முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியக் கடற்படையின் ஆபரேஷன் சமுத்திர சேது திட்டத்தின்அடுத்த கட்டத்தைத் தொடங்கியது

ஆபரேஷன் “சமுத்ர சேது” திட்டத்தின் அடுத்த கட்டத்தை தொடங்குகிறது இந்தியக் கடற்படை வெளிநாடுகளிலிருந்து இந்தியக் குடிமக்களை அழைத்து வருவதற்கான ஆபரேஷன் “சமுத்ர சேது” திட்டத்தின் அடுத்தகட்டம், ஜூன் 1, 2020-இல் தொடங்குகிறது. இந்தக் கட்டத்தில், இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 700 பேரை இந்திய கடற்படையின் ஜலஸ்வா கப்பல், தமிழகத்தின் தூத்துக்குடிக்கு அழைத்து வரும். அதே போன்று, மாலத்தீவில் உள்ள மாலே பகுதியிலிருந்து 700 இந்தியர்கள், தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவர். இதற்கு முந்தைய கட்டத்தில், மாலே-விலிருந்து 1,488 இந்தியக் குடிமக்களை, இந்தியக் கடற்படை கொச்சிக்கு அழைத்துவந்துள்ளது. மீட்கப்பட வேண்டிய இந்தியக் குடிமக்கள் குறித்த பட்டியலை இலங்கை மற்றும் மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகங்கள் தயார் செய்துள்ளன. உரிய மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, அவர்களை வழியனுப்புவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகங்கள் செய்யும். பயணத்தின் போது, கோவிட்- தொடர்பான சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படும். கப்பல் பயணத்தின் போது, அழைத்து வரப்படுபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தூத்து

பொதுமக்கள் குறைதீர் சாதனைகளின் மின்னணுத் தொகுப்பை வெளியிட்டார் அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திரசிங்

இரண்டாவது முறையாக மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, மே 30, 2019 முதல் மே 30, 2020 வரையிலான காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் சாதனைகள் அடங்கிய மின்னணுத் தொகுப்பை வெளியிட்டார் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங். இரண்டாவது முறையாக மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, மே 30, 2019 முதல் மே 30, 2020 வரையான காலத்தில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை மேற்கொண்ட சாதனைகள் குறித்த மின்னணுத் தொகுப்பை மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். சாதனைகளை மக்களுக்கு வெளியிட்ட முதல் துறையாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்த டாக்டர் சிங், காணொளிக் காட்சி மூலம் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சிறந்த ஆளுகை என்ற பிரதமரின் கனவை நிறைவேற்றும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் எ

மான் கி பாதில் 'மை லைப் மை யோகா' வீடியோ பிளாக்கிங் போட்டியை பிரதமர் அறிவித்தார்

மன் கி பாதில் "மை லைஃப் மை யோகா" வீடியோ பிளாக்கிங் போட்டியை பிரதமர் அறிவித்தார் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய கவுன்சிலின் கூட்டு முயற்சியான “என் வாழ்க்கை - எனது யோகா” (“ஜீவன் யோகா” என்றும் அழைக்கப்படுகிறது) வீடியோ பிளாக்கிங் போட்டியில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். கலாச்சார உறவுகள் (ஐ.சி.சி.ஆர்), தனது மாதாந்திர மான் கி பாத் தேசத்தின் போது உரையாற்றினார். இந்த போட்டி தனிநபர்களின் வாழ்க்கையில் யோகாவின் உருமாறும் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது, மேலும் இது ஜூன் 21, 2020 அன்று வரவிருக்கும் ஆறாவது சர்வதேச யோகா தினத்தை (ஐடிஒய்) அனுசரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றாகும். போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது ஆயுஷ் அமைச்சின் சமூக ஊடக கையாளுதல்கள் இன்று, 31 மே 2020. கடந்த ஆண்டுகளில் IDY இன் அவதானிப்பு பொது இடங்களில் யோகாவின் ஆயிரக்கணக்கான இணக்கமான வெகுஜன ஆர்ப்பாட்டங்களால் குறிக்கப்பட்டுள்ளது. COVID-19 இன் தொற்று தன்மை காரணமாக, இந்த ஆண்டு எந்தவொரு வெகுஜனக் கூட்டமும் அறிவுறுத்தப்படாது. எனவே, இந்த ஆண்டு முழு குடும்பத்தினரின் பங்களி

