அனைத்து அரசு அமைப்புகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு பிரத்யேக இட ஒதுக்கீடு
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பவுமிக் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசுப் பணிகளுக்கான நியமனத்திலும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
ஓபிசிக்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதியை உறுதி செய்வதற்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு:
மத்திய அரசு வேலைகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு.
ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 வரை வழங்கப்படுகிறது.
ஓபிசி/இபிசிக்களுக்கான வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியத்திற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டம்
ஓபிசிக்களுக்கான தேசிய கல்வி ஊக்கத்தொகை
ஓபிசி ஆண் மற்றும் பெண்களுக்கான விடுதிகள் கட்டுதல்.
ஓபிசி/டிஎண்டி/ஈபிசிக்களின் திறன் மேம்பாட்டுக்கான உதவி.
தொழில் ஆதரவு நிதி
தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் குறைந்த வட்டி கடன்/நிதி உதவித் திட்டங்கள்.
கருத்துகள்