முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் வளர்ந்து அவர்களின் முழு திறனை அடைய பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் அறைகூவல்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்  பெண்கள் வளர்ந்து அவர்களின் முழு திறனை அடைய பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் அறைகூவல்


சாதி, மதம், பிராந்தியம், மொழி மற்றும் பாலினம் அடிப்படையிலான அனைத்து சமூக பாகுபாடுகளையும் களைய வேண்டும்- குடியரசு துணைத் தலைவர்

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தங்களை அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள்

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நூற்றாண்டு நினைவு விழாவில் திரு நாயுடு உரையாற்றினார்

பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்திய குடியரசு துணைத்தலைவர், அவரது பாடல்கள் மக்கள் மத்தியில் தேசிய உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை ஏற்படுத்தியது என்றார்

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டு வர இன்று அழைப்பு விடுத்த குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, அவர்கள் வளர மற்றும் அவர்களின் முழு திறனை அடைய பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலை உருவாக்க அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற இல்லத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்திய கலாச்சாரம் எப்போதும் பெண்களை தெய்வீகத்தின் உருவமாக மதிக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

சமத்துவத்திற்கான பாரதியாரின் பார்வையை மேற்கோள் காட்டி, சாதி, மதம், பிராந்தியம், மொழி மற்றும் பாலின அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் அனைத்து தடைகளையும் பாகுபாடுகளையும் களைய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் போது புரட்சிகர கவிஞர் 11 வருடங்களுக்கும் மேலாக புதுச்சேரியில் தங்கியிருந்த வீட்டிற்கு தாம் சமீபத்தில் சென்றதை நினைவு கூர்ந்த திரு நாயுடு, இந்த சிறந்த கவிஞரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுமாறு இளைய தலைமுறையினரை வலியுறுத்தினார்.

மகாகவி பாரதியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, 'சிறந்த காலங்கள் வரவிருக்கின்றன!' என்று கூறிய அவர், நாட்டை கட்டமைப்பதிலும், ஏழ்மை, கல்லாமை, பசி மற்றும் பாகுபாடு இல்லாத வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதிலும் தங்களை அர்ப்பணித்து கொள்ளுமாறு இளைஞர்களை கேட்டுக்கொண்டார். "நமது இளைஞர்கள், அவர்களின் அதீத ஆற்றல் மற்றும் உற்சாகத்தால், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் விரைவான வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி கவிஞர், பத்திரிகையாளர், விடுதலை போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவராக திகழ்ந்து, ஏழைகள் மற்றும் பின்தங்கியோரை ஆழ்ந்து நேசித்தார் என்று திரு நாயுடு கூறினார். “

அவரது உணர்ச்சிமிகு கவிதைகள் மற்றும் எழுத்துகள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றின,” என்று அவர் கூறினார்.

சரளமாக கவிதைகளை இயற்றுவதில் அவரது அசாதாரண திறமைக்காக தேசிய கவிஞரை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், எட்டயபுரம் தர்பாரில் தனது பதினொரு வயதில் 'பாரதி' என்ற பட்டத்தை பெற்றது ஒரு அரிய சாதனை என்று கூறினார். அவரது புதிய வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகள், எளிமையான வார்த்தைகள், வட்டார மொழிகள் மற்றும் பாடல்கள் மூலம், மகாகவி பாரதியின் கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கின என்றார் அவர்.

பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய், திரு வ உ சிதம்பரம் பிள்ளை மற்றும் ஸ்ரீ அரவிந்தர் போன்ற தேசியத் தலைவர்களுடன் பாரதியின் நெருங்கிய தொடர்பை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், காலனித்துவ ஆட்சியின் இருண்ட நாட்களில், நமது நாட்டை சூழ்ந்திருந்த இருளை தேசியவாதம் மூலம் அகற்ற தனது சக்திவாய்ந்த வரிகளுடன் சூரியனைப் போல மகாகவி எழுந்தார் என்று கூறினார்.

சகோதரி நிவேதிதாவுடனான கவிஞரின் சந்திப்பைப் பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, இந்த சந்திப்பிற்கு பின்னர் பெண்கள் சுதந்திரம் மற்றும் அதிகாரமளித்தல் குறித்து இன்னும் அதிகளவில் பாரதியார் குரல் கொடுக்க தொடங்கினார் என்று கூறினார். "சக்கரவர்த்தினி இதழின் ஆசிரியரான பாரதி, பெண்களை மேம்படுத்துவது சக்கரவர்த்தினியின் குறிக்கோள் என்று அறிவித்தார்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

பாரதியின் எளிமை மற்றும் நேர்கொண்ட கருத்துகளை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், அவரது பாடல்கள் சாதாரண மக்களின் இதயங்களையும் மனதையும் தொட்டு தேசியம் மற்றும் தேசபக்தியை நிரப்பியது என்று கூறினார்.

மகாகவி பாரதி தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், இந்தி, இந்துஸ்தானி மற்றும் தெலுங்கு உட்பட பல மொழிகளை நன்கு அறிந்தவர் என்று கூறிய திரு நாயுடு, தமது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் சுதந்திர இந்தியாவுக்கான தேவையை ஆதரித்து, பத்திரிகையாளராக அயராது வாழ்ந்ததாக கூறினார். மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் புதிதான எதையும் ஆதரிக்கும் திறந்த மனம் கொண்டவர் பாரதி என்று அவர் கூறினார்.

பாரதி போன்ற மாபெரும் ஆளுமைகளின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுகூருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், எதிர்கால தலைமுறையினருக்கு அவரின் கருத்துக்களையும் சிறப்புகளையும் எடுத்து செல்வது முக்கியம் என்று கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு எட்டயபுரம் ஜமீன்தாரிடம் பாரதியார் கோரிய 'பல்லக்கு, தங்க சால்வை, பொற்கிழி மற்றும் பரிவாரங்களுடன்' ஒவ்வொரு ஆண்டும் பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் வானவில் கலாச்சார மையத்தை அவர் பாராட்டினார்.

"மாபெரும் கவிஞரின் சிறப்புகளை நினைவுகூரும் ஒரு அற்புதமான வழி இதுவாகும்" என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். நாட்டு மக்களிடையே தேசியம், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை ஊக்குவிக்க அழைப்பு விடுத்தார்.

பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை உரிய முறையில் கொண்டாடுவதற்கு மத்திய கலாச்சார அமைச்சகம், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் மற்றும் தில்லி தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் முயற்சிகளை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த