முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாராடி கிராம நிர்வாக அலுவலர் பட்டா விநியோகம் செய்ய இலஞ்சம் வாங்கிய போது கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், மாராடி கிராமத்தில்  அஸ்வின் மனைவி சத்யா (வயது 35). என்பவருக்கு மாராடியில் அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கப்பட்டது. சத்யாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கும்  இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு 22.ஆகஸ்ட்.2023 ஆம் தேதியன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இலவச வீட்டு மனைப் பட்டாவின்  பிரதியைப் பெற முடியாததால் சத்யா மறுநாள் 23 ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சுமதியிடம் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைப் பட்டாவின் பிரதியைத் தருமாறு கேட்டதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி (வயது 34) தனக்கு ரூபாய்  பத்தாயிரம்  பணம் இலஞ்சமாகத் தந்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டுமனைப் பட்டா பிரதி  வழங்க முடியும் எனக் கூறிய தகவலை சத்யா, அவரது கணவர் அஸ்வினிடம் சத்யா தெரியப்படுத்தியபோது அவர், யாருக்கும் பணம் தராமல் பட்டா பெறுமாறு கூறியதன் காரணமாக சத்தியா மீண்டும் 29.ஆம் தேதியன்று மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியை அலுவலகத்தில

சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் முறைகேடு செய்த பெண் உதவிய சார்பு ஆய்வாளர்கள் மீது வழக்கு

 தமிழ்நாடு அரசு  சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல்துறை  சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி  திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆறு மையங்களில் 5,233 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுதியதில் பெண் தேர்வர்களுக்கான மையத்தில், தேர்வெழுதிய வேட்டவலம் பகுதி லாவண்யா  (வயது 23) முறைகேட்டில் ஈடுபட்டதாப் பிடிபட்டார். தேர்வு எழுதிய போது, திடீரென்று எழுந்து  தேர்வறைக் கண்காணிப்பாளரிடம், ‘நான் கர்ப்பமாக உள்ளேன். கழிவறைக்குச் செல்ல வேண்டும்’ என்றார். தேர்வின் விதிமுறைப்படி யாரையும் கழிவறைக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஆனால், லாவண்யா கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னதால், தேர்வறைக் கண்காணிப்பாளர் கழிவறைக்குப் போக அவரை அனுமதித்தார். ஆனால் 20 நிமிடம் நேரமாகியும் வெளியே வராததாலும், லாவண்யா அமர்ந்திருந்த இடத்தினருகில் அவரின் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் இல்லாததையும் கண்டுபிடித்த தேர்வறைக் கண்காணிப்பாளர் சந்தேகமடைந்து, இரண்டு பெண் காவலர்களை கழிவறைப் பகுதிக்கு அனுப்பிவைத்து, லாவண்யாவிடம் சோதனை நடத்த உத்தரவிட்டார். அப்போது, லாவண்யா வினாத்தாளையும், விடைத்தாளையும் மறைத்து வைத்திருந்தைக் கண்டுப

குறைந்த செலவில் விண்வெளித் திட்டங்களில் இந்தியாவில் சந்திரயான் -3, அமைச்சர் தகவல்

 சந்திரயான் -3, குறைந்த செலவில் விண்வெளித் திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது: மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர்  ஜிதேந்திர சிங் சந்திரயான் -3, குறைந்த செலவில் விண்வெளித் திட்டங்களை மேற்கொள்ளும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது என்று மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தூரில் அறிவுஜீவிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அவர் தோல்வியடைந்த ரஷ்யாவின் நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடி செலவானது என்றார். ஆனால் நமது சந்திரயான் -3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி மட்டுமே செலவானது என்று அவர் குறிப்பிட்டார். நிலா மற்றும் விண்வெளிப் பயணங்களை அடிப்படையாகக் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்களை எடுப்பதற்கேகூட ரூ. 600 கோடிக்கு மேல் செலவானது என்பதைக் கவனிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் தனியார் துறையை ஈடுபடுத்துவதற்காக, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட "அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை" மசோதாவின்படி ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செ

