முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்து நிலக்கரிச் சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை

ஐந்து நிலக்கரிச் சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்திய நிலக்கரித்துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அதேசமயம், சுற்றுச்சூழலை பாதுகாத்து, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், நிலையான வளர்ச்சிப் பாதையில் செல்லவும் திட்டமிட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக, இந்தியா நிலக்கரி கழகம், நிலக்கரி சுரங்க ஏரிகளை பாதுகாத்தல், ஈரமாகவுள்ள நிலங்களின் சுற்றுச்சூழல் தன்மையை பராமரித்தல், மேலும், நிலக்கரி சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை, மாநில அரசுகளின் உதவியுடன், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.   ராம்சார் பட்டியலில், நிலக்கரி சுரங்க ஏரிகளை இணைப்பதற்கான தகுதி குறித்து சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராம்சார் பட்டியலில் சேர்ப்பதற்கான ஈரநிலங்கள் அடைய

வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரை

வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள் தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்களே, வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களே, வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் வி.ஐ.டி துணைத்தலைவர் திரு. ஜி.வி.செல்வம் அவர்களே, வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் திரு.சங்கர் விஸ்வநாதன், டாக்டர் சேகர் விஸ்வநாதன் அவர்களே, சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் சர்வதேச பள்ளியை திறந்துவைப்பதற்காக வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பறந்துவிரிந்த மற்றும் அமைதியான இந்த வளாகத்தை காணும்போது, பயில்வதற்கு உகந்த இடமாக தெரிகிறது, வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் கல்வி பயணத்தில் இதுபோன்ற முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதற்காக இந்த நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் கோவில்கள் அல்லது அன்ன சத்திரங்களை கட்டுவதைவிட ஒரு குழந்தைக்கு கல்வியறிவு புகட்டுவது மிகச்சிறந்தது என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவுப்படுத்த வி

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்குதுறை இடையேயான 4-வது ஒத்துழைப்பு மாநாடு புதுதில்லியில் நேற்று  நடைபெற்றது. ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் பி எஸ் ராஜூ, பாதுகாப்பு  கணக்குத்துறையின் தலைமை  கட்டுப்பாட்டாளர் திரு ரஜ்னீஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருநாள் மாநாட்டில் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு கணக்கு துறையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அக்னிபாத் திட்டத்தை குறித்த நேரத்தில் அமல்படுத்துவது மற்றும் அக்னி வீரர்களுக்கான சம்பளம் மற்றும் படி குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு கணக்கு துறையின் தலைமை கட்டுப்பாட்டாளர் ராணுவ தரப்பில் இருந்து தேவைப்படும் ஆதரவு குறித்து குறிப்பிட்டார்.

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் திறனை அதிகரிப்பதற்கும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டு வருவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வர்த்தக நடவடிக்கைகளையும் பல்வேறு சேவைகளையும் மேற்கொள்வதற்கு இதுவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை 5 ஆண்டுகளுக்குள் கணினி மயமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 1528 கோடி ரூபாய் ஆகும். இந்த கடன் சங்கங்கள் மூலம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் உள்பட 13 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை கட்டுப்பாடின்றி விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை கட்டுப்பாடின்றி விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விற்பனையை கட்டுப்பாடின்றி மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆய்வு மற்றும் உற்பத்தி செயல்பாட்டாளர்களுக்கு சந்தைப்படுத்தல் சுதந்திரத்தை அமைச்சரவையின் இந்த முடிவு உறுதி செய்யும். உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களில் கச்சா எண்ணெயை அரசு அல்லது அதன் நியமனம் அல்லது அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான நிபந்தனை ரத்து செய்யப்படும். அனைத்து நிறுவனங்களும் இப்போது தங்கள் நிலங்களில் இருந்து உள்நாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனையை மேற்கொள்ள முடியும். உரிமம், வரி போன்ற அரசு வருவாய்கள் அனைத்து ஒப்பந்தங்களிலும் ஒரே மாதிரியான அடிப்படையில் தொடர்ந்து கணக்கிடப்படும். ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படாது.  இந்த முடிவு பொருளாதார நடவடிக்கைக

பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்தவும், ஐநா (முன்னுரிமை & தற்காப்பு) சட்டம், 1947-ன்கீழ், விதிவிலக்குகள், தற்காப்பு மற்றும் முன்னுரிமைகளை வழங்குவதற்கு CDRI-யுடன் தலைமையக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பேரிடர் மீட்சி கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI)யை ‘சர்வதேச அமைப்பு’-ஆக வகைப்படுத்தவும், ஐநா (முன்னுரிமை & தற்காப்பு) சட்டம், 1947-ன்கீழ், விதிவிலக்குகள், தற்காப்பு மற்றும் முன்னுரிமைகளை வழங்குவதற்கு CDRI-யுடன் தலைமையக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து 31 நாடுகள், 6 சர்வதேச அமைப்புகள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் இந்த CDRI-யில் உறுப்பினராக இணைந்துள்ளன. பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளை உறுப்பினராக சேர தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் CDRI தனது உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது

