முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறும் மக்களின் வாழ்த்துக்களும் வாழ்வியல் கலந்த நிலைப்பாடும்

வாழும் முறை இந்தியநாட்டின்  தமிழன்  ஆனால் கலாச்சாரம் ஆங்கில வழி  கொண்டாடும்  ஆங்கிலப் புத்தாண்டின்  வரலாறும் மக்களின் வாழ்த்துக்களும் வாழ்வியல் கலந்த  நிலைப்பாடும் . ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவக் காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை. பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறை. அந்த மாதங்களும், அப்படி  ஜனவரி : இது ‘ஜானஸ்’ எனும் ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார். பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம். மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது. ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’

இரயில்வே அமைச்சகம் இரயில்வே வாரியத் தலைவர்  வி.கே.யாதவுக்கு ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’ ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு  ‘2020-ஆம் ஆண்டின் சிறந்த பொறியாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் நவீனமயமாக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருதை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (ஐஇடி) வழங்கியுள்ளது. பாரத ரத்னா சர். எம். விஸ்வேஸ்வரையாவின் பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் பொறியாளர்கள் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி தில்லியில் உள்ள ஐஇடி கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு சிறந்த பொறியாளர் விருதும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த பொறியாளர் விருது ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

. 34-வது பிரகதி உரையாடலுக்குப் பிரதமர் தலைமை

பிரதமர் அலுவலகம். 34-வது பிரகதி உரையாடலுக்குப் பிரதமர் தலைமை தாங்கினார். முப்பத்து நான்காவது பிரக தி உரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்புடையவையாகும். ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவற்றைக் குறித்து இன்றைய உரையாடலின் போது ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் தொடர்புடைய குறைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.   குறைகளை விரைவாகவும், விரிவாகவும் தீர்க்குமாறு அனைத்து அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக் க

கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல் நாளை பிரதமர் நாட்டுகிறார்

பிரதமர் அலுவலகம் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் இந்தியாவின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை ஜனவரி 1 அன்று பிரதமர் நாட்டுகிறார் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் (நகர்புறம்) மற்றும் ஆஷா விருதுகளை பிரதமர் வழங்குகிறார், தமிழக முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு நகரங்களில் சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்ப சவால் – இந்தியா திட்டத்தின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கான அடிக்கல்லை காணொலி மூலம் 2021 ஜனவரி 1 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுகிறார்.  குறைந்த விலையிலான நீடித்த வீட்டு வசதிக்கான ஆஷா இந்தியா திட்டத்தின் வெற்றியாளர்களையும் அறிவிக்க இருக்கும் பிரதமர், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தை (நகர்புறம்) சிறப்பாகச் செயல் செயல்படுத்தியதற்கான வருடாந்திர விருதுகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, நவரித் (இந்திய வீட்டுவசதிக்கான புதிய, கட்டுப்படியாகக் கூடிய, சரிபார்க்கப்பட்ட, புதுமை ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள்) என்னும் புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் கல்வியையும் பிரதமர் அறிமுகப்படுத்தி வைக்கிறார

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின்  தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் 1993 ஆம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு, அணைத்து  மாநிலத்திலும் மனித உரிமைகள் ஆணையங்கள் ஏற்படுத்தி மனித உரிமை மீறலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்ய ஆணையத்தால்  முடியும். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்து தமிழகத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகள் வரை பதவி வகுப்பார். மனித உரிமை ஆணைய தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  17 ஆம் தேதி, மாநில அதிகாரத்தின் படி உருவாக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். மாநில மனித உரிமை ஆணையத்தின் பிரிவு 12-ன்படி அதன் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றநீதிபதி எஸ்.பாஸ்கரன் மூன்று வருட காலத்திற்கு அல்லது 70 வயதை எட்டும் வரை மாநில மனித உரிமைகள்

