பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தின் இராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜுவை மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது . பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஆனால் தற்போது எதிர் கட்சிகள் சார்பில் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டதால் நடைபெறு