எரிசக்தி முகமை இடையேயான நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இடையேயான நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்      பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட நீடித்த ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்த உடன்படிக்கை ஜனவரி 2022-ல் கையெழுத்தானது.       இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த பசுமை எரிசக்தி மாற்றம் குறித்த லட்சியம், தலைமைப்பண்பு மற்றும் அறிவாற்றலுக்கு வழிவகுப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கம்.     இந்த உடன்படிக்கை, இந்தியாவின் எரிசக்தி மாற்ற முயற்சிகளுக்கு உதவுவதோடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் உலகிற்கு உதவிகரமாக இருக்கும்.      இந்த உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், 2030-க்குள் இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிமம் - அல்லாத எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிப்பது என்ற குறிக்கோளை அடைய உதவிகரமாக இ

மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புத் துறைகளில் மத்திய அறிவியல்- தொழில்நுட்பத்துறை, சிங்கப்பூர் வர்த்தக - தொழில் துறையுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 2022-ல் கையெழுத்தானது.       புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மனிதவள பயிற்சி, ஒத்துழைப்புகள் மூலம் ஐ.பி. உற்பத்தி மேற்கொள்ள வழிவகுக்கும் நடைமுறையை வழங்குவதோடு, இருநாடுகளிலும் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு திறனை உருவாக்க உதவும். வேளாண்மை மற்றும் உணவு அறிவியல் & தொழில்நுட்பம்; அதிநவீன உற்பத்தி மற்றும் பொறியியல்; பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி, தண்ணீர், பருவநிலை மற்றும் இயற்கை வளங்கள்; தரவு அறிவியல், பொறியியல் தொழில்நுட்பங்கள்; அதிநவீன சாதனங்கள்; ம

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022 அறிவிக்கை

தேர்தல் ஆணையம் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2022 (16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல்) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் திரு வெங்கய்யா நாயுடு அவர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 68 ஆவது பிரிவில்,  இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்காலம் நிறைவுறுவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இதற்காக, தேர்தல் ஆணையம் இன்று அதன் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் கூடி, ஆலோசனை நடத்தியது.   சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.  அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. 16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அட்டவணையை வெளியிடுவதில் இந்திய தேர்தல் ஆணையம் பெருமிதம் கொள்கிறது என்று அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம் 1952 ன் படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கையை

ஜி எஸ் டி அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவது நடுத்தர மக்களை பாதிக்கும்

நிதி அமைச்சகம் 47-வது சரக்கு மற்றும் சேவைவரி குழும கூட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.  47-வது சரக்கு மற்றும் சேவை வரி குழும கூட்டம் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி, அச்சு மற்றும் எழுது பொருளுக்கான மை, வெட்டுபலகையுடன் கூடிய கத்தி, பென்சில், ஷார்ப்னர், பிளேடு, கரண்டி, கேக் வெட்டும் கத்தி, ஆழமான குழாய்-கிணறு ஆழ்துளை கிணற்றினுள் வைக்கும் பம்புகள், தண்ணீர் பம்புகள், சைக்கிள் பம்புகள், தூய்மைபடுத்தும் இயந்திரங்கள் முட்டைகளை வரிசைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், பழங்கள் அல்லது பிற விவசாயப் பொருட்கள் மற்றும் அதன் பாகங்கள் பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் பால் இயந்திரங

இந்திய குழு மற்றும் லிஸ்பனில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை

ஐ நா கடல்சார் மாநாடு நாளை தொடங்குவதையொட்டி இந்திய குழு மற்றும் லிஸ்பனில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினார் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் 5 நாள் ஐநா கடல்சார் மாநாடு  நாளை தொடங்குவதையொட்டி, மத்திய அறிவியல்- தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை அமைச்சர்  திரு ஜிதேந்திர சிங், இந்திய பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் மாநாட்டுக்கு முந்தைய ஆலோசனைகளில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் விவாதித்தார். உலக அளவில் சமூகம், கொவிட் பெருந்தொற்றால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் இத்தருணத்தில் இம்மாநாட்டிற்கு கென்யா மற்றும் போர்ச்சுக்கல் நாடுகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடலைப் பாதுகாப்போம், எதிர்காலத்தை பாதுகாப்போம் என்ற உலக கடல்சார்  திட்டத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், அறிவியலை அடிப்படையாகக் கொண்ட புதுமையான தீர்வுகளை இந்தியா அளிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நாளை (ஜூன் 27, 2022) தொடங்கி ஜூலை 1, 2022 வரை நட

நாட்டின் நீலப்பொருளாதாரம் குறித்த 3 நாள் சிந்தனைக் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு

கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார் நாட்டின் நீலப்பொருளாதாரம் குறித்த 3 நாள் சிந்தனைக் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.  கர்நாடகம் மாநிலம் கூர்கில்  இன்று தொடங்கிய இந்த மாநாட்டிற்கு  அத்துறைக்கான அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீலப் பொருளாதாரத்தை மாற்றுவதையும், 'போக்குவரத்து மூலம் மாற்றத்தின்' பின்னணியில் உள்ள காரணத்தை உணர்த்துவதையும் இலக்காகக் கொண்டதாக அவர் கூறினார்.

குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல' எனத் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி

 பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக புகார் தெரிவித்து இருந்தார். தேர்தல் ஆணையத்தின் விதியை மீறியுள்ளதால் திமுகவின் பதிவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியிருந்தார். தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‛‛திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி கருத்துத் தெரிவித்துள்ளார். பிராமணர்களை இனஅழிப்பு செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார். இதுதான் பெரியாரின் கொள்கை என தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குரிமையைச் செலுத்த முடியாத நிலை கூட வரலாம். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுகவின் பதிவை தேர்தல் ஆணையத்திலிருந்து நீக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இது விசாரணை நிலுவையிலுள்ள நிலையில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதமெழுதியுள்ளதில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி 2022 ஜூன் 3 ஆம் தேதி தமிழ்ப் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென டுவிட்டரில் கூறியுள்ளார். இதற்கான ஆதா

உத்தவ் தாக்கரே ராஜினாமாவும் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பும்

உச்ச நீதிமன்றத்தில் விவாதங்கள் நடந்து வந்த போது மகாராஷ்டிரா சட்டமன்ற அமைச்சரவையின் கூட்டமும் நடந்ததில் ஒளரங்காபாத் நகரத்திற்கு சாம்பாஜி நகர் என்றும், ஒஸ்மனாபாத் நகரத்திற்கு தாராசிவ் எனப் பெயர் மாற்றம் செய்யவேண்டுமென அமைச்சர் அனில் பரப் கேட்டுக்கொண்டது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே இணைய வழியில் உரையாற்றினார். "எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியாகிய இரண்டையும் இராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்தேன். அதே போன்று ஆட்சியிலிருந்து செல்கிறேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. இங்குதான் இருக்கிறேன். சிவசேனா பவனில் அமருவேன். எனது ஆட்களைக் கூட்டுவேன். எனக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியை விட்டு விலகுவதற்காக நான் வருத்தப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை திரும்ப சிவசேனாத் தொண்டர்கள் அனுமதிக்க வேண்டும். போராட்டமெதுவும் நடத்த வேண்டாம். சிவசேனா மற்றும் பால் தாக்கரேயால் வளர்ச்சியடைந்த அ

சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் அதிமுக பொதுக்குழு விடை நீதிமன்றத்தில்

சீனியர் கௌன்சிலும் ஆறு சீக்ரெட் பாயின்ட்களும் ! சட்டம் தெரியாத எடப்பாடி கே.பழனிச்சாமியும் தொண்டர்கள் பலமில்லாத ஓ.பன்னீர்சொல்வமும்  ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடந்த அஇஅதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு படி அவமதிப்பு வழக்கும் மற்றும் உச்சநீதிமன்றத்தில் கேவியட்ர் மனுவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் அதற்கு பதிலாக மேல்முறையீட்டு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். இது போக அவைக்குழு, பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தில் உரிமை மசோதாவும் தாக்கல் செய்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். இது போக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த வாரத்தில் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டில் தன்னுடைய வாதத்தைக் கேட்காமல் தடையுத்தரவு எதுவும் வழங்கக்கூடாதென்று கேவியட் மனுவும் ஓ.பன்னீர்செல்வம்  தரப்பில் தாக்கல் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் முறையாக சட்ட ஆலோசனைகளைப் பெற்று செயல்படுகிறார். இதன் உள் அர்த்தம் ஓ.பன்னீர்செல்வம் பெரிய சட்ட போராட்டத்தி

2022-23 ராபி பருவத்தில், 187.86 லட்சம் மெட்ரின் டன் கோதுமை கொள்முதல்

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் 2022-23 ராபி பருவத்தில், 187.86 லட்சம் மெட்ரின் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது மத்தியத் தொகுப்பின்கீழ், 2022-23 ராபி சந்தைப்படுத்தல் பருவத்தில், சீராக நடைபெறுகிறது. 26.06.2022 வரை 187.86 லட்சம் மெட்ரின் டன் அளவுக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 17.85 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.37,852.88 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலிருந்து 96 லட்சத்து 46 ஆயிரத்து 954 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 லட்சத்து 98 ஆயிரத்து 851 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 19438.61 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக கொடுக்கப்பட்டுள்ளது.  ஹரியானா மாநிலத்திலிருந்து 41 லட்சத்து 81 ஆயிரத்து 151 மெட்ரின் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 3 லட்சத்து 10 ஆயிரத்து 966 விவசாயிகளுக்கு, 8425.02 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலிருந்து 3 லட்சத்து 33 ஆயிரத்து 697 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்