முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை பிரதமர் நினைவு கூர்ந்தார்

பிரதமர் அலுவலகம் முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார் முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். “நமது முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை நினைவுகூர்கிறேன். அவரது நீண்டகால மக்கள் சேவையில் இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் அயராது பணியாற்றினார்.‌ அவரது குறை கூற இயலாத நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பிற்கும் அவர் பெயர் பெற்றவர்.” இவ்வாறு பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கொவிட் பாதிப்பால் உயிரிழப்பு.

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,64,511-ஐ கடந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.48 சதவீதம்.   6 மாநிலங்களில்  - மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86.37 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.  கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,623 பேருக்கும், கேரளாவில் 3,792 பேருக்கும், பஞ்சாப்பில் 593 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன், அமைச்சரவை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவரமாக பின்பற்றும்படி அவர் ஆலோசனை கூறினார்.  தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிய, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு   உயர்நிலைக் குழுக்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் நாட்டின் வேலை வாய்ப்பு அறிக்கை வெளியீடு

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் நாட்டின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு வேலைவாய்ப்பு நிலவர முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, அரசு நிறுவனங்களின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

எல்லையில் அமைதி: இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டறிக்கை

பாதுகாப்பு அமைச்சகம் இன்று முதல் எல்லையில் அமைதி: இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டறிக்கை இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இன்று முதல் அமைதியை நிலை நாட்ட, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்திய-பாகிஸ்தான் ராணுவ செல்பாடுகளின் தலைமை இயக்குநர்கள், ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எல்லை கட்டுப்பாட்டு நிலவரம் குறித்து, சமூகமான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. இருதரப்பும் பயனடையும் வகையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்தவும், வன்முறையை தூண்டி அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை தீர்க்கவும், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். 2021 பிப்ரவரி 25ம் தேதி முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சண்டை நிறுத்தம், மற்றும் அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகளை கடுமையாக பின்பற்றவும் இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்.  எதிர்பாராத நிலவரம் அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட்டால், தற்போதுள்ள நடைமுறையான ஹாட்லைன் பேச்சுவார்த்தை, எல்லையில் ராணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் போன்றவற்றை பயன்படுத்த

252 போலி விலைப் பட்டியல் மோசடிகளை கண்டுபிடிப்பு

போலி விலைப்பட்டியலுக்கு எதிரான பிரசாரம் ஜிஎஸ்டியின் அமலாக்க மற்றும் இணக்க கண்காணிப்பு பிரிவு, சென்னை சிஜிஎஸ்டி ஆணையரகத்தின் மத்திய கலால் வரித்துறை ஆகியவை இதுவரை 252 போலி விலைப் பட்டியல் மோசடிகளைக் கண்டுபிடித்துள்ளன. ஜிஎஸ்டி மூலம் ரூ.491 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரியை (Input Tax credit) சட்ட விரோதமாகப் பெறும் நோக்கில் இந்த போலி விலைப் பட்டியல் மோசடி செய்யப்பட்டுள்ளது.                  இந்த மோசடி தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த போலி விலைப்பட்டியல் மூலம் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து,  ஜிஎஸ்டி வரி செலுத்துவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சிஜிஎஸ்டி சேவை மையம் போலி விலைப்பட்டியலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, போலி விலைப்பட்டியல் குறித்த விழிப்புணர்வு பிரசுரம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.                 இந்தப் பிரசுரத்தை ஜிஎஸ்டி மற்றும் சென்னை புறநகர் கலால் வரித்துறை ஆணையர் திரு ஜே.எம். கென்னடி  நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி, மற்றும் மத்திய கலால் வரி (Appeals-II) ஆணைய

இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம்

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம் இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம் 2021 பிப்ரவரி 22 முதல் 24 வரை புதுதில்லியில் நடைபெற்றது. அமெரிக்க ராணுவத்தில் இருந்து 12 பேர் கொண்ட குழு நேரடியாகவும்,  அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் இருந்து 40 அதிகாரிகள் காணொலி மூலமும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். பசிபிக் அமெரிக்க ராணுவத்தின் துணை தலைமை தளபதி, மேஜர் ஜெனரல் டேனியல் மாக்டேனியல் அமெரிக்க குழுவுக்கு தலைமை வகித்தார். இந்திய தரப்பில் இருந்து 37 அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் ஒரு வருடம் அமெரிக்காவில் ஒரு வருடம் என இக்குழுவின் கூட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ராணுவங்களுக்கு இடையேயான இக்கூட்டத்தில் ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பரஸ்பர ஆர்வம் சார்ந்த  தற்போதைய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக முதல் முறையாக நேரிலும் மெய்நிகர் முறையிலும் கூட்டம் நடைபெறுகிறது. ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்து

கோவையில் பிரதமர் பல வளர்ச்சித் திட்டங்களைலத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர்

பிரதமர் அலுவலகம் கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார் துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு இந்தியாவின் உறுதியை சாகர்மாலா திட்டத்தின் மூலம் காண முடியும்: பிரதமர் இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் கோவை மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர் நெய்வேலியில்  1000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் திட்டம் மற்றும்  என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ப்பணித்தார்.     வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்  5 மெகா வாட் திறனில்  மின் தொகுப்பு அமைப்பது மற்றும் கீழ் பவானி கால்வாய் திட்டத்தை  விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, மற்றும் தூத்துக்குடி உட்பட 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல்  நாட்டினார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் மற்றும் பிரதமரி

தேக்கம்பட்டியார் பாடல் வரிகளைக் களவாடிய மாரி செல்வராஜ் அவரை கண்டால் வரச் சொல்லுங்க

கண்டா வர சொல்லுங்க மணிகண்டனை  கையோடு கூட்டி வாருங்க. இந்தப்பாடல் ஏற்கனவே தேக்கம்பட்டி சுந்தர் ராஜன் பாடிய ஐயப்ப பாடலாகும். நலிந்த கலைஞர்களை சினிமாவில் காட்டி அவர்களுக்கு உதவி செய்ய வைத்த இயக்குனர்  மாரி செல்வராஜ் மறைந்த இந்தக் கலைஞரையும் கௌரவப்படுத்த வேண்டும்.அவரின் குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும்  ஏனென்றால் ஒரு வரி என்றாலும்  தவறு தவறு தான்.அந்தத் தவறு தொடராமல் இருக்க இப்பாடல் உரிமை தேக்கம்பட்டி சுந்தராஜன் பெற தகுந்த வழியை உருவாக்க வேண்டும் பாடலை  பாடிய பெண் அப்பாடலுக்கு உரிமை உள்ள நபரல்ல குரல் கொடுக்கும் நபரே என்பது இச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.பாடகி பிரபலமானது அது மாரி செல்வராஜ் ஏழுதியது என்பதால் தான் என பலர் நினைக்க வைத்த பின் இந்தப் பாடல் பலவருடமாக வானொலி உள்ளிட்டவைகளில் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடியது நமது வாசகர்கள் பார்வையில். மாரிசெல்வராஜ் தான் பாடலை காப்பி செய்துள்ளார்.கிராமிய கலைஞர்  கிடாக்குழி மாரியம்மா. சிவகங்கை மாவட்டம், திட்டக்குடி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர்விளையாட்டாக பாடத் துவங்கிய இவர் பின்னர் விசேஷ வீடுகள், சாவு  வீடுகள் என பல பாடல்களை ப

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் தா.பாண்டியன் மறைந்தார்.

