முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

லிட்டில் ஹார்ட் கிட்ஸ் ஸ்கூல் இணைந்த தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரித் திறப்பு விழா

லிட்டில் ஹார்ட் கிட்ஸ் ஸ்கூல் இணைந்த தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியின் பிரம்மாண்டத் திறப்பு விழாவும் மற்றும்  மிகுந்த மங்களகரமான கலாச்சாரப் போட்டிகளும்  21 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2026, அன்று காலை 10:30 மணிக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி,பெரியார் நகர் 9 வது வீதி (பராமா காலனி எதிர் ) தமிழ்நாடு கேட்டரிங் கல்லூரி வளாகத்தில் நடந்ததில்  சிறப்பு அழைப்பாளர்களாக டாகடர் கே.சுவாதி கல்வி நிறுவன அறக்கட்டளையின் இயக்குனர் பேராசிரியர் டாக்டர்.எஸ். மோகன் ,அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர், பேராசிரியர் டாக்டர்.எஸ். சுப்பையா, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் சின்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர்.சி.சேகர்,  தமிழ்நாடு உள்ளாட்சித் தளத் தணிக்கைத் துறை இணை இயக்குனர் ஆர்.பாண்டியன், காரைக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளை,  எம். ராதாகிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னால் ஆடசிமனறக்குழு உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் முன்னாள் துணை ஆணையர் டாக்டர் எம். ராஜேஸ்வ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் இறுதிப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் (6.41 Cr),74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி  மொத்த ஆண் வாக்காளர்கள் -277,38,925 மற்றும் பெண் வாக்காளர்கள்-2,89,60,838  மற்றும் மூன்றாம் பாலினத்தவர் -7,617 இவை சேர்த்து மொத்தம்-5,67,07,380 ஆகும். 3.23.02.2026 நிலவரப்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 (ஆண்: 2,77,38,925; பெண்: 2,89,60,838; மூன்றாம் பாலினம்: 7,617;) ஆகும். இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத்திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+) 3.99 லட்சம். 4.பெண்கள் மேலும், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ; 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116). இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்...

சிறகுகள் விரித்துக் குதிரை பறக்கிறது, எதிர்முகாம் நோக்கி நகர்வின் காரணம் யார்?

"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை,  நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்..” நம்முடையது  மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுச்சி வரிகள் அது, நாம் மக்கள் சார்ந்த அதி முக்கியமான சிக்கலைப் பலர் இங்கு கவனிக்கவில்லை. நமது எளிய பிள்ளைகள் போதையிலும், குறுங்காட்சிகளிலும் மூழ்கியுள்ளனர். வடநாட்டவர் பசிக்கும், வாழ்விற்கும் இங்கு வேலைக்கு வருகிறார்கள்.         அவர்களால் நமக்கு பல சிக்கல்கள் எழுகிறது. உரிமைகள் பறிபோகிறது. நம் தாய் மொழி வீழ்கிறது. கவனிக்க வேண்டியது நமது பிள்ளைகளை. தற்போது பத்தாம் வகுப்பு CBSE  கேள்வித்தாள் கடினம் ஆனதில் தான் பல உண்மை மக்களுக்கு புரிய வேண்டும், பிளளைகளில் பலவகை அதில் கற்பூரப்புத்தி கொண்ட பிள்ளைக்கு தேர்வுகள் எளிது, அது அசைவம் உண்ணாது, ஆனால் பெட்ரொமாக்ஸ் லைட் புத்தி, டியூப் லைட் புத்தி கொண்ட அசைவம் உண்ணும் பிள்ளைகளிடம் கணக்குத் தேர்வு குறித்துக் கேளுங்களேன் அப்புறம் உண்மை தெரியும், இது யார் தவறு? இதற்கு யார் காரணம்,! ஆகவே சில படிநிலை மக்கள் பரிதவிப்பின் ஆழம் தெரிகிறது. செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அதிமுகவை உடைத்துச் சிதைத்தவர்...

குற்றவாளிகளுக்கு குடைபிடித்து சொத்துக் குவித்த ஊழல் காக்கி பெண் ஆய்வாளர் ராஜலக்ஷ்மி

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் இராஜலட்சுமி தனது அரசு பணியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான வழிகளில் தனது பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் அசையும் அசையாச் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். இது போன்ற சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் அரசு பணிசெய்யும் அலுவலர்கள் மீது. அரசு மற்றும் நீதித்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நம்பகமான தகவலின் அடிப்படையில், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்திற்கு விஜிலென்ஸ் அறிக்கை அனுப்பப்பட்டு, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தலைமையகத்தின் அனுமதி பெற்ற பிறகு இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட கே.ராஜலட்சுமி, காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார், துணைத் தடுப்புப் பிரிவு-1, கிரேட்டர் சென்னை காவல்துறை, பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகம், எழும்பூர், சென்னை  என்ற முகவரியில் ஊழல் தடுப்புச் சட்டம் 1988ன் 2(சி) ன் கீழ் இவர் அரசுப் பணியாளராவார். குற்றம் சாட்டப்பட்ட கே.ர...

காப்புரிமைச் சட்டத்தை மீறிய இசைஞானி இளையராஜா தடை விதித்த நீதிமன்றம்

திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் தான் அதன் உரிமையாளர் தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், அதன் உரிமை வாங்கிய நிலையில் '2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா சட்ட விரோதமாக வழங்கியுள்ளார்' என்கிறது.'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி திரைபடத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் திரைப்படத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்த நிறுவனம் கூறியது. பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இசைஞானி இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது. அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் க...