முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லக்னோவில் டாக்டர் பீம்ராவ்.நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் குடியரசு தலைவர்

குடியரசுத் தலைவர் செயலகம் அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது: குடியரசுத் தலைவர் அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படி சமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றி இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறி இருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என்றார். லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின் பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரது பங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும் திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார். அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும் நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும் மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார். நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மை ஆகியவை பாபாசாகேப

பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்தது

உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்தது தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட மத்திய அரசு நிதியுதவி பெற்ற பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. அமைப்புசாரா உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள குறு நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதும், துறையின் முறைப்படுத்தலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 2020 ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2021 ஜனவரி 25 அன்று தொடங்கப்பட்டது. 9000-க்கும் அதிகமான தனிநபர் பயனாளிகள் இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர். 3500-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்பட

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்-IV-ன் (2021 ஜூலை-நவம்பர்) கீழ் 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை அரசு ஒதுக்கீடு

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்-IV-ன் (2021 ஜூலை-நவம்பர்) கீழ் 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது கொரோனாவைரஸ் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காக பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் 2021 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு அதாவது 2021 ஜூலை முதல் நவம்பர் வரை, இந்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம்-IV-ன் (2021 ஜூலை-நவம்பர்) கீழ் 8 மாநிலங்கள் உணவு தானியங்களை எடுத்துக் கொள்ளும் பணியை தொடங்கியுள்ளன. சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாசலப் பிரதேசம், கேரளா, ஒடிசா, தெலங்கானா, மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் 2021 ஜூன் 28 வரை 1.06 ல

கங்கை ஆற்றுப் படுகையின் பனிப்பாறை ஏரி அட்லஸ் வெளியீடு

ஜல்சக்தி அமைச்சகம் கங்கை ஆற்றுப் படுகையின் பனிப்பாறை ஏரி அட்லஸ் வெளியீடு கங்கை ஆற்று படுகையின் பனிப்பாறை ஏரி நிலப்பட ஏட்டை (அட்லஸ்) நீர் வளம், ஆற்று மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க துறை செயலாளர் திரு பங்கஜ் குமார் காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இன்று வெளியிட்டார். கங்கை தோன்றும் பகுதியில் இருந்து இமலாய அடிவாரம் வரை 2,47,109 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள பனிப்பாறை ஏரிகளின் அடிப்படையில் இந்த கங்கை ஆற்று படுகையின் பனிப்பாறை ஏரி நிலப்பட ஏடு உருவக்கப்பட்டுள்ளது. என்ஆர்எஸ்சி, இஸ்ரோ மற்றும் நீர் வளம், ஆற்று மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க துறையின் என்எச்பி இணையதளங்களான https://bhuvan.nrsc.gov.in/nhp/, www.indiawris.gov.in மற்றும் www.nhp.mowr.gov.in ஆகியவற்றில் இந்த அட்லஸை காணலாம். என்ஆர்எஸ்சி-ன் என்எச்பி-புவன் இணையதள்த்தை விண்வெளித்துறை செயலாளரும் இஸ்ரோ தலைவருமான டாக்டர் கே சிவன் தொடங்கி வைத்தார். என்எச்பி-யின் கீழ் என்ஆர்எஸ்சி எடுத்துள்ள நடவடிக்கைகளின் தகவல் களஞ்சியமான இந்த தளத்தில், அறிக்கைகள் மற்றும் அறிவுசார் பொருட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய முகவரி: https://bhuvan.nrsc.gov.in/

இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி வங்க தேசப் பயணம்

பாதுகாப்பு அமைச்சகம் இந்திய விமானப் படை தலைமைத் தளபதியின் வங்க தேச பயணம் வங்கதேசத்தின் விமானப்படை தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஷேக் அப்துல் ஹன்னான் விடுத்திருந்த அழைப்பின் பெயரில் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதௌரியா, வங்கதேச விமானப்படை அகாடமியில் ஜூன் 28 அன்று ‘ஆளுநர் அணிவகுப்பு 2021ஐ’ முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் வீரர்கள் ராணுவத்தில் இணையும் விழாவில் கலந்து கொண்டார். வங்கதேச விடுதலையின் பொன்விழாவை முன்னிட்டு இந்த 2 நாள் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. வெளிநாட்டு தளபதி ஒருவர் அணிவகுப்பை பார்வையிட்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்தியா மற்றும் வங்கதேச ஆயுதப் படைகளுக்கு இடையேயான நட்புணர்வு மற்றும் நம்பிக்கையை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்துகிறது. பயிற்சியை நிறைவு செய்யும் வீரர்களிடையே உரையாற்றிய இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி, சிறப்பான அணிவகுப்பில் ஈடுபட்டதற்காக அவர்களைப் பாராட்டியதோடு, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்க

தேசிய ஊரக வாழ்வாதார இயக்க.நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டார்

ஊரக வளர்ச்சி அமைச்சகம் பாலின பிரச்சனைகளை தீர்க்க தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார் பாலின பிரச்சனைகளை தீர்க்க தீனதயாள் அந்தியோதயா திட்டம்-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகள் குறித்த தொகுப்பை மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன், பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று வெளியிட்டார். சுய உதவி குழு கூட்டமைப்புகளின் சமூக நடவடிக்கை குழுக்கள் மூலம் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு கிராம அளவிலான சமூக நடவடிக்கை குழுக்கள் மூலம் எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பது குறித்து விளக்கப்பட்டது. 23 மாநிலங்களில் இருந்து தகவல்க

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரால் தற்சார்பு விவசாய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரால் தற்சார்பு விவசாய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே விஜய்ராகவனால் தற்சார்பு விவசாய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயம் குறித்த தகவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவுவதற்கான தேசிய டிஜிட்டல் தளமான கிசான் மித்ரின்  ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்கும். மண்ணின் வகை, மண்வளம், ஈரப்பதம், வானிலை, நீர்பிடிப்பு, பயிர் தேர்வு, உரம் மற்றும் தண்ணீர் தேவை குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு இந்த செயலி வழங்கும். 12 மொழிகளில் தகவல்களை இச்செயலி வழங்கும். விவசாயிகளிடமிருந்து எந்த தகவல்களையும் இந்த செயலை பெறாது. ஒரு பகுதி தொடர்பான தகவலை அதன் அஞ்சல் குறியீட்டு எண்ணை பதிவு செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

நிதி அமைச்சர் நடத்திய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆறாவது ஆய்வு கூட்டம

நிதி அமைச்சகம்  முதலீட்டு செலவினம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து ஆறாவது ஆய்வு கூட்டத்தை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நடத்தினார் உள்கட்டமைப்பு செயல்திட்டத்தை விவாதிப்பதற்காக மூத்த அதிகாரிகளுடன் காணொலி  கூட்டம் ஒன்றை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நடத்தினார். அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இது குறித்து நிதியமைச்சர் நடத்தும் ஆறாவது ஆய்வுக் கூட்டம் இதுவாகும். அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலதன செலவு திட்டங்கள், பட்ஜெட் அறிவிப்புகளின் செயல்படுத்துதல்கள் மற்றும் உள்கட்டமைப்பு மூலதனத்தை விரைவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டன. நிதி செயலாளர், பொருளாதார விவகாரங்கள் செயலாளர், பொதுத்துறை நிறுவனங்கள் துறை செயலாளர், எஃகு துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை செயலாளர், விண்வெளித் துறை செயலாளர், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், தலைமை செயல் அலுவலர்கள் உள்ளிட்ட

டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று பிரதமர் உரையாடவுள்ளார்

பிரதமர் அலுவலகம் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று பிரதமர் உரையாடவுள்ளார் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவுள்ளார். 2015-ம் ஆண்டு ஜூலை 1 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் இந்தியா’ ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சேவைகளை மேம்படுத்தி, அரசை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்து, மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தி, மக்களுக்கு அதிகாரமளித்து புதிய இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி கதைகளில் ஒன்றாக ‘டிஜிட்டல் இந்தியா’ உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

