முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒட்டகம் பூட்டிய வண்டி மூலமாக ஆற்றில் திருட்டு மணல் விற்பனை நடத்தியவர் கைது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலதில் ஒட்டகத்தை  வைத்து மணல் கொள்ளை.  ஒட்டகத்தையும்,  பயன் படுத்தி மணல் அள்ளும் வண்டியையும் பறிமுதல் செய்த காவல்துறை. சரவணன் மறவமஙலத்திலிருந்து அரேபியாவில் பணி புரிந்து திரும்பி. சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தவர் சில நாட்கள் மாட்டு வண்டியில் மணல் அள்ளியுள்ளார். மாடு பூட்டிய வண்டி மணல் பகுதியில் மாடு நடக்க முடியாமல் திணறியதையடுத்து சரவணன் இராஜஸ்தான் சென்று ஒட்டகத்தை வாங்கி வந்து மணல் வண்டியில் பயன் படுத்தி  விரைவாக ஆற்று மணல் கடத்தல்  செய்ய. இந்த ஒட்டகத்தை பயன்படுத்தி வண்டியில் டயர் மாட்டி தினசரி மணல் அள்ளிய நிலையில் அந்தப் பகுதியில் இரவு ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது ஒட்டகதின் மூலம் மணல் அள்ளுவது தெரியவரவே அவற்றை பறிமுதல் செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்  நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரை ஒட்டகத்தை யார் பராமரிப்பது என்ற குழப்பம் காவல்துறையினர் மத்தியில் எழுந்ததனால், உரிமையாளர் சரவணனிடமே ஒட்டகத்தை பராமரிக்குமாறு அனுப்பியுள்ளனர். மணலை அள்ளுவதற்கு டிராக்டர், லாரி போன்றவை பயன்படுத்தப்பட்டு வரும் நி

அரசு ஊழியர்கள் 25,000 பேர் தற்போது பணி ஓய்வு பெறுகின்றனர்

கடந்த ஆட்சியில் அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்டதால் 25,000 பேர் தற்போது  பணி ஓய்வு பெறுகின்றனர். தற்போதய நிலையில் மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் கூடுதலாக உருவாகியுள்ள நிலையில். புதிய நடைமுறைகளின் படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் 25,000 பணியிடங்களும் சேர்ந்து காலியாவதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படவுள்ளது.  பணி ஓய்வு ஆங்கிலத்தில் Retirement from Service என்பது குறிப்பிட்ட வயது எய்திய ஊழியரை, அவர் செய்யும் பணியிலிருந்து பணி வழங்குபவர் முற்றிலுமாக விடுவிப்பதாகும். மேற்கோள்கள்:- பெருஞ்சாலையை விட்டு விலகி, காப்புள்ள ஓரிடத்தில் போய்த் தங்கியிரு. ஏனெனில், சாலையருகிலுள்ள மரத்தில் காய் காய்த்தால், அது கனியும்வரை இராது. - கிரிஸோஸ

பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி செல்லாது யுஜிசி அறிக்கை

பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக் கல்வி செல்லாது. மாணவர்கள் யாரும் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டாம் என யுஜிசி அறிக்கை. .பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படுமென பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கருப்பூரில் 1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கி.  2001 ஆம் ஆண்டு 96 பாடப் பிரிவுகளுடன் தொலைதூரக் கல்வி திட்டமும் தொடங்கியது. தற்போது, 156 பாடத் திட்டம் மற்றும் பல்கலைக் கழக தொழில் கூட்டுத் திட்டம் மூலம் 12 கல்வி நிலையங்களில் தொழில்சார் பாடப் பிரிவுகளும் உள்ள நிலையில், பெரியார் பல் கலைக்கழகம் வெளி மாநிலங்களில் கூடுதலாக மையங்கள் தொடங்கியிருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து,  2014-15 ஆம் கல்வியாண்டில் யுஜிசி மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்காத நிலையில் நடப்பாண்டு (2016-17) மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக தகவலறிந்த யுஜிசி, பெரியார் பல்லைக்கழக தொலைதூர கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் ரத்து செய்து

மாநிலங்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சியில் மும்பை நடிகை நக்மாவுக்கு ஏமாற்றம் காரணம் பல

பாலிவுட் திரைப்படம் பாகி - ஏ ரெபெல் ஃபார் லவ்) சல்மான்கானுக்கு ஜோடியாக அறிமுகமான நக்மா,                                   பின்னர் இந்தி,தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,போஜ்புரி,பெங்காலி,பஞ்சாபி,மராத்தி மொழிகளிலும் ஹிரோயினாக வெற்றிப் படங்களை கொடுத்த நக்மா  சினிமாவிலிருந்து ஒதுங்கிய பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட திட்டமிட்டவரை பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கத் திட்டமிட்டது. முதலில் 2004 ஆம் ஆண்டில் கட்சியில் இணைய வேண்டி நக்மாவை பாரதிய ஜனதா கட்சி அணுகியதோடு, அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத்தில் இருந்து நக்மாவை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்தது. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவருக்கு தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. பின்னர் தமிழகத்தின் பொறுப்பு கட்சித் தலைமையால் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், மற்றும் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக உள்ள அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெ

