முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி மற்றும் விளையாட்டு விழா

காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியை பாரதிய பாஷா சமிதியின் தலைவரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பத்மஸ்ரீ சாமு கிருஷ்ணசாஸ்திரி அவர்கள் காலை 11:00 மணிக்கு தொடங்கிவைத்தார். நிகழ்வின்போது செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரனும் பல்கலைக்கழக நூலகர் முனைவர் தேவேந்திர குமார் சிங் அவர்களும் உடனிருந்தனர்.


பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கத்தின் ஒரு பகுதியாகப் சயாஜி ராவ் கெய்க்வாட் மைய நூலகத்தின் சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நூலகத்தில் 1890கள் தொடங்கி வெளிவந்த பல்வேறு தமிழ் நூல்கள் மற்றும் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட 12 ஓலைச்சுவடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தொடக்கக்கால தமிழ் நாடகங்களின் முதல் பிரதிகள், அன்னி பெசன்ட் அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பெற்ற நூல்கள், தமிழ் இசை நுட்பங்களை விளக்கும் யாழ் நூல், குமரகுருபரரின் நூல்கள், சைவ சிந்தாந்த தத்துவ ஏடுகள், பாரதி நூல்கள், ராமாயண, மகாபாரத மொழிபெயர்ப்புகள் முதலியவை அடங்கும்.

கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய கிருஷ்ணசாஸ்திரி, இந்த பழமையான அரிய ஆவணங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் முறையாக பாதுகாக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அதேசமயம் இந்த ஆவணங்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டு ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் முறைப்படுத்தப்பட வேண்டும் என்றார். இதுவே இன்றையத் தேவை என்றும் வலியுறுத்தினார்.

இந்த விலைமதிப்பற்ற சேகரிப்புகளின் கண்காட்சி, மத்திய நூலகத்தின் மைய மண்டபத்திற்கு அருகில் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய ஆவணங்கள் பிரிவில் டிசம்பர் 5 முதல் 16 வரை 12 நாட்களுக்கு தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை நடைபெறும். காசி தமிழ்ச் சங்கமத்திற்கு வருகை தரும் ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவரும் கண்காட்சியை பார்வையிடலாம் என துணை நூலகர் டாக்டர் சுசித்தா சிங் தெரிவித்துள்ளார். துணை நூலகர் முனைவர் ஆர்.பரமேஸ்வரன் மற்றும் தமிழ்த் துறையின் இரு உதவிப் பேராசிரியர்களான முனைவர் த.ஜெகதீசன், முனைவர் சு. விக்னேஷ் ஆனந்த், தமிழ் ஆய்வு மாணவர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.‘காசி தமிழ்ச்சங்கமம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக 8 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்

 ‘காசி தமிழ்ச்சங்கத்தில் கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீகம் போன்ற பல்சுவைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளின்  ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், 8 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த விளையாட்டுப்போட்டிகள் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் 2022 டிசம்பர் 8 -15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீர்ர்கள் “காசி தமிழ்ச்சங்கமத்தை” ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய விளையாட்டு வீர்ர்கள் எட்டு விளையாட்டு பிரிவுகளில் பங்குபெறுகின்றனர்.

“காசி தமிழ்ச்சங்கமம்” விளையாட்டுப் போட்டிகள் அட்டவணை: 2022 டிசம்பர் 8-15ஆம் தேதி வரை

1

8 டிசம்பர் 2022

வியாழக்கிழமை

ஹாக்கிப் போட்டி

ஹாக்கி ஸ்டேடியம், பனாரஸ் இந்துப்பல்கலைக் கழகம்

2

9 டிசம்பர்

2022

வெள்ளிக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டி

கால்பந்தாட்ட அரங்கம், பனாரஸ் இந்துப்பல்கலைக் கழகம்

3

10 டிசம்பர் 2022

சனிக்கிழமை

கிரிக்கெட் போட்டி

ஐஐடி கிரிக்கெட் மைதானம், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்

4

11 டிசம்பர் 2022

ஞாயிற்றுக்கிழமை

டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிண்ட்டன் போட்டி

எம்பி ஹால், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்

5

12 டிசம்பர் 2022

திங்கட்கிழமை

வாலிபால் போட்டி

பனாரஸ் இந்துப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானம்

6

13 டிசம்பர் 2022

செவ்வாய்க்கிழமை

கோ-கோ போட்டி

பனாரஸ் இந்துப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானம்

7

14 டிசம்பர்

புதன்கிழமை

கபடிப் போட்டி

பனாரஸ் இந்துப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த