முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊரடங்கில் அதிகம் பாதிப்புகள் அடித்தட்டுத் தினக்கூலிகளுக்கே பட்டினி ச் சாவுகள் வராமல் தடுக்க தலைவர்கள் கோரிக்கை

வாழும் மக்களில் மூன்று வகை அதில் தற்போது அதிகம் பாதிப்புகள் அடித்தட்டு தினக்கூலிகள் மற்றும் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று மாலை வந்த பிறகு உணவு சமைத்து உண்ணும் அடித்தள மக்களின் நிலை தான் தற்போது மிகவும் பாதிப்பு . உழைக்கும் வர்க்கம் ஒரு வாரம் முழுவதும் வேலை செய்து சனிக்கிழமை ஊதியம் வாங்கி சனியோ, ஞாயிறன்று தான் அடுத்த வாரத்திற்குத் தேவையான பொருள்களை அவர்கள் வாங்க இயலும். சரி, மற்ற அடுத்த வர்க்கமும் சற்று இரண்டு வாரமோ, தேவைக்கு நித்தமும் வாங்கும். அரிசி , பருப்பு ஒரு மாதம் வாங்கும் குடும்பம் மாத ஊதியம் வழங்கப்படும் முதல் வாரத்தில் வாங்கிய மளிகை அப்போது இந்த முழு ஊரடங்கை எதிர் நோக்கி முன் தீர்மானிக்கும் சக்தியும் இல்ல்லாமல் இருக்கிறதை வைத்து வாங்கி இருப்பார்கள். இப்போது தொடர்ந்து இழுத்து மூடி வைத்தால் எப்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டிய உணவுப் பொருள்களை வாங்குவது? அரசு உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள் போன்று எங்கிருந்தோ வரும். பொது மக்கள் எங்கு போவார்கள்? இது ஒரு நாடோடி பழைய  இரும்பு குப்பை நெகிழி (பிளாஸ்டிக்) சேகரிப்பு நபர்கள் கயலான் கடை அருகில் பேசிய வார்த்தைகள் இவை மனதை உருக்கும் சீக

கோவா உதயதினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் கோவா உதயதினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து கோவா உதயமான தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மாநில உதய தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு வாழ்த்துகள். இந்த மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை அடையட்டும். கோவா மக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்’’  என குறப்பிட்டுள்ளார்.

எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல் படை அயராது முயற்சி

பாதுகாப்பு அமைச்சகம் எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல் படை அயராது முயற்சி இலங்கை அருகே எம்வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் அயராது பணியாற்றுகின்றன. இலங்கையின் கொழும்பு அருகே எம்.வி எக்ஸ்-பிரஸ் பியர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில், இலங்கையுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படை கடந்த 25ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி 24 மணி நேரமும் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு ‘ஆபரேஷன் சாகர் ஆரக்‌ஷா 2’ என பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல்சார் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. தற்போது இந்திய கடலோர காவல் படையின் 3 கப்பல்கள், கடல் தண்ணீர் மற்றும் ஏஎப்எப்எப் ரசாயணத்தை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஓயாத தீயணைப்பு முயற்சிகள் மூலம் கப்பலில் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புகையும் குறைந்துள்ளது. தற்போது கப்பலின்  சிறு பகுதியில்  மட்டும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த கடலோர காவல் படை

கோவாவில் மிதக்கும் படகுத்துறை : மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கோவாவில் மிதக்கும் படகுத்துறை : மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடக்கம் கோவா உதய தினத்தை முன்னிட்டு, பழைய கோவாவில், இரண்டாவது மிதக்கும் படகுத்துறையை கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவா  முதல்வர் திரு பிரமோத் சாவந்த், ஆயுஸ் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர். பழைய கோவா பகுதியில் உள்ள இந்த மிதக்கும் படகுத்துறை, கோவா சுற்றுலாத்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என  அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்தார். படகு போக்குவரத்து சேவைகள் மூலம் பன்ஜிம் மற்றும் பழைய கோவா ஆகியவை இணைக்கப்படும் என அவர் அறிவித்தார். இந்த மிதக்கும் படகுத்துறை, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான, தடைகள் அற்ற போக்குவரத்தை அளிக்கும் என அமைச்சர் கூறினார். பழைய கோவா மற்றும் பன்ஜிம் பகுதிகளை இணைக்க மாண்டோவி ஆற்றில் 2 கான்கிரீட் படகுத் துறைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்பு, முதல் மிதக்கும் படகுத்துறை பன்ஜிம் பகுதி

கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி.வி.சதானந்த கவுடா அறிவித்துள்ளார். தமிழகத்துக்கு 680 குப்பிகளும், புதுச்சேரிக்கு 60 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆம்போடெரிசின் மருந்து விபரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

பிரதமர்.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு பாஜக அமைச்சர்கள் வாழ்த்துக்களும் காங்கிரஸ் விமர்சனமும்

பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு: ஜம்முவில் 7 பஞ்சாயத்துகளில் கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 7 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் 7 பஞ்சாயத்துகளில் நடந்த கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு ரேஷன் பொருட்கள், கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘‘அந்தியோதயா என்ற உண்மையான உணர்வுடன், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதருக்கும் பலன் கிடைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளில், மக்களுக்கு ஆதரவான பல வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்தார்’’  என கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற போது, அது

டையூ பகுதியில் மின் விநியோகத்தை சீரமைத்தது பவர்கிரிட்

எரிசக்தி அமைச்சகம் டையூ பகுதியில் மின் விநியோகத்தை சீரமைத்தது பவர்கிரிட் டவ்-தே புயல் காரணமாக, டையூவில் துண்டிக்கப்பட்ட  மின் விநியோகத்தை,  மத்திய மின்துறை அமைச்சகத்தின் பவர்கிரிட் நிறுவனம்  மீண்டும் சீரமைத்தது. டவ்-தே புயல் காரணமாக டையூ பகுதியில் திம்ப்டி-தோகத்வா மற்றும் சாவர்குண்ட்லா-தோகத்வா மின்வழித் தடத்தில் 220 கிலோ வாட் மின் பரிமாற்ற கோபுரங்கள் மற்றும் வயர்கள் பலத்த சேதமடைந்தன. இவற்றை சரிசெய்யும் பணியில் பவர்கிரிட் நிறுவனத்தின் அவசரகால மீட்பு குழுவைச் சேர்ந்த 600 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து  ஈடுபட்டனர். இங்கு 10 மின்கோபுரங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. திம்ப்டி-தோகத்வா மின் வழித்தடத்தில் மின்விநியோகம் கடந்த 28ம் தேதி மீண்டும் தொடங்கியது.  இதன் மூலம் டையு மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கெட்கோவின் 66 கிலோ வாட் திறனுள்ள 15 துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் விநியோகிக்க முடிந்தது.  சாவர்குண்ட்லா-தோகத்வா மின்வழித்தடத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரணப்பொருட்கள்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரணப்பொருட்கள் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் நன்கொடையாக அளிக்கும் கொவிட் நிவாரண மருத்துவ பொருட்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது. இவைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நேற்று வரை, மொத்தம்  18,265 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்,  19,085 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  19 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள்,  15,256 வென்டிலேட்டர்கள், 7.7  லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபவிபிராவிர் மாத்திரைகள் பல மாநிலங்களுக்கு சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமும் அனுப்பப்பட்டுள்ளன.  கடந்த 27/ 29ம் தேதிகளில் தென்கொரியா, இந்தியா-பஹ்ரைன் அமைப்புகள், ஷாங்காயில் உள்ள இந்தியர்கள், ஐக்கிய அரசு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்கள் குழு, சி ட்ரிப் மற்றும் எலி லிலி ஆகிய அமைப்புகள் அனுப்பிய முக்கியப் பொருட்கள்: ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: 225. பாரிசிடினிப் : 5.6 லட்சம் மாத்திரைகள். மற்றும் கொவிட்  துரித பரிசோதனை கருவிகள். இவற்றை மாநிலங்களுக்கு உடனடியாக விநியோகிக்கும்

டில்லி, ஹரியானா, சண்டிகரில் சில இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 3 ல் துவங்கும்

புவி அறிவியல் அமைச்சகம் தில்லி, ஹரியானா, சண்டிகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு தில்லி, ஹரியானா, சண்டிகரில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா, கேரளா மற்றும் மாஹேவில்  ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது வட மாநிலங்கள் பலவற்றில் ஒரு சில இடங்களில், இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை முன்னறிவிப்பு மையம் தகவல்                  புவி அறிவியல் அமைச்சகம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்கு பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கேரளாவில் மழைப் பொழிவை அதிகரிக்கும் என தெரிகிறது. ஆகையால், கேரளாவில்

இந்திய கடற்படை விமானத்தில் ஐசியு பொருத்தி ஏர் ஆம்புலன்ஸாக மாற்றம்

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை விமானத்தில் ஐசியு பொருத்தி ஏர் ஆம்புலன்ஸாக மாற்றம் இந்திய கடற்படையின் ஏஎல்எச் மார்க் 3 ரக விமானத்தில் மருத்துவ ஐசியு வசதியை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்(எச்ஏலெ்) பொருத்தியுள்ளது. இந்திய கடற்படையின் விமான தளமான ஐஎன்எஸ் ஹன்சாவில்  உள்ள ‘ஏஎல்எச் மார்க் 3’ ரக விமானத்தில் ஐசியு வசதிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மோசமான வானிலை சமயத்தில், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை கடற்படை விமானம் மூலம் கொண்டு செல்ல முடியும். கடற்படை விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐசியுவில் இரண்டு செட் டெஃபிரிலேட்டர்கள், மல்டி பாரா மானிட்டர்கள், வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. நோயாளியின் உடலில் இருந்து திரவங்கள் மற்றும் காற்றுக்களை  உறிஞ்சுவதற்கான கருவிகளும் இதில் உள்ளன. இவைகள் விமானத்தின் மின் சப்ளை மூலம் செயல்படும். மேலும் பேட்டரியில் 4 மணி நேரம் வரை இவை இயங்கும் திறனுள்ளவை. இந்த கருவிகளை 3 மணி நேரத்தில் பொருத்தி ஒரு விமானத்தை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற முடியும். இந்திய கடற்படைக்கு, எச்ஏஎல் நிறுவனம் வழங்கவுள்ள 8 மருத்துவ ஐசியுக்களில் இது முதல் ஐசி

