழ்ச்சி என்பது கோவிட்-19 அறிகுறியாகக் கூறப்படுகிறது. இரத்த அணுக்களின் எண்ணிக்கைக் குறைவேற்பட்டால், அந்த நபருக்கு பப்பாளி இலைச்சாறு கொடுத்து இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோயின் தீவிரத்திலிருந்து மீட்கலாம். பப்பாளி இலைச்சாறு செய்வது சுலபம் பப்பாளி இலையின் மருத்துவ குணம்
பப்பாளி இலைகளில் அசிட்டோஜெனின் எனப்படும் தனித்துவமான பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய்க்குச் சிகிச்சை அளிக்கும்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அணுக்கல் குறையும் போது பப்பாளி இலை சிறந்த தீர்வு. நோயிலிருந்து விரைவாக மீட்கப்படுவதை உறுதி செய்கிறது. பப்பாளி இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டின்கள் போன்ற பல இயற்கை தாவர சேர்மங்களுள்ளன. அவை சோர்வைப் போக்குவதோடு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளை அழித்து இரத்த அணுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் தடுக்கின்றன. பப்பாளி இலைச்சாறு செய்முறை:
நான்கு பப்பாளி இலைகளைச் சுத்தமாகக் கழுவி பொடியாக வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைத்தபின் அதை அப்படியே இரண்டு நிமிடம் விடுங்கள். இப்போது, தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்படும்.
அதை வடிகட்டி ஒரு கோப்பையில் ஊற்றிக்கொள்ளுங்கள். குடிக்க முடியாத அளவுக்கு மிகவும் கசப்பாக இருந்தால், சிறிது தேன் அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு காலைல மாலை இரு முறை 30 மில்லியும், சிறுவர்களுக்கு 5 முதல் 10 மில்லியும் கொடுங்கள்.
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சி வைட்டமின் முக்கியம். அதற்கு ஆரஞ்சு ஜூஸ், கேரட் ஜூஸ், காலிஃபிளவர் சூப், பூசணி சூப், அன்னாசிப்பழம் பழச்சாறு, குடை மிளகாய் மற்றும் தக்காளி உப்பு சேர்த்து வறுத்த ப்ரோக்கோலியை சாப்பிடலாம். புரதம், வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து இருக்கிற பருப்பு, வறுத்த வேர்க்கடலை, கீரைகள், காய்கறிகள் மற்றும் பிஸ்தாவை சாப்பிடுங்கள். மருத்துவர் ஆலோசனைப்படி நலம் பெருக.
கருத்துகள்