முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 30, 2024) நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதுகளை வழங்கினார். கீழ்க்கண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்: பி.வி.நரசிம்மராவ் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த பி.வி.நரசிம்மராவ் சார்பாக, பாரத ரத்னாவை அவரது மகன் திரு பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார். முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த சௌத்ரி சரண் சிங் சார்பில் அவரது பேரன் திரு ஜெயந்த் சௌத்ரி பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் (மறைவுக்குப் பிந்தைய விருது). மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் டாக்டர் நித்யா ராவ், பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார். *கர்பூரி தாக்கூர் (மரணத்திற்குப் பிந்தைய விருது). மறைந்த கர்பூரி தாக்கூர் சார்பில், அவரது மகன் திரு ராம்நாத் தாக்கூர் பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.                   குடியரசுத் தலைவர் இல்லத்தில் 30.03.2024  அன்று நடை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழச் சின்னம்

தமிழ்நாட்டில் பலாப்பழச் சின்னத்தில் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டி இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனது முழு ஆதரவினை அளித்துள்ளார். அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவைகளைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு  நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவருக்கு  பலாப்பழச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 'ஒ' இன்ஷியல் கொண்ட மற்றொரு பன்னீர்செல்வமும் அதே சின்னம் கேட்ட நிலையில், குலுக்கல் முறையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழச் சின்னத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுசந்திரன் ஒதுக்கீடு செய்தார்.  இராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில

வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணைப் படகு

வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணை (ஏ.சி.டி.சி.எம்) 11 திட்டத்தின் ஒரு பகுதியாக வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ மற்றும் ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18 (யார்டு 128), மும்பை கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது இந்தியக் கடற்படைக்காக, தானேயில் உள்ள எம்எஸ்எம்இ ஷிப்யார்ட், திருவாளர்கள் சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட, ஏசிடிசிஎம் படகு 11 திட்டத்தின் ஒரு பகுதியாக 'வெடிமருந்துகள் மற்றும் டார்பிடோ ஏவுகணை படகு, எல்எஸ்ஏஎம் 18 மார்ச்28, 24அன்று மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் (கரன்ஜா) ஒப்படைக்கப்பட்டது. அறிமுக விழாவுக்கு கமாண்டர் விக்ரம் போரா, என்.டி (மும்பை) / ஜி.எம் (டெக்) தலைமை தாங்கினார்.  11 ஏசிடிசிஎம் படகு கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தானேவில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இடையே 2021, மார்ச் 05 அன்று கையெழுத்தானது. இந்தப் படகுகளை சேர்ப்பது, துணைத் துறைமுகங்கள் மற்றும் வெளிப்புற துறைமுகங்களிலிருந்து வெடிபொருட்கள் / தளவாடங்கள் ஆகியவற்றை இந்தியக் கப்பற்படைக்கு கொண்டு செல்லுதல்,

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்கள், தென் சென்னையில் 41 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக தஞ்சாவூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் தேர்தல் அதிகாரி தகவல்

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும்: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும் என்றும் இதற்காக பல புதிய நடைமுறைகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 கையேடு வெளியீட்டு விழாவில் இந்தக் கையேட்டினை வெளியிட்டுப் பேசிய அவர், தபால் வாக்குகள் பதிவு செய்வதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தாங்கள் பயிற்சி பெறும் இடத்திலேயே வாக்களிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் 85 வயதைக் கடந்தவர்களும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதையடுத்து சுமார் நான்கு லட்சம் பேர் அதற்கான படிவத்தை ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அளித்திருப்பதாகவும் அவர் கூறினார். ராணுவத்தில் பணியாற்றுவோர் தபால் வாக்கு அளிப்பதில்  இருந்த சிரமங்கள்  நீக்கப்ப

மட்கக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் உறிஞ்சு குழாய்களின் இந்திய தரநிலை பற்றிய விவாதம்

