அனைத்து ஆசிரியர்கள், பள்ளிப் பணியாளர்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கும் வகையில் மாவட்ட அளவிலான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் பள்ளிக் கல்விச் செயலாளர் தகவல்
அனைத்து ஆசிரியர்கள், பள்ளிப் பணியாளர்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கும் வகையில் மாவட்ட அளவிலான செயல்திட்டத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்து வகுக்க வேண்டும்: அனிதா கர்வால், பள்ளிக் கல்விச் செயலாளர்
பள்ளிப் பாதுகாப்பு குறித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் குறித்த காணொலிக் கூட்டம் ஒன்றை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் திருமதி அனிதா கர்வால் இன்று நடத்தினார். ஆசிரியர்களுக்கும், பள்ளிப் பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்குதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர், அனைத்து ஆசிரியர்களுக்கும், பள்ளிப் பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பு மருந்து வழங்கும் பணியை 2021 செப்டம்பருக்குள் நிறைவு செய்யுமாறும், முதல் டோஸை ஏற்கனவே பெற்றவர்கள் இரண்டாவது டோஸ் பெறுவதை உறுதி செய்யுமாறும் மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், அனைத்து ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கும் வகையில் மாவட்ட அளவிலான செயல்திட்டத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்து வகுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரம் மற்றும் கல்வி செயலாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து செலுத்திக் கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை டிராக்கர் ஒன்றின் துணையுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து வாரம் தோறும் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை பெறுகிறது.
கருத்துகள்