முன்னால் சட்ட அமைச்சர் கபில்சிபல் செய்தியாளர் சந்திப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர் சந்திப்பில்: நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் தனியாக அரசாங்கம் நடத்துகின்றன என மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசிய வார்த்தைகள் மத்திய அரசின் அகங்காரமான மனநிலையைக் காட்டுகிறது. துஷார் மேத்தா பேசிய வாரத்தைக்கு அர்த்தம், நீதிமன்றத்தை மிரட்டி அடிபணிய வைக்கிறார்களா என்று நான் வியந்தேன். இந்த அகங்காரம் பிடித்த மனநிலையை இதுபோன்று மத்தியஅரசு வெளிப்படுத்தக்கூடாது. கடந்த காலத்திலும் மத்திய அரசு இதேபோன்ற மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. நீதிபதிகள் சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முறையில் தீர்ப்புகள் வழங்கும்போது அந்த தீர்ப்புகள் மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால், அவர்களுக்கு உகந்ததாக இல்லாவிட்டால் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவங்களை உயர் நீதிமன்றமும், அரசும் கவனிக்க வேண்டும். நீதிமன்றங்கள் மட்டும் உயிர்ப்புடன் நீதிபரிலாணத்தை வழங்காவிட்டால், ஜனநாயகச் சூழலில் இதுபோன்ற தாக்குதல், கருத்து வெளிப்பாடு உகந்ததல்ல. பத்திரிகையாளர்களை பருந்துகள் என துஷார் மேத

போலி ஐ ஏ எஸ் நடத்திய மோசடிகள் நடந்த உதவிய முக்கிய நபர்கள் சிக்கினால் உண்மை வெளியாகும்

இலட்சக்கணக்கில் பண மோசடி, ஐஏஎஸ் அதிகாரி போல நடித்த நபரை காவல்துறை கைது செய்துள்ளனர். முக்கியக் குற்றவாளியை தனிப்படையினர் தேடி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி டி.என்.பி.எஸ்.சி-ல் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடைபெற்றுள்ளதில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் பிரகாஷ் எனும் நாகப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் மீது இராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் நிலையில் அவர்கள் சினிமா பிரபலங்கள், அரசியல் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார். இராமநாதபுரம் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த டைசியின் மகன் உள்பட மூன்று பேருக்கு டிஎன்பிஎஸ்சியில் வேலை தருவதாக பிரகாஷ் என்ற நாகப்பன் ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளார். அதாவது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு தலா ஐந்து லட்சம் என மூன்று பேரிடமும் 15 லட்சம் ரூபாய் வரை வா

அமேசான் பிரைம் உரிமையும் லாபமும் தட்டிப்பறித்த தமிழ்ராக்கர்ஸால் பொன்மகள் வந்தாள் பாதிப்பு

நடிகர் சூர்யா தயாரிப்பில், நடிகை ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் மே மாதம் 29 ஆம் அமேசான் பிரைம் தளத்தில் மே 29 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஒருநாள் முன்னதாக 28 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கே வெளியிட்டார்கள். அமேசான் பிரைம் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது, வேறு வழியில்லாமல் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக வெளியிடும் நிலைக்கு அமேசான் தள்ளப்பட்டது. தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் தளம் உடனடியாக வெளியிடும். வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களிலும் படத்தை வெளியிடுவதால் தான் தமிழ் ராக்கர்ஸ் படத்தை அங்கிருந்து படம் பிடித்து வெளியிடுகிறது என்று புகார் தெரிவித்தார்கள். சில சமயங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் இருந்தும் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக படமாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியான ஒரு படத்தை பைரசி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் எப்படி வெளியிட்டது என்ற சந்தேகம் எழுந்து படத்தைத் தயாரித்துள்ள சூர்யாவின் 2 டி என்ட

ஊழலை பகிரங்கமாக்கிய கடலூர் ஊராட்சி செயலர் தொலைபேசியில் பேசியது வைரலாகியது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் சத்தியவாடி கிராமத்தின் ஊராட்சிச் செயலாளராக உள்ள அமிர்தலிங்கம். அதே கிராமத்தின் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாண்டியன் என்பவருடன் இருவரும் அரசு பணிகள் தொடர்பாக உடன் தொலைபேசி வழியாகப் பேசிக்கொண்ட உரையாடல் வெளியாகி பல உண்மைகளை கூறும். அந்த உரையாடலில், "அரசாங்க வீடு கட்டுதல், தார் சாலை அமைத்தல், அரசு கட்டிடங்கள் கட்டுதல், மினி டேங்க் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் மனசாட்சியுடன் செயல்பட்டால் எதுவும் சம்பாதிக்க முடியாது. நஷ்டம் தான் ஏற்படும். இந்த மாதிரி வேலைகளில் மண்ணை வாரி கொட்டி, மக்களை ஏமாற்றினால் மட்டும்தான் நாலு காசு பார்க்க முடியும்" என்று பேசிக் கொள்கின்றனர். மேலும் அரசு பணிகளை வாங்குவதற்கு கீழ்மட்ட அதிகாரி முதல் உயர்மட்ட அதிகாரிகள் என அனைவருக்கும் கையூட்டு கொடுப்பதாகவும், அவ்வாறு வாங்கப்படும் வேலைகளை, ஒழுங்காக செய்தால் குடும்பத்தோடு விஷமருந்து அருந்துவதற்கு சமம் என்றும், முறைகேடாக பணி செய்தால் மட்டும்தான் நல்ல லாபம் ஈட்ட முடியும் என்றும் அதற்கு உண்டான வழிகளை நான் சொல்லி தருகிறேன் என்று ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் கூறுகிறார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தினசரி அறிக்கை 31 மே 2020

தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 31 மே 2020 கோவிட்-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை தற்போது வரை 4,91,962 மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவிட்-19 சோதனை 43 அரசு மற்றும் 29 தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகிறதுதமிழ்நாட்டில் 22,333 நபர்கள் இன்று வரை நேர்மறை சோதனை செய்துள்ளனர். 4,68,940 மாதிரிகள் எதிர்மறையாக சோதிக்கப்பட்டது. 689 மாதிரிகளின் சோதனை நடந்து வருகிறது. 22,680 மாதிரிகள் மீண்டும் மீண்டும் மாதிரிகள். 12,757 கோவிட்-19 நேர்மறை நோயாளிகள் உள்ளனர் இன்று வரை பின்வரும் சிகிச்சையை வெளியேற்றினார். எனவே, 9,400 செயலில் உள்ள பாதிப்புகள் இன்று வரை சிகிச்சையின் கீழ். பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயண ஆலோசனைகள். பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். என அறிவிப்பில் தமிழ்நாட்டில் இன்று 1149 பேருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பும் அரசின் தளர்வு நிபந்தனைகளும் அரசாணையில்

தமிழகத்தில் பிரிக்கப்ப ட்டுள்ள 8 மண்டலங்கள் கிழே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சிமண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி. மண்டலம் 7 மற்றும் 8 இல் பொதுப்போக்குவரத்திற்கான தடை தொடர்கிறது. மற்ற மண்டலங்களில் 50 சதேவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு தமிழகத்தில் 8 மண்டலத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவை இல்லை - தமிழக அரசு. தமி

தமிழக உளவுப்பிரிவு காவல்துறைத் தலைவராக ஈஸ்வரமூர்த்தி நியமனம்

தமிழகத்தின் உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு. முன்பிருந்த உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஓய்வுபெறவே, சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஈஸ்வரமூர்த்தியை உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக பார்க்கப்படுவது மாநில உளவுப்பிரிவு தலைவர் பதவிதான். தமிழக உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி.இவரது பணிக்காலம் முடிவடைவதால் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தி தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார்.

பீஹார் பாட்னா தனிமைப்படுத்தல் முகாமில் இருபது நபர்களின் உணவை ஒருவரே சாப்பிட்டதால் விசாரணை

முகாமில் அரசு இலவச சாப்பாடு வழங்கும் நிலையில் காலையில் அனைவர்க்கும் சப்பாத்தி வழங்கப்படுவதில் தனி ஆளாக நாற்பது சப்பாத்தியை சாப்பிட்டும் போதவில்லை என புரோட்டா சூரி வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் நடப்பது போல் கூறியுள்ளார் அனூப் ஓஜா. அதன்பின் மதியம் வழங்கப்பட அரசி சாதத்தில், பத்துத்தட்டு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மாயாபஜார் குண்டோதரன் போல மேலும் பசிப்பதாக கூறியுள்ளார் அனூப் ஓஜா. இதைக் கேட்டு அதிர்ச்சியான சமையல்காரர், அதிகாரிகளுக்குத் தகவல் தரவே அவரைகஹ கண்காணிப்பதற்காக அதிகாரிகள் முகாமுக்கு வந்துள்ளனர். அப்போது, காலையில் நாற்பது சப்பாத்தியும், மதியம் பத்துத்தட்டு சாதம், மாலையில் எண்பத்தெட்டு லிட்டிகளை (பிஹார் தின்பண்டம்) சாப்பிட்டுள்ளார் அனூப் ஓஜா. இதைப் பார்த்து அதிகாரிகளும் அதிர்ச்சியாக தற்போது அனூப் ஓஜா செய்யும் அட்டகாசங்கள் வீடியோவாக வெளியில் வைரலாகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பாதுகாப்புக் குறித்து உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி மீண்டும் வழக்கு விசாரணை ஜூன்-11.ஆம் தேதி தள்ளிவைப்பு .

