முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் நீலகிரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் நீலகிரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


நீலகிரி மாவட்ட மது விலக்கு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சார்லஸ். இவர் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றிய போது, பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக, அப்போதைய கோவை சரக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். புகார் காவல்துறை இயக்குநர்  கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஈரோட்டிலிருந்து பணியிடம் மாற்றப்பட்டவர் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இவர் மீதான புகார் தொடர்ந்து விசாரணையிலிருந்து வந்த நிலையில் விசாரணை அறிக்கை, மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் மூலம், காவல்துறை இயக்குநர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  சார்லஸை பணியிடை நீக்கம் செய்து,கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார்.

இந்தப் பணியிடை நீக்க உத்தரவு, கோயமுத்தூர் சரக டிஐஜி முத்துசாமி வாயிலாக, நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மூலம் கூடுதல் எஸ்.பி. சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது பணிபுரியும் இடத்திலேயே கூடுதல் எஸ்.பி. சார்லஸ் தங்கியிருக்க வேண்டுமென்றும். அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்லக்கூடாதெனவும் அந்த உத்தரவில் கறாராகக் கூறப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பியாகவும், கோயமுத்தூர் மாநகர நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புப் பிரிவில் பொறுப்புவகித்த காவல் துறை சார்ந்தவரே அத்துமீறிப் பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார். இவர் கும்ஹார்  (குயவர் - potter) என்ற சாதியை சேர்ந்தவர். இவர் ஒரு சமூக சேவகி. அதனால் ராஜஸ்தான் மாநில அரசால் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டார்.

1992 ஆம் வருடம் குஜ்ஜார் சாதியில் (Gujjar)  9 வயது குழந்தைக்குத் பால்ய திருமணம் செய்து வைக்க முயற்சி நடப்பதை அறிந்த பன்வாரி அக்கிராமத்திற்குச் சென்று அவர்களுக்கு தக்க ஆலோசனை கூறினார். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை.

உயர்சாதியினரின் ஆதிக்க சக்தியை அறிந்த பன்வாரி  “9 வயது பெண்ணுக்கு திருமணம் செய்கிறார்கள், அதைத் தடுப்பது என் பணி என போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசிடம், கிராமத்தினர் இது  சாதாரண விழா, திருமணம் ஏதுமில்லை என நாடகம் நடத்தி அனுப்பிவிட்டனர்.

22, செப்டம்பர், 1992 அன்று அக்குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்த 5 ஆண்கள் பன்வாரியை அடித்ததுடன், பன்வாரியை அவர் கணவர் முன்னிலையில் பாலியில் பலாத்காரம் செய்தனர். அப்போது அவருக்கு வயது 26. பன்வாரியும், அவரது கணவரும் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினர். இவ்வழக்கு நடந்த 1995 வருடம் வரை 5 முறை நீதிபதிகளை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், குற்றவாளிகளை பின்வரும்  காரணங்களை மேற்கோள் காட்டி நீதிபதி விடுவித்தார் பலர் மற்றும் சமூக அமைப்பு ஆதரவுடன் அந்த வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றது.

விஷாகா மற்றும் பலர் Vs ராஜஸ்தான் மாநிலம் வழக்கில் 13, ஆகஸ்ட்,1997 அன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சில வழிமுறைகளை வகுத்தது. (AIR 1997 SUPREME COURT 3011)


உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகள்.

விஷாகா கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.

கமிட்டியில் மொத்த உறுப்பினர்களில், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 

ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும். பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது, அவரை பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசுவது, ஆபாசமான படங்களை காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கொண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013 (the Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) இயற்றப்பட்டு அதன் படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் பற்றி புகார் தெரிவிக்க விஷாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். பத்து ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த