முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசியில் ஆரத்தி எப்போதும் இதயத்தை புதிய சக்தியால் நிறைப்பதாக பிரதமர் கருத்து

கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், காசியில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட்டார்


வாரணாசியில் பாபா விஸ்வநாதர் வளாகத்தை நேற்று தொடங்கி வைத்த பின்னர், பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று கங்கையில் நீராடி வழிபாடுகளையும் நடத்தினார். மாலையில் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

கங்கை ஆரத்தி பற்றி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காசியில் ஆரத்தி எப்போதும் இதயத்தை புதிய சக்தியால் நிறைப்பதாக கூறியுள்ளார்.



பின்னர் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

அது பற்றி ட்விட்டர் பதிவில், “காசியில் @BJP4India முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் நடைபெற்ற விரிவான ஆலோசனை தற்போது முடிவடைந்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசியில் முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிரதமர் அது பற்றி ட்விட்டர் பதிவில். “காசியில் முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தேன். இந்தப் புனித நகருக்கு இயன்ற சிறந்த உள்கட்டமைப்புகளை உருவாக்குவது தமது கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு சென்ற பிரதமர், “அடுத்த நிறுத்தம்... பனாரஸ் நிலையம். ரயில் போக்குவரத்துத் தொடர்பை அதிகரிக்க நாம் பணியாற்றி வருவதுடன் தூய்மையும், நவீனத்துவமும் நிறைந்த பயணிகளுக்கு உகந்த ரயில் நிலையங்களை உறுதி செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.



பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வசதி குறைவு கூட இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரதமர் பணியாற்றி வருகிறார். இதே போல பின்னிறைவிலும் அவர் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். தங்களது உள்ளூர் ‌எம்.பி.யான பிரதமர் மீது அன்பையும், உற்சாகத்தையும் பொழிந்த மக்களுடன் அவர் கலந்தார்.வாரணாசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி, வாரணாசியில் இன்று ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை தொடங்கி வைத்தார். அவர் கால பைரவர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் வழிபாடு நடத்தினார். அவர் கங்கை நதியிலும் புனித நீராடினார்.

தமது உரையை கால பைரவரின் பாதத்தில் வணக்கத்துடன் தொடங்கிய பிரதமர், அவருடைய அருள் இல்லாமல் எதுவும் இருக்காது என்றார். நாட்டு மக்களுக்கு அவரது அருளை பிரதமர் வேண்டினார். காசியில் ஒருவர் நுழைந்தவுடன் அவர் அனைத்து தழைகளிலிருந்தும் விடுபடுவார் என புராணங்களைச் சுட்டிக்காட்டி பிரதமர் தெரிவித்தார். “பகவான் விஸ்வேஸ்வரரின் அருளாசி, நாம் இங்கு வந்தவுடன் நமது உள்ஆத்மாவை விழிக்கச் செய்து தெய்வீக சக்தியை வழங்குகிறது”. விஸ்வநாதர் ஆலயத்தின் புதிய வளாகம் வெறும் பிரம்மாண்டமான கட்டிடம் மட்டுமல்ல. இதுவொரு இந்திய சனாதன கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். இது நமது ஆன்மீக ஆன்மாவின் அடையாளம். இது இந்தியாவின் பழமை, பாரம்பரியம், இந்தியாவின் சக்தி, இயக்கத்தின் அடையாளம். ஒருவர் இங்கு வந்தவுடன் அவர் நம்பிக்கையுடன் கடந்த காலத்தின் பெருமையையும் உணருவார் என பிரதமர் கூறினார். இங்கு பழமையும், புதுமையும் ஒன்றிணைந்து வருகிறது. பழமையின் உத்வேகம் வருங்காலத்திற்கான திசையை வழங்குகிறது. இதனை நாம் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் கண்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.முன்பு ஆலய வளாகம் வெறும் 3000 சதுர அடியில் மட்டுமே இருந்தது. இப்போது சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது கோயில் வளாகத்திற்குள் 50,000 முதல் 75,000 வரை பக்தர்கள் செல்ல முடியும். முதலில் தரிசனம், பின்னர் கங்கையில் நீராடல் அங்கிருந்து நேரடியாக விஸ்வநாதர் ஆலயத்திற்கு வர முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.







காசி நகரின் பெருமைகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சிவபெருமானின் கருணையால் காசி அழிவற்றதாக திகழ்கின்றது என்று கூறினார். இந்த பிரம்மாண்டமான வளாகத்தை உருவாக்கிய ஒவ்வொரு தொழிலாளருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார். கொரோனா தொற்று பரவலின் போது கூட அவர்கள் இங்கு பணியை நிறுத்தவில்லை. தொழிலாளர்களை சந்தித்து அவர் பாராட்டினார். வளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் திரு.மோடி மதிய உணவு அருந்தினார். கட்டிட கலைஞர்களை பிரதமர் பாராட்டினார். கட்டுமானத்துடன் தொடர்பு கொண்டவர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களையும் அவர் வாழ்த்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்தை இடையுறாத பணிக்கு இடையே நிறைவேற்றிய உத்தரப்பிரதேச அரசு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவர் பாராட்டினார்.

