முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பு


நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்கள் திரு சோம் பர்காஷ் மற்றும் திருமதி அனுப்பிரியா பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தனர். 


கடந்த ஐந்து நிதியாண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் விவரங்கள் பின்வருமாறு:

2016-17-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 60,220 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 7,735 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 


2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 60,974 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 22,165 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 


2016-17-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 60,220 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 7,735 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 62,001 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு (-)2,225 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.  

2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 74,390 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 52 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

2020-21-ம் ஆண்டில் இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 81,973 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், வெளிநாட்டு சந்தை முதலீடுகளின் மதிப்பு 38,725 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. 

இந்தியாவின் மின்-வணிக சந்தை ஆண்டுக்கு 5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது என்றும், 2021 நிதியாண்டில் வருவாய் மதிப்பு 56.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் நாஸ்காம் தெரிவிக்கிறது. 

இத்துறையில் மூலம் எதிர்பார்க்கப்படும் மொத்த வருவாய் அல்லது உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பற்றிய தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.

தற்சார்படைய வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை தொடர்ந்து, நாட்டின் உற்பத்தித் திறன்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த 13 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களுக்காக 2021-22 மத்திய பட்ஜெட்டில் ரூ 1.97 லட்சம் கோடி ($ 26 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. 

பதிமூன்று முக்கிய துறைகளில் ஏற்கனவே உள்ள 3 துறைகளான  மொபைல் உற்பத்தி மற்றும் குறிப்பிட்ட மின்னணு பொருட்கள்;  முக்கிய தொடக்க பொருட்கள்/மருந்து இடைப்பொருட்கள் மற்றும் செயல்மிகு மருந்து பொருட்கள்; மருத்துவ சாதனங்கள் உற்பத்தி ஆகியவை அடங்கும். 

நவம்பர் 2020-ல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட 10 முக்கிய துறைகளின் விவரங்கள் வருமாறு: 

வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள்; மருந்துகள்; சிறப்பு ஸ்டீல்;  தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் தயாரிப்புகள்; மின்னணு/தொழில்நுட்ப பொருட்கள்; வீட்டு சாதன பொருட்கள் (ஏசி மற்றும் எல்இடி); உணவுப் பொருட்கள்; ஜவுளிப் பொருட்கள்; அதிக திறன் கொண்ட சூரிய ஒளி மின்னழுத்த பொருட்கள்; மற்றும் மேம்பட்ட வேதியியல் செல் பேட்டரி. 

திருத்தப்பட்ட காப்புரிமை விதிகள்-2003, 2021 செப்டம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது. மற்ற நிறுவனங்கள் செலுத்தும் கட்டணத்தை விட 80 சதவீதம் குறைவான கட்டணத்தின் பலனைக் குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்கள் பெறும்.

ஸ்டார்ட்-அப்களின் அறிவுசார் சொத்து பாதுகாப்பை எளிதாக்குவதற்கான திட்டம் 2016-ல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்-அப்களின் நலனுக்காக இது செயல்படுத்தப்பட்டது. நாட்டில் அறிவுசார் சொத்துரிமைகள் சூழலியலை வலுப்படுத்த இந்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

தேசிய ஏற்றுமதிக் காப்பீட்டுக் கணக்கு அறக்கட்டளையானது, திட்டங்கள் மற்றும் பிற உயர் மதிப்பு ஏற்றுமதிகளுக்கான காப்பீடு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, வெளிநாடுகளில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இந்தியாவின் திறனை இது காட்டுகிறது.

இந்த அறக்கட்டளைக்கு 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதி உதவிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2021-22 முதல் 2025-26 வரை அறக்கட்டளைக்கு ரூ.1,650 கோடி மானியம் வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிலுவையில் உள்ள ஏற்றுமதி ஊக்கத்தொகையை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ரூ 56,027 கோடியை விடுவித்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு இது பொருந்தும். ஏற்றுமதி இலக்குகளை எட்டுவதற்காக பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி, பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2015-20 31 மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகைகள், உதவித்தொகைகள் மற்றும் கட்டணத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த