முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் பன்முக உத்தியை பின்பற்றி அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு




பன்முக உத்தியை பின்பற்றி அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய சங்கம் ஏற்பாடு செய்த,  கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி சர்வதேச கூட்டமைப்பின் (IFCPC 2021)    இந்தாண்டு உலக கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்க, பன்முக உத்திகளை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, சமுதாய அளவில் சுகாதார பரிசோதனை முகாம்களை நடத்துவதை வழக்கப்படுத்த வேண்டும். புற்றுநோயை தடுத்து, மக்களின் உயிர்களை காக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், இந்தியப் பெண்களிடம், காணப்படும் இரண்டாவது பொதுவான புற்றுநோயாக இடம்பிடித்துள்ளது. இது தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது. ஆரோக்கியமான பெண்கள் வழக்கமான பரிசோதனை மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, உலகளாவிய நோய் சுமைகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், பரிசோதனை செய்வதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ஒரு விரிவான அணுகுமுறையை நாம் பின்பற்றினால், அதை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையில் இருந்து அகற்ற முடியும். 

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும். இளம்பெண்களுக்கு பாப்பிலோமா வைரஸ்க்கு(எச்பிவி) எதிரான தடுப்பூசி போடுவதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க முடியும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் மருத்துவ நிபுணர்களை அனுப்பி,  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிவது, எச்பிவி தடுப்பூசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

கடந்த 2020ம் ஆண்டில் புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் பேர் இறந்துள்ளனர். 70 சதவீத புற்றுநோய் இறப்புகள், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான சுமை மற்றும் இறப்பு இங்கு அதிகமாக உள்ளது. இது இந்த நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. 

பொதுவான புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு தடுக்கக்கூடியது. பெரும்பாலானோருக்கு, புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறிப்படுகிறது. இதனால் இதற்கான சிகிச்சை மற்றும் இதில் இருந்து குணமடைவது மிகவும் சவாலாக உள்ளது.

புற்றுநோய் சிகிச்சையின் போது நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பம் உடல்ரீதியாக, மனரீதியாக பாதிப்படைவதோடு, பணரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்ய, பல குடும்பங்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கின்றனர். அதனால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகளை உடனடியாக குறைக்க வேண்டும்.

இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் 10.74 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான முழுமையான மருத்துவ காப்பீடு பாதுகாப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.

தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு இடையே, தொற்று அற்ற நோய்கள் அதிகரித்து வருவதையும் புறக்கணிக்க முடியவில்லை.  உட்கார்ந்த வாழ்க்கை முறை தவிர, ஆரோக்கியமற்ற உணவு, உடல் செயல்பாடு இல்லாதது, புகையிலை மற்றும் மது பயன்பாடு, அதிக அளவு மாசு ஆகியவையும் தொற்று அற்ற நோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இந்த நிலை கவலையளிக்கிறது. தொற்று அற்ற நோய்களால் ஏற்படும் அகால மரணங்களை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. 

‘‘உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் அதற்கு அடிபணிய வைக்க வேண்டும்’’ என ஆன்மீக தலைவர் சுவாமி விவேகானந்தர் கூறினார். 

இந்த கொரோனா தொற்று சமயத்தில், மருத்துவத் துறையினரின் உயர்ந்த சேவை மிகவும் பாராட்டத்தக்கது. தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மருத்துவத் துறையினரின் தன்னலமற்ற சேவைக்கு, ஒட்டுமொத்த உலகமும் கடன்பட்டுள்ளது.

உலகளாவிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களை குறைக்க, கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபி சர்வதேச கூட்டமைப்பு (ஐஎப்சிபிசி),  கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய சங்கம் (ஐஎஸ்சிசிபி) ஆகியவற்றின் உறுதி மற்றும் முயற்சிகளும் பாராட்டத்தக்கவை.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு பேசினார் மேலும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சுனில் குமார், மூத்த மருத்துவர்கள், ஐஎப்சிபிசி நிர்வாகிகள், ஐஎஸ்சிசிபி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் இந்த காணொலி காட்சியில் பங்கேற்றனர்.குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தடுப்பூசி, மருந்துகள் மேம்பாட்டை விரைவுபடுத்த, புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

தடுப்பூசி, மருந்துகள் மேம்பாட்டை விரைவுபடுத்த,  புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும் என  குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

ஐதராபாத் வந்த குடியரசு துணைத் தலைவர் , அழியும் நிலையில் உள்ள இனங்களின் பாதுகாப்பு ஆய்வு கூடத்தை (LaCONES) பார்வையிட்டார். இந்த ஆய்வு கூடத்தின், பொறுப்பு விஞ்ஞானி டாக்டர் கார்த்திகேயன் வாசுதேவன் அளித்த விளக்கத்தை குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார். மேலும், தேசிய வனவிலங்கு மரபணு வள வங்கி, இனப்பெருக்கக் கூடம், விலங்குகளின் கூண்டுகள் ஆகியவற்றையும் குடியரசு துணைத் தலைவர் பார்வையிட்டார்.

அதன்பின் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடம் திரு வெங்கையா நாயுடு பேசியதாவது:

புதிய கொரோனா வகைகளை அடையாளம் காண்பதில், அதன் மரபணு வரிசைமுறை முக்கிய பங்காற்றுகிறது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க இது உதவும். சில உயிரியல் பூங்காக்களில் சிங்கம், புலிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், புதிய வகை கொரோனாக்களின் மரபணு வரிசைமுறைகளை கண்டறிய வேண்டும். மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் தொற்று பரவுவது கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புக்கு லகோன்ஸ் பல உயிரிதொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது. அழியும் நிலையில் உள்ள மான் வகைகள், மலை புறா ஆகியவை  வெற்றிகரமாக இனப் பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதே போன்ற முயற்சிகளை காஷ்மீரில் உள்ள ஹங்குல் மான், சத்தீஸ்கரின் காட்டெருமைகள், டார்ஜிலிங்கின் சிவப்பு பாண்டா ஆகியவற்றின் இனப் பெருக்கத்துக்கும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

இந்த பயணத்தின் போது, ‘வனவிலங்கு பாதுகாப்புக்கான மரபணு வள வங்கி குறித்த ஒரு அறிமுகம்’ (‘An Introduction to Genetic Resource Banks for Wildlife Conservation’) என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த