மருத்துவக்குணம் கொண்ட காடநாத் எனும் கருங்கோழி

வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழி கிலோ 700 ரூபாய் என மக்கள் நினைக்க  காடநாத் எனும் கருங்கோழிக் கறி சாப்பிடுவது கனவு தான் போல என மக்கள் பேசுவது சும்மா இல்லை  கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேல்  விற்பனை  கொரானா காலத்தில், கருங்கோழி வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு கொரானா காலம் நலல காலம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருங்கோழி இறைச்சி இயற்கை மருத்துவக் குணம் கொண்டது.  கொழுப்புச்சத்துக் குறைவு, புரதச்சத்து  அதிகமாவதால் நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாகிறது. ஒரு கருங்கோழி முட்டை 30 ரூபாயிலிருந்து, 50 ரூபாய் வரை விற்பனையாகும் பண்ணையில் உயிருடன் ஒரு கோழி வாங்கினால் குறைந்தது 800 ரூபாய் அதுவும் இப்போது 1500 ரூபாயைத் தாண்டி விட்டதாம் கிராக்கிக்கு ஏற்ப ஊருக்கு ஊர் விலை ஏற்றமும்  மாற்றமும் செய்யப்படுகிறது. கருங்கோழியின்  மத்தியப்பிரதேசம் போன்ற உஷ்ணமான பகுதிகளில் வளர்ந்தே பழக்கப்பட்டவை. அதன் கருமை நிறமும், உஷ்ணத்தை தாக்குப்பிடித்து வளர இயற்கையின் கொடை புரதச்சத்து இருப்பதைப்போல, நரம்புத் தளர்ச்சி போன்ற ஆ ண்மைக் கு றைவுக்கும் கருங்கோழி இறைச்சி தமிழ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். பொதுவாக ஆ ண்மை குறை

வழிகாட்டி நெறிமுறை வெளியீட்டால் பொங்கல் ஜல்லிகட்டு நிச்சயம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் 50 சதவித பார்வையாளர்கள், 50 சதவீத மாடுபிடி வீரர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதில் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, ஒரு காளைமாடுடன் அதன் உரிமையாளர், ஒரு பராமரிப்பாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைமாடுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனைசெய்து நெகட்டிவ் எனச் சான்று பெற வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மாடு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 300 பேர் வரை மட்டுமே  கலந்துகொள்ளலாம். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் ஏழு நாட்களுக்கு முன்பு பதிவு செய்தால் மட்டுமே  அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். போட்டிகளைக் காண 50  சதவீதம் பார்வையாளர்களே..? அனுமதிக்கப்படுவர். அதேபோல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டியை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை  கட்டாயம் செய்திருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும், மாடுபிடி வீரர்கள

மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலைகாரனுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மரண தண்டனை

மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலைகாரனுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மரண தண்டனை .   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது மகிளா நீதிமன்றம். அறந்தாங்கி அருகே ஏழு வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் குறித்து அப்போது  தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிகழ்வு உண்டு  இக் கொலை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போகவே  அருகில் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதி தேடிய நிலையில் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்சி அடைந்த  பெற்றோர்கள் மேலும்  உறவினர்களின் வீடுகள், அருகில் உள்ள இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் சிறுமியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து,  மோப்ப நாயின் உதவியுடன் தேடியநிலையில் சிறுமியின் உடல் அப்போது  கிராமத்திற்கு அருகே ஒரு ஏரியில் கருவேல மரங்கள் நிறைந்தப் பகுத

ரூபாய் 47.8 இலட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட்டுகள், குட்டி விமானங்கள் சென்னையில் பறிமுதல் ஒருவர் கைது

ரூபாய் 47.8 இலட்சம் மதிப்பிலான தங்கம், சிகரெட்டுகள், குட்டி விமானங்கள் சுங்கத் துறையால் சென்னையில் பறிமுதல், ஒருவர் கைது. உளவுத் தகவலை தொடர்ந்து, துபாயில் இருந்து எஃப் இசட் 8517 விமானத்தில் சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த கருப்பசாமி, 65, மற்றும் சசிகுமார், 31, ஆகியோரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர். அவர்களது பைகளை சோதனை செய்து பார்த்த போது, தானியங்கி குட்டி விமானங்கள் நான்கு, ரூ 4.17 மதிப்புடைய 10 பேட்டரிகள் மற்றும் ரூ.2 இலட்சம் மதிப்பிலான 100 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அதே விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லா முகமது இஸ்மாயில், 52, என்பவரை சோதனை செய்த போது, அவரது உள்ளாடையில் இருந்து 130 கிராம் எடையுள்ள தங்கப் பசையைக் கொண்ட பொட்டலம் கைப்பற்றப்பட்டது. அவரது கால் சட்டைப் பையில் இருந்து 84 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ.11 இலட்சம் மதிப்புடைய 214 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. துபாயில் இருந்து ஈ கே 544 விமானத்தில் சென்னை வந்திறங்கிய மன்னா

அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுபவர்களைத் தேடும் வருமான வரித்துறை

நிதி அமைச்சகம் அன்னியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளோர் மீது வருமான வரித்துறை புதுதில்லியில் தேடுதல் நடவடிக்கை ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் தொடர்பான இடங்களில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித்துறை மேற்கொண்டது. தில்லி பகுதியில் கணக்கில் வராத பணத்தைக் கையாளும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், போலி நிறுவனங்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிறுவனங்களின் மூலம் போலி ரசீதுகள் மற்றும் இதர கோப்புகளை உருவாக்கி கணக்கில் வராத பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளின் மூலம் பரிவர்த்தனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ரூபாய்.300 கோடிக்கும் அதிகமான மோசடி கண்டறியப்பட்டு, ரூ.14 கோடி பணமும், ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கமும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

3500 மீட்டர் உயரத்தில் லே-இல் அமைத்த வானிலை மையத்தை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை 3500 மீட்டர் உயரத்தில் லே-இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை டாக்டர். ஹர்ஷ்வர்தன் திறந்து வைத்தார். புதுதில்லியில் உள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், லே-இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார் . லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. ராதாகிருஷ்ண மாத்தூர் இந்நிகழ்ச்சியின் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். இல்லடா நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜம்யங் செரிங் நம்கியாலும் இதில் பங்கேற்றார். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம். ராஜீவன், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர். விபின் சந்திரா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே-இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும். இதைத் திறந்து வைத்துப் பேசிய டாக்டர். ஹர்ஷ் வர்தன், சர்வதேசத

ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 2020’’- மத்தியப் பணியாளர் தேர்வாணையம்

மத்தியப் பணியாளர் தேர்வாணையம்: ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுகள், 2020 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு 2020’’ அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC) 29.12.2020ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 2. பதவிகள் குறித்த விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வி தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 3. விண்ணப்பங்கள் SSC.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யவும், ஆன்லைன் கட்டணம் செலுத்தவும் கடைசி தேதி: 31.01.2021. 4. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில், விண்ணப்பதாரர்கள், சமீபத்தில் (தேர்வு அறிவிப்பு வெளியான தேதிக்கு முன் மூன்று மாதத்துக்கு மிகாமல்) எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் போட்டோ எடுக்கப்பட்ட தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். போட்டோவில் தேதி அச்சிடப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 5. தெற்கு மண்டலத்தில் முதல் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு 29.5.2021ஆம் தேதி முதல் 07.06.2021ஆம் த

குற்றவாளிகள் படத்துடன் தபால் தலை வெளியிட்டதாக வந்த செய்திக்கு தபால் துறை விளக்கம்

குற்றவாளிகள் படத்துடன் தபால் தலை வெளியிட்டதாக வந்த செய்திக்கு தபால் துறை விளக்கம் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் குற்றவாளிகள் சோட்டா ராஜன், முன்னா பஜ்ரங்கி படத்துடன் கான்பூரில் உள்ள தபால் அலுவலகம் தபால் தலை வெளியிட்டுள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.  இது தொடர்பான விதிகளில், ஒரு வாடிக்கையாளர்  ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் தனது படம் அல்லது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் படத்துடன், பிறந்தநாள், பணி ஓய்வு, வாழ்த்துக்கள்  தெரிவிக்கும் நிகழ்ச்சியின் போது தபால் தலையை தபால் அலுவலகங்கள் மூலம் அச்சிட்டுக் கொள்ளலாம். இதற்கு அந்த வாடிக்கையாளர்  கீழ்கண்டவற்றைத் தெளிவாக எழுதிக் கொடுத்து அதில் கையெழுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ‘‘வாடிக்கையாளர் சட்டத்தை மீறும் அல்லது சமூகத்தின் எந்தவொரு தார்மீக மதிப்புகளையும் அழிக்கக்கூடிய அல்லது எந்த மூன்றாம் தரப்பு, நாடு அல்லது இந்திய தபால்துறையின்  நலனுக்கு எதிரான எந்தவொரு படத்தையும் சமர்ப்பிக்கக் கூடாது. குறிப்பாக, படத்தில் சட்ட விரோதமான, புண்படுத்தும், அவமதிக்கும் அல்லது ஒழுக்கக்கேடான எதையும், நேர்மையற்ற, ஏமாற்றும் அல்லது தேசபக்தி இல்லாத, எந்த மத

