முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும்' மைகவ்' வினாடிவினாப் போட்டி சுதந்திரதினக் கொண்டாட்டம்

பாதுகாப்பு அமை ச்சகம் இளைஞர்கள், பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்த “மைகவ்” இணையதள, வினாடிவினாப் போட்டி இந்த ஆண்டு சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “தற்சார்பு இந்தியா” கருத்துரு பெரிய அளவில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகம், ”மைகவ்” இணையதளத்துடன் இணைந்து, ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை, “தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா” என்ற தலைப்பில் இணையதள வினாடிவினாப் போட்டியை நடத்துகிறது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் 10 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் ஆறுதல் பரிசாக (7 பேருக்கு) ரூ.5,000-மும் அளிக்கப்பட உள்ளது. 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமக்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான இணையதள இணைப்பு -  https://quiz.mygov.in/quiz/aatmanirbhar-bharat-swatantra-bharat-quiz/  போட்டியில் யாவரும் கலந்து கொள்ளலாம்.    

ஏரிப் புறம்போக்கு ஏக்கர் ஒருகோடி ஏமாந்த நடிகைகள் தெலுங்கானாவில் நடந்த மோசடி

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் இராவுரியாலா கிராமத்திலுள்ள அரசுக்குச் சொந்தமான ஏரிப் புறம்போக்கை அரசு விதிகளை மீறி ஏமாற்றி விற்பனை செய்துள்ள நிறுவனத்தினடமிருந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி வீதம் கொடுத்து ஏமாந்த நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ஆகியோர் ஏமாந்தனர் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்துள்ள மோதலால் இந்த ஊழல் கலந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏரி நிலத்தில் வீடு கட்டவோ வாங்கவோ அரசின் அனுமதியும் இல்லை.சட்டம் அனுமதிக்காது நிலத்தைக் கையகப்படுத்தி வைத்திருந்த விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்து உழவடை கொடுத்து வாங்கி அதை ரயத்து நிலம் போல ஒரு கோடிக்கு விற்று மோசடி செய்து விட்டதாக அந்த நிறுவனத்தின் பங்குதாரரும் இயக்குனருமான சுதிர் ரெட்டி கூறியுள்ளார்.கோட்டா ரெட்டி என்பவர் ஹைதராபாத்தில் ஆதித்யா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் உறவினரான சுதீர் ரெட்டி அதில் இயக்குநராக இருக்கும் நிலையில் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்ட பிறகு சுதீர் ரெட்டி பேட்டி அளிக்கவே பல திடுக்கிடும் தகவல்களை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஷ்கார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

உள்துறை அமைச்சகம் பேரிடர் நிர்வாகத்தில் சிறந்த பணியாற்றியவர்களுக்கான “சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு பேரிடர் நிர்வாகத்தில் சிறந்த பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் “சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” விருதுக்கு மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு இணையதளம் வாயிலாக, 2020 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. தனிநபர்களும், நிறுவனங்களும் தமது விண்ணப்பங்களை, 2020 ஆகஸ்ட் 31-ந் தேதி வரை www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளான ஜனவரி 23-ந் தேதியன்று, ஆண்டுதோறும் இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. பேரிடர் நிர்வாகத்தில், சிறந்த பணியாற்றிய தனிநபர்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில், மத்திய அரசு, சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருதை நிறுவியது. இதனுடன் சான்றிதழும், நிறுவனங்களுக்கு ரூ.51 லட்சம் மற்றும் தனிநபருக்கு ரூ.5 லட்சமும் விருது பணமாக அளிக்கப்படும். தனிநபர், தனக்காகவோ, மற்றவருக்காகவோ, ஒரு நிறுவனத்திற்காகவோ இந்த விருதுக

சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் போதை மருந்துக்கு எதிரான நூல் காணொலி மாநாட்டில் வெளியீடு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், போதையின் காரணமாக ஏற்படும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விதிமுறைகளை கொண்ட புத்தகம் ஒன்றை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் கோளாறுகள், நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை சீர் செய்வதற்கான சிகிச்சை விதிமுறைகள் பற்றிய மின்நூல் ஒன்றை மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் இன்று காணொளி மாநாட்டின் மூலம் வெளியிட்டார். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தை நிறுத்தச் செய்வது, போதை மருந்துக்கு அடிமையாகும் நடத்தையை சீராக்குவது போன்றவற்றுக்கான சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே உடனிருந்தார். போதை மருந்துகளை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் கோளாறு என்பது பொது சுகாதாரப் பிரச்சினையாக -- குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விடலைப் பருவத்தினரின் பிரச்சினையாக உள்ளது என்று குறிப்பிட்ட திரு.அஸ்வினி குமார், “உலகம் நவீன வாழ்க்கை முறையை பின்பற்று

