ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உடைத்தோ அல்லது ஒட்டுமொத்தமாக இயந்திரத்தையே தூக்கிச் சென்றோ கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்மையில் நடந்த முக்கிய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விபரம் :- திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு- செப்டம்பர் 5, 2026: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஹிட்டாச்சி (Hitachi) ஏடிஎம் மையத்தில், முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இயந்திரத்தில் சுமார் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு காவலர் யாருமில்லை அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - ஆகஸ்ட் 27, 2026: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் டார்ச் மூலம் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ரூபாய் 11.5 லட்சம் முதல் ரூபாய் 12 ல...
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜே.எம்.எச். அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாகவும் உண்மையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அசன் மவுலானா தனது தேர்தல் செலவாக ரூபாய் 17,03,548 மட்டுமே கணக்கு காட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் அவர் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 32,05,915 செலவிட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவரது மொத்த செலவு ரூபாய் 49 லட்சத்தைத் தாண்டியது, இது அப்போதைய தேர்தல் செலவு உச்சவரம்பான ரூபாய் 30.80 லட்சத்தை விட அதிகமாகும். இந்தத் தடையின் காரணமாக, ஆகஸ்ட் 2026 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற (மக்களவை/மாநிலங்களவை) அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் (சட்டப்பேரவை/சட்ட மேலவை) வேட்பாளராகப் போட்டியிட முட...