இந்திய இரயில்வே ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்கள்

இரயில்வே அமைச்சகம் ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்கள்: இந்திய ரயில்வே “வருங்காலத்திற்குத் தயாராகும்” வகையில் ரூ. 115000 கோடி மதிப்பில் 58 அதிக சிக்கலான மற்றும் 68 சிக்கலான திட்டங்களை வரும் ஆண்டுகளில்  மேற்கொள்ளும் தீவிர முயற்சியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. கொவிட் சவால்களுக்கு இடையேயும், வழித்தடங்களின் திறனை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான திட்டங்களை நிறைவு செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே துரிதமாக ஈடுபட்டுவருகிறது. ரூ.11,588 கோடி மதிப்பில் 1,044 கிலோமீட்டர் தொலைவில் 29 அதிக சிக்கலான திட்டங்கள் கடந்த ஓராண்டில் பயன்பாட்டுக்கு வந்தன. ரூ. 39663 கோடி மதிப்பில் மொத்தம் 3750 கிலோ மீட்டர் தொலைவில் 58 அதிக சிக்கலான திட்டங்களை இந்திய ரயில்வே கண்டறிந்தது. இவற்றில் 27 திட்டங்கள் நடப்பாண்டு டிசம்பர் மாதமும், மீதமுள்ள 2 திட்டங்கள் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதமும் நிறைவடைந்து ஒப்படைக்கப்படும். போக்குவரத்து அதிகரிப்பு, கொண்டு சேர்க்கப்படும் பொருட்கள், முக்கிய வழித்தடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் உட்பட விரிவாக்கப் பணி

இனிவரும் ஆண்டுகளில் வாகன உற்பத்தி முனையமாக இந்தியா உருவாகும்: மத்திய அமைச்சர்

கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் வரும் ஆண்டுகளில் வாகன உற்பத்தி முனையமாக இந்தியா உருவாகும்: மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், நாட்ராக்ஸ் என்ற ஆசியாவின் மிக நீளமான அதிவேக வழித்தடத்தை இன்று திறந்து வைத்தார். 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட நாட்ராக்ஸ், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக டிராக்டர் டிரெய்லர்கள் வரையிலான பல்வேறு வகை வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்கான ஒரே தளமாக விளங்கும். உலகத் தரத்திலான 11.3 கிலோ மீட்டர் அதிவேக வழித்தடத்தை மின்னணு வாயிலாகத் தொடங்கிவைத்துப் பேசிய திரு ஜவடேகர், வாகன உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களின் முனையமாக இந்தியா உருவாகவிருக்கிறது என்று கூறினார். ‘தற்சார்பு இந்தியாவை' நோக்கி நாம் விரைவாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும், அதற்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அமைச்சர் குறிப்பிட்டார். வாகன உற்பத்தி முனையமாக இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் கனவை நனவாக்குவதில் தமது அமைச்சகம் உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மதிப்பீட்டு முறை, தகவல் பலகையை உருவாக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மதிப்பீட்டு முறை, தகவல் பலகையை உருவாக்க மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தல் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான திட்டங்களை முறையாகக் கண்காணிப்பதற்கு தகவல் பலகையும், அவற்றிற்கான மதிப்பீட்டு முறையும் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வலைதளக் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், சிறந்த வர்த்தகத்தை மேற்கொள்ளும் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆவணங்களைப் பெற்றுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதற்கு வசதியாக, அவற்றிற்கு மதிப்பீடு வழங்குவதற்கு எளிமையான மற்றும் வெளிப்படைத்தன்மை வாயிலான செயல்முறை வகுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். பல்வேறு உலக நாடுகள் இந்திய தொழில்துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பத

இந்தியாவில் லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கை: நிதி ஆயோக் வெளியீடு