2021 குடிமைப்பணி (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

2021 குடிமைப்பணி (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து 2021 ஆம் ஆண்டு குடிமைப்பணி (மெயின்) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; "2021 ஆம் ஆண்டு குடிமைப்பணி (முதன்மை) தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான நேரத்தில், நாம் சுதந்திர அமிர்தப்பெருவிழாவை கொண்டாடும் வேளையில், ​​தங்களது நிர்வாகப் பணியைத் தொடங்கும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்." "குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்களின் ஏமாற்றத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன், ஆனால் இவர்கள் எந்தத் துறையிலும் முத்திரை பதித்து இந்தியாவை பெருமைப்படுத்தக்கூடிய சிறந்த இளைஞர்கள் என்பதையும் நான் அறிவேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சகம் & பெரு நிறுவனங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வார விழா கொண்டாட்டம்

 மத்திய நிதி அமைச்சகம் & பெரு நிறுவனங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வார விழா கொண்டாட்டம், அறிமுக பத்திரிகையாளர் சந்திப்புடன் தொடங்கியது சுதந்திர அமிர்தப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய நிதி அமைச்சகமும், பெரு நிறுவனங்கள் அமைச்சகமும் ஜூன் 6 முதல் 11,2022 வரை நடத்தவுள்ள சிறப்பு வார விழா கொண்டாட்டம் குறித்த  அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் 2022 அன்று கொண்டாடப்பட இருப்பதையொட்டி 75 வார கவுண்டவுனை பிரதமர் திரு நரேந்திர மோடி 12. மார்ச் 2021 அன்று தொடங்கிவைத்தார். சுதந்திர அமிர்தப்பெருவிழா கொண்டாட்டங்கள் 15 ஆகஸ்ட் 2023 வரை ஓராண்டு காலத்திற்கு  தொடர்ந்து நடைபெறவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கொவிட் 19-க்கு எதிரான போராட்டத்தில் அறியப்படாத சாதனையாளர்கள் மற்றும் சவாலான காலகட்டத்திலும் நாட்டின் நிதி அமைப்புகளை சிறப்பாக நடத்தியவர்களை போற்றும், ‘உங்களுக்கு நன்றி’ என்ற பொருள்படும் சுக்ரியா என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டது.   ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின் விவரம் குறித்த மின்னணு குறிப்பு புத்தகம் ஒன்றும் பத்திரிகையாளர்களுக்கு

கோவா மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

 கோவா மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி கோவா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; "கோவா மாநில  நிறுவன தினத்தில், கோவா மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது இயற்கை எழில் தவழும் மற்றும் உழைப்பாளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. வரும் ஆண்டுகளில் கோவா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகள் 2023-க்கு 15 செப்டம்பர் 2022 வரை விண்ணப்பிக்கலாம்

 உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகள் 2023-க்கு 15 செப்டம்பர் 2022 வரை விண்ணப்பிக்கலாம் 2023 குடியரசு தினத்தையொட்டி வழங்கப்படவிருக்கும் பத்ம விருதுகள் 2023-க்கான ஆன்லைன் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் 1 மே 2022 தொடங்கி நடைபெற்று வருகிறது.  நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.  தற்போதைய மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த விருதுகளைப் பெறத் தகுதியானவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இணையதளத்தில் உள்ள படிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து 800 வார்த்தைகளுக்கு மிகாத குறிப்புகளுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுபோன்ற சாதனையாளர்களை மற்றவர்களும் விருதுக்கு பரிந்துரைக்கலாம் எனவு

ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.

 ‘ஆபரேஷன் செம்மரக்கட்டை’-ன் மூலம் ரூ.11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவு கைப்பற்றியுள்ளது அகமதாபாத்தின் சபர்மதியில் உள்ள உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு கடத்தப்படவிருந்த 14.63 மெட்ரிக்டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.11.70 கோடியாகும். நாட்டின் இயற்கை பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பது என்ற உறுதிப்பாட்டின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Operation Rakth Chandan என்ற பெயரிலான இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குப்பெட்டகத்தை ஸ்கேனிங் செய்த போது, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த கழிவறை சாதனங்களுக்கு பதிலாக, உருட்டுக்கட்டைகள் வடிவிலான பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கண்டெய்னரை திறந்து பார்த்த போது, அதில் 840 செம்மரக்கட்டைகள் இருந்ததையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பருத்தியின் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடல்