2 ஜி அலைக்கற்றை மோசடியில் ரத்தன் டாடா மீது புகார்

2 ஜி அலைக்கற்றை மோசடியில்  ரத்தன் டாடா மீது புகார் அப்போதைய டாடா சன்ஸ் தலைவரான ரத்தன் டாடா, முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஏ.ராஜா, அப்பொழுது யுனிடெக் லிமிடெட் தலைவரான ரமேஷ் சந்திரா, அப்போதைய கார்ப்பரேட் பரப்புரையாளர் நீரா ராடியா ஆகியோரை எதிர்த்து வழக்கு தொடர பாஜகவிண் மூத்த தலைவர் டாக்டர்  சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மோசடி செய்ததான வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் சில சிபிஐ அதிகாரிகள் மற்றும் பிறர். சிறப்பு நீதிபதி அவருக்கும் அவரது நிறுவனங்களுக்கும் எதிராகத் தொடர பதிவு ”. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு "ஒரு பெரிய தொகை பண மோசடி சம்பந்தப்பட்டிருக்கிறது" என டாக்டர் சுவாமி நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். டாடா டெலி சர்வீசஸ் லிமிடெட் மற்றும் யுனிடெக் லிமிடெட் இடையே குருக்ராமில் நிலம் தொடர்பாக இரட்டை தொழில்நுட்பத்தின் கீழ் ஜிஎஸ்எம் ஸ்பெக்ட்ரம் உரிமத்தைப் பெறுவதற்கு டாடா ஒரு சந்தேக

புதுவருடத்தில் காசோலை செலுத்துதலில் புதிய விதி

 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் காசோலை செலுத்துதலில் புதிய விதி  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு காசோலைக்கு “நேர்மறை ஊதிய முறையை” அறிமுகப்படுத்த முடிவு செய்திருந்தது, இதன் கீழ் ரூபாய் .50,000 க்கு மேல் செலுத்துதல்களுக்கு முக்கிய விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்தல் தேவைப்படலாம். நேர்மறை ஊதிய முறையின் இந்த காசோலை செலுத்தும் விதி ஜனவரி 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். இந்த வசதியைப் பெறுவது கணக்கு வைத்திருப்பவரின் விருப்பப்படி இருக்கும் போது, ​​ரூ .5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளின் போது அதை கட்டாயமாக்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்கலாம். நேர்மறை ஊதிய முறை 2021 ஜனவரி 01 முதல் செயல்படுத்தப்படும். நேர்மறை ஊதியத்தின் கருத்து பெரிய மதிப்பு காசோலைகளின் முக்கிய விவரங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் செயல்முறையை உள்ளடக்கியது. இந்த செயல்முறையின் கீழ், காசோலை வழங்குபவர் எஸ்எம்எஸ், மொபைல் பயன்பாடு, இணைய வங்கி, ஏடிஎம் போன்ற சேனல்கள் மூலம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கிறார், அந்த காசோலையின் சில குறைந்தபட்ச விவரங்கள் (தேதி, பயனாளியின் பெயர் அல்லது பணம் செலுத்துபவரின் பெயர்

சிவகங்கை அதிகாரிகள் தொந்தரவால் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்கொலை முயற்சி

