சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய தகுதி விதிகள்
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாரயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
26 ஜூன் 2020 தேதியிட்ட அறிவிப்பு எண் 2119 வாயிலாக ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு மற்றும் நிறுவனங்களின் வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை வகைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அளவுகோல்களை அரசு அறிவித்தது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஆவணங்கள் எதுவும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. பதிவு செய்வதற்கு ஆதார் மற்றும் பான் எண் போதுமானது. இந்த நடைமுறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020 ஜூலை 1 முதல் பொருந்தும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு வழங்கப்படும் ஆதரவு
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாரயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
2021 ஜூன் 4 தேதியிட்ட அதன் இயக்குநர்கள் கூட்டத்தில், இந்திய அரசின் “சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரிவுப்படுத்துதல்” திட்டத்திற்கு உதவுவதற்காக $500 மில்லியன் (₹ 3750 கோடி) கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இத்திட்டம் கொவிட் -19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு முயற்சியாகும். அமைச்சரவையின் ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்திருக்கிறது.
கருத்துகள்