நித்தி ஆயோக்  இந்தியாவில் லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கை: நிதி ஆயோக் வெளியீடு லாப நோக்கில்லா மருத்துவமனை தொடர்பான துறையில்  கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. “மருத்துவத் துறையின் விரிவாக்கத்தில் தனியார் நிறுவனங்களிடையே குறைந்த முதலீடுகளே காணப்படுகிறது. நேற்று அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை தொகுப்பு, இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது. லாப நோக்கில்லாத துறை பற்றிய ஆய்வு, அந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய முயற்சியாகும்”, என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் கூறினார். நிதி ஆயோக்கின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு அமிதாப் கண்ட் முன்னிலையில், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால், நாடு முழுவதுமிருந்து இந்த ஆய்வில் பங்கேற்ற மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், டாக்டர் வி கே பால் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். லாப நோக்கில்லாத மாதிரி மருத்த

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ 2479 கோடி ஒதுக்கீடு

ஜல்சக்தி அமைச்சகம்  ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ 2479 கோடி ஒதுக்கீடு ஒவ்வொரு வீட்டிற்கும் சுகாதாரமான தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு ரூ. 2479.88 கோடியை ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகை கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.572.24 கோடியாக இருந்தது. இந்த நான்கு மடங்கு உயர்த்தப்பட்ட தொகையை ஒதுக்கீடு செய்கையில், 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு ஊரக வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது நாடு முழுவதும் மொத்தமுள்ள 19.20 கோடி ஊரக வீடுகளில் வெறும் 3.23 கோடி (17%) வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்பு இருந்தது. கடந்த 22 மாதங்களில் கொவிட்-19 பெருந்தொற்றையும் பொருட்படுத்தாது ஜல் ஜீவன் இயக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதனால் 4.39 கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்பு

ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் தளத்தை” அறிமுகப்படுத்தியது நீதித்துறை.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் “ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் தளத்தை” அறிமுகப்படுத்தியது நீதித்துறை. நீதித் துறையின் செயலாளர் திரு பரூண் மித்ரா, பிரத்யேகமான “ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் தளத்தை” ஜூன் 28 அன்று நீதித் துறையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒப்பந்தங்களை நெறிமுறைப்படுத்துவதை  வலுப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களை கண்காணிக்கும் முகமைத் துறையாக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் மின்னணு குழு மற்றும் தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் கர்நாடக உயர் நீதி மன்றங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது. தரமான, வெளிப்படைத்தன்மை வாயிலான மற்றும் வலுவான முறையை உருவாக்குவதற்காக நீதித்துறை இதர உயர் நீதிமன்றங்கள் மற்றும் மின்னணு குழுவுடன் இணைந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒப்பந்தங்களை நெறிமுறைப்படுத்தும் அளவுருக்களில் மேற்கொள்ளப்படும் சட்டரீதியான மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய விரிவான

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யாக Dr.C.சைலேந்திரபாபு,M.Sc(Agri),BGL,MA,MBA,Ph.D,59(5/6/1962) நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யாக  Dr. C.சைலேந்திரபாபு, M.Sc(Agri),BGL,MA,MBA,Ph.D,59(5/6/1962) நியமனம்.          அரசு அனுப்பி இருந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த அதிகாரிகள் பலர் மிகவும் நேர்மையான அதிகாரிகளெனப் பெயரெடுத்தவர்கள். முக்கியமாக சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, ஏகே விஸ்வநாதன், சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், ஆகியோர் இந்த டிஜிபி போட்டியில் முன்னிலையில் இருந்தார்கள். 11 பேரின் பட்டியல் அனுப்பப்பட்டிருந்தாலும், இதில் குற்ற வழக்கு இல்லாத பணி அனுபவ மூப்புக் கொண்ட 5 பேரின் பெயர் இறுதி செய்யப்பட்டு, அதன்பின் புதிய பட்டியல் தயார் செய்யப்படும்.  இதில் ஒவ்வொரு அதிகாரியின் பின்புலம், அனுபவம் ஆராயப்பட்டு 4 அதிகாரிகளின் பெயர்கள் தலைமைச் செயலாளரிடம் தரப்படும். இந்த பட்டியலை தமிழ்நாடு அரசு மீண்டும் சோதனை செய்யும். 4 பேரில் தகுதியான நபர்கள் யார் என்று சோதனை செய்து அதிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதில் சைலேந்திர பாபுவிற்கு டிஜிபி ஆகும் வாய்ப்பு முன்பே அதிகம் இருப்பதாக வந்த தகவல்கள் படி இன்று மாலை டிஜிபி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது                                  தமிழ்நாடு காவல்து

