ம காராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் ஆதிதிராவிடப் பெண் மாநகராட்சி கவுன்சிலருக்கு பா லியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரா-பயாந்தர் மாநகராட்சியின் பெண் கவுன்சிலரான தன்னை எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து வருவதாக குற்றம்சாட்டும் காணோளிக் காட்சி இரண்டு நாட்கள் முன்பு சமூக வலைதளங்களில் பரவியது. அந்தப் பெண் அதில் கூறியிருந்த தகவலின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா மற்றும் சஞ்சய் தர்கர் என்ற இருவர் மீதும் மீரா- பயாந்தர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களைக் கைது செய்யப்படவில்லை என்று காவல்நிலைய அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
RNI:TNTAM/2013/50347