முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் ஈயத்தால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

இந்தியாவில் ஈயத்தால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு


27.5 கோடி இந்தியக் குழந்தைகள் உட்பட, உலகில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஈயத்தால் பாதிக்கப்படுவதாக யூனிசெஃபின் அறிக்கை கண்டறிந்துள்ளது. இதனால், ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகமாகி, புத்திக்கூர்மை, கவனம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், ரத்த சோகை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களும் ஏற்படுகின்றன.

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், ஈய மாசுபாட்டைக் குறைக்க இந்தியாவுக்கு உதவும் பொருத்தமான கொள்கைகளையும், கருவிகளையும் கண்டறிய ஓர் ஆய்வு நடத்துகின்றனர். ஈய மாசுபாடு மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன்  சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் என்பதால் இந்தியாவில் ஈயத்தை மறுசுழற்சி செய்வது குறித்த ஆய்வைக் கூட்டாக மேற்கொண்டுள்ளனர்.


முறையான வழியில் மறுசுழற்சி செய்யப் பயிற்சியின்றி, ஈயத்தை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள், ஈயம்-அமில பேட்டரிகளை உடைத்து, மண் மற்றும் சுற்றுப்புறங்களில் அமிலம் மற்றும் ஈய மாசை உருவாக்குகின்றனர். மேலும், திறந்த உலைகளில் ஈயத்தை உருக்குவதால் விஷ வாயுக்கள் காற்றில் கலக்கின்றன.  இது, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, இதில்  ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

ஆனால், இதில் செலவு குறைவாக இருப்பதால், இது அதிகம் கவனத்தைக் கவர்கிறது. இப்படி முறைசாராச் செயல்முறைகளும் அதனால்


ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளும் வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் கடுமையான சட்ட விதிமுறைகள் இல்லாமையும், அதிக செலவும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 

ஒழுங்குபடுத்தப்பட்ட மறுசுழற்சித் துறையில்  வரியைக் குறைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட மறுசுழற்சி மற்றும் மறு உற்பத்தித் துறைகளுக்கு மானியங்களை வழங்குதல் போன்ற கொள்கை வழிகாட்டுதல்கள் ஈயம்-அமில பேட்டரி மறுசுழற்சி மூலம் ஈய மாசுபாட்டைக் குறைக்கும் என்று இந்த ஆய்வு பரிந்துரைத்தது. முறையான மறு உற்பத்தித் துறைக்கு அதிக மானியம் வழங்கப்படுவது ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மறுசுழற்சித் துறைகள் முடங்க வழிவகுக்கும் என்றும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித் துறையின் பேராசிரியர் டாக்டர் ஆர்.கே.அமித், கான்பூர் ஐஐடி தொழில் மற்றும் மேலாண்மைப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் பி விபின், ஐ ஐ டி கான்பூரின் இயந்திரப் பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜனகராஜன் ராம்குமார்  மற்றும் ஐஐடி கான்பூரிலிருந்து திரு. பிரம்மேஷ் விநாயக் ஜோஷி ஆகியோர் அடங்குவர். இந்தக் குழு, தனது ஆய்வு முடிவுகளை பெருமதிப்புமிக்க சர்வதேச ஆராய்ச்சி இதழான Resources, Conservation and Recycling. -ல் வெளியிட்டது.

ஈய மாசு பற்றிய ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய, ஐஐடி மெட்ராஸின் மேலாண்மைக் கல்வித் துறைப் பேராசிரியர் ஆர்.கே. அமித்,  "தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஈயத்தின் இருப்பு இல்லாததால், பயன்படுத்தப்பட்ட பாட்டரிகளின் மறு பயன்பாடு அவசியமாகிறது. இருப்பினும், அறிவியல்பூர்வமான முறையில், ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புகள் இதைச் செய்யும் போது, அதிக அளவு ஈயம் வெளியேற்றப்படுவதால் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இந்தியாவில், இந்த மறு சுழற்சியை ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக மாற்றுவதில் மறுசீரமைப்பு வணிகத்தை ஒழுங்கமைக்கப்படாத இந்தியாவில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதன் தாக்கத்தை அளவிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.

