முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு அரசு மரியாதை

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள், ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; ‘’பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக அமைய வழிவகுத்த பாரத ரத்னா  #சர்தார்வல்லபாய்பட்டேல் ஜெயந்தியில் ஒற்றுமைக்கான சின்னமாய் விளங்கும் அவரை நினைவு கூர்ந்து, பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’’.இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை

மோர்பி பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் பெற்ற ஓரேவா நிறுவனத் தொடர்புடைய ஒன்பது நபர்கள் கைது உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு

மோர்பி பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் பெற்ற ஓரேவா நிறுவனத் தொடர்புடைய ஒன்பது நபர்கள்  கைது குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது. ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி  ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் மிகப்பழமையான இந்தத் தொங்கு பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாக. ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் பாலம் கட்டப்பட்டிருந்தது. சுற்றுலா ஸ்தலமாகவும் இந்தப் பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க அந்தத் தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்புப் பணியை முடித்து அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பாலத்தை திறந்தது முதல்  கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்லத் தொடங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை  என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்ட நிலையில் கேபிள் பாலம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள வீரர்கள், மக்கள் இந்தத் துயர்ம

ராஜீவ் காந்தி அறக்கட்டளை எப்சிஆர்ஏ உரிமம் ரத்து

முன்னாள் இந்தியப் பிரதமர்  ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசின் உள்துறை  உத்தரவு.  ராஜீவ் காந்தி  அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக எழுந்த  குற்றச்சாட்டு  காரணமாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை, மற்றும் ராஜீவ் காந்தி தொண்டு நிறு வனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகளில் சட்டவிதிமுறை மீறல்கள் எதுவும்  நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை  நடத்த மத்திய அரசு  ஒரு குழுவை அமைத்த நிலையில், வெளிநாட்டிலிருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ராஜீவ்காந்தி அறக்கட்டளை 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை உடல்நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு உள்ளிட்டவற்றில்  2009-ஆம் ஆண்டு வரை செயல்பட்ட.  அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, மற்றும் உறுப்பினர்களாகமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி

கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) 2022 பற்றி ஓர் முன்னுரை

கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) 2022 பற்றி ஓர் முன்னுரை நான்காவது கோவா கடல்சார் கருத்தரங்கம் (ஜிஎம்எஸ்) கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில்  31 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2022 வரை நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ், கொமரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், மியான்மர், செஷல்ஸ், சிங்கப்பூர், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நட்பு நாடுகளின்  கடற்படை, கடல்சார் பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்த கேப்டன்கள், கமாண்டர்கள் மற்றும் அதற்கு இணையான நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட  கோவா கடல்சார் கருத்தரங்கம், இந்தியாவிற்கும்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் நாடுகளுக்கும் இடையே கூட்டு நடவடிக்கை,  ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த தளமாக திகழ்கின்றது. இந்த கருத்தரங்கம் கோவாவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.  மேலும் இந்த கருத்தரங்கத்தின் முந்தைய மூன்று ந

அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022

அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022ல் பங்கேற்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி, 2022, அக்டோபர் 31 அன்று ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) செல்கிறார் ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர்  மேன்மைதங்கிய சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி,  தொழில்துறை மற்றும் நவீனத் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி மேன்மைதங்கிய டாக்டர். சுல்தான் அகமது அல் ஜாபர் ஆகியோர் அழைப்பின் பேரில் அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022ல் பங்கேற்க  பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி, 2022, அக்டோபர் 31   அன்று ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) செல்கிறார். இந்தப் பயணத்தின் போது,  அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022-ன் தொடக்க விழாவில் அமைச்சர் சிறப்புரையாற்றுவார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமது துறை சார்ந்த அமைச்சர்கள் மற்று

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 28.10.2022 அன்று துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை  உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும்  9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும். இதே போல் 29.10. 2022 அன்று    எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் துபாயிலிருந்து சென்னை வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கம் பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15  லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்

வித்தியாசமான தீபாவளி - பள்ளிக் குழந்தைகள் தலைமையில் மாபெரும் தூய்மை பிரச்சாரம்

வித்தியாசமான தீபாவளி - பள்ளிக் குழந்தைகள் தலைமையில் மாபெரும் தூய்மை பிரச்சாரம் இந்தியாவின் பல நகரங்களுக்கு இந்த தீபாவளி வித்தியாசமாக இருந்தது. தீபாவளியன்று கேட்கும் வழக்கமான பட்டாசு சத்தத்திற்குப் பதிலாக, பாடல்களும், தூய்மையை வலியுறுத்தும் முழக்கங்களுடன் சாலைகளிலும், தெருக்களிலும் வேன்கள் மற்றும் வண்டிகள் வீடு வீடாகச் சென்று பிரிக்கப்பட்ட குப்பைகளை சேகரித்தன. குப்பைகளற்ற நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 45,000 பள்ளிகளைச் சேர்ந்த 75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கூடுதலாக, குடிமக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் நகரத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி நிறுவனங்களின் தலைமையில் இந்த பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றன. "ஸ்வச்சதா கே தோ ரங்" (தூய்மையின் இரு வண்ணங்கள்), "ஹர கீலா சூகா நீலா" (ஈரக்கழிவுக்கான பச்சைத் தொட்டி மற்றும் உ

நாடாளுமன்ற வளாகத்தில் தேவர் சிலைக்கு மரியாதை

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி முயற்சியில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன்  உ.முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா  இன்று (30.10.2022) நடைபெற்றது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம்,  கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜுபிஸ்தா மற்றும் தில்லிவாழ் தமிழ் மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இந்திய தேசத்திற்குத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பைப் போற்றும் விதமாக அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜ

அவசரத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய என்டிஎம்ஏ குழு கல்பாக்கம் வருகை

அவசரத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய என்டிஎம்ஏ குழு கல்பாக்கம் வருகை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் திரு ராஜேந்திர சிங் தலைமையிலான  குழு, மூத்த ஆலோசகர் திரு எஸ்.கே.கோஷ்,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ஏ.ராகுல் நாத்,  உதவி ஆட்சியர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா, இணை இயக்குநர் (சுகாதார சேவைகள்) டாக்டர் பிரியா ராஜ் ஆகியோருடனும்,  கமாண்டன்ட் திரு டி.அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவுடனும் , கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்திற்குச் சென்று,  அவசரகால தயார்நிலைத் திட்டத்தை ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த கதிர்வீச்சு கண்காணிப்பு வசதி , கட்டுப்பாட்டு அறை, டர்பைன் உருவாக்கும் வசதி, புகுஷிமாவுக்குப் பின் அமைக்கப்பட்ட ஹூக்-அப் புள்ளிகள் மற்றும் மின்நிலையத்தில் உள்ள  மற்ற அணுசக்தி வசதிகளை ஒரு பகுதியாக அவர்கள் பார்வையிட்டனர். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.வெங்கட்ராமன், ஐ.ஆர்.எம்.எஃப்-ல் உள்ள வசதிகளை விரிவாக விளக்கினார். மின்நிலைய இயக்குநர் ஸ்ரீ சுதிர் பி.ஷெல்கே,  அவரது குழுவினருடன் பாதுகாப்பு அம்சங்கள், தயார