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி நடத்தும் போது கொரானோ வைரஸ் பரவலை தடுக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? என ஜீன் 11 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் பொதுத் தேர்வைத் தள்ளி வைக்க கோரி வசந்தி தேவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அரசுக்கு விளக்கம் கேட்ட உயர்நீதி மன்றம்.அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், இதுகுறித்து ஜூன் 11ம் தேதி அறிக்கை  தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து ஜூன் 11ஆம் தேதி விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.ஏற்கனவே பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா, பொது நல மனு தாக்கல் செய்து விசாரணைக்கு வந்த போது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில், வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும் என

தவணைத்தொகை செலுத்த வங்கிகள் வாடிக்கையாளருக்கு நெருக்கடி தந்தால் நடவடிக்கை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்

உத்தரவுகளை மீறி வங்கிகள் ஈஎம்ஐ பிடிப்பது தவறு.. புகார் அளித்தால் நடவடிக்கை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல். ஊரடங்கில் பல வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மூடப்பட்ட நிலை ஊரடங்கால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தினக்கூலித் தொழிலாளர்கள், மாதாந்திர ஊதியம் பெறுபவர்கள். தொழில் நடந்துபவர்களென அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் வருமானமின்றியும் சம்பள குறைப்பாலும் மீள முடியாமல் தவிக்கிறார்கள். வீட்டு வாடகை, மின்சார கட்டணம் போன்றவற்றை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார்கள். வங்கிகளில் வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் கல்விக்காகவும் கடன் வாங்கியவர்கள் மாதத்தவணை செலுத்த முடியாமல் தவித்த இந்த நிலையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு ஈஎம்ஐ செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் போக்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை வாடிக்கையாளர்கள் எப்படி பெறுவது என்பது குறித்த சந்தேகத்திற்கு வங்கிகள் பதிலளிக்க ஆர்வமில்லாத நிலையில் மும்பை, சென்

தூத்துக்குடியில் காவல்துறை எஸ் எஸ ஐ. பணியில் மரணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு. தூத்துக்குடி அருகிலுள்ள ஆறுமுகமங்கலம் ராமச்சந்திரன் (வயது 50) தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக காலை 7.30 மணிக்கு காவல் நிலையத்தில் பணியிலிருந்தபோது திடீரென மயக்கமடைந்து சரிந்த ராமச்சந்திரனை உடனிருந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். ராமச்சந்திரனுக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

பொதுப் போக்குவரத்து சென்னை உள்பட நான்கு மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இயங்கும் அறிவிப்பு

தமிழக அரசின் ஊரடங்கு தளர்வு முழு விபரம். வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20 சதம் பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம். 50 சதம் ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி- தமிழக அரசு. தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம். ஜூன் 8 ஆம் தேதி முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50 சதம் இருக்கைகளுடன் செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு- தமிழக அரசு. பொது போக்குவரத்து எங்கெங்கு அனுமதி? கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்லில் அனுமதி. தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி. நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை. திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி. நாளை முதல் சென்னை காவல் எல்லை நீங்கலாக பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொட

உணவு பதப்படுத்துதல்துறை அமைச்சகத்தின் குறைதீர்க்கும் பிரிவு 581 மனுக்களுக்குத் தீர்வு

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் குறை கேட்புப் பிரிவு, கொவிட்-19 சூழ்நிலைக்கு இடையே தொழில்துறையினரிடம் இருந்து பெற்ற 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டது. மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் குறைகேட்புப் பிரிவு, தீவிரச் செயல்பாட்டு அணுகுமுறை மற்றும் உரிய நேரத் தீர்வு ஆகியவற்றின் மூலம், பெறப்பட்ட 585 பிரச்சினைகளில் 581-க்கு தீர்வு கண்டு பைசல் செய்துள்ளது. பணிக்குழு, இந்தப் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட இதர தொடர்புடைய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று தீர்வு கண்டு வருகிறது. உணவு மற்றும் அது சார்ந்த தொழில்துறை அதிகபட்சத் திறனுடன் இயங்குவதற்கு , அவை சந்தித்து வரும் சவால்கள், பிரச்சினைகளைச் சமாளிக்க , பணிக்குழு முன்னணி மாநிலங்களில் உள்ள தொழில் சங்கங்கள், உணவு பதப்படுத்துவோருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. நாடு தழுவிய கொவிட்-19 ஊரடங்கு காலத்தில், உற்பத்தி அல்லது விநியோகச் சங்கிலியில் இடையூறு உள்பட உணவு பதப்படுத்தும் துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண அவற்றை  covidgrie