பாகிஸ்தான் பிரதமராக தேர்வு பெற்றுள்ள மியான் முகமது சாபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் வாழ்த்து
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு பெற்றுள்ள மியான் முகமது சாபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதியையும், நிலைத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது என்றும், அப்போதுதான் இருநாடுகளும் தங்கள் வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்த முடியும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
“பாகிஸ்தான் பிரதமராக தேர்வு பெற்றுள்ள திரு மியான் முகமது சாபாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துக்கள். பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதியையும், நிலைத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது. அப்போதுதான் இருநாடுகளும் தங்கள் வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் நலத்தை உறுதி செய்ய முடியும்”.
கருத்துகள்