பிரதமர் அலுவலகம் அசாம் படகு விபத்து குறித்து பிரதமர் கவலை
அசாமில் நிகழ்ந்த படகு விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். பயணிகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அசாமில் நிகழ்ந்த படகு விபத்து குறித்து அறிந்து கவலை அடைந்தேன். பயணிகளை பாதுகாக்க தேவையான அனைத்து
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்