கொடையாளர் மற்றும் மனிதநேயர் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
கொடையாளர் மற்றும் மனிதநேயர் திருமிகு பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனிதநேயப் பணிக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்வை தொட்டதாக திரு மோடி கூறினார்.
“பில்கிஸ் எதியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. மனிதநேயப் பணிக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்வை தொட்டுள்ளது.
இந்திய மக்களும் அவரை அன்புடன் நினைவில் கொண்டுள்ளனர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்,” என்று பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்