முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிஏஜி தணிக்கை வரைமுறைகளை மீறும் ஹிந்து சமய அறநிலையத் துறை

மத்திய, மாநில அரசுகளின் வரவு செலவுகளை சரியாக ஆய்வு செய்த அறிக்கையை


மாநில சட்டசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது, அரசியலமைப்புச் சட்டத்தினால் 'சுதந்திரமான அமைப்பு' என அங்கீகரிக்கப்பட்ட இந்தியத் தணிக்கைத் துறையின் முதன்மையான பணியாகும். சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் வரவு செலவுகள் ஆய்வு செய்யப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்ட அறிக்கையில்,

'இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியத் தணிக்கைத் துறை தலைவர் (CAG) தணிக்கை மேற்கொள்ளும் அதிகாரத்தை மீறும் வகையில் தணிக்கைக்கு தமிழ்நாடு அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை  ஒத்துழைக்காததாலும்  ஆவணங்களைத் தராததாலும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவில்கள் மற்றும் அவற்றின் கொடைகள் மீதான ஆணையரின் பொதுக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் ஆய்விற்காக முன்மொழியப்பட்ட இணக்கத் தணிக்கை மேற்கொள்ள முடியவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மாநில அரசின் துறைகள் அனைத்திலும் தணிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அதிகாரமிருப்பதாக அக்கவுன்டன்ட் ஜெனரல் தெரிவித்திருக்கிற நிலையில், அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து அந்தத் துறையின் அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறுவது இதுதான்.

`கோவில்களுக்கு மன்னர்கள் ஆட்சிக் காலத்திலிருந்து நிறைய சொத்துகள், நிலங்கள்னு என உள்ளது. தவிர உண்டியல், நன்கொடைனு பக்தர்களிடமிருந்தும் லட்சக்கணக்கில் பணம் வருகிறது, இந்தத் தொகைகள் முறையாகக் கையாளப்படுதான்னு கண்காணிக்க ஆட்கள் வேணும்னு தான் அந்த ஹிந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் அறநிலையத்துறையின் பணியாளர்களின் ஊதியமே கோவில் பணத்திலிருந்துதான் கொடுக்கப்படுது. இந்தியத் தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை மக்களிடமிருந்து வரி முதலான வருவாய் அரசுக்கு வருவதை ஆய்வு செய்ய அதிகாரமிருக்கிறது. எந்தெந்தத் துறைகள்ல மக்கள் பணம் போகிறதோ அந்தத் துறைகளை ஆய்வுகள் செய்யலாம்.

கோவில்களுக்கு வரும் வருவாய் பணம் மக்கள் விருப்பப்பட்டு, ஒரு நம்பிக்கையில கொடுப்பது. இது அரசுக்குத் தருகிற பணமாகாது. அதனால தான் இந்தியத் தணிக்கைத் துறையின் ஆய்வு வரம்புக்குள் இந்தத் துறைகள் வருகிறதுனு சொல்லும் நிலையில்.

அதேநேரம், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குள்ளேயே ஒரு ஆடிட் விங் இருக்கிறது. அது கோவில்களின் சொத்துகள், நன்கொடை, உண்டியல் பணம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து துறைக்கு உரிய அறிக்கையை அனுப்பிய நிலையில் தான் இருக்கிறது’’. என்கின்றனர் சிலர். ஆனால் ஓய்வு பெற்ற சில ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களோ இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, CAG அரசியலைமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனக் கூறுவதால். அதே அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு. அப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட மதத்தால் நிர்வாகிக்கப்படுற இடங்களில் அரசே எப்படி ஆடிட் செய்ய முடியும். பண்ணவே கூடாது’’ என்கிறார்கள் இவர்கள்.

CAG அறிக்கை வெளியான அன்று பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர்  கே.அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், `ஹிந்து சமய அறநிலையைத்துறை கோப்புகளைக் கொடுத்து ஒத்துழைப்புத் தரவேண்டுமெனக்’ குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மிக மற்றும் ஆலயக் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளர் இரா.ராமலிங்கத்திடம் பேசிய தகவல் படி.

கோவில்களுக்கு பக்தர்கள் செலுத்துகிற பணம் வரி வருவாய் இல்லை தான். ஆனால் அது லட்சங்கள் மற்றும் கோடிகளில் வருகிறது. இந்தப் பணம் செலவாகிற இடத்துல் கண்காணிக்கிற அமைப்பா ஹிந்து சமய அறநிலையத்துறை தான்  இருக்கிறது. அவங்க இந்தப் பணத்தை முறையாகத்தான் செலவு செய்றாங்களானு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவங்களுக்குள்ளேயே நடக்கிற தணிக்கை விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிய மாட்டேங்குதே. அதோட வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகுமில்லையா? கோவில்கள் மூலமாகக் கிடைக்கும் பணம் கோவில் வளர்ச்சிக்கு மட்டும் தான் செலவாகிறதான்னு தெரியவில்லையே. இதுக்குத்தான் காலகாலமாக கோவில்களை ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேணும் என்கிற கோரிக்கையை பாஜக வைக்கிறது’’ என்கிறார். இவர்.பா.ஜ.க.வின் இந்தக் கோவில் நிலைப்பாடு குறித்து திமுகவின் பிரமுகர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறும் போது 


’’அறநிலையத்துறை இன்னைக்கு நேத்து உருவாக்கப்படலை. கோவில் சொத்துகள் ஒரு சில தனி நபர்களால் கொள்ளையடிக்கப்படுதுங்கிற குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிக்கட்சி காலத்துலயே உருவாக்கிட்டாங்க. காமராஜர் முதலமைச்சரா இருந்தப்ப இந்தச் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு இப்ப வரை இயங்கிட்டு இருக்கு. மாநில அரசே கோயில்களின் வரவு செலவு குறித்து முறையான தணிக்கை செய்துடுறாங்க. ஏதோ திமுக அரசாங்கம்தான் கோவில்கள் விஷயத்துல தவறு செய்கிற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்க அறிக்கை விடுறாங்கன்னா அதுக்கு என்ன பதில் சொல்றது? கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருந்து விடுவிக்கணும்கிறதெல்லாம்  அரசியல் பண்றதுக்காகப் பேசறது’’ என்கிறார். ஆனால் இதுவரை எல்லா நடவடிக்கைகளையும் பார்த்தால் பாஜக பேச மட்டுமே செய்கிறது ஆனால் செயலில் இறங்கவில்லை அதுவே உண்மை நிலை. அதுபோலவே பலவிதமான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனைகளும். இதுவரை எந்த பெரிய நடவடிக்கைகளும் யார் மீதும் எடுக்க வில்லை என்பதே பொதுவெளியில் பேச்சாக உள்ளது. அதுபோலவே பாஜகவின் ஊழல் ஒழிப்பும் காணல் நீராகவே உள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...