முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ராஜினாமாவும் கைதும் தொடர்ந்து சம்பாய் சோரன் முதல்வராகிறார்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்  சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் .ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் பதவி விலகிய நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். ஆளுநரும் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரானவர் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் உள்ளார்.  ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் மனைவி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சம்பாய் சோரன் தேர்வாகியுள்ளார்சம்பாய் சோரனுக்கு 41 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. 81 சட்டமன்றத்  தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு . ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்திலிருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியிலிருந்து வருபவர் சம்பாய் சோரன். தற்போது ஜார்கண்ட் மாநில அமைச்ச

செந்தில் பாலாஜி வழக்கில் சட்டமென்பது அரசின் கடைநிலை ஊழியர் முதல் மேல்மட்ட ஊழியர்வரைக்கும் சமம் என உயர்நீதிமன்றம் கருத்து

 ஊழல் வழக்கில் அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரதிற்க்குள் பணியிடை நீக்கம் செய்யும் அரசு செந்தில்பாலாஜி கைதாகி 230 நாட்களுக்கு மேலாகியும் ஏன்? தமிழ்நாடு அரசு அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க இதுவரை நடவடிக்கையெடுக்க முயலவில்லை என வினா எழுப்பியது, சட்டமென்பது அரசின் கடைநிலை ஊழியர் முதல் மேல்மட்ட ஊழியர்வரைக்கும் சமமாகவேயிருக்கவேண்டுமென தமிழ்நாடு அரசை கேள்வி கேட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  மு.கருணாநிதி எதிர் மத்திய அரசு (M.Karunanithi vs Union of India) 20- 02-1979 SCC எனும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் அமைச்சர் முதலமைச்சர் அனைவரும் அரசு ஊழியரே என்று தீர்ப்பாகி விட்டது. இங்கு அறிந்த நிலையில்                   சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் தரக் கோரி தாக்கல் செய்த மனுவை, ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், ஜாமீன் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனு

அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை

நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (ஜனவரி 30, 2024) காலை 11:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறும். நாடாளுமன்ற அமர்வு 2024, ஜனவரி 31 அன்று குடியரசுத்தலைவரின் உரையுடன் தொடங்கும். அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு, அமர்வு 2024, பிப்ரவரி 9 அன்று முடிவடையும். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

கோயமுத்தூரில் நேற்று அதிகாலை திடீரெனக் கூடிய கூட்டம்

செல்ஃபோனில் வீடியோ பார்த்தால் காசு சம்பாதிக்கலாம் என்பதுபோல் ஒரு மோசடி My V 3 எனும்  நிறுவனத்தின் மீது கோயமுத்தூரில் வழக்கொன்று பதிவான நிலையில், அதன் எதிர்வினையாக கோயமுத்தூர்          L & T பைபாஸ் சாலையில் அந்த நிறுவனம் சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர்  தமிழ்நாடு முழுவதிலிருந்து நேற்று அதிகாலை முதல் திடீரெனக் கூடியிருக்கின்றனர். மதிய உணவு நேரத்தில் மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கின்றது. மிகப் பெரும் எண்ணிக்கையில் பெண்களும் வயதானவர்கள். இந்த நிலையில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்  அதாவது MLM என்றாலே கோயமுத்தூர்காரர்கள் தான் எனும் நிலை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றது. திருநெல்வேலியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழகப்  பேருந்தை வாடகைக்கு அமர்த்தி மொத்தமாக வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்திருக்கின்றனர். சில அறிவிப்புகளுக்குப் பிறகு, தற்போது அனைவரும் கலைந்து செல்கின்றனர் எனபதை அறிய முடிகின்றது. இதையெல்லாம் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவு முன்பே அறிந்திருந்ததா எனும் கேள்வி அப்போது எழுகின்ற நிலையில். நிறுவனப் பெயரிட்டு இன்று தேதியில் தேடினால் ஏகப்பட்ட

2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜனவரி 30 அன்று ஆலோசனை நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை (ஜனவரி 30, 2024) காலை 11:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெறும். நாடாளுமன்ற அமர்வு 2024, ஜனவரி 31 அன்று குடியரசுத்தலைவரின் உரையுடன் தொடங்கும். அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு, அமர்வு 2024, பிப்ரவரி 9 அன்று முடிவடையும். மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2024 பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

சிமி எனும் இஸ்லாமிய அமைப்பு யுஏபிஏ சட்டத்தின் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத இயக்கமாக அறிவிப்பு

'இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்' (சிமி) யுஏபிஏ சட்டத்தின் கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் பிரிவு 3 (1)-ன் கீழ் 'இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி)’ மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 'சட்டவிரோத இயக்கமாக' மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019 ஜனவரி 31-ம் தேதியிட்ட அறிவிப்பு எண் எஸ்.ஓ. 564 (இ) மூலம் சிமி மீது தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் சிமி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பல குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண் ஊழியர் வாரிசு ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமை- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்

பெண் ஊழியர் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நீண்டகால சமூக-பொருளாதார தாக்கத்துடன் கூடிய ஒரு முன்னோடி முடிவில், பெண்களுக்கு சமமான உரிமைகளை வழங்குவதற்கான பிரதமர் மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நிறுவப்பட்ட விதியை அரசு திருத்தியுள்ளது மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனைவிக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அனுமதிக்கிறது மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியை அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப ஓய்வூதியத்திற்கு அவரது கணவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு பரிந்துரைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய மத்திய இணையமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம

தமிழ்நாடு மாநில ஆளுநர் சித்தன்னவாசல் வருகையின் இரத்துக்கு காரணம் நடந்த போராட்டமா

தமிழ்நாடு மாநில ஆளுநர் சித்தன்னவாசல் வருகையின் இரத்துக்கு காரணம் நடந்த  போராட்டமா ?புதுக்கோட்டை வருகையின் போது மாநில அமைச்சரின் விமர்சனம்    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34 வது பட்டமளிப்பு விழா நேற்று (29.01.2024) நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கியவரிடமிருந்து 134 பேர் முனைவர் (Phd) பட்டமும், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாகப் பட்டம் பெற்றனர். காரைக்குடி வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்ற  பல்கலைக்கழக ஆளுமைகளான குனசேகரன், பாண்டியன், சுவாமிநாதன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகைபுரிந்த  ஆளுநர் ரவியை அழகப்பா பல்கலைக்கழக நிதி அதிகாரி பாண்டியன்; ஆட்சிக்குழு  உறுப்பினர்கள் முனைவர்.குணசேகரன்  மற்றும் முனைவர்.ஆர். சுவாமிநாதன்;  ஆகியோர் கும்பிட்டுப் பாரம்பரிய முறைப்படி வருக! வருகவென வரவேற்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா, காவல்துறைக்  கண்காணிப்பாளர் அரவிந்தன், துணைவேந்தர் முனைவர் க. ரவி; ஆகியோர் பூக்கொத்துக் கொட

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து

பீகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நிதீஷ் குமாருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார் பீகார் முதலமைச்சராக பதவியேற்ற திரு. நிதிஷ் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற திரு. சாம்ராட் சவுத்ரி மற்றும் திரு. விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: "பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அதன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தியமான எல்லா உதவிகளும் செய்யப்படும்.  "முதலமைச்சராகப் பதவியேற்ற திரு நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ள திரு சாம்ராட் சவுத்ரி  மற்றும் திரு விஜய் சின்ஹா  ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த குழு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் மாநிலத்தின் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்."