முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொழில் தொடங்குவதற்குரிய சூழல் ஆகியவற்றுக்கு உதவுவதில் டாக்டர் சுபாஷ் சர்கார் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம்

இந்திய புத்தாக்கம், தொழில் தொடங்குவதற்குரிய சூழல் ஆகியவற்றுக்கு உதவுவதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் – டாக்டர் சுபாஷ் சர்கார் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் 2021 ஆம் ஆண்டுக்கான அடல் புதிய கண்டுபிடிப்பு சாதனைகள் (ஏஆர்ஐஐஏ) குறித்த நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் இன்று மெய்நிகர் வடிவில் அறிவித்தார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தலைவர் பேராசிரியர் அனில் சகஸ்ர புதே, தொழில்நுட்பக் கல்வி கூடுதல் செயலர் திரு.ராகேஷ் ரஞ்சன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தரவரிசை இந்திய நிறுவனங்களின் மனப்போக்கை ஒருங்கிணைத்து உயர்தரமான ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சூழலை கட்டமைக்க உதவும் என்று நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சர்கார் கூறினார். 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டுவதற்கு தரமான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்தினார். தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை எட்டுவதற்கு இது உண்மையிலேயே உதவும் என்று அவர் க

விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள் மற்றும் ரூ.5.76 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல்.

விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல். கொகைன் அடங்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துகள்களை விழுங்கி கடத்தலில் ஈடுபட்ட பெண் பயணியை புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு கிலோ போதைப்பொருள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  முனையம் 3-க்கு சில தினங்களுக்கு முன் வந்த உகாண்டா பயணியின் நடை மற்றும் உடல் அசைவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால், அவருக்கு உதவி ஏதேனும் வேண்டுமா என்று சுங்க அதிகாரி ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் முதலில் அணுகினார். உதவியை அவர் மறுத்ததோடு, விசித்திரமான உடல் அசைவுகளை தொடர்ந்து வெளிப்படுத்தியதால், அதிகாரிகள் அவரை இடைமறித்து விசாரித்தனர். போதைப்பொருள் அடங்கிய 91 துகள்களை விழுங்கியதை விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கு அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டதால், ஆர் எம் எல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பாட்டார். மருத்துவமனையில் அவரது உடலில் இருந்து 992 கிராம் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. 2021 டிசம்பர் 29 அன்று அவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறத

காவலர்களிடம் கை நீட்டும் இடைநிலை காவல் அதிகாரிகள்: தடுக்க காவல்துறை இயக்குனர் அனுப்பும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல்

காவலர்களிடம் கை நீட்டும் இடைநிலை காவல் அதிகாரிகள்: தடுக்க காவல்துறை இயக்குனர் அனுப்பும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல் காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்களிடம் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தகவல்  தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு இயக்குனர் சைலேந்திரபாபு, பொது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு காவலரின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்துகிறார். ஆரம்பம் முதல் இவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது காவலர்களின்  பணியிடமாறுதல், தண்டனையை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காவல்துறை இயக்குனர்  சைலேந்திர பாபு உத்தரவிட்ட பின்னர், அந்த உத்தரவை சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு வழங்குவதில் சிலர் லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு வந்ததை தொடர்ந்து காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு கையெழுத்திட்ட அடுத்த நிமிடமே, அந்தத்தகவல் சம்பந்தப்பட்ட காவலருக்கு தற்போது வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. இதனால் இடையிலிருப்பவர்கள் லஞ்சம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல் காவல்துறையினருக்கு வார

விதிமுறைகளுக்கு மாறாக இணையத்தில் விற்கும் மின் வணிக நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு மாறாக பிரஷர் குக்கர்களை இணையத்தில் விற்கும் மின் வணிக நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் 18(2) பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, உரிய ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வேண்டாமென்று நுகர்வோர்கள் நலனுக்காக பாதுகாப்பு அறிவிப்பு ஒன்றை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. காயங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து நுகர்வோர்களை பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், இந்திய தரநிலைகள் அலுவலக சட்டத்தின் 16-ம் பிரிவின் கீழ், தர முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. தர கட்டுப்பாட்டு உத்தரவுகளின் வாயிலாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. மத்திய அரசால் தர முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருட்களின் சட்டவிரோத உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை, வாடகை, சேமிப்பு அல்லது காட்சிப்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு இரண்டு வருடம் வரையிலான சிறை தண்டனை,  முதல் தடவை விதிமீறலுக்கு ரூபாய்