முதுபெரும் கம்யூனிஸ்ட்   தலைவர் தோழர்  தா.பாண்டியன் மறைந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  வெள்ளைமலைப்பட்டியில் டேவிட், நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாக 18.மே.1932 ல் பிறந்தவர்  பிரமலைக் கள்ளர் சமுதாயக் கல்விச் சேவைக்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர் தான்  பெற்றோர்கள் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும் பின் உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சிறந்த பேச்சாளர்.  தா.செல்லப்பா.  கல்லூரிப் பேராசிரியரான அண்ணன் தந்த ஊக்கத்தில், சிறந்த பேச்சாளராக உருவானார். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும்  பங்கு உண்டு. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இண்டர்மீடியட் சேர்ந்து 1953 ல்  கட்சியிலும் சேர்ந்துவிட்டார். அப்போது மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச,  உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர். அந்நேரம்  அழகப்பா செட்டியாரிடமிரு

தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் பாலியல் புகார் விசாரிக்க ஐஏஎஸ் 6 அதிகாரிகளின் குழு.

தமிழக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி  பாலியல் புகார் விசாரிக்க ஐஏஎஸ் தலைமையில் 6 அதிகாரிகளின்  குழு.                                                தமிழக ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.     தமிழக முதல்வர் எடப்பாடி.கே. பழனிச்சாமி அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் அரசு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறார்.   கடந்த ஞாயிறுகிழமை  திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை  மாவட்டங்களுக்குச் சென்று பல நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் முதல்வருடன் சென்றார். பணிகள் முடிந்து மீண்டும் சென்னை திரும்புவதற்காக கிளம்பிய போது அந்தந்த மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பிய நிலையில் மற்றொரு மாவட்டத்தின் வழியாக வந்த பொழுது அந்த மாவட்டத்தின் கண்காணிப்பாளராக இருக்கக் கூடிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை வரவேற்று உபசரித்தார். அப்போது பெண் ஐ.பி.எஸ் அதி

ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்புத் தொழில்நுட்பம் வணிகமாகிறது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் கோவாவில் உள்ள மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR-Central Coastal Agricultural Research Institute (ICAR-CCARI) மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரியம் இடையே கடந்த 19 ஆம் தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் இயக்குநர் டாக்டர் இ.பி.சாகுர்கர், மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரிய உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர் தேசாய் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜாதிக்காயில் 80-85 சதவீதம் விதையறை தோல் பகுதி இருக்கும். அதிகம் விளைச்சல் உள்ள ஒரு மரத்திலிருந்து 100 கிலோ விதையுறை தோல் பெற முடியும்.  தற்போது ஜாதிக்காயில் விதை மட்டும் எடுக்கப்பட்டு விதையுறை தோல் பகுதி வீணாக்கப்பட்டு வயல்களில் வீசப்படுகிறது. ஆனால் இதை பயன்படுத்தி மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும். இந்த மிட்டாயை எந்தவித ரசாயண கலப்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம் பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி 600113 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்  டிடிடிஐ தரமணி அஞ்சல் அலுவலகத்தின்  வரையறைக்கு உட்பட்ட “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்” என்ற பெயரில் புதிய தபால் நிலையம் துவங்கப்பட உள்ளது. பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதன் வாயிலாகப் பயனடைவார்கள். எனவே இந்த புதிய தபால் நிலையத்தின் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை தெற்கு பிராந்திய அஞ்சல் அலுவலகங்களுக்கான மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிப்காட் நில எடுப்பு பிரிவு தனியே உருவானது

 தமிழகத்தில் சிப்காட் தொழிற்சாலை திட்டப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த தனியே நில எடுப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கு இணை ஆணையர் (மாவட்ட வருவாய் அலுவலர்-டி ஆர் ஓ)தலைமையில் ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் 25 ஆம் தேதி பயணம்

பிரதமர் அலுவலகம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் 25ம் தேதி பயணம் கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மற்றும் அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரியிலும் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 2021 பிப்ரவரி 25ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரியில் காலை 11.30 மணியளவில் பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மாலை 4 மணியளவில், கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் பிரதமர் நெய்வேலியில் புதிய அனுமின் திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இது 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி நிலையங்களும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி மையம் நெய்

கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை, சென்னையில் பறிமுதல் .