சிவகங்கை அதிகாரிகள் தொந்தரவு காரணமாக  வட்டார வளர்ச்சி அலுவலர் தானே  கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தகவல் பல அதிகாரிகளால் விவாதமாகும் நிலையில்   சிவகங்கை செந்தமிழ்நகர் சிலம்பு தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 58). மனைவி தமிழ்ச்செல்வி (வயது 54) தனியார் பள்ளி ஆசிரியராவார்  இரண்டு  மகள்களும்  உண்டு. ரமேஷ் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் தேசிய வேலையுறுதித் திட்ட வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் ஓய்வு வயதை எட்டிய நிலையில், அரசின் ஓராண்டு கால பணி நீட்டிப்பு உத்தரவால் தொடர்ந்து பணிபுரிந்து வருகிற நிலையில் அவரது வீட்டிற்கு அருகே புதரில் கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பார்த்த சிலர் அவரை  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சிவகங்கை நகர் காவல்துறை  விசாரித்து வருகின்றனர். அவர் மனைவி தமிழ்ச்செல்வி காவல்துறையினரிடம் அளித்த புகாரில். ''உயரதிகாரிகள் நெருக்கடியால் எனது கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்

நாற்பது விவசாய அமைப்புகளுடன் நாளை மதியம் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

போராட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்புகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி புதன்கிழமை மதியம் இரண்டு மணிக்குப் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும் என மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அழைப்பு  விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்பது குறித்து விவசாய அமைப்புகள் விரைவில் முடிவெடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் பங்கேற்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அனைவர் எதிர்பார்ப்பு அது நாளை புதன்கிழமை தெரியவரும். 

உடல்நிலையை முன்வைத்து, அரசியலுக்கு வர இயலாத காரணம் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை

 உடல்நிலையை முன்வைத்து, அரசியலுக்கு வர இயலாத  காரணம் நடிகர்  ரஜினிகாந்த்  அறிக்கை. ரஜினிகாந்த். டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது படப்பிடிப்புத் தளத்தில் நான்கு  நபருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட பின் நடிகர்  ரஜினிகாந்த்துக்கு கொரானா நெகடிவ் ஆனது ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக்கொண்டபின். திடீரென்று இரத்த அழுத்த மாறுதல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதன செய்யப்பட்டதில் பயப்பட ஏதுமில்லை எனவே சென்னை திரும்பினார். மருத்துவர்கள் சில விபரங்கள் அறிவுறுத்தியததனால்,  அரசியலுக்கு வருவாரா எனற சந்தேகம் வலுத்தது. தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் : "என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்‌, ஜனவரியில்‌ கட்சி தொடங்குவேன்‌ என்று அறிவித்து மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஹைதராபாத்‌ சென்றேன்‌. கிட்டத்தட்ட 120 பேர்‌  கொண்ட படக்‌ க

ஸ்ரீ சனிபகவான் ஆன்மீக,அறிவியல்,ஜோதிடப் பார்வை

காரைக்கால் அருகில் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவிலில் பெயர்ச்சியால்  சிறப்பு பூஜைகள் நடந்தது. சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேற்று  அதிகாலை 5.22 மணிக்கு இடம் பெயர்ந்தார்.  இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை  பெயர்ச்சி  2017 ஆம் ஆண்டுக்கு பின் தற்போது தான்  பெயர்ச்சி ஆகவே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா பரவல்  காரணமாக  குறிப்பிட்ட அளவிலான பக்கதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நவகிரகங்களில் அவரவர் கர்மவினைக்கேற்ப சுபமோ, அசுபமோ பலன் தரக்க்கூடிய கிரஹமாவார். திருநள்ளார்  ஸ்தலத்தின்  வரலாற்றில்  'நிடத நாட்டு மன்னன் நளனும் ,சேதி நாட்டு இளவரசி தமயந்தியும் விரும்ப மணம் புரிந்ததால்   தமயந்தியை மணம் புரிய விரும்பிய தேவர்கள்  திருமணத்திற்குப் பின் நளன் மீது பொறாமையால் கோபமும், கொண்டு, சனிபகவானைஉதவி புரிய வேண்ட இவர்களது தூய்மையான அன்பை அறிந்து, நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த ஏழரை ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும், மனம் தளராத  உறுதியுடன் தர்பபனேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி. புராணத்தில் பார்த்தால்  சூரியன் மனைவி