அஞ்சல் தலை சொல்லும் கதை” - மாநில அளவிலான மெய்நிகர் கண்காட்சி

அஞ்சல் தலை சொல்லும் கதை” - மாநில அளவிலான மெய்நிகர் கண்காட்சி சென்னை நகர மண்டலம், தமிழ்நாடு வட்டம் தனது 13-வது மாநில அளவிலான அஞ்சல்தலைக் கண்காட்சியை (TN DIGIPEX 2022) மெய்நிகர் முறையில் “அஞ்சல் தலை சொல்லும் கதை” என்ற கோஷத்துடன் 2022 ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை “இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் ஒரு பகுதியாக  (இந்தியா 22@75 திட்டம்) அஞ்சல் துறை இதை ஏற்பாடு செய்துள்ளது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் சரிபார்ப்புக்கு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆண்டு தோறும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆனால் புதிய வருமான வரித் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், கொரோனா தொற்றுப் பரவல் பாதிப்பு காரணமாகவும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மற்றும் டிசம்பர் மாதம்  31 ஆம் தேதியென இரண்டு முறை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நெருங்கிய நிலையில், நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை தெரிவித்த தகவல்: டிசம்பர் மாதம் 27ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, வருமான வரித் துறையின் புதிய இ-ஃபைலிங் இணையளத்தில் 4.67 கோடி வருமான வரி கணக்கு ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம்  27ஆம் தேதி , 2021 ஆம் ஆண்டு அன்று மட்டும் 15.49 லட்சத்திற்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இறுதி நாளென்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. நிதியாண்டு 2021-22 க்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்ட 4.67 கோடி ஐடிஆர

பிரதமரின் – உழவர் கௌரவ நிதியின் 10-வது தவணையை பிரதமர் ஜனவரி 1-ந் தேதி விடுவிக்கிறார்

பிரதமரின் – உழவர் கௌரவ நிதியின் 10-வது தவணையை பிரதமர் ஜனவரி 1-ந் தேதி விடுவிக்கிறார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் வழங்கப்படுகிறது இதுவரை விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.1.6 லட்சம் கோடிக்கு மேல் கவுரவத் தொகை மாற்றப்பட்டுள்ளது அடிமட்ட விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டும் என்பது பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாடாகும் 351 விவசாய உற்பத்தி அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் அதிகமாக பங்கு மானியத்தையும் பிரதமர் விடுவிக்கிறார். இதன் மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவர் அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிகளை அதிகாரப்படுத்த வேண்டுமென்ற உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் (பிஎம் – கிசான்) 10-வது தவணை நிதியுதவியை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி பகல் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் விடுவிக்கிறார். ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட இந்தத் தொகை மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்கள் பயனடையும். பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களு

அறிவியல் இதழை இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.

அறிவியல் இதழை இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வெளியிட்டார். இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் மாத இதழை வெளியிட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் டோக்ரி, கஷ்மீரி உள்ளிட்ட இதர உள்ளூர் மொழிகளில் இது விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். இந்தி மற்றும் ஆங்கில பதிப்புகள் இந்தியாவின் 100-வது ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் "கனவு 2047" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ள நிலையில், உருது பதிப்பிற்கு தஜாஸ்ஸஸ் (ஆர்வம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ஜிதேந்திர சிங், இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக வட்டார மொழிகளைப் பயன்படுத்தி அறிவியல் தகவல் தொடர்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி "பெரிய அளவில்" ஊக்குவிப்பதாகக்

பண்டு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனக் கட்டுமானம் மே, 22 ஆம் தேதி தொடங்குகிறது; 2 ஆண்டுகளில் முடிவடையும்

பண்டு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனக் கட்டுமானம் மே, 22 –ல் தொடங்குகிறது; 2 ஆண்டுகளில் முடிவடையும் – திரு சர்பானந்தா சோனாவால் குவஹாத்தியில் அமைக்கப்படும் பண்டு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனக் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், சென்னை ஐஐடி, உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் ஆணையம் ஆகியவற்றின் உயர்நிலை அதிகாரிகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் திங்கள் அன்று சந்தித்தார்.   இதன் மேல்கட்டுமானப் பணிகள்  2022 மே மாதத்தில் இருந்து தொடங்கவிருப்பதால் தொழில்நுட்பப் பணிகளை நிறைவு செய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  கட்டுமானப் பணிகளை 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  இந்த நிறுவனம் அமைக்கப்படும் போது இந்த பிராந்தியத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.  இந்த திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் அமலாக்கத்தை, உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் ஆணையம், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவை  கூட்டாக செயல்படுத்துகின்றன.  தொழில்நுட்ப உதவி, சென்னை