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பயிற்சிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எரிசக்தி அமைச்சகம் மின் விநியோக அமைப்பு தொழில்நுட்ப பயிற்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான மின்சக்தி நிதி நிறுவனம், கான்பூர் இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன்படி, மின்சக்தி நிதி நிறுவனம் தனது சமுதாய கடப்பாடு திட்டத்தின் கீழ், ரூ.2,38,97,000-ஐ, நிதியுதவியாக, கான்பூர் தொழில்நுட்ப பயிலகத்திற்கு அளிக்க உள்ளது. மின் விநியோக அமைப்பு தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்திய தொழில்நுட்ப பயிலகத்திற்கு உதவி செய்வதுதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்று மின்சக்தி நிதி நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு.ஆர்.முரஹரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய கல்விக்கொள்கை-2020 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும், தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 2030-க்குள் பள்ளிக் கல்வியில் 100 சதவீத ஒட்டுமொத்த சேர்க்கை வீதத்துடன் மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகப்படுத்த புதிய கொள்கை வழிவகுக்கிறது. பள்ளிக்குச் செல்லாத 2 கோடி குழந்தைகளை, மீண்டும் கல்வி நீரோட்டத்திற்குக் கொண்டுவர தேசிய கல்விக் கொள்கை 2020 உதவும். புதிய 5+3+3+4 பள்ளிப் பாடத்திட்டம் 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு மற்றும் 3 ஆண்டு அங்கன்வாடி/ மழலையர் பள்ளிப் படிப்பைக் கொண்டதாக இருக்கும். அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணக்கறிவுடன், கடுமையான பிரிவினை இல்லாத பாடமுறை, பாடத்திட்டம் சாரா அம்சங்கள், பள்ளி அளவிலேயே தொழிற்கல்வி பயிற்றுவித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; தொழிற்பாடங்கள் 6-ம் வகுப்பிலிருந்தே தொடங்குவதுடன், உள்ளுறை பயிற்சியும் அளிக்கப்படும். குறைந்தபட்சம் 5-ஆம் நிலை வரையிலாவது தாய்மொழி / பிராந்திய மொழியில் பயிற்றுவித்தல். மதிப்பீட்டு முறையில், மதிப்பெண் அட்டை, கற்றல் வி

ஜிம்பாப்வே புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்தியக் குடியரசுக்கும், ஜிம்பாப்வே குடியரசுக்கும் இடையில் ஏற்கெனவே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2018 நவம்பர் 3 ஆம் தேதி கையெழுத்தானது. பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான வரையறைகளை அளிப்பதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. பாரம்பரிய மருத்துவத் துறையில் இரு நாடுகளும் இதனால் பயன்பெறும். சமநிலை மற்றும் பரஸ்பரப் பயன் என்ற அடிப்படையில், பாரம்பரிய மருத்துவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது, மேம்படுத்துவது மற்றும் உருவாக்குதலை பிரதான நோக்கமாகக் கொண்டதாக இந்த ஒப்பந்தம் உள்ளது. ப

நடிகை குஷ்புவுக்கு எதிராக கண்டனக் குரல் தந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

நடிகையும் தற்போது காங்கிரஸ் பிரமுகருமான குஷ்புவுக்கு ஏதிராக நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கரூர் உறுப்பினர் ஜோதிமணி கண்டனம் பதிவு காங்கிரஸ் கட்சிக்குள் அதீத ஜனநாயகமும்,கருத்து சுதந்திரமும் உண்டு. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றுக் கருத்துக்களை கவனமாக கேட்டு,மதிக்கக்கூடியது. அதனால் தான் காந்தி குடும்பத்தின் தலைமையை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பி ஏற்கிறார்கள். ஏன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்கள்? என்கிற கேள்வியை அடிக்கடி நான் எதிர்கொள்ள நேர்கிறது. இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி மட்டுமே அதன் இயல்பான பன்முகத்தன்மை ,அனைத்து மக்களின் மொழி,வரலாறு, கலாச்சராம்,பண்பாட்டை மதித்து , புரிந்துகொண்டு , வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்த முடியும். இரண்டாவதாக அதன் உள்கட்சி ஜனநாயகம். கடந்த காலத்தில் நான் கூட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபட்ட கருத்தைப் பொதுவெளியில் பேசியிருக்கிறேன். அதே போல திருமிகு. குஷ்புவுக்கும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாறுபட்ட கருத்து இருக்குமானால் அதுபற்றி பேச அவருக்கு உரிமையுண்டு. ஆனால் 600 பக்கத்தையும் முழுமையாகப் படித்துவிட்டு பேசவேண்டும். ஏ

