முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் நேரத்தில் ஜாதியை முன்னெடுக்கும் பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு நாளை போராட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு மடல் என் உயிரினும் மேலான பாட்டாளிச் சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் போராட்டக் களத்திற்கு புலியென புறப்படுவதற்கான ஆயத்தப்பணிகளில் சிங்கக் குட்டிகளாகிய நீங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள். சமூகநீதி போராட்டம் என்பது முடிவில்லாதது. பல்வேறு தரப்பினருக்காக, பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதி போராட்டம் நீண்டு கொண்டே இருக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊர

புதுவருடத்தில் நடிகர் ரஜினி புதுக்கட்சி இப்போதே பூத்கமிட்டி முன்னேற்பாடு

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகைக்கான ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினிகாந்த் ‛அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,' ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில், சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, ‛என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும். பலமுறை எச்சரித்தும், சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை,' என்றார். மேலும், ‛தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா? தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்? கொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி? போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை க

டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்பாத விவசாய சங்கங்கள் தொடரும் போராட்டம்

விவசாயிகளில் போராட்டம் நடத்துபவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விதித்த நிபந்தனையை ஏற்க. டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற பெயரில் டில்லிக்கு பேரணியாக கிளம்பினர். ஹரியானா எல்லையில் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடுக்க காவல்துறை முயன்றதால் போராட்டம் பரபரப்பு ஏற்பட்டது. பின் டில்லியின் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விவசாயிகள், , சிங்கு மற்றும் டிக்ரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது. போராட்ட இடத்திலேயே உணவு சமைத்துச் சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டிசம்பர்.,மூன்றாம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும்

ஸ்ரீகுருநானக் தேவ் பிறந்த நாளில் குடியரசு துணை தலைவர் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து குருநானக் பிறந்தநாள்,  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  குருநானக் தேவ் ஜி பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சீக்கிய மதத்தை நிறுவிய  குரு நானக் தேவ் ஜி, தனது உன்னத வாழ்க்கையின் மூலம் உண்மை, இரக்கம் மற்றும் நீதியின் சின்னமாக இருந்து வந்தார்.  இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்கள், போதகர்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் புனிதர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. அவரது போதனைகள் உலகளாவிய  வேண்டுகோளை கொண்டுள்ளன மற்றும் இரக்கம்,  அடக்கமான வழியை பின்பற்றவும், சாதி, மதம், ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை காட்டவும் எப்போதும் நம்மைத் தூண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் நிகழ்ச்சியாக குருநானக் பிறந்தநாள் எப்போதும் இருந்து வருகிறத

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மூலம் 3.15 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3.15 கிலோ தங்கம் பறிமுதல். சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னை வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நவம்பர் 28ம் தேதி இரவு முதல் 29ம் தேதி காலை வரை சுங்கத்துறையின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த முகமது ஐசக், சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி, முகமது நாகூர் ஹனிபா ஆகியோர் துபாயில் இருந்த வந்த ஒரு விமானத்தில் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த எல்சிடி மானிட்டரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.36 கிலோ எடையுடன் கூடிய  தங்க தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த சிவகங்கை மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அவர்களும் எல்சிடி மானிட்டர்கள் மற்றும் பைகளில்  28 தங்க தகடுகள், 10 மெல்லிய தங்க தகடுகளை மறைத்து வைத்திருந்தனர். அவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் எடை 1.62 கிலோ. துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில், ராமந

வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் காட்டி கடன் வாங்கி மோசடி நபர்கள் கைது

தொழில் அதிபர்களைப் போல் நடித்து ரூ.3.86 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தோமெனக் கைதாகிய கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் மேலாளர் தில்லை கோவிந்தன். காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் நீலாங்கரையைச் சேர்ந்த, முகமது முசாமில், அய்யாதுரை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பாலவிஜய், ஆகியோர், எங்கள் வங்கிக் கிளையில், வருமான வரித்துறையின் ஆவணங்களைப் போலியாகத் தாக்கல் செய்து, கார் கடன் வாங்கி மோசடி செய்ததாகவும்இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து, வெள்ளிக்கிழமை முகமது முசாமில் (வயது 34) பாலவிஜய் (வயது 35) அய்யாதுரை, (வயது32) ஆகியோரை விசாரித்ததில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தடம் பதிக்க நாளை நடக்கும் கூட்டம் இதில் இறுதிமுடிவு

