முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலட்சத்தீவு மக்களவை இடைத்தேர்தல் அறிவிக்கை வெளியீடும் ஒத்திவைக்கப்பட நிறுத்திவைப்பு

இலட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது லட்சத்தீவு  யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும்  தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது.   இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான திரு முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின்  கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், திரு முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில்  அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு 2023 ஜனவரி 25 அன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இதனை பரிசீலித்தப்பின் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்துள்ள தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீட்டையும் ஒத்திவைத்துள்ளது.

இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள்

பொது சேவை ஒளிபரப்பின் கடமை குறித்த அறிவுரையை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 09.11.2022 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, தனியார் அலைவரிசைகள் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு பொது சேவை ஒலிபரப்பை பயன்படுத்த முடியும். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் அவற்றின் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்ட அமைச்சகம் அதன் அடிப்படையிலான அறிவுரையை 30.01.2023 அன்று வெளியிட்டுள்ளது. 30 நிமிட ஒளிபரப்பின் உள்ளடக்கம் பற்றி தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சகம், ஒளிபரப்பு சேவை இணையப்பக்கத்தில் இணையவழியில் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளது. ஒளிபரப்பின் உள்ளடக்கம் தேசிய முக்கியத்துவம் கொண்டதாகவும், சமூகத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அவற்றின் விவரம்       i.     கல்வி மற்றும் எழுத்தறிவின் பரவலாக்கம்      ii.     வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு     iii.     சுகாதாரம் மற்றும் குட

புதுச்சேரியில் உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு

 “உத்தியோக் உட்சவ்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுகப்பணித்துறையும் அவதார் மனிதவள நிறுவனத்தின் ப்ராஜெக்ட் புத்ரி திட்டமும் இணைந்து “உத்தியோக் உட்சவ், 2023” (ஏழாவது பதிப்பு) என்னும் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மேற்கல்விப்படிப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்பாதைகளை குறித்த இம்மாபெரும் நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாடு மற்றும் கலாச்சார மையம், அரங்கத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்புரை நிகழ்ச்சியில் சமூகப்பணித் துறையின் தலைவர் டாக்டர் கே. அன்பு, நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கிற்கும், அவ்தார் மனிதவள அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஏ. ஷாஹீன் சுல்தானா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அவர் வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த மாண்புமிகு துணை வேந்தருக்கு நன்றி தெரிவித்த டாக்டர் சௌந்தர்யா

மகாத்மா காந்தியின் நினைவு நாளில் பிரதமர் மற்றும் முதல்வர் அஞ்சலி

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ராஜ்காட்டில் பிரதமர் மரியாதை செலுத்தினார் மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட்டில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: "ராஜ்காட்டில் பாபு அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்."தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  தலைமையில் சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  மகாத்மாவுக்கு இளமையில் உள்ளம் கவர்ந்த இரு நிகழ்வுகள் அவரை உயர் நிலைக்கு அழைத்துச்  சென்றன.    ஒன்று ஹரிச்சந்திரனுடைய வாய்மை.  பொய் சொல்லாமை.துன்பத்திலும் விடாப்பிடியாக தன் வாக்கினை காக்கும் வல்லமை.  அதுவே முண்டக உபநிஷத் கூறும் "சத்திய மேவ ஜெயதே" வாய்மையே வெல்லும். பாரதம் உலகிற்கு வழங்கும் உன்னதக் கோட்பாடு. இந்தியாவின் வெற்றிக்கான குறீயீடு. அடுத்து

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் - “வால்ட் (ஸ்ட்ராங் ரூம்) கதவுகள்” குறித்த கலந்துரையாடல்

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் - “வால்ட் (ஸ்ட்ராங் ரூம்) கதவுகள்” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. BIS ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளது, தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவ

2027-ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை நாம் அடைய முடியும் என மத்திய அமைச்சர் தகவல்

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், அரசு, சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2027-ம் ஆண்டுக்குள்  தொழுநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை நாம் அடைய முடியும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மகாத்மா காந்தியின் கவலை குறித்து குறிப்பிட்ட அமைச்சர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை நமது நாட்டின் வரலாற்றில் இருந்து உருவாகியது என்றும் அவர் தெரிவித்தார்.  அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் நமது சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இடம் பெறச் செய்வது அவருடைய தொலைநோக்குப் பார்வையாக இருந்தது என்றும் தெ