மணிப்பூரில் உள்ளூர் தீவிரவாதிகளின் தாக்குதலில் மூன்று இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம்

உள்ளூரின் பயங்கரவாதிகள் தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் இந்தியா - மியான்மர் இடையேயான எல்லைப்பகுதியில் ரைபிள் படை வீரர்கள் மாலை நேரத்தில் மாமூலான ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்த தாக்குதலில் மூன்று வீரர்களுமஹ உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகளான மக்கள் விடுதலை சேனை எனும் தீவிரவாதிகள் அமைப்பின் தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளான தகவலும் உண்டு.

கேரளம்,ஆந்திரம்,உத்திரப்பிரதேசம் மாநிலங்களவை இடைத்தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையம் ஆந்திரப்பிரதேச மேலவைக்கான இடைத்தேர்தல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மேலவைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மேலவையில் உள்ள ஒரு காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை நடத்துவதென தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிக்கை 2020 ஆகஸ்ட் 6-ந் தேதியன்று வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 13 என்றும், மனுக்களை ஆய்வு செய்யும் தேதி ஆகஸ்ட் 14 என்றும், மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 17, தேர்தல் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 24 என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் உத்தரப்பிரதேசம், கேரள மாநில மேலவைக்கு இடைத்தேர்தல் உத்தரப்பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள மேலவைகளில், தலா ஒன்று வீதம், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல்களை நடத்துவதென தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிக்கை 2020 ஆகஸ்ட் 6-ந் தேதியன்று வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 13 எ

புதிய கல்விக்கொள்கை துரோணோச்சாரியாருக்கும் ஏகலைவனுக்குமான இடைவெளியா உண்மை என்ன

புதிய கல்வி கொள்கை மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தனது எதிர்ப்பினைப் பிரகடனப்படுத்தவும் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலைப்பாடு இதில் மூன்றாவது மொழியைத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல என முதற்கட்டத்திலேயே நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்கும் நிலையில் அதில் உள்ள பாதகம் குறித்த தகவல் தான் மக்கள் பயம் கொள்ளக் காரணமாக உள்ளன 3,5,8-ம் வகுப்புகளுக்கு உரிய ஆணையம் தேர்வு நடத்தும் என்பதும், 5 ஆம் வகுப்பு வரை தேர்வே கிடையாது என்ற நிலையில் 3 ஆம் வகுப்பில் இருந்தே தனி ஆணையம் தேர்வு நடத்தும் என்பதுமாகும். இனி, கல்லூரிகளில் பி.எஸ்.சி, போன்ற இளங்கலை விஞ்ஞானப் படிப்புக்கு கூட என்.டி.ஏ. என்ற ஓர் அமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்கி அதன்மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளதாகவும் நுழைவுத் தேர்வே கூடாது- நீட் அறவே வேண்டாம் என்ற மக்கள் கருத்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் புதிய கல்வி முறையை திணிப்பது ஏழை மாணவர்களின் 12 ஆம் வகுப்பு பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்தும் நோக்கம்

கொடைக்காணல் தடை உள்ள ஏரியில் மீன்பிடித்த நடிகர் சூரி மீது வேட்டைத் தடுப்பு காவலர்கள் வழக்கு

கடந்த வாரம் சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இ-பாஸ் வாங்காமல் சென்ற நடிகர் விமலும், சூரியும். தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரியின் வனப்பகுதிக்குள் சென்று மீன் பிடித்த விவகாரத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் இருவரும் சூழல் காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் விமல் மற்றும் சூரி ஆகிய இருவருக்கும் அபாராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சூரி மற்றும் விமல் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஊரடங்கை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு ஆகஸ்டு முழுவதும் நீட்டிப்பு தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் வெளியானது ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு சென்னையில், காய்கறி, மளிகை கடைகளை திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு அத்தியாவசியமற்ற பொருட்களை சப்ளை செய்ய இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்புக் கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முதல்வரின் அறிவிப்பு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதிக்கப்படுகிறது. தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்துத் தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவும்மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்கள

