கீழடி அகழாய்வுப் பணிகளை மத்திய அரசின் சார்பில் மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணி உயர்வு காரணமாக தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்தவர் நொய்டாவுக்கு மாற்றமானார். அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்பதில் பல சந்தேகங்கள் கேட்டு திருத்தம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான அகழ்வாராய்ச்சியாகும். அதை சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்ட யாவற்றையும் முழுமையாகப் பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அனுப்பி வைத்தார்கள். மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதை வெளியிடாமலேயே காலம் கடத்தி தாமதித்து வைத்திருந்த உண்மை யாவரும் அறிந்ததே !. கீழடி அகழ்வாராய்ச்சியும் மிகவும் முக்கியமானது தான். தமிழரின் பயன்பாட்டுத் தொன்மையைச் மற்றும் கடந்து போன வாழ்...
பட்டா நிலத்தின் நடுவிலிருந்த மின்கம்பத்தை ஓரமாக மாற்றித் தர ரூபாய். 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளரை கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (வயது36).மென்பொருள் பொறியாளர். தந்தை கருப்பசாமிக்கு சொந்தமாக கோயமுத்தூர் மாவட்டம் நீலம்பூர் கிராமம் முதலிப்பாளையம் பகுதியில் 99 சென்ட் நிலம் உள்ளதன் நடுவில் மின்கம்பம் ஒன்று நிலத்தில் ஆரம்ப காலத்தில் இல்லாமல் பிற் காலத்தில் இருந்த தனையறிந்த செந்தில்குமார், மே மாதம் குரும்பபாளையம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று அலுவலர்களை அணுகி, நிலத்தின் நடுவிலிருக்கும் மின்கம்பத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை விடுத்தார். நிலத்தில் இருந்து மாற்றுவதற்கு ரூபாய்.50 ஆயிரத்திற்கு மேலாகச் செலவாகும் என்பதால், இறுதி முடிவை செயற் பொறியாளர் தான் எடுக்க வேண்டும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தனர். அதனையடுத்து சோமனூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சபரிராஜன் (வயது 57) ஐ கடந்த 9 ஆம் தேதி அணுகிய செந்தில்குமார் நிலத்தில் இருந்து மின் கம்பம் மாற்ற...