அரசு மது பானங்களை மட்டுமே விற்க அனுமதிக்க முடியும். பார்களை இணைத்து நடத்தச் சட்டத்தில் இடமில்லை உயர்நீதிமன்றம் உத்தரவு
அயல் மது சாராயம் விற்பனை தொடர்பாக மற்றும் மதுபானக் கடைகளில் பார்கள் எனும் குடிப்பகங்கள் அமைப்பதற்கான டெண்டரை ஏலம் நடத்தும் முறையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்யும் மதுக்கடைகளை ஒட்டி பார்களை எனும் குடிப்பகங்கள் அணைத்தையும் மூட வேண்டும் எனும் மக்கள் நலன் காக்கும் நல்ல உத்தரவு வந்தது டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்கள் எனும் குடிப்பகங்கள்அமைப்பதற்கான டெண்டர் என்ற ஏலமுறையை எதிர்த்துத் தொடரப்பட்ட அணைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் எனும் நல்ல உத்தரவு வழங்கப்பட்டது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள குடிப்பகங்கள் எனும் பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலியான மதுப்பாட்டில்களைச் சேகரிக்க புது டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்த டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகப் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது `டாஸ்மாக் கடைகளில் அரசு மது பானங்களை மட்டுமே விற்க அனுமதிக்க முடியும். பார்களை இணைத்து நடத்தச் சட்டத்தில் இடமில்லை. டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் விற்பனைக் கடைகளில் அரசு மதுபானங்களை மட்டும் விற்க அனுமதி உள்ளது.
இதற்கு மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்கள் எனும் குடிப்பகங்ளை நடத்த அனுமதி இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் ஆறு மாத காலத்திற்குள் மூட வேண்டும்” என உத்தரவிட்டப்பட்டதுடன் . டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற நல்ல அதிரடி உத்தரவு. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுடன் பார்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன.டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவது போலவே, டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் பொருட்களும் அங்கு சென்று குடிக்கும் குடிகாரர்களிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டு பலரை மாமூல் மழையில் நனைந்து வருகிறது.
வெளியில் ரூபாய்.10 க்கு விற்கப்படும் குடிதண்ணீர் போத்தல்கள் டாஸ்மாக் பார்களில் ரூபாய்.50 க்கு விற்கப்படுவதாகவும்.. இந்தப் பார்களை நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இதுவரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது இதனிடையே, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில் இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் தொடுத்த வழக்குகள் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.சரவணன் அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட உத்தரவு பிறப்பித்தது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறது
. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி; பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று கூறி தமிழ்நாட்டில்
'பார்க்கிங் வசதியுடன் பார்' என்ற வாசகத்துடன் நிறைய பார்கள் நடத்தப்படுகின்றன.
வாகனத்தில் சென்று பார்க்கிங் செய்துவிட்டு சாலையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீண்டும் வாகனத்தை இயக்கும் நிலை தானே வரும்? வழியில் காவல்துறை சோதனை நடக்கும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிமன்றத்துக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் பாராட்டுக்கள்.
கருத்துகள்