துணை ராணுவப் படைகளின் சமையல் கலை வல்லுநர்களுக்கு மத்திய வேளாண்மை துறை இரண்டு நாள் பயிற்சி

துணை ராணுவப் படைகளின் உணவகங்களில் பணியாற்றும் சமையலர்களுக்கு சிறுதானிய உணவுகளை மையமாகக் கொண்ட இரண்டு நாள் பயிற்சித் திட்டத்துக்கு வேளாண் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது சிறு தானியங்களை   அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகளை மையமாகக் கொண்டு, துணை ராணுவம் மற்றும் பல்வேறு அரசுத் துறை கேண்டீன்களில் (உணவகங்கள்) பணியாற்றும் 200 க்கும் மேற்பட்ட சமையல் கலை வல்லுநர்களுக்கு மத்திய வேளாண்மை துறை இரண்டு நாள் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தில்லியில் இன்று (26.08.2023) தொடங்கிய இந்தப் இப்பயிற்சி, சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எளிய தின்பண்டங்கள் முதல் ஆரோக்கியமான உணவுகள் வரை பலவிதமான சிறுதானிய சமையல் குறிப்புகளை அறிமுகப்படுத்தி அவை தொடர்பாக இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சமையலர்கள் அவர்கள் பணிபுரிடம் அரசுத் துறை உணவகங்களில் இவற்றை சமைத்து வழங்க ஊக்குவிக்கப்படுகிறது. மத்திய வேளாண் துறையின் கூடுதல் செயலாளர்கள் திரு பைஸ் அகமது கித்வாய், திருமதி மனீந்தர் கவுர் திவிவேதி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'சிறுதானியங்களை அதி

மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்த வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்

வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பவும், வருமான வரித் துறை அதன் தேசிய இணையதளமான www.incometaxindia.gov.in என்ற தளத்தை மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை உதய்பூரில் வருமான வரி இயக்குநரகம் (அமைப்புகள்) ஏற்பாடு செய்திருந்த சிந்தனை அமர்வு நிகழ்ச்சியில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவர் திரு நிதின் குப்தா அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். இந்த வலைத்தளம் வரி மற்றும் வரி தொடர்பான பிற தகவல்களின் விரிவான களஞ்சியமாக செயல்படுகிறது. இது நேரடி வரிச் சட்டங்கள், தொடர்புடைய பிற சட்டங்கள், விதிகள், வருமான வரி சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் ஆகியவற்றை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட இணையதளம் மொபைல் போன்களிலும் எளிதில் செயல்படும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் உள்ளடக்கத்திற்கான 'மெகா மெனு'வையும் (பெரிய தேர்வுப் பட்

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் இருவர் இலஞ்சம் வாங்கியபோது கைது

காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் போலி பதிவு பத்திரம் இரத்து செய்வதற்கு ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சம் கேட்டு முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் நேரில் பெறற பதிவுத்துறை ஊழியர் நவீன் குமார் மற்றும் அலுவலக தற்காலிக உதவியாளர் சந்தோஷ்பாபு ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு சிறை சேர்த்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தனது தந்தை சொத்திற்கு குடும்ப உறுப்பினர்களுக்கான அடிப்படையில் பொது அதிகார ஆவணம் பத்மாவதி, அவரது சகோதரர் பச்சையப்பன் ஆகியோருக்கு வழங்கியுள்ளதைத் தொடர்ந்து பச்சையப்பன் போலி ஆவணங்கள் மூலம் இந்தச் சொத்தை அபகரித்து விற்பனை செய்துள்ளாராம் , சில காலத்திற்குப் பின்னர் பத்மாவதியின் மருமகன் உலகநாதன் இந்த மோசடியை அறிந்து அதை இரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார்.  இதில் காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை அனுகி  உத்தரவும்  பெற்று மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வழங்கிய நிலையில் உத்தரவு வழங்கி திருத்த ஆவணப் ப

பாமக நிறுவனர் மரு்துவர் ராமதாஸ் சிகிச்சை பெறும் இருவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்