கனடாவில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பறிமுதல் கனடாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கனடாவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு வந்த 3 பார்சல்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதித்தனர்.  இந்த பார்சல்கள் சென்னையைச் சேர்ந்த ஒரு நபருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவற்றை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் பைகளில் காய்ந்த இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிக நெடியுடன் இருந்த அந்த இலைகளை பரிசோதித்த போது அவை உயர் ரக கஞ்சா என தெரியவந்தது. இவை ‘ஹைட்ரோ கேனபிஸ்’ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிகிறது. 3 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிராம் ஹைட்ரோ கேனபிஸ், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.2.5 லட்சம்.  இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள

ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்

பிரதமர் அலுவலகம் தமிழக முன்னால் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். “செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். மக்கள் ஆதரவு கொள்கைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார். நமது பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் அவர் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடனான எனது ஏராளமான கலந்துரையாடல்களை நான் எப்போதும் எண்ணி மகிழ்ச்சி அடைவேன்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் சூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தின் டிஜிட்டல் செய்யப்பட்ட புகைப்படங்களின் வாயிலாக சூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு கடந்த நூற்றாண்டில் சூரியனின் சுழற்சி எவ்வாறு நிகழ்ந்தது என்பதை டிஜிட்டல் செய்யப்பட்ட பழங்கால படச்சுருள்கள், புகைப்படங்கள் வாயிலாக கண்டறியப்பட்ட தரவுகளின் மூலம் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். எதிர்காலத்தில் சூரியனின் சுழற்சிகளையும், அதன் மாறுபாடுகளையும் கணிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த மதிப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ஆரியபட்டா ஆராய்ச்சி கணிப்பு அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவரான திரு பிபூதி குமார் ஜா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, ஜெர்மனியின் கோடிங்கேனில் உள்ள சூரிய மண்டலம் பற்றிய மேக்ஸ் பிளாங்க் கழகம், அமெரிக்காவின் பௌல்டர் நகரில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்களுடன் இணைந்து டிஜிட்டல் செய்யப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த படச்சுருள்கள், புகைப்படங்களின் வாயிலாக

ஹார்டுவேர்க்கு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை ஐடி ஹார்டுவேர்க்கு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஐடி ஹார்டுவேரில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஐடி ஹார்டுவேரில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மிகப் பெரிய முதலீடுகள் ஈர்ப்பதை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பை  இத்திட்டம் தெரிவிக்கிறது.  லேப்டாப்புகள் , டேப்லெட்டுகள், அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் இத்திட்டத்தின்  இலக்கு பிரிவின் கீழ்  இடம் பெற்றுள்ளன. இத்திட்டம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இலக்கு பிரிவின் கீழ் வரும் பொருட்களின் நிகர விற்பனையில் (அடிப்படை ஆண்டு 2019-20)  4 சதவீதம் முதல் 2 சதவீதம் /1 சதவீதம் ஊக்குவிப்பு தொகையை தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு 4 ஆண்டு காலத்துக்கு வழங்கும். இத்திட்டம், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், அனைத்து வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் தயாரிக்கும் 5 உலகளாவிய முக்கிய நிறுவனங்கள் மற்றும் 10 உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும்.  தற்போது இந்த பொருட்கள் அதிகள