தேசிய மகளிர் ஆணையத்தின் 31-வது நிறுவக தினம்

தேசிய மகளிர் ஆணையத்தின் 31-வது நிறுவக தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் நாளை உரையாற்றவுள்ளார் தேசிய மகளிர் ஆணையத்தின் 31-வது நிறுவன தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று  (ஜனவரி 31,2023) உரையாற்றவுள்ளார். வலிமையான மகளிர் வலிமையான பாரதம் என்ற பொருளில் சிறப்பு வாய்ந்த பெண்களை பற்றியும், அவர்களின் பயணத்தை கொண்டாடும் வகையிலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, இணையமைச்சர் டாக்டர் முஞ்ச்பாரா மகேந்திரபாய் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள், தூதரக பிரதிநிதிகள், சட்டப்பிரதிநிதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், ராணுவ மற்றும் துணை ராணுவ அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில சட்ட சேவை ஆணைய உறுப்பினர்கள், தேசிய மகளிர் ஆணைய ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆணையத்தின் முன்னாள் தலைவர்கள்

ஜெர்மன் தூதுக்குழுவை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சந்தித்தார்

நீடித்த வளர்ச்சிக்கு வழிவகைகளை கண்டறிவதற்கான ஜெர்மன் தூதுக்குழுவை திரு பூபேந்தர் யாதவ் சந்தித்தார் ஜெர்மன் - இந்திய  நாடாளுமன்ற குழுவுக்கான ஜெர்மன் பிரதிநிதிகள் திரு ரால்ஃப் பிரின்காஸ் தலைமையிலும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையிலான இந்தியக் குழு இடையே இருதரப்பு கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசிய திரு யாதவ், சுழற்சிப் பொருளாதாரம், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், வன மேலாண்மை, பருவநிலை மீட்சி உள்ளிட்டவற்றில் நீடித்த வளர்ச்சிக்கான வழிவகைகளை கண்டறிவதில் நமது பாதுகாப்பு கவனம் செலுத்துவதாக தெரிவித்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெர்மன் பிரதிநிதிகள்,  ஆப்பிரிக்காவில் வனப்பகுதிகளில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை, சுழற்சிப் பொருளாதாரம், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஆகிய முத்தரப்பு ஒத்துழைப்பு குறித்து  கருத்துக்களை தெரிவித்தனர். ஜெர்மன் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த திரு யாதவ், பிரதமர் தொடங்கிய சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கத்தின் முக்கியத்துவம்

ஜி-20 கல்வி பணிக்குழு மற்றும் சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்

 ஜி-20 சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் திரு தோமர், திரு பரஸ் ஆகியோர் தொடங்கி வைத்தார் இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 முதலாவது சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழுவின்  இரண்டு நாள் கூட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் ஆகியோர் சண்டிகரில் இன்று தொடங்கிவைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர், அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுடன் இந்தியா, படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இவை இரண்டுமே எதிர்கால இந்தியாவுடன் நெருங்கிய  தொடர்புடையதாகும் என்றும் கூறினார்.  டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை உருவாக்க தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.  ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா வகிப்பது நம் அனைத்து குடிமக்களுக்கும் பெருமையான தருணம் என்று அவர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நமக்கான கடமைகள் குறித்து அனைவரும் நல்ல விழிப்புணர்வு பெற்றுள்ளோம்.   கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பில் கவனம் செ

உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல்

டெல்லி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்  கேவியட் மனு தாக்கல் அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராசன் கேவியட் மனு தாக்கல் கட்சி சின்னம் விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் எசந கேவியட் மனு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் எடப்பாடி கே.பழனிச்சாமி  தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்புக் கருத்தையும் கேட்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி  சசிகலா நடராஜனை  முதல்வராக தேர்வு செய்த நிலையில் ஆளுநர் விடுப்பில் சென்று விடவே அவர் பல வகையில்  முயற்சித்தார். ஆனால் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்  சசிகலா நடராஜன்  சிறைத் தண்டனையை அனுபவிக்