காரைக்குடி தனி வட்டாச்சியர் மஹாதேவன் பாலியல் குற்றத்தால் பணியிடை நீக்கம்

பணிசெய்த பெண் பணியாளர்களுக்குத் தொல்லை தந்த காரைக்குடி தனி வட்டாச்சியர் பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு காரைக்குடி நகர நிலவரித்திட்டம் GR சர்வேயின் சூடாமணிபுரம் அலுவலகத்தில் பணியிலிருந்து பல கோடி இலஞ்சத்தில் திளைத்த காரைக்குடி மனை வாடகை தனித் தாசில்தார் 'மலைமுழுங்கி' மஹாதேவன் பணிநீக்கம் உடன் பணிசெய்த பெண் பணியாளர் புகாரில் விசாக கமிட்டி பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தாசில்தார் மகாதேவனை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா நகர நிலவரித் திட்டதனி வட்டாட்சியராகப் பணிபுரியும் மகாதேவன் என்பவர் தன் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் பாலியல் துன்புறுத்தல் தொடந்து நடத்தியது தொடர்பாக பெண்கள் மாவட்ட ஆட்சியரிடமும் மகளிர் ஆணையத்தின் விசாக கமிட்டியிடமும் விசாரிக்க மனு செய்ததன் பேரில் விசாக கமிட்டி பரிந்துரையில் குற்றம் நிகழ்வு உண்மை முதன்மை ஆதாரம் இருப்பது என்பதால் மகளிர் ஆணையத்தின் விசாரணை முடிவில் படி நீக்கம் செய்யப்பட்ட வட்டாச்சியர் மஹாதேவன் வாரம் இரண்டு கோடிக்கு மேல் லஞ்சத்தில் மூழ்கியவர் இன்னும் சி

ஆந்திராவின் பாஜக மாநிலத் தலைவராக சோமு வீராஜூ நியமனம்

ஆந்திரப்பிரதேச பாஜக தலைவராக சோமு வீராஜு நியமனம். பாஜக மாநிலப் பிரிவு புதிய தலைவராக மூத்த தலைவரும் எம்எல்சியுமான சோமு வீரராஜும் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திங்களன்று தற்போதைய தலைவர் கண்ண லட்சுமிநாராயணனுக்குப் பதிலாக வீராஜு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீராஜு இந்த பதவிக்கு முன்னணியில் இருக்க அப்போது புதியதாக கண்ணா பெற்றார். பிரிக்கப்படாத ஆந்திரத்தில் பல்வேறு காங்கிரஸ் அரசாங்கங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த கண்ணா, 2014 தேர்தலில் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட உடனேயே பாஜகவில் சேர்ந்தார். ஆயினும், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒரு இடம் கூட வெல்லவில்லை, ஆகவே அவருக்கு கட்சி வாய்ப்பு மறுத்து கட்சியின் தேசியத் தலைமை சோமு வீராஜூ பணி குறித்து திருப்தி தெரிவித்தது முன்னாள் முதலமைச்சரும், த.தே.கூ தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் கடுமையான விமர்சகராக எம்.எல்.சி அறியப்படுவதால், வீராஜுவின் நியமனம் ஒய்.எஸ். ஜெகன் அரசாங்கத்திற்கு கொஞ்சம் மூச்சு விடக்கூடும். வீராஜு கடந்த ஒரு வருடத்தில் பலவகையில் மாநில அரசைப்

தீப தூபங்களால் ஒளிரும் அயோத்தி வெள்ளி செங்கல் வேள்வி பூஜை

தீபாவளிக்கு முன்பே இன்னொரு தீபாவளி வருகிறது. அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோயிலுக்கு 'பூமி பூஜை' நடக்க இருப்பதைக் கொண்டாடும் விதமாக ,ஆகஸ்ட் 3 முதல் 5 வரை லட்சக்கணக்கான தீபங்கள் மூலம் முழு அயோத்தி நகரமும் ஒளிரும்.ஸ்ரீ ராமபிரான் ஆலயம் அமையும் பூமியில் 22.6 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் பூமி பூஜை விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியால் ஸ்ரீ ராம் மந்திரின் அஸ்திவார தளத்தில் பூஜித்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலின் பூமி பூஜை விழாவுக்குப் பிறகு ரூ 326 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படும் எனத் தகவல் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பான ஏற்பாட்டில் முழுமையான அயோத்தி நகரமே பூமி பூஜைக்காக அலங்கரிக்கப்படும். அடிக்கல் நாட்டும் விழாவின் நேரடி ஒளிபரப்பைக் காண நகரத்தில் பெரிய திரைகள் அமைக்கப்படும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூர்தர்ஷன் நேரடியாக விழாவை ஒளிபரப்பும் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வருவதால் மூத்த பாஜக தலைவர்களான லால் கிருஷ்ணாண அத

சுங்கவரி பித்தளைக்கழிவு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் குறித்து அரசிதழ் தகவல்