போயஸ் தோட்டத்தில் மக்கள் மன்றம் சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மணிநேரம் ஆலோசனை சென்னை போயஸ் கார்டனில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ரஜினிகாந்த் அரசியலில் வருவாரா? இல்லையா என்பது தெரியும்? அவர் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்ப டுகிறது. நாளை சென்னை இராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் ரஜினிமக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கிறார். காலை 9 மணிக்குத் தொடங்கும் சந்திப்பில் தனது அரசியல் நுழைவு நிலைப்பாடு பற்றிய தனது முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை அவர் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதொட

கடலூரில் பேரிடர் மீட்புப்படையினருக்கு விருந்து வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர்

நிவர் புயல் மீட்புக்கு கடலூர் மாவட்டம் வந்திருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பாராட்டி விருந்தளித்தார்.நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களைப் பாதுகாக்கும் விதமாக, பல பாதுகாப்பு மையங்கள் அமைத்து, ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்குமூன்று வேளையும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் மீட்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து 142 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் வந்திருந்தனர். இவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடலூரில் 3 குழுக்களும், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டையில் 3 குழுக்களும் முகாமிட்டு பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தங்கியிருந்தவர்களைச் சிறப்பிக்கும் விதமாக நவம்பர். 27 ல் கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தேசிய பேரிடர் மீட்பு படையினரைப் பாராடடி விரு

பண்ருட்டி அருகே வரி ஏய்ப்பால் நடந்த வருமானவரித் துறை சோதனை

நிதியமைச்சகத்தின் சார்பில் வந்த செய்தியில் நிதி அமைச்சகம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை சென்னையில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், அதன் முன்னாள் இயக்குநர் மற்றும்  பிரபல எவர்சில்வர் வியாபாரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 27.11.2020 அன்று சோதனை நடத்தினர்.சென்னை மும்பை ஹைதராபாத் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில உள்ள மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.  முன்னாள் இயக்குநரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்த்திருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், தற்போது பணி நடைபெற்று வரும் திட்டத்தில்  போலியாக கணக்கு காட்டி ரூபாய் 160 கோடி பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. சோதனையின்போது தகவல் தொழில்நுட்பம் சிறப்புப் பொருளாதார மண்டல வடிவமைப்பாளர் வாங்கிய பங்கு பரிவர்த்தனைகள் குறித்தும் தெரியவந்தது.  இந்த பங்குகளை விற்றதன்  வாயிலாகக் கடந்த 2017-18 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு மொரிஷியஸ்

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டக் கடல் கிராமத்தில் ஒதுங்கிய தங்கமணிகள்

ஆந்திரா மாநிலத்தில் நிவர் புயல் காரணமாக கரையொதுங்கிய தங்கத்தாலான மணிகளை பொதுமக்கள் அள்ளிச் செல்லும் காட்சி வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கன மழை காரணமாக, பல இடங்கள் வெள்ளக்காடானது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தவித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆந்திராவில் மக்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.ஆந்திரா கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் கடல் கிராமமான உப்படாவில் வெள்ளிக்கிழமை காலை கடற்கரைப் பகுதியில் தங்கம் போல ஏதோ தளதளவென்று மின்னுவதை மீனவர் பார்த்ததையடுத்து உடனடியாக ஊர் மக்களிடம் கூற, அனைவரும் கடற்கரைக்கு ஓடி வந்தபோது சிறிய சிறிய உருண்டைகள் போன்ற மணிகளாக தங்கம் கிடக்கவே, ஏராளமான மக்கள் கூடி கடற்கரையில் திரண்ட மக்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தலா 3000 ரூபாய்க்கு மதிப்பிலான தங்கத்தை எடுத்ததையடுத்து வரும் அலைகளில் மேலும் தங்கம் கிடைக்கும் என்று ஆர்வத்துடன் பல மணி நேரம் ஊர் மக்களில் பலர் அங்கேயே காத்துக் கிடந்தது குறித்து உள்ள