மட்கக்கூடிய பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் மற்றும் மட்கக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் உறிஞ்சு குழாய்களின் இந்திய தரநிலை பற்றிய விவாதம் மதுரையில் இன்று நடைபெற்றது மட்கக்கூடிய பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் மற்றும் மட்கக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் உறிஞ்சு குழாய்கள் பற்றிய கலந்துரையாடலை இந்திய தரநிர்ணய அமைவனம், இன்று (28.03.2024) மதுரையில் நடத்தியது. இந்தக் கலந்துரையாடலில் கப்பலூர் தொழில்துறை  உற்பத்தியாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பங்குதாரர்கள், பிஐஎஸ் புதுதில்லி மற்றும் பிஐஎஸ், மதுரையைச் சேர்ந்த அதிகாரிகள், மதுரை சிப்பெட் பிரதிநிதிகள், பி.டி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்திய தரநிர்ணய அமைவனம், மதுரை மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு சு.த.தயானந்த், நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். பிளாஸ்டிக் பைகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அவர் தெரிவித்தார். இந்த இலக்குகளை மனதில் வைத்து இந்திய தரநிலைகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு

ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், குறித்து தொலைத் தொடர்புத் துறை அறிவுரை

தொலைத் தொடர்புத் துறையினர் போல் ஆள்மாறாட்டம் செய்யும் அழைப்புகள், செல்பேசி எண்களைத் துண்டிப்போம் என்று மக்களை மிரட்டுவதற்கு எதிராக அரசின் அறிவுறுத்தல் தொலைத் தொடர்பு துறையினர் என்ற பெயரில்,குடிமக்களுக்கு வரும் அழைப்புகளில் அவர்களின் செல்பேசி எண்கள் அனைத்தும் துண்டிக்கப்படும் அல்லது அவர்களின் செல்பேசி எண்கள் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அழைப்பாளர்கள் அச்சுறுத்துகின்றனர் என்பது தொடர்பாக தகவல்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) குடிமக்களுக்கு ஓர் அறிவுறுத்தலை  வெளியிட்டுள்ளது.  அரசு அலுவலர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்ற  வெளிநாட்டு செல்பேசி எண்களிலிருந்து (+92-xxxxx) வரும் வாட்ஸ்அப் அழைப்புகள் குறித்தும்  தொலைத் தொடர்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் சைபர் குற்றவாளிகள், சைபர் குற்றம்  / நிதி மோசடிகளை செய்ய அச்சுறுத்தவும்  தனிப்பட்ட தகவல்களைத் திருடவும் முயற்சிக்கின்றனர். தொலைத் தொடர்பு துறை தனது  சார்பாக இதுபோன்ற அழைப்பைச் செய்ய யாருக்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பதால்  மக்கள் விழிப்புடன் இருக்குமாறு இத்து

குண்டு வெடிப்பு முக்கியக் குற்றவாளி குறித்தகவல்களுக்கு சன்மானம் தலா 10 லட்சம் ரூபாய்.

புதுடெல்லியில் முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகு ஒரு நாள் கழித்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ரூபாய். பத்து லட்சம் சன்மானம் அறிவித்தது. இராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில், அப்துல் மதீன் அகமது தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய தகவல்களுக்கு சன்மானம் தலா 10 லட்சம் ரூபாய். இந்தியாவின் சட்ட அமலாக்க நிறுவனம் X தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 30 வயது தாஹா, தனது இஸ்லாமிய அடையாளத்தை மறைக்க ஹிந்து அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி விக்னேஷ் எனும் பெயரில் போலியான ஆதார் அல்லது போலியான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வருகிறார். அவர் ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், சட்டைகள் மற்றும் தொப்பி ஹூடிகளை அணிவதை வழக்கமாகக்  கொண்டவராவார், மேலும் பெரும்பாலும் முகமூடிகள், விக் மற்றும் போலியான தாடிகளை அணிவார். தாஹா ஆண்கள் தங்கும் விடுதிகள், குறைந்த வாடகை பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் ஆகியவற்றிலும் தங்குவதாக அறியப்படுகிறது.' ஷாசிப், சுமார் 30 வயதுடையவர், உடற்பயிற்சி உடலமைப்புடன் மிகவும் சிக்கலானவர். அவர் தோராயமாக 6 அடி 2 அங்குல உயரம் மற

தீ தடையில்லா சான்றிதழ்களை மருத்துவமனைகள் பெற வேண்டும்.