ஜி.கே.மணி மற்றும் இசக்கிப்  படையாட்சியை சந்தித்து பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் நலம்  விசாரித்தார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில்  ஓய்வெடுத்து வருகிறார்.  சென்னை மாடம்பாக்கத்திலுள்ள  அவரது மகன் இல்லத்தில் தங்கி மருத்துவச் சிகிச்சை பெற்று வருபவரை  நேற்று மாலை  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.  இசக்கிப் படையாட்சிக்கு இப்போது வயது 76 நாமறிந்த வரை  46 ஆண்டுகளாக பாமகவில் உள்ளவர்  1977-ஆம் ஆண்டில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற  (SSS) எனும் சமூக சேவை சங்கக் கூட்டத்தில்  அப்போது அவர் ஒரு ஏழை மில் தொழிலாளியாக வந்து சேர்ந்தவர் . அதன்பின் வன்னியர் சங்கம்,  பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வரும் இவர் திருநெல்வேலி  மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவராவார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பின் தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதற்காக  உழைத்தவர். 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் மருத்துவர் இராமதாசுடன்  இணைந்து முக்கியப் பங்காற்றியவர். தைலாபுரம் தோட்

பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டளை நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் பயணம்

செய்தியாளர் :- ஆர். சரத்பவார் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் ஆகஸ்ட் 26 அன்று பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டளை நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார் சந்திரயான்-3 இயக்கத்தில் தொடர்புடைய இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார் பெங்களூருவில் இஸ்ரோவின் டெலிமெட்ரி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நெட்வொர்க் தளத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 அன்று காலை 7.15 மணி அளவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்தில் இருந்து திரும்பியவுடன் அவர் பெங்களூரு சென்றார். சந்திரயான்-3 இயக்கத்தில் தொடர்புடைய இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து அவர்களுடன்  பிரதமர் கலந்துரையாடுவார்.  சந்திரயான்-3 இயக்கத்தின் கண்டறிதல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்படும். இந்தியா வந்தடைந்த பின்னர் பெங்களூருவில் உள்ள ஹெச்ஏஎல் விமான நிலையத்திற்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் பாரத் மாதா கி ஜெ, பாரத் மாதா கி ஜெ! பாரத் மாதா கி ஜெ, பா

கிரேக்கத்தில் ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரை

கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி  கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாடினார் புதுதில்லி, ஆகஸ்ட் 25, 2023 ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நேற்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய மற்றும் கிரேக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப், பார்மா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் வணிகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்ச ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நேற்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார

ஆன்மீகச் சுற்றுலா ரயில்பெட்டி மதுரையில் நடந்த தீ விபத்தில் பத்து நபர்கள் பலி பலர் படுகாயம்

செய்தியாளர்:- ஆர்.சரத்பவார்          இன்றையதினம்  அதிகாலை நேரம் 5.30 மணியளவில் ரயில் பெட்டியில் தீ விபத்து மதுரை இரயில் நிலையம் அருகில் , கொல்லம் - புனலூர் விரைவு ரயிலிலிருந்து கழட்டி ரயில்வே டிராக்கில் விடப்பட்டிருந்த IRCTC சுற்றுலா ரயிலின் மூன்று  பெட்டிகளில் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து பத்துப் பேர் பலி, பலர் படுகாயம்  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி லட்சுமணபுரி எனும் இலக்னோவிலிருந்து  IRCTC ஆன்மீகச்  சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்று விட்டு, இறுதியாக திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு இன்று அதிகாலை 5.15 மணியளவில் வந்தடைந்த இரயில் பெட்டியிலிருந்து 40 க்கும் மேற்பட்ட வட மாநில  பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்திருந்தனர். அதில் ஒரு பயணி, பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைத்துத் தேனீர்  தயாரிக்க, அதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்ட வெளியிலிருந்த பயணிகள் சப்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் பயணிகள் கீழே இறங்க முயன்ற நிலையில் அந்தப் பெட்டி முழுவதும் கொளுந்து விட்டு எரியத் தொடங்கியதில் அந்