உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேரில் ஆஜராகாத உயர் அதிகாரிக்கு 'வாரன்ட்' நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் மற்றும் செயலர் அன்சுல் மிஸ்ரா இ ஆ ப வுக்கு ஜாமினில் வரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்காக, சென்னை, தரப்பாக்கத்திலுள்ள நிலம், நிறுவனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பின், நிலம் கையகப்படுத்தும் முடிவு கைவிடப்பட்டதையடுத்து, மீண்டும் குடியிருப்புப் பகுதியாக மறுவகை செய்யக் கோரி, கிரிஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், நான்கு மாதங்களில் சி.எம்.டி.ஏ., முடிவெடுக்கும்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவை அமல்படுத்தாததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் மற்றும் செயலருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை, கிரிஷ் தாக்கல் செய்தார். இவ்வழக்கில், உறுப்பினர் மற்றும் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மனு, தலை...
RNI:TNTAM/2013/50347