படையெடுப்பாளர்கள் இந்த நகரத்தை தாக்கியதாக கூறிய பிரதமர், இதனை அவர்கள் அழிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். ஔரங்கசீப்பின் அராஜகங்களையும், பயங்கரவாதத்தையும் இந்த நபரின் வரலாறு கண்டது. வாள்முனையில் நாகரீகத்தை மாற்ற முயன்றவர்கள், மதவெறி மூலம் கலாச்சாரத்தை அழிக்க முயன்றவர்களை வரலாறு கண்டது. ஆனால் இந்த நாட்டின் மண் உலகில் மற்ற பகுதிகளை விட வேறுபாடானது. ஒரு ஔரங்கசீப் இருந்தால், சிவாஜியும் இருப்பார் என்று கூறிய பிரதமர், சலார் மசூத் வந்தால், மன்னர் சுகல்தேவை போன்ற துணிச்சல்மிக்க வீரர்கள் இந்தியாவின் ஒற்றுமையின் சுவையைக் காட்டுவார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் காசி மக்கள் ஹேஸ்டிங்ஸ்-க்கு என்ன நடந்தது என்பதை அறிந்திருந்தனர் என்றார்.காசியின் முக்கியத்துவம் மற்றும் பெருமைகளை விளக்கிய பிரதமர், காசி வெறும் வார்த்தையல்ல, இது உணர்வுகளின் படைப்பு என்று கூறினார். காசியில் வாழ்க்கை மட்டுமல்லாமல் இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான். காசியில் உண்மை கலாச்சாரமாகும். அன்பு பாரம்பரியமாகும். வாரணாசியில் ஜெகத்குரு சங்கராச்சாரியார், ஸ்ரீ டோம் ராஜாவின் தூய்மையால் உத்வேகம் அடைந்தார். இந்த இடத்தில்தான் கோஸ்வாமி துளசிதாஸ் பகவான் சங்கரனின் அருளால் புனிதமான ராம சரிதத்தை படைத்தார். பகவான் புத்தரின் ஞானம் உலகிற்கு சாரநாத்தை வெளிக்காட்டியது என்று கூறிய பிரதமர், கபிர்தாசர் போன்ற புனிதர்கள் சமுதாய மேம்பாட்டிற்காக தோன்றினார்கள் என்றார். சமுதாயத்தை ஒன்றுமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்குமானால் அப்போது காசி ஆற்றலின் மையமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். காசி 4 ஜைன தீர்த்தங்கரர்களின் பூமி என்று கூறிய பிரதமர், அஹிம்சை மற்றும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தது என்றார். ராஜா அரிச்சந்திரனின் நேர்மை முதல் வல்லபாச்சாரியா, ராமானந்ஜி ஞானம் வரை, சைதன்ய மகாபிரபு, சமத்குரு ராம்தாஸ் முதல் சுவாமி விவேகானந்தர், மதன்மோகன் மாளவியா வரை இந்த புண்ணிய பூமி துறவிகள், ஆச்சாரியர்கள் என ஏராளமானோருக்கு இருப்பிடமாக இருந்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜ் இங்கு வந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். ராணி லட்சுமிபாய் முதல் சந்திரசேகர் ஆசாத் வரை ஏராளமான வீரர்களுக்கு கர்ம பூமியாக காசி திகழ்ந்தது. பாரதந்து அரிச்சந்திரா, ஜெய்சங்கர் பிரசாத். முன்சீப் பிரேம்சந்த், பண்டிட் ரவிசங்கர், பிஸ்மில்லாகான் போன்ற திறமை மிக்கவர்கள் இந்த பெரும் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் உறுதியான முடிவு இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த வளாகம்  நமது திறமைக்கும், கடமைக்கும் சான்றாகும். உறுதிப்பாடு மற்றும் உறுதியான சிந்தனை இருந்தால் எதுவும் இயலாதது அல்ல. கற்பனைக்கு எட்டாதவற்றை சாத்தியமாக்கும் ஆற்றல் இந்தியர்களிடம் உள்ளது என்று கூறிய பிரதமர், நமக்கு தவம், நோன்பு ஆகியவை தெரியும். நாட்டுக்காக இரவையும், பகலையும் எவ்வாறு கழிப்பது என்பதை நாம் அறிவோம். சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியர்களான நாம் அதனை ஒன்று சேர்ந்து முறியடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இன்றைய இந்தியா நாம் இழந்த பாரம்பரியத்தை புதுப்பித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார். காசி நகரின் அன்னபூர்ணா அன்னை உறைகிறார். காசியிலிருந்து திருடிச் செல்லப்பட்ட அன்னபூர்ணாவின் சிலை இப்போது ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தம்மைப்  பொறுத்தவரை கடவுள் மனிதர்கள் வடிவத்தில் வருவதாக பிரதமர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் கடவுளின் ஒரு அங்கம் என்று கூறிய அவர், நாட்டுக்காக, தூய்மை, படைப்பு, தற்சார்பு இந்தியாவுக்கான தொடர் முயற்சி ஆகிய 3 உறுதிமொழிகளை மக்களிடம் அவர் கேட்டார்.

தூய்மை என்பது வாழ்க்கைக்கான வழி என்று கூறிய பிரதமர், கங்கையை புத்துயிரூட்டும் இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்று கூறினார். நீண்ட கால அடிமைத்தனம் நமது நம்பிக்கையை சீர்குலைத்து விட்டதாக கூறிய பிரதமர், நமது சொந்த படைப்பாற்றல் மீதான நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என்றார். இன்று இந்த ஆயிரமாண்டு பழமையான காசியிலிருந்து ஒவ்வொரு நாட்டு மக்களையும் முழு நம்பிக்கை, புதுமை ஆகியவற்றுடன் படைப்பாற்றலை பெருக்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் வேண்டுகோள் விடுத்தார். தற்சார்பு இந்தியாவுக்காக நமது முயற்சிகளை எழுப்ப வேண்டியது மூன்றாவது தீர்மானம் என்று பிரதமர் கூறினார். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான இந்த அமிர்த காலத்தில் இந்தியா சுதந்திரத்தின் நூறாண்டுகளைக் கொண்டாடும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நாம் உழைக்க வேண்டுமென்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த