வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார், 1971- ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உயர் நீதிமன்றம் மீண்டும் கொண்டு வந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த சூழலில், தகுதி அடிப்படையிலேயே அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரத்துடன் ஆட்சியிலிருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை, சில வாரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வீழ்த்தியது. பிரதமர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால், தனி விமானத்தில் பயணித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா.மாணவர் போராட்டங்களின் போது, அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் கூறி, ...
மத்திய மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட வேண்டும். அதன்பிறகு தான் தேசியக்கீதம் பாட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் ‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு. தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நடத்திவைத்த முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா மற்றும் சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும், அதன்பிறகு தேசிய கீதமும், பிறகு தமிழ் தாய் வாழ்த்தும் முறையாகப் பாடல்கள் இசைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்', தேசிய கீதம் மற்றும் மாநில மொழிப்பாடல்கள் பாடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலங்...