22.77 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 22.77 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் 1.82 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள். கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை, 22.77 கோடிக்கும் அதிகமான (22,77,62,450) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 20,80,09,397 டோஸ் தடுப்பூசிகள் (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1.82 கோடி (1,82,21,403) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 தினங்களுக்கு 4.86 லட்சம் (4,86,180) தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது.

கொவிட்-19 தொற்றை குணப்படுத்துவதில் பிராணவாயு சிகிச்சையின் முக்கியத்துவம்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்  கொவிட்-19 தொற்றை குணப்படுத்துவதில் பிராணவாயு சிகிச்சையின் முக்கியத்துவம் கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையின் போது நோயாளிகளிடையே பிராணவாயுவின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இது பற்றி விளக்கம் அளித்த பெங்களூரு தேசிய காசநோய் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்  ரவிச்சந்திரா, “80% பேருக்கு கொவிட் பாதிப்பு லேசாகவே உள்ளது. மிதமான பாதிப்பு ஏற்படும் 15% பேருக்கு பிராணவாயுவின் அளவு 94%க்கும் குறைவாக இருக்கக்கூடும்.  தீவிர பாதிப்பு ஏற்படும் மீதமுள்ள 5% பேர், நொடிக்கு 30க்கும் அதிகமான சுவாச வீதம் மற்றும் 90%க்கும் குறைவான பிராணவாயு அளவுகளோடு பாதிக்கப்படக்கூடும்”, என்று கூறுகிறார். சுவாசிப்பதில் சிரமம், குழப்பம், எழுந்திருப்பதில் பிரச்சினை, முகம் அல்லது உதடுகள் நீலமடைவது போன்றவை பிராணவாயுவின் அளவு குறைந்திருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். வயதானவர்களுக்கு நீங்காத  நெஞ்சு வலியும், குழந்தைகளுக்கு நாசித்துவாரம் விரிவடைதல், சுவாசிக்கும்போது ஒலி ஏற்படுவது, பருகவோ, உண்ணவோ இயலாத நிலை போன்றவை ஏற்படும். கொவிட்-19 போன்ற நோயினால் பிராணவாயுவின் அளவு குறையும் ப

நடிகையின் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு. நடிகையின்  புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு நாடோடிகள் படத்தின் நடிகை சாந்தினி மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகார் மீது தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் மூன்று முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதுமட்டுமின்றி அடித்துத் துன்புறுத்தியதாகவும் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில்  அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்த நிலையில் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்துக் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது மணிகண்டன் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது என்னையும் சட்டப்பே

தோழர் மைதிலி சிவராமன் மறைவு தமிழ் சமூகத்திற்கு இழப்பு

தோழர் மைதிலி சிவராமன் மறைவு தமிழ் சமூகத்திற்கு  இழப்பு . தீவிரமான மார்க்சியவாதி, பெண்ணுரிமைப் போராளி.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் பெண்கள் புரட்சிக்கு வித்திட்ட முக்கியத் தலைவர்களில் ஒருவருமானவர் மைதிலி சிவராமன் (வயது 81) கொரோனா தொற்றால் காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மைதிலி சிவராமனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சிகிச்சை பெற்றவர்,  பலனிற்றி இன்று உயிரிழந்தார். மைதிலி சிவராமன் 1939 ஆம் ஆண்டில் பிறந்தவர்,டெல்லி இந்தியன் ஸ்கூல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் கல்வி நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ படித்ததுள்ளார். பின் அமெரிக்காவில் உள்ள சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐநாவில் மூன்றாம் உலக நாடுகள் குறித்து இந்திய அரசுக்கு அறிக்கையளிக்கும் பணியில் சிறிது காலமிருந்தவர். 1968 ஆம் ஆண்டு, ஐநா சபையில் தனது வேலையைத் துறந்தவர், தமிழகம் திரும்பிய பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு  குரல் கொடுத்துள்ளார். மார்க்சிஸ்ட்

யுவா-இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டம் அறிமுகம்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் யுவா-இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டம் அறிமுகம் வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும்  வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை  கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை இன்று அறிமுகப்படுத்தியது. யுவா (இளம், வளர்ந்து வரும் மற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள்) திட்டத்தின் அறிமுகம், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதுமாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் முயற்சியாகும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில்,  விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப் பற்றி எழுதுமாறு ஜனவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தும் முகமையாக செயல்படும் நேஷனல் புக் டிரஸ்ட், பகுதி வாரியான