கோயம்புத்துரில். இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவின் 5 நாள் புகைப்படக் கண்காட்சி

கோயம்புத்துரில் 5 நாள் புகைப்படக் கண்காட்சி  இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மக்கள் தொடர்பு கள அலுவலகம் – கோயம்புத்தூர் சார்பில், 5 நாள் புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது.  இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திரு ஜி எஸ் சமீரான்  தொடங்கி வைத்தார்.   இந்தக் கண்காட்சியில் அஞ்சல் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ஐசிடிஎஸ்) அரங்குகளும் இடம்பெற்றிருந்தன.  நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட, போராடிய ஆனால் மக்களால் பிரபலமாக அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.   ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் இதனை கண்டுகளித்தனர்.  அஞ்சல் துறை அரங்கில் இடம் பெற்றிருந்த ஆதார் மற்றும் அஞ்சல் துறை வங்கி அரங்குகள் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தன.  ஐ சி டி எஸ் அரங்கில்  கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய  விழிப்புணர்வுக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.  கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் திரு சமீரான்,  மகாத்மா காந்தி, நேதாஜி, சர்தார் பட்டேல் போன்ற பெரும் தலைவர்கள் மற்றும்

பிரதமர் - இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தமிழ் மூவர் உள்ளிட்ட 75 எழுத்தாளர்களை தேசிய புத்தக அறக்கட்டளை அறிவித்தது

பிரதமர் - இளைய எழுத்தாளர் வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 75 எழுத்தாளர்களை தேசிய புத்தக அறக்கட்டளை அறிவித்துள்ளது தமிழ் மொழி எழுத்தாளர்கள் மூன்று பேர் தேர்வு மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை , விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பிரதம மந்திரி இளைய  எழுத்தாளர்  வழிகாட்டுதல்  திட்டத்தின் கீழ், ‘ இந்திய தேசிய இயக்கம்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற அகில இந்திய போட்டியின் முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.  உதவித்தொகையுடன் கூடிய இந்த வழிகாட்டுதல் திட்டத்தின்படி, 30 வயதுக்கு குறைந்த 75 இளம் எழுத்தாளர்கள்   தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அகில இந்திய போட்டி கடந்த ஜூன் 1-ம்தேதி முதல் ஜூலை 31 முடிய 'மைகவ்' இணைய தளத்தின் மூலம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களிடமிருந்தும், வெளி நாட்டு இந்தியர்களிடம் இருந்தும், 22 அலுவல் மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சுமார் 16,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  பல்வேறு குழுக்களைச் சேர்ந்த நிபுணர்கள் போட்டிக்கு வந்த நூல்களை ஆய்வு செய்தனர்.    2021 ஜனவரி 31-ம்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது

நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

நல்லாட்சி குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார் - நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் நிர்வாகச்  சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்  துறை தயாரித்த 2021 -ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டை , நல்லாட்சி தினத்தன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று வெளியிட்டார். இதில் நீதி  மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப்  பிரிவில்  ஏ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய திரு அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் திரு நரேந்திர மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக்  காத்திருந்ததாக கூறினார்.  மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர். நல்லாட்சிக்கு உதாரணம் அளித்த திரு அமித் ஷா, கடந்த 7 ஆண்டுகளில் திரு மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் திட்டம் ஐஐடி கான்பூரிலிருந்து மோதி ஜீல் வரையிலானது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர். இதில் 2 வழித்தடங்கள் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையில் செல்வதாகும். இது ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. முதல் வழித்தடத்தில் 21 ரயில் நிலையங்களும், இரண்டாவது வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்களும் உள்ளன.  இன்று தொடங்கி வைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் திட்டம் கான்பூர் – மோதி ஜீல் இடையே 9 நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் உத்தரப்பிரதேச முதலமைச்சரால் 15.11.2019 அன்று தொடங்கப்பட்டன. கொவிட்டின் இரண்டாவது அலை இருந்தபோதும் இதன் கட்டுமானப் பணிகள் அனைத்துத் தடைகளையும், சவால்களையும் கடந்து துரிதமாக நடைபெற்றன. கட்டுமானம், சமிக்ஞை முறை, ரயில் பாதை, மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டு, மின்சாரப் பாதைப் பணி போன்றவை இரண்டு ஆண்டு காலத்திற்