ஜவுளித்துறை அமைச்சகம்  பருத்தியின் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன்  மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மும்பையில் நேற்று கலந்துரையாடினார். ஜவுளி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், வர்த்தகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள், இந்திய பருத்தி கழகத்தின் மூத்த அதிகாரி மற்றும் பங்குதாரர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் ஜவுளித் துறைச் செயலாளர் திரு உபேந்திர பிரசாத் சிங் விவாதத்தைத் துவக்கினார். முன்னணி சங்கங்கள் மற்றும் நிபுணர்கள் வாயிலாக ஒட்டு மொத்த ஜவுளி மதிப்பீட்டு சங்கிலி தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், உற்பத்தித் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை உரிய நேரத்தில், இயக்க கதியில் கட்டுப்படுத்த வேண்டுமென்

ஏழைகள் நல மாநாட்டில்’ பங்கேற்க இன்று பிரதமர் சிம்லா செல்கிறார்

 ‘ஏழைகள் நல மாநாட்டில்’ பங்கேற்க மே 31 இன்று பிரதமர் சிம்லா செல்கிறார் மோடி அரசின் எட்டு ஆண்டுகள் நிறைவையடுத்து நாடு முழுவதும் ஏழைகள் நல மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சியை இது கொண்டிருக்கும் ஒன்பது அமைச்சகங்கள் துறைகள் சார்ந்த திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார் பிரதமரின் விவசாய நிதியின் 11-வது தவணையையும் பிரதமர் விடுவிப்பார் 2022 மே 31 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி இமாசலப்பிரதேசத்தின் சிம்லாவுக்கு செல்லவிருக்கிறார். அன்று காலை 11 மணிக்கு ‘ஏழைகள் நல மாநாட்டில்’ பிரதமர் பங்கேற்பார்.  பிரதமர் தலைமையிலான அரசின்  எட்டு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்தப்  புதுமையான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி  நாடு முழுவதும் உள்ள  மாநில தலைநகர்கள், மாவட்ட தலைமையிடங்கள், விவசாய அறிவியல் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி கருத்துக்களைப் பெறும் முயற்சியாக நாடு முழுவதும் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் திரு. மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டு உரையாற்றினார்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் வெளியிட்டார் “பிஎம் கேர்ஸ் என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பில் உள்ளனர் என்பதன் பிரதிபலிப்பு” “இந்த இக்கட்டான தருணத்தில் குழந்தைகளாகிய உங்களுடன் மா பாரதி இருக்கிறது” “இந்த கடினமான நேரங்களில் நல்ல நூல்கள் உங்களின் நம்பகமான நண்பர்களாக இருக்கும்” “இன்று எங்கள் அரசு 8 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் நிலையில், நாட்டின் நம்பிக்கையும், நாட்டு மக்களுக்கு எங்கள் மீதுள்ள நம்பிக்கையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது” “கடந்த 8 ஆண்டுகளும் ஏழைகளின் நலன் மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” “தற்போது பரம ஏழைகளாக இருப்பவர்கள் பலன்களை பெறுவதில் நம்பிக்கையுடன் உள்ளனர் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு 100% பிரச்சாரத்தை செய்து வருகிறது” குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பலன்களை பிரதமர் திரு. மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திருமதி.ஸ்மிருதி இரானி மற்றும் பிற அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய

குடியரசு துணைத்தலைவர் மூன்று நாடுகள் பயணமாக கபோன், செனகல் மற்றும் கத்தார் புறப்பட்டுச்சென்றார்

குடியரசு துணைத்தலைவர் மூன்று நாடுகள் பயணமாக கபோன், செனகல் மற்றும் கத்தார் புறப்பட்டுச்சென்றார் குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு, கபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் 30 மே முதல் 7 ஜூன் 2022 வரை  பயணம் மேற்கொள்கிறார். புதுதில்லியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற அவருடன், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சுஷில்குமார் மோடி (மாநிலங்களவை), திரு விஜய் பால் சிங் தோமர் (மாநிலங்களவை) மற்றும் திரு பி ரவீந்திரநாத் (மக்களவை) ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் சென்றுள்ளது.  இந்தப் பயணத்தின் போது மூன்று நாடுகளுடனும், பல்வேறு  இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  திரு நாயுடுவின் இந்தப்பயணம், இந்த மூன்று நாடுகளிலும் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதோடு, கபோன் மற்றும் செனகல்  நாட்டிற்கு இந்திய உயர்மட்ட தூதுக்குழு செல்வதும்  இதுவே முதல்முறையாகும்.  மேலும் இந்தப் பயணம் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் முன்னெ

மின்சார வாகனங்களில் விலை குறைந்த ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், உருவாக்கியுள்ளனர். மின்சார வாகனங்களில் தற்போது பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் (Lithium-Ion) பேட்டரிகளுக்கு மாற்றாக, எளிதில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த ஜிங்க்-ஏர் (Zinc-Air) பேட்டரிகளை உருவாக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்க பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில் இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்