வெப்பநிலை அதிகரிப்பதால் கோடை மாதங்களில் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன கோடை மாதங்களில்  வெப்பநிலை அதிகரிக்கும் போது , மருத்துவமனைகளில் தீ விபத்து ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறும். இதைத் தடுக்க, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு கூட்டு ஆலோசனையை வழங்கியுள்ளது, இது போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதில் முன்முயற்சி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட விசயங்கள் தொடர்பாக  உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய  நெருக்கமாக  ஒத்துழைக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்               தீ பாதுகாப்பு இணக்கத்தை மதிப்பிடுவதற்கு அனைத்து மருத்துவமனைகளிலும்   விரிவான தீ பாதுகாப்பு தணிக்கை / கள ஆய்வுகளை  நடத்த வேண்டும். தீயணைக்கும் அமைப்புகள்,  தீ

சட்டத்தின் ஆட்சி குறித்து எந்த நாட்டிடமிருந்தும் இந்தியாவுக்குப் பாடம் தேவையில்லை – குடியரசு துணைத்தலைவர்

சட்டத்தின் ஆட்சி குறித்து எந்த நாட்டிடமிருந்தும் இந்தியாவுக்குப் பாடம் தேவையில்லை – குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வலுவான நீதித்துறை அமைப்புடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது  குழுவுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகம் தனித்துவமானது என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடம் தேவையில்லை என்றார. புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தியப் பொது நிர்வாக நிறுவனத்தின் 70-வது அமைப்பு தின விழாவில் உரையாற்றிய திரு தன்கர், இந்தியாவில் இன்று "சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஒரு புதிய நெறிமுறை" என்றும், "சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களை சட்டம் பொறுப்பேற்க வைக்கிறது" என்றும் கூறினார். "ஆனால் நாம் காண்பது என்ன? சட்டம் தன் கடமையைத் தொடங்கிய உடனேயே அவர்கள் வீதிகளில் இறங்கி, அதிக சத்தத்துடன் விவாதங்களில் ஈடுபட்டு, மனித உரிமைகளின் மிக மோசமான குற்றத்தை மறைக்க

தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பு

தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது: பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்த செயலி மூலம் இதுவரை 79,000 க்கும் அதிகமான விதிமீறல் புகார்கள் பதிவாகியுள்ளன; 99 சதவீத வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன இந்திய தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் சுட்டிக்காட்ட மக்களின் கைகளில் ஒரு சிறந்த கருவியாக மாறியுள்ளது. 2024 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று வரை 79,000 க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன. 99% க்கும் அதிகமான புகார்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.இவற்றில் 89% 100 நிமிடங்களுக்குள் பைசல் செய்யப்பட்டன. வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை   சி-விஜில் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள். 58,500 க்கும் அதிகமான புகார்கள் (மொத்தத்தில் 73%) சட்டவிரோத விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளன. பணம், அன்பளிப்பு மற்றும் மதுபான விநியோகம் தொடர்பாக  1400க்கும் அதிகமான புகார்கள் வரப்பெற்றன. 3% புகார்கள் (2454) சொத்துக்களை சேதப்படுத்துவது தொடர்பானவை. துப்பாக்கிகளைக் காட்டுதல், மிரட்டுதல் தொடர்பாக பெறப்பட்