நிதி அமைச்சகம் சுங்கவரி அறிவிப்பு எண். :62/2020-CUSTOMS (N.T.) சமையல் எண்ணெய், பித்தளைக் கழிவு, பாப்பி விதைகள் கசகசா, பாக்கு, தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான சுங்கவரி நிர்ணயிப்பது- தொடர்பாக. சுங்கச்சட்டம் 1962 ( 52 of 1962),  பிரிவு 14 , உட்பிரிவு (2)இன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மறைமுகவரி மற்றும் சுங்கம் ஆகியவற்றுக்கான மத்திய வாரியம், தேவையையும், பயனையும் கருத்தில் கொண்டு அதில் திருப்தி அடைந்ததன் காரணமாக, மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறையின் 3 ஆகஸ்ட் 2001 தேதியிடப்பட்ட ஆணை எண். 36/ 2001 சுங்கம் (என் டி) இந்திய அரசிதழில் கெசட்டில் பிரசுரிக்கப்பட்டது, அசாதாரணமானது, பகுதி இரண்டு பிரிவு 3 உட்பிரிவு (ii) எஸ் ஓ 748 (E) 3 ஆகஸ்ட் 2001 அறிவிக்கையில், திருத்தங்களைச் செய்துள்ளது. குறிப்பு: முதன்மை அறிவிக்கை இந்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டது அசாதாரணமானது பகுதி-2 பிரிவு 3 உட்பிரிவு (ii) அறிவிக்கை எண் 36/ 2001 சுங்கம் (என் டி) 3 ஆகஸ்ட் 2001 தேதியிடப்பட்டது எஸ் ஓ 748(E)  3 ஆகஸ்ட் 2001 வெளியிடப்பட்டது. இது கடைசியாக, 29 மே 2020 வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 48 /2020 சுங்

போலிச்செய்திகளைக் கண்டறிய பெற்றோர் குழந்தைகளுக்கு உதவ துணைக் குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எதிர்கொள்வதற்கு குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள் – குடியரசுத் துணைத்தலைவர். இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கய்ய நாயுடு ஊடகங்களில் அதிலும் இன்றைய நாட்களில் புதிய ஊடகச் சூழலில் பரவி வரும் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை கண்டறிந்து அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். ”டைம்ஸ் ஸ்காலர்ஸ் ஈவண்ட்” என்ற நிகழ்ச்சியில் இன்று காணொளிக் காட்சி மூலம் 200 இளம் பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய போது குடியரசுத் துணைத்தலைவர் உண்மையைப் பகுப்பாய்வு செய்து அதனை தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளவும் பொய்களைப் புறந்தள்ளவும் தேவையான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார். குழந்தைகளிடையே படிக்கும் பழக்கம் குறைந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர் இன்று கட்டுப்பாடற்ற அளவில் தகவல்கள் கிடைக்கின்ற சூழலிலும் குழந்தைகள் புத்திசாலியான மற்றும் அறிவுக்கூர்மையுள்ள வாசகர்களாக மாறுவதற்கு கற்றுத்தர வேண்டிய தேவை உள்ளது என

ஜி ஏஸ்‌ டி வரி மோசடி ரூ 600 கோடி ஏமாற்றியவர்கள் மீது வழக்கு

நிதி அமைச்சகம் பொது இயக்குநரகம் ஜிஎஸ்டி புலனாய்வு (DGGI) 600 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்த மூன்று நிறுவனங்களைக் கண்டறிந்து வழக்கு பதிந்தது. M / s பார்ச்சூன் கிராபிக்ஸ் லிமிடெட், M/s ரீமா பாலிச்செம் பிரைவேட் லிமிடெட் & M/s. கணபதி எண்டர்பிரைசஸ், ஆகிய மூன்று நிறுவனங்களும் எந்தவொரு பொருள்களும் இல்லாமல் விலைப்பட்டியல் தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  செப்டம்பர் 2019இல் பொது இயக்குநரகம் ஜிஎஸ்டி புலனாய்வு - வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DGGI – DRI) செப்டம்பர் 2019 தொடங்கிய அகில இந்திய கூட்டு நடவடிக்கையில், பல்வேறு ஏற்றுமதியாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்றுமதியாளர்களில் ஒருவரான M / s அனன்யா எக்ஸில் (Anannya Exim)க்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் தரவுப் பகுப்பாய்வு குறித்த விவரங்களை அதிகாரிகள் கண்டறிந்த பகுத்தாராய்ந்த போது, தகுதியற்ற உள்ளீட்டு வரிக்கடனை (ITC) காரணமாக காட்டி, ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி (IGST) பணத்தைத் திரும்பப் பெறுவது தெரிய வந்தது. ஜிஎஸ்டி புலனாய்வு தலைமையக இய