முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது. பெல்ட், நகைகள், ஹீல்ஸ் செருப்பு அணியத் தடை விதிக்கபட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு என்பதால் ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு 2450 நபர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்துகிறது. தமிழகம் முழுவதும் தொடங்கியது.
இன்று துவங்கி பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் இத் தேர்வு நடத்தப்படுகிறது. 190 மையங் களில் நடைபெறும் தேர்வில், இரண்டரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பாடங்களின் படி நடைபெறும் தேர்வில் தினமும் இருபத்தைந்தாயிரம் மாணவர்கள் முதல், முப்பதாயிரம் வரை பங்கேற்கின்றனர். தேர்வு மையங்களனைத்தும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கான விதிமுறைகளில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, தேர்வர்கள் பெல்ட் அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நகைகள் அணிந்து வரக் கூடாது ; ஹீல்ஸ் காலணிகள் அணியக் கூடாதெனவும், கைகடிகாரம் அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகு தேர்வு அறையிலிருந்து, எந்த விதமான காகிதங்களையும் வெளியே கொண்டு செல்லக்கூடாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்