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலாமானர்

நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் காலாமானர். 48 வயதான டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர். நெஞ்சுவலி ஏற்பட்டு கொட்டி வாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, பிகில், வட சென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினராவார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.1975 ஆம் ஆண்டு பிறந்த டேனியல் பாலாஜி, சென்னை தரமணியில் திரைப்பட இயக்கப் படிப்பை முடித்தார். கமல்ஹாசனின் படத்தில் யூனிட் புரொடக்‌ஷன் மேனேஜராக டேனியல் பாலாஜி தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். ராதிகா நடிப்பில் பிரபலமான சின்னத்திரை தொடரான 'சித்தி'  டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவரது பெயர் டேனியல் பாலாஜி ஆனது. சென்னை புரசைவாக்கத்துக்காரர். திருவான்மியூரில் வசித்து வந்தார். 'சித்தி

2023-24 நிதியாண்டு இந்திய அரசின் கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

2023-24 நிதியாண்டிற்கான பிப்ரவரி 2024 வரையிலான இந்திய அரசின் கணக்குகளின் மாதாந்திர ஆய்வு 2024 பிப்ரவரி மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:- 2024 பிப்ரவரி வரை இந்திய அரசு ரூ.22,45,922 கோடி (மொத்த ரசீதுகளில் தொடர்புடைய ஆர்இ 2023-24-ல் 81.5%) பெற்றுள்ளது. இதில் ரூ.18,49,452 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கு நிகர), ரூ 3,60,330 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ. 36,140 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் அடங்கும். கடன் அல்லாத மூலதன ரசீதுகளில் ரூ. 23,480 கோடி கடன்கள் மீட்பு மற்றும் ரூ.12,660 கோடி இதர மூலதன ரசீதுகள் அடங்கும். இந்தக் காலகட்டம் வரை இந்திய அரசால் வரிகளின் பங்காக ரூ.10,33,433 கோடி மாநில அரசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ரூ.2,25,345 கோடி அதிகமாகும். இந்திய அரசின் மொத்த செலவினம் ரூ.37,47,287 கோடி (தொடர்புடைய ஆர்இ 2023-24 இல் 83.4%), இதில் ரூ.29,41,674 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.8,05,613 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், ரூ.8,80,788 கோடி வட்டி செலு

இந்திய இராணுவத்தின் எதிர்கால தலைமைத்துவம் பற்றி கடற்படைத் தளபதி உரை

வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி (டி.எஸ்.எஸ்.சி.) யில் 79வது பணியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு இந்திய ராணுவத்தின் எதிர்கால தலைமைத்துவம் பற்றி கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் உரையாற்றினார் வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி (டி.எஸ்.எஸ்.சி.)க்கு 2024, மார்ச் 28 அன்று சென்றிருந்த கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், 79வது பணியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு இந்திய ராணுவத்தின் எதிர்கால தலைமைத்துவம் பற்றி உரையாற்றினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் தன்மையை நிறுவுவதில் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் நாட்டின் புவியியலின் முக்கியத்துவம் குறித்து கடற்படைத் தளபதி எடுத்துரைத்தார். தற்சார்புக் கொள்கையைப் பின்பற்றுகின்ற, போருக்குத் தயாராக உள்ள, நம்பகத்தன்மை வாய்ந்த, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலத்திற்கு ஆதாரமான படையாக இந்தியக் கடற்படை மாறியுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். கடற்கொள்ளை எதிர்ப்பு உட்பட இந்தியக் கடற்படையால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து அட்மிரல் ஆர் ஹரி குமார் விரிவாக விளக்கினார். இந்தியாவின்

