முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்.

ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்.


ஜாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை செயல்படுத்துவதில் ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம். ஜாதிப் பெயர் மாற்ற இறுதி முடிவெடுக்கக்கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

ஜாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்துவதில் இறுதி முடிவு எடுக்க கூடாதென உத்தரவு விபரம்,  ஊர்கள் மற்றும் தெருக்களுக்கு பல நூறாண்டு காலமாக இருந்து அழைக்கப்பட்ட ஜாதிப்பெயர்களை நீக்கம் செய்யும் அரசாணையின் படி கள ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும்; அதற்கு மேல் அந்த அரசாணையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. ஊர் பெயர்கள், தெருக்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம் மனு தாக்கல் செய்த நிலையில், அதுகுறித்து அனுமதிக்கப்பட்ட மனு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி  உத்தரவிட்டது.  தமிழ்நாடுஇது தொடர்பாக ஏற்கனவே 1978-ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும். 




இத்தனை ஆண்டுகளாக தெருக்கள், சாலைகளில் ஜாதிப் பெயர்கள் இருப்பதால் பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. முதலமைச்சர் மு. க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசு  சமீபத்தில் அரசாணை வெளியிட்டதன்படி, மறு பெயரிடுவது தொடர்பாக கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சிகளில் செயல் அலுவலர் மற்றும் ஆணையர்கள் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைப் பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். கள நிலைமை மற்றும் களத்தில் உள்ள உண்மைத்தன்மையின் அடிப்படையில் கவனமாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.





இறுதி செய்யப்பட்ட பெயர்களை மாவட்ட அரசிதழில் வெளியிட்டு ஆட்சேபனைகளைத் தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். அதன்பிறகு அரசின் அனுமதி கிடைத்த உடன் பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதிக்குள் முடித்து மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஜாதிய ரீதியான பெயர்களை நீக்கி சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது தான், அதேசமயம், ஜாதியப் பெயர்களை மாற்றுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது, ஜாதிப் பெயர்களை நீக்குவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்பு, ஆய்வுகள் மேற்கொள்ள அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.






மேலும், பெயர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பம் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  இதில் தொல்லியல் துறை சார்பாக  பாரம்பரிய ஊர்கள் அடங்கும் இதில் மத்திய அரசு  மற்றும் தொல்லியல் துறை  எதிர்மனுதாரராக சேர்க்கும் நிலை உறுவாகும் என சட்ட வல்லுநர் கருத்து அடங்கும்.    மதுரை தஞ்சாவூர் ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் 74  பாளையங்கள் கொண்ட ஜமீன் ஆட்சியில் உள்ள        நாகம்ம நாயக்கன் பாளையம், முத்துக்கவுண்டன் புதூர், கலிக்கநாயக்கன் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம், அக்ரஹாரப்புத்தூர்,திருமலை நாயக்கன் பாளையம், அப்பநாயக்கன் பட்டி, ஆறுமுகக்கவுண்டன் புதூர், லடசுமிநாயக்கன் பாளையம் கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் ஒக்கிலிபாளையம் செட்டிபாளையம் ஆண்டிபாளையம் என 700 ஊர்கள் உள்ளது.

அப்படியே ஊர் பெயரை மாற்றம் செய்து அரசு வருவாய் அ. பதிவேடுகள் மற்றும் செட்டில்மென்ட் ஆவணங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தி வந்த ஆதார் மற்றும் பேங்க், பாஸ்போர்ட், மற்ற அடையாள அட்டைகளில் எல்லா ஊர் பெயர் தானாகவே மாறி விடுமா? இல்லை அதற்கும் நாம் மக்கள் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டுமா?  கருப்பாயி என்ற பெயர் பிடிக்காவிட்டால் அழகி என மாறலாம் தப்பில்லை இது கிராமத்தில் சொலவடை பழமொழி.






விடியல் என்பது ஜாதிப் பெயரிலல்ல ஊழலற்ற நடவடிக்கை தான் அரசின் செயலாக வேண்டும்.

மாநிலத்தில எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, இந்த ஊர் பெயரெல்லாம் மாற்றி அந்த ஊரோட பாரம்பரிய அடையாளத்தை அழிக்க வேண்டுமா? 

என்பதே 70 சதவீதம் உள்ள மக்கள் தரப்பு எழுவினா?







அப்படியே தலைவர்கள் பெயரிலுள்ள பேருந்து நிலையங்கள் மாறுமா?  காரணம் ஒவ்வொரு மனிதனுடனும் அவனது பிறப்பு ஜாதி மறைந்துள்ளது அவ்வளவே இங்கு ஜாதி இல்லாத மனிதன் யாருமில்லை. ஜாதி இல்லை எனக் கூறும் போலி மனிதர்கள் அதிகரிப்பு தான் தற்போதய நிலைக்கு காரணம்.   பல நூறாண்டு காலமாக வரலாறு

கடைக்காடு அப்பாச்சிக் கவுண்டர் வீதி, மருதக் கவுண்டர் வீதி, அருணாச்சல போயன் வீதி, கணபதி பண்டாரம் வீதின்னு பேர் இருக்கே. அங்கு அந்த மக்கள் அதிகம் வசிக்கும் நிலை தானே.







ஜாதிப் பேர்ல ஊர் இருக்கக் கூடாதுன்னு மாற்றம் அரசு சலுகை தேவையில்லை என கூற முடியவில்லை மற்றும் அரசு தான் ஜாதிச் சான்றிதழும் தருகிறது. 


ஜாதி அடிப்படைல மற்ற சலுகைகள் கொடுக்கிறது. ஜாதி பார்த்து சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடுகள் எதற்கு?  அதற்கு இந்த வழக்கில் நீதிபதிகள் அனிதா, சுமந்து குமரப்பன் ஆகியோர் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன்,  கார்த்திகேய வெங்கடாஜலபதி சுப்பையா ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில் நாட்டுக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களான வா.உ. சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்,  தீரர் சின்னமலைக் கவுண்டர், மாமன்னர் மருதுபாண்டியர்கள், இராமசாமிப் படையாச்சி, ராஜகோபாலாச்சாரியார், மன்னர் முத்து வடுகநாதத் தேவர் மாவீர மன்னர் விருப்பாச்சி கோபால நாயக்கர், வீரர் அழகுமுத்துக் கோன், பெரும்பிடுகு முத்திரையர் சின்னக் காலாடி பெரிய காலாடிக் குடும்பன், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர், உள்ளிட்ட பெயர்களையும், ஆன்மிகத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் நோக்கத்தில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...