எகிப்திலுள்ள அலெக்சாண்ட்ரியாவுக்கு ஐஎன்எஸ் தபார் சென்றடைந்தது

பாதுகாப்பு அமைச்சகம் எகிப்தில் உள்ள அலெக்சாண்ட்ரியாவுக்கு ஐஎன்எஸ் தபார் சென்றடைந்தது இந்திய கடற்படையின் முன்னணி கப்பலான ஐஎன்எஸ் தபார் இரண்டு நாள் நல்லெண்ண பயணமாக 2021 ஜூன் 27 அன்று அலெக்சாண்ட்ரியாவுக்கு சென்றடைந்தது. இந்தியாவும் எகிப்தும் சிறப்பான இருதரப்பு உறவை பகிர்ந்து வரும் நிலையில், இந்திய கடற்படை கப்பல்கள் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திற்கு அடிக்கடி சென்று வருகின்றன. அலெக்சாண்ட்ரியா கடற்படை வீரர்கள் நினைவிடத்தில் ஐஎன்எஸ் தபார் தலைமை அதிகாரி கேப்டன் எம் மகேஷ் மற்றும் குழுவினர் மலரஞ்சலி செலுத்தினர். அலெக்சாண்ட்ரியா கடற்படை தளத்தின் தளபதி, ரியர் அட்மிரல் அய்மன் அல்-டாலியை கேப்டன் எம் மகேஷ் சந்தித்தார். துறைமுகத்தில் இருந்து கிளம்பும் போது எகிப்து கடற்படை கப்பல் டவுஷ்காவுடன் கடல்சார் கூட்டு பயிற்சியில் ஐஎன்எஸ் தபார் ஈடுபட்டது. இந்திய மற்றும் எகிப்து கடற்படைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி அமைந்தது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிவதையும் நோக்கமாக கொண்டு ஐஎன்எஸ் தபாரின் பயணம் அமைந்தது

கொச்சின் துறைமுகத்தில் இருந்து பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல் சேவைகள் தொடக்கம்

கப்பல் போக்குவரத்து அமைச்சகம்  கொச்சின் துறைமுகத்தில் இருந்து பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல் சேவைகள் தொடக்கம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களுக்கு ‘பசுமை சரக்கு வழித்தடம்-2’ எனும் சரக்கு கப்பல் சேவைக்கான சரக்குகளை ஏற்றும் பணியை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்தார். ஜேஎம் பாக்சி குழும நிறுவனமான ரவுண்ட் தி கோஸ்ட் பிரைவேட் லிமிடெட் பசுமை சரக்கு வழித்தட சேவையை நடத்துகிறது. கொச்சின், பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களை இந்த சேவை இணைக்கிறது. கொல்லம் துறைமுகம் பிறகு இதில் சேர்த்துக் கொள்ளப்படும். இந்த சேவைக்கான பொது முகவராக ஜேஎம் பாக்சி நிறுவனம் செயல்படும். வாரம் இரு முறை கொச்சின் துறைமுகத்துக்கு வரவிருக்கும் கப்பல், பெய்ப்பூர் மற்றும் ஆழிக்கல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் இதர சரக்குகளை ஏற்றி செல்லும். அரிசி, கோதுமை, உப்பு, கட்டுமான பொருட்கள், சிமென்ட் உள்ளிட்டவை குஜராத்தில் இருந்து கொச்சினுக்கு வந்தடையும். திரும்பி செல்லும்