ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.
ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-7' இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் 'நம்பர்-1' சீன தைபேயின் தய் டிசு யிங் மோதினர். முதல் செட்டை 18-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 12-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 18-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சியாகத் தோல்வியடைந்தார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோ மோதவுள்ளனர்.
கருத்துகள்