பட்டியலினப் பிரிவின் தேசிய ஆணைய தலைவராக விஜய் சம்ப்லா பொறுப்பேற்பு

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பட்டியலின பிரிவின் தேசிய ஆணைய தலைவராக விஜய் சம்ப்லா பொறுப்பேற்பு பட்டியலின பிரிவு தேசிய ஆணையத்தின் தலைவராக திரு. விஜய் சம்ப்லா புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் திரு. கிரிஷன் பால் குர்ஜார், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், பட்டியலின தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர், பா.ஜ.க.எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். திரு.விஜய் சம்ப்லா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் 2014ம் ஆண்டு முதல் 19ம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராக இருந்தார். புதிய பொறுப்பேற்றபின் பேட்டியளித்த திரு. விஜய் சம்ப்லா, ‘‘பட்டியலின மக்களின் நலன் மற்றும் உரிமைகளை காக்க ஒய்வின்றி பணியாற்றுவேன். பட்டியலின மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக மட்டும் பணியாற்றாமல், எந்தவித அநீதியையும் தடுக்கும் வகையில் செயல்படுவேன் என்று கூறினார். பட்டியல் இனத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் திட்டமிடலில் தேவையான ஆலோசனையை ஆணையம் வழங்கும் ’’ என்றார் அவர்.

சிவகங்கையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது

சிவகங்கையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 27 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கு பதிவு மற்றும் ஆள்சேர்ப்பும்  நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே சிவகங்கை மாவட்டத்தைச்  சேர்ந்த 18 முதல் 40 வயது வரையிலான வேலை நாடுபவர்கள் தங்களது முழுவிவரம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அல

மணல் மாஃபியா வைகுண்டராஜன் குற்றவாளி: டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு.

மணல் மாஃபியா வைகுண்டராஜன் குற்றவாளி: டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு.  வி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர் பல்வேறு சதி செயல்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதனக்கு சாதகமாக உதரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை என்ன எவ்வளவு என்பது நாளை அறிவிக்கப்படும்.பிரபல தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனருமாவார். நெல்லை மாவட்டம், திசையன்விளை என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். பல தொழில்கள் செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையிடம் சிக்கினார். முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது சுற்றுச்சூழல் அனுமதி பெற லஞ்சம் கொடுத்த S.வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை,5 லட்சம் அபராதம். லஞ்சம் பெற்ற மத்திய சுற்றுச்சூழல்துறை அதிகாரியாக பணியாற்றியவருக்கு 5 ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம் விதிப்பு.

புதுச்சேரியில் பாஜக செய்தது திருட்டுதனம் என்பவர்களுக்கு திமுக செய்தது கூட்டணித் துரோகம்

பாஜக செய்தது திருட்டுதனம் என்பவர்களுக்கு  திமுக செய்தது கூட்டணித்  துரோகம் . கவிழ்ந்து புதுவை  காங்கிரஸ் அரசு பெரும் பான்மையை முதல்வர்  நாராயணசாமி நிரூபிக்கத் தவறியதால் புதுவையில் ஆட்சி கவிழ்ந்தது. புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.   புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்துப் பதவி விலகியதால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்  உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி  தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு மற்றும் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக சாடினார். பாஜக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

பொள்ளாச்சி புதிய மாவட்டமாகும் அறிவிப்பு பிப்ரவரி 24 ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு

பொள்ளாச்சி புதிய மாவட்டமாகும்  அறிவிப்பு பிப்ரவரி 24 ஆம் தேதி  அறிவிக்கப்பட வாய்ப்பு பொள்ளாச்சியை மாவட்டமாக்க மக்களின் கோரிக்கையை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற உறுதுணையாக இருப்போமென உள்ளாட்சி  அமைச்சர் வேலுமணி பேச கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்ததில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து  ''பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனியாக  மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை,'' என்றார் . அமைச்சர் வேலுமணி பேசுகையில், ''விவசாயிகளுக்காக மும்முனை மின்சாரம், பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். விவசாயிகள், பொதுமக்களுக்காக, 'தென்னை நகரம்' என அழைக்கப்படும் பொள்ளாச்சியை மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று கண்டிப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம், எனவும் பேசினார்..அது பிப்ரவரி 24 ல் அறிவிக்கப்படலாம்  என்ற நிலை.தென்னை நகரம்'  பொள்ளாச்சி, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பெனி  ஆட்சியில், 18