யூனிசெஃப்ஃபின் “த டாக்ஸிக் ட்ரூத்: சில்ரன்ஸ் எக்ஸ்போஷர் டு லெட் பொல்யூஷன் அண்டர்மைன்ஸ் அ ஜெனரெஷன் ஆஃப் பொடென்ஷியல்” (‘The Toxic Truth: Children’s exposure to lead pollution undermines a generation of potential’) என்ற  ஒரு அறிக்கை, 27.5 கோடி இந்தியக் குழந்தைகள் உட்பட உலகின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இரத்தத்தில் ஈயத்தின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 5  மைக்ரோகிராம்  அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால், அது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கிறது. அதிக ஈய அளவுகள், பெரியவர்களுக்கும் கேடு விளைவிக்கும் என்றாலும், குழந்தைகளிடம் அறிவுத் திறன் குறைபாடு, கவனச் சிதறல், ரத்தசோகை, சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள் உட்பட, பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களுக்கான வரியைக் குறைத்தல், அவர்களுக்கும், முறையான பேட்டரி மறு உற்பத்தியாளர்களுக்கும் அவர்களது மறு சுழற்சி முறையின் செயல்திறனைப் பொருத்து, மானியங்களை அதிகரித்தல் போன்ற கொள்கைகளின் தாக்கத்தை, திரு பிரம்மேஷ் விநாயக் ஜோஷி, டாக்டர் பி விபின், டாக்டர் ஜனகராஜன் ராம்குமார் மற்றும் டாக்டர் ஆர்.கே.அமித் ஆகியோர் மதிப்பீடு செய்தனர். பயன்படுத்தப்பட்ட ஈய - அமில பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கங்களை ஆராய ஆராய்ச்சியாளர்கள் ஒரு அமைப்பு இயக்கவியல் மாதிரியைப் பயன்படுத்தினர்.

பேராசிரியர் ஆர் கே அமித் மேலும் கூறுகையில், "நடைமுறைப்படுத்தல் என்ற கோணத்தில்,  கொள்கை வகுப்பாளர்கள் இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இந்தியாவில் லேப்  மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிகளை வடிவமைக்கலாம். இந்தக் கொள்கைகளின் விளைவாக, முறைசாராத் துறையில் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்பிழப்பு பற்றியும் இந்தத் தொழிலாளர்களை ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டு வருவது பற்றியும்  எதிர்கால ஆராய்ச்சி கவனத்தில் கொள்ளும்.

வண்ணப்பூச்சுகள், அழகுசாதனப் பொருட்கள், சாயங்கள், வெடிமருந்துகள் மற்றும் நகைகள் போன்ற பல்வேறு தொழில்களில் ஈயம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால்,  

85% உற்பத்தியைப் பயன்படுத்தும் பேட்டரித் துறை இந்த உலோகத்தின் முக்கிய நுகர்வோராக உள்ளது. பேட்டரி கழிவு மேலாண்மை, கையாளுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த பல விதிகள் அந்தந்த நாடுகளில் ஈய மாசுபாட்டைக் கையாள்வதற்கு உரிய நேரத்தில் விதிக்கப்படுகின்றன.

இந்த உலோகத்தின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் அதனால் ஏற்படும் மாசுபாட்டைக் கையாளவும் ஒரு நல்ல தீர்வாக மறுசுழற்சி முன்வைக்கப்பட்டது. இருப்பினும், ஈயத்தின் சரியான மறுசுழற்சி  இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளுடன் முறைசாரா அமைப்புகள் பல காளான்களாக முளைத்து வருவது தான், என்று சென்னை ஐ.ஐ,டி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த