உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பதவியேற்பு மற்றும் தூதர்கள் நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கிய நிகழ்வும்
குடியரசுத் தலைவர் செயலகம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பதவியேற்றார்
குடியரசுத் தலைவர் மாளிகையின் மையமண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 27, 2022) காலை 10:30 மணிக்கு நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.குடியரசுத் தலைவர் செயலகம்நாட்டில் பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இலவசங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பல கருத்துகளை தெரிவித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமையுடன் என்.வி.ரமணா பணி ஓய்வு பெற்றார். அப்போது இலவசங்கள் தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்றுள்ளார். ஆனால் ஓய்வு பெறும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பான அறிவிக்கையில் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்துள்ளதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக வசிக்கும் பங்களாவும் ..ஓய்வு பெறும் தலைமை நீதிபதிக்கு 6 மாதம் இலவச பங்களா உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் மத்திய அமைச்சகம் இந்த அறிவிக்கையில் திருத்தங்களைச் செய்துள்ளதன் படி ஓய்வு பெறும் தலைமை நீதிபதிக்கு இலவச பங்களா ஆறு மாதங்கள் வழங்கப்படும்; ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு 24 மணிநேர பாதுகாவலர்கள் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
தலைமை நீதிபதி மற்றும் ஓய்வு பெறும் நீதிபதி செல்போன், மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள்- இணையதள வசதிகளை மாதம் ரூபாய் 4,200 க்குள் இலவசமாக பயன்படுத்தலாம். இந்தக் கட்டணமும் வீட்டு பணியாளர், ஓட்டுநர், உதவியாளருக்கான ஊதியச் செலவுகளும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் செலவுகளாகும். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு இதற்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 70,000. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூபாய் 39,000.ஆகும்.
நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (26.08.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈகுவடார், சோமாலியா, ஜெர்மனி மற்றும் சுரினாம் ஆகிய நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்களின் நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
நியமனப் பத்திரங்களை ஒப்படைத்தவர்கள் வருமாறு:
திரு. ஃபிரான்சிஸ்கோ தியோடோரோ மால்டோனடோ குவேவரா, ஈகுவடார் குடியரசின் தூதர்
திரு. அகமது அலி தாஹிர், சோமாலியா குடியரசின் தூதர்
டாக்டர் பிலிப் ஆக்கர்மேன், ஜெர்மனி குடியரசின் தூதர்
திரு. அருண்கோமர் ஹர்டியன், சுரினாம் குடியரசின் தூதர்
கருத்துகள்