தேர்தல் அணுகுமுறை மூன்று வகை.
ஒன்று வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவது.
இரண்டாவது, எதிரி வேட்பாளரை விலைக்கு வாங்கி நம்மவரை ஜெயிக்க வைப்பது..
மூன்றாவது எவன் ஜெயித்தாலும் அவனை விலைக்கு வாங்கிவிடுவது. இப்போது தேர்தல் கலை கட்டுகிறது சென்னை மாநகராட்சி அடையாறு பெசண்ட் நகர் 177 வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிடும் 94 வயது மூதாட்டி காமாட்சி மாமி.. அவரின்
தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகளைக் கூறுவோம். சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும்..இளம் பட்டதாரி வேட்பாளர்..நிலவரசி துரைராஜ்.
புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த திரைப்பட நடிகர் இயக்குநர் தம்பி ராமையாவைச் சந்தித்து ஆதரவைப் பெற்றார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில், இளைஞர்களுக்கு வாய்ப்பு கரூர் மாநகராட்சி 12 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 24 வயது மாணவி கிருத்திகாவிற்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.
இளைஞர் காங்கிரசின் நம்பிக்கை மிகுந்த முகங்களில் ஒருவர் கிருத்திகா.துடிப்பும்,போர்க்குணமும் மிக்கவர். இம்மாதிரியான இளைஞர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிப்பதன் மூலம்.காங்கிரஸ் கட்சி தனது புதிய அத்தியாயத்தைத் துவங்குகிறது.
காரைக்குடி வ.உ.சி சாலை, சேர்வார் ஊரணி, காந்திபுரம் 5 வீதிகள், மேட்டுத்தெரு ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய 11வது வார்டில்.,
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளராக கை சின்னத்தில் இளைஞர் ரமேஷ் போட்டியிடுகிறார் மேலும் பத்திரிகையாளர்
நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசன் மனைவி கானாடுகாத்தான் பேரூராட்சி 3 வது வார்டில் சுயேட்சையாக களம் காண்கிறார். சிவகங்கை. மாவட்டம் காரைக்குடி வட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது
திமுக ;அதிமுக,காங்கிரஸ்; உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட நேமத்தான்பட்டி 3-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு பத்திரிகையாளர் நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசனின் மனைவி ரேவதி ஸ்ரீனிவாசன் அரிக்கேன் விளக்கு சின்னத்தில் போட்டியில் உள்ளார்.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட முயன்ற நிலையில்" ஊர்க் கட்டுப்பாடு" என்ற பெயரில் குறிப்பிட்ட வேட்பாளரைத் தேர்வு செய்து நியமன உறுப்பினராக அறிவிப்பு வந்த நிலையில் ஊர்க் கட்டுப்பாட்டை மீறி வேட்பாளர்கள் போட்டியிடாத நிலை ஏற்பட்டது . அடுத்த முறை வந்த தேர்தலிலும் ரேவதி ஸ்ரீனிவாசன் போட்டியிட்டபோது, தேர்தல் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது
தற்போதைய தேர்தலில் "ஊர் கட்டுப்பாடு என்ற நிலை இல்லை பல்வேறு தரப்பினரும் களத்தில் போட்டியில் உள்ளனர்.
ரேவதி ஸ்ரீனிவாசனைப் போல் சுயேச்சை வேட்பாளர்களாக பேரூராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் 18 பேர் போட்டியிடுகிறார்கள். கட்சிகளைச் சேர்ந்த 34 பேர் போட்டியிடுகிறார்கள்.
3 வது வார்டில் சுயேட்சையாக களம் காணும் ரேவதி ஸ்ரீனிவாசன் வார்டு பகுதிகளில் பிரசாரத்தை தொடங்க.
நியாயத்திற்காக போராடுவது; லஞ்சத்தை வாங்குவதும் குற்றம்; கொடுப்பதும் குற்றம்; என்ற கருத்தை உரக்கச் சொல்வது; அரசு எந்திரங்களை மக்கள் பணியாற்ற முடுக்கி விடுவது; மக்களுடைய அன்றாட பிரச்சனைகளான குடிநீர்; சாலை வசதி; தெருவிளக்கு; உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நிறைந்த அனுபவம் பெற்றதால் வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது
வாக்கு கேட்டுச் சென்ற இடங்களிலெல்லாம் ரேவதி ஸ்ரீனிவாசனை போன்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என வாக்காளர்கள் விருப்பத்தை நேரிடையாகச் சொல்கின்றார்கள்.
வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மறைமுகத் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தலைவர் பதவிக்கும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவோடு போட்டியிட ரேவதி ஸ்ரீனிவாசன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
கருத்துகள்