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல்

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான முன்னெச்சரிக்கை டோஸ்கள் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு. 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய்த்தன்மை உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மூன்றாவது டோஸ் வழங்குவது குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய சுகாதார செயலாளர் திரு. ராஜேஷ் பூஷன் காணொலி மூலமாக இன்று தலைமை வகித்தார். 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி 2022 ஜனவரி 3 திங்கட்கிழமை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான முன்னெச்சரிக்கை மூன்றவது டோஸ் ஜனவரி 10, 2022 திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது என்றும் டிசம்பர் 25, 2021 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை டிசம்பர் 27, 2021 அன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெ

இந்திய கடற்படை கப்பல்கள் . கேரள அரசு நடத்திய சர்வதேச தண்ணீர் திருவிழாவில் பங்கேற்க. பேப்பூருக்கு வந்தன

கேரளாவின் பேப்பூருக்கு வந்தன இந்திய கடற்படை கப்பல்கள் . கேரள அரசு நடத்திய சர்வதேச தண்ணீர் திருவிழாவில் பங்கேற்க, இந்திய கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் சர்தா மற்றும் ஐஎன்எஸ் கப்ரா ஆகிய போர்க்கப்பல்கள் பேப்பூர் துறைமுகத்துக்கு வந்தன. கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நடந்த விழாவில், இந்த கப்பல்கள் பங்கேற்றன.  விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்த போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டன.   பேப்பூர் கடற்கரையில் கடற்படையின் இலகு ரக ஹெலிகாப்டர் தேடுதல் மற்றும் மீட்பு பணி குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  இரவில் இந்த போர்க்கப்பல்கள் மின்னொளியில் ஜொலித்தன. இதை பேப்பூர் கடற்கரையில் இருந்த மக்கள் கண்டு ரசித்தனர். கடலோர பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேசபக்தி உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த போர்க்கப்பல் பயணத்தின் நோக்கம்.  பேப்பூர் துறைமுக கழகம் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.  போர்க்கப்பல்களை கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் .வேணு வாசுதேவன் ஆகியோர் உட்பட  பொது மக்கள் சுமார் 3,000 பேர் பார்வை

ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம், 2021

ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம், 2021 இன்று மாண்புமிகு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்களால்,ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம், 2021(திட்டம்), இணையம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. 2.இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் மூன்று குறை தீர்ப்பாளர் திட்டங்களான (i) வங்கி குறை தீர்ப்பாளர் திட்டம், 2006, (ii) வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான குறை தீர்ப்பாளர் திட்டம், 2018 மற்றும் (iii) டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான குறைதீர்ப்பாளர் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. ரிசர்வ் வங்கியால், வங்கியியல் ஒழுங்கு முறை சட்டம், 1949 பிரிவு 35A, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 45L மற்றும் கட்டணம் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007 (51) பிரிவு 18 ஆகியவற்றின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்ட இந்தத் திட்டமானது,  ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் நிறுவனங்களின் சேவைகளில் உள்ள குறைகளின் மீதான வாடிக்கையாளர் புகார்கள் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு ஏற்றவாறு தீர்க்கப்படாவிட்டாலோ அல்லது

உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்

என்னமா? இப்படிப் பண்றீங்களேம்மா!    உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம் அம்மாவென்றும் பூரணி என்றும் கூறும் ஆன்ட்டிகளையெல்லாம் சாமியாரென ஏற்றுக் கொள்ள மக்கள் மனதில் உள்ள அவ்வளவு பாதிப்புகள். அது தீராதா எனும் ஆதங்கம் தான். நியாயம்னு ஒன்னு இருக்கு  ஆண் சாமியார் பங்காரு அடிகளாரை அம்மானு சொல்கிற மக்கள் வாழ்கிற சமூகத்தில் இந்த அடுத்த ஆண்கள் தொடர்பான ஆன்ட்டியை!  அதாவது பூரணியைக் கொண்டாடுவதில் என்ன தவறு.? எனக் கேட்பவர்கள் உண்டு.  நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய  மக்கள் தானே ?      அண்ணபூரனி ஆன்ட்டி சாமியார் ஆனதும் இப்படித்தான்..?. நித்தியை விட இந்தச் சித்தியானவர் அவசர கதியில் புகழ்?ஆயிட்டாங்க போல! இது மருவத்தூருக்கு ஆண் அம்மாவுக்கு வந்த சோதனையா என்ற வினா எழுகிறது. எங்கிருந்தோ ஒரு தேவ கானம் இப்போது கேட்கிறது வேதனை வேதனை.! உடனே எங்கிருந்து வந்தது இந்த சுருட்டிகளும்,செஞ்சுருட்டிளும்.. அம்மாவின் திவ்ய தரிசனம் தரிசன நாள்: 01-01-22 - சனிக்கிழமை  தரிசன நேரம் : காலை 9.00 மணி முதல்  தரிசன இடம் : வா