பறக்கும் படையால் விடை இன்றிப் பரிதவிக்கும் மக்கள் படை

அரசு ஊழியர்கள் எனும் அலுவலர்கள் கையில் முழு அதிகாரம் தந்தால் என்னமா ஆட்டம் போடுவார்கள் என்பதற்கு பறக்கும் படை எனும் பெயரில் சாமானிய மக்களிடமும், ஏழை எளிய வியாபாரிகளிடமும் இவர்கள் நாள்தோறும் காட்டும் அணுகுமுறைகளே சாட்சியங்களாகும். அரசியல்வாதிகளை சுதந்திரமாக பணம் எடுத்துச் செல்ல விட்டு விட்டு வியாபாரம் செய்து வாழும் மக்களைத் தான் பிடிக்கிறார்கள்..!தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத்  தொகுதிகளுக்கும் 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படைக் குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு. எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்கணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதில், குறிப்பாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக சிறப்புத் தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய ரூபாய்.50,000- பணத்தை விட அதிகமாகப் பணம், நகை அல்லது பொருட்களை ஆவணங்களின்றி எடுத்துச் சென்றால் தான் அதனைப் பறிமுதல

ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறைத் தகவல்.

ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறை நீதிமன்றத்தில் தகவல். சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தென்காசி மாவட்டம் குலசேகரபட்டி விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதில், ‘என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராகய் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி, ஈஷா யோகா மையத்திலிருந்து என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?’ எனக் கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மைத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். அது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையத்தில் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசாரணையைத் துரித

தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கவலைக்கிடம்

தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குப் பின்னர் தான் உடல்நிலை பற்றி எதுவும் கூற முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த தகவல் வெளியானது. வைகோவின் மதிமுகவைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். குறிப்பாக மதிமுக சார்பில் ஈரோட்டில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 தேர்தலில் ஈரோடு தொகுதியில் தோல்வியடைந்தார்.இருப்பினும்  2019 தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டார். மீண்டும் மதிமுக வேட்பாளராக களமிறங்கிய கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது வயது 77.இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தயாரானார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படுமென நினைத்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடுக்குப் பதில் திருச்சி

போதைப்பொருள் கடத்தல் நைஜீரிய நாட்டவர் உட்பட இருவர் கைது

ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ கோகைன் பறிமுதல்: நைஜீரிய நாட்டவர் உட்பட இருவர் கைது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் இன்று புதுதில்லியில், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 கிலோ  கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோ-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்கு போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டது. ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், பீகாரின் ரக்சவுலில் இருந்து 22.03.2024 அன்று காலை தில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் வெள்ளைநிறத் தூள் பொருளைக் கொண்ட வெளிர் மஞ்சள் காப்ஸ்யூல்கள் 92 மீட்கப்பட்டன. என்.டி.பி.எஸ் கள சோதனைக் கருவியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் மீட்கப்பட்ட பொருளில் கோக்கைன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் விசாரணையில், புதுதில்லி துவாரகாவில் உள்ள ஒருவருக்கு சரக்கு வழங்கப்பட இருந்தது தெரியவந்தது. விரைவான பின்தொடர்தல் நடவடிக்கையின் விளைவாக, புதுதில்லியின் துவ

புதுச்சேரியில் வேளாண் அறிவியல் மையங்களின் பொன்விழா கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி

புதுச்சேரியில் வேளாண் அறிவியல் மையங்களின் பொன்விழா கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் - வேளாண் அறிவியல் மையங்கள் 2024-ம் ஆண்டில் தங்களுடைய பொன்விழாவைக்  கொண்டாடுகின்றன. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. 1974-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி புதுச்சேரியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் மூலம் முதலாவது வேளாண் அறிவியல் மையம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக், வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி மற்றும் தோட்டக்கலை உற்பத்தியை அதிகரிக்க உதவியதாக கூறினார். வேளாண் அறிவியல் மையங்கள் தொழில்நுட்ப மாற்றம், திறன் மேம்பாடு, சந்தைப்படுத்துதலுக்கான தகவல் ஆகியவற்றுக்கான விரிவான கேந்திரமாக சாதாரண விவசாயிகளுக்கு சேவை புரிய வேண்டும் என்று தெரிவித்தார்.