முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமலான நடத்தை விதிமுறைகள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்த செல்லலாம். அல்லது ஒருவேளை அதிகமான பணத்தை எடுத்து சென்று பறக்கும் படையிடம் எனும் சோதனை அலுவலர்களிடம் சிக்கினால் அடுத்ததாக என்ன நடக்கும்? என்பது பற்றி தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் கடந்த 2019ல் நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது போல வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எப்போதும் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பதை நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்ததன்படி நாடாளுமன்ற. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, ஏப்ரல் மாதம்  26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகள் என ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜுன் மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தான் எந்தக் கட்சி எத்தனை 
சமீபத்திய இடுகைகள்

சிவபுரிப்பட்டி கிராமத்தில் பாரிவேட்டை இருதரப்பு மோதல் 17 நபர்கள் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிவராத்திரி மறுநாள் நடந்த பாரிவேட்டை நிகழ்ச்சிக்கு. வனத்துறை மற்றும் காவல்துறை அனுமதி தராத  போது, முன் விரோதமாக இரண்டு தரப்பினர் மோதிக் கொண்டதில் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் இரண்டு தரப்பிலும் புகார் செய்திருந்த நிலையில், 17 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒரு வாரம் காலம் கடந்த நிலையில் தற்போது வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது. காவல்துறை அனுமதி தராத ஒரு நிகழ்வில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமுற்ற நிலையில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க மிகுந்த தயக்கம் காட்டுவதாகவும்  பேசப்படுகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு, ஊர் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலையில்  காவல்துறை அலட்சியப் போக்கும் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனத் தகவல்

ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக பிரமுகர் அகோரம் மும்பையில் கைது

இரவில்  மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் கைது. தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்கிற நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அகோரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது , அந்தப் புகாரில் "தருமபுரம் ஆதீனம் தலைமை பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் சகோதரனும் உதவியாளருமாவேன் கடந்த சில நாட்களாக ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவர் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக தொடர்பு கொண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தன்னிடமும், தலைமை மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வனதைளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதீனத்தையும் மடாபதிடையும் அவமானபடுத்தி விடுவதாகவும் தனது சார்பில் திருவெ

முத்தூட் நிதி நிறுவனம் மோசடி நீதிமன்ற உத்தரவால் உரத்தாகும் உரிமம்

முத்தூட் நிதி நிறுவனம் மோசடி. உண்மையாநால் அதன் உரிமத்தை இரத்து செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு. முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் பெயரில் பொதுமக்களிடம் நகை மோசடி செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் ஊத்துமலை பகுதி மக்களிடம்  10 சவரன் நகைகளை அடகு வைத்தால் கூடுதல் வட்டி மற்றும் ரூ.10 ஆயிரம் போனஸ் கிடைக்கும் எனவும் சேமிப்பு திட்டத்தில் நகைகளை அடகு வைத்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவன பெயரில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் மேலாளர்கள் இளவரசன், இமானுவேல், ஆடிட்டர் கண்ணன், வர்ஷா, கலைச்செல்வி, முத்தமிழ்ச் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளைதுரை, காளீஸ்வரி ஆகியோர் மீது காவல்துறையில்  வழக்குப் பதிவு செய்ததையடுத்து முன்ஜாமீன் கோரி முத்தமிழ்ச் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளத்துரை, காளீஸ்வரி ஆகிய நால்வரும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய

அமலாக்கத்துறை கைது செய்த முன்னால் முதல்வர் மகள்

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை   கைது செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி யூனியன் பிரதேச ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.ஆர்.சந்திரசேகர ராவ் மகளான எம்எல்சி யான கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது டெல்லி கலால் கொள்கை முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்களுக்கு எதிராக கவிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் 19-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸிலுள்ள பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி யான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் நேற்று பிற்பகல் முதல் சோதனை மேற்கொண்ட நிலையில்  கே ஆர் சந்திரசேகர் ராவ்  மகள் கவிதாவைக் கைது செய்தது அமலாக்கத்துறை.. விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச்

பாண்டியப் பேரரசி மதுரை அன்னை மீனாட்சிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகம்,

பாண்டியப் பேரரசி மதுரை அன்னை மீனாட்சிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகம், மதுரை சித்திரை திருவிழா 2024 க்கு அட்டவணை வெளியீடு -  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2024 அட்டவணையை வெளியிட்டது இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோவில் நிர்வாகம். மதுரையின் பல நூற்றாண்டு அடையாளம், நகரின் மையத்தில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்த மினாட்சியம்மன் திருக்கோவில். ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் திகழ்கிறது. இதில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலக புகழ் பெற்றது. தமிழ்நாட்டில்  மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.  சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றம், 19 ஆம் தேதி பட்டாபிஷேகம், 20ஆம் தேதி மீனாட்சியம்மன் திக் விஜயம், 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி திருத்தேரோட்டம் , கள்ளழகர் எதிர்சேவை, 23ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன முருகன் சிலை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகில் கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை எந்தக் காலத்தை சேர்ந்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.