திருச்செந்தூர், முருகன் சூரபத்மனை வதம் செய்ததை விவரிக்கும் ஸ்கந்த புராணத்தின் படி, அரக்கன் சூரபத்மன், சிவபெருமானிடம் கடுமையான தவம் செய்து வரங்களைப் பெற்று அந்த சக்தியால் உலகை ஆளத் தொடங்கினான். அவன் பதுமகோமலையை மணந்து பல மகன்களைப் பெற்றான். கடலில் உருவாக்கப்பட்ட வீரமகேந்திரம் என்ற நகரம் அசுரர்களின் தலைநகரானது. தேவர்களை தொந்தரவு செய்யத் தொடங்கினான். தலைவரான இந்திரனைச் சிறையிலடைத்தான், இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரும்பினான். சிவன் மகனான முருகனின் உதவியை இந்திரன் நாட. முருகன் தனது தூதரான வீரவகுத்தேவரை அரக்கனிடம் அனுப்ப, அவன் அசையாமலிருந்தான். திருச்செந்தூரில் ஒரு கடும் போர் நடந்தது, அங்கு முருகன் சூரபத்மனின் அனைத்து மகன்களையும் கொன்ற நிலையில் சூரபத்மன் கடலுக்கு அடியில் ஒளிந்தான். முருகன் அசுரனை இரண்டு துண்டுகளாகப் பிரித்தான், அவைகளை மயிலாவும் சேவலாகவும் மாறி முருகனிடம் தஞ்சமடைந்த சூரபத்மனை வதம் செய்த நாள், முருகன் கோவில்களிலும் ஸ்கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் , போர்த்துகீசியர்களுடனான போரில், 1646 ஆம் ஆண்டு முதல் 1648 ஆம் ...
வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்திய டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல் என வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோருக்கு, தற்காலிகத் தகுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து, சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை எழும்பூர் இராஜரத்தினம் மைதானம் அருகே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் வெளிநாடுகள் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட. ஆர்ப்பாட்டம் மருத்துவ மாணவர்கள் சங்க வெளிநாடு பிரிவு நிர்வாகி வசந்த் பிலிப்ஸ் அபிஷேக் என்பவர் தெரிவித்ததாவது ஒவ்வொராண்டும் சராசரியாக, 1,400 மாணவர்கள், வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து தமிழ்நாடு திரும்புகிறவர்கள் இந்தியாவில் தேர்வு எழுதி தகுதி பெற்றதும், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிங் சார்பில், தற்காலிகத் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் இதன் பிறகே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் தடையில்லாச் சான்று பெற்று, மருத்துவமனைகளில் ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியும். மேலும், நிரந்தர டாக்டராகவும் இந்திய மருத்துவக் கவுன்சில்...