மல்யுத்த வீரருக்கு அமெரிக்காவில் ஒருமாதம் பயிற்சி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம். பஜ்ரங் புனியா அமெரிக்காவில் ஒரு மாதம் பயிற்சி பெறுவதற்கு மிஷன் ஒலிம்பிக் குழு ஒப்புதல். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அமெரிக்காவில் ஒரு மாதம் பயிற்சி பெறுவதற்கு மிஷன் ஒலிம்பிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2020 நவம்பர் 26 அன்று நடந்த இக்குழுவின் 50-வது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2020 டிசம்பர் 4 முதல் 2021 ஜனவரி 3 வரை அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் பஜ்ரங் புனியா பங்கு பெறலாம்.

கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர் கள ஆய்வு

பிரதமர் அலுவலகம் 3 மையங்களில் கொவிட் தடுப்பு மருந்தின் தயாரிப்பை பிரதமர் ஆய்வு செய்தார். கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு அவர் சென்றார். தடுப்பு மருந்து தயாரிப்பு பயணத்தின் முக்கியமான கட்டத்தில் தங்களுக்கு உற்சாகம் அளிக்கவும், தங்களின் முயற்சிகளை வேகப்படுத்தவும் பிரதமர் நேரில் வந்து சந்தித்ததற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் உள்நாட்டு தடுப்பு மருந்து தயாரிப்பு துரித கதியில் வளர்ந்து வருவது பெருமையளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். தடுப்பு மருந்து உற்பத்தியின் மொத்த பயணத்தில் அறிவியலின் வலுவான கோட்பாடுகளை இந்தியா எவ்வாறு பின்பற்றியது என்பது குறித்து பிரதமர் பேசினார். தடுப்பு மருந்து விநியோகத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் அவர் வரவேற்றார். தடுப்பு மருந்து உடல் நலத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்

மிதிவண்டி கலாச்சாரம் ஊக்குவிக்கும்படி குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்குமாறும் குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்குமாறும் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் மிதிவண்டிகளின் பயன்பாடு என்னும் சர்வதேச இணைய கருத்தரங்கில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், மிதிவண்டியை ஓட்டுவது ஆரோக்கியமான, குறைந்த விலையிலான உடற்பயிற்சி என்றும், இதன் மூலம் பல்வேறு நன்மைகளை நாம் பெறுவதோடு மாசும் ஏற்படுவதில்லை என்றார். மிதி வண்டி ஓட்டுவதை ஊக்குவிப்பதற்காக மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு கூறினார். மாநகர போக்குவரத்து அமைப்பில் மிதிவண்டிகளை சேர்க்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை மாநகர நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார். மிதிவண்டி எனும் ஆங்கிலத்தில் சைக்கிள்.....! 1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில் தான்

திரைப்பட இயக்குநர் மிஷ்கின் இயல்பான பதிவில் திண்டுக்கல் தியேட்டர் பழமை நினைவில்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின், தனது தந்தையுடன் சிறு வயதில் சென்ற திரையரங்கிற்கு சென்று, அங்கிருக்கும் அவருடைய நினைவுகளை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு...இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டாவது முறையாக என்னைப் படம் பார்க்கவைத்தார். அதுதான் என்னுடைய முதல் திரைப்படம். அது புரூஸ் லீ நடித்த ‘எண்டர் தி டிராகன்’ (Enter The Dragon). சிறுவனாய் பல திரைப்படங்களை இந்த என்.வி.ஜி.பி திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். கால ஓட்டத்தில் பல ஊர்களுக்கு நகர்ந்து கடைசியாகச் சென்னை வந்து சேர்ந்து நகரவாசியாகிவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல்லைச் சுற்றியு