முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பாஸ்தி பகுதியில் டிஜிட்டல் நூலகம்

பாஸ்தி பகுதியில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு உத்தரப்பிரதேச மாநிலம் பாஸ்தி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தால் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவோருக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். பாஸ்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஹரிஷ் திவேதியின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்தப் பிரதமர் மோடி கூறியதாவது, "அருமையான முயற்சி! இளைஞர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவோருக்கும் பாஸ்தியில் திறக்கப்பட்ட இந்த டிஜிட்டல் (மின்னணு) நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
சமீபத்திய இடுகைகள்

டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

 ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதல் செய்வதற்கு ஐடெக்ஸ் நிறுவனம் மூலம் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் இந்தியாவில் உற்பத்தி என்ற உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக ஐடெக்ஸ் நிறுவனம் மூலம் 2-வது கொள்முதல் ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் 2023 ஜூன் 9 அன்று கையெழுத்திட்டது. பெங்களூரில் உள்ள ஆஸ்ட்ரோம் டெக் என்ற தனியார் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார்  முன்னிலையில்  ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘டேக்டிக்கல் லேன் ரேடியோ’ என்பது உயர்ந்த அலைவரிசையுடன்  நவீன தொழில்நுட்பம் கொண்ட கம்பியில்லா வானொலியாகும். இதன் மூலம்  நம்பகமான, பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் செய்யமுடியும். இதில் விரிவான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே கருவியை எந்தவித தடங்கலும் இல்லாமல் 48 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐடெக்ஸ் நிறுவனம் 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன

சர்வதேச ஆவணக் காப்பக தினத்தில் நமது மொழி, நமது பாரம்பரியம்" என்ற கண்காட்சி

சர்வதேச ஆவணக் காப்பக தினத்தையொட்டி புதுதில்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் "நமது மொழி, நமது பாரம்பரியம்" என்ற கண்காட்சியை மத்திய இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தொடங்கிவைத்தார் 75-வது சர்வதேச ஆவணக் காப்பக தினத்தை இந்திய தேசிய ஆவணக் காப்பகம் இன்று (09.06.2023) கொண்டாடியது. இதையொட்டி சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  "நமது மொழி, நமது பாரம்பரியம்" என்ற தலைப்பிலான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் தத்துவார்த்த முறைகள், ராமாயணம், ஸ்ரீமத் பகவத்கீதை போன்றவற்றின் தொன்மையான மூலப்படைப்புகள் ஆவணக் காப்பக களஞ்சியத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரபல ஆளுமைகளின் தனிப்பட்ட கையெழுத்து பிரதிகளும், இந்திய தேசிய  அருங்காட்சியகத்தின் நூலக சேகரிப்பிலிருந்து அரிய நூல்களும், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.  இந்தக் கண்காட்சியில் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய திரும

உணவு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ச்சி

உணவு உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது 2022-23-ல் இந்தியாவின் முதன்மையான பயிர் வகைகள் உற்பத்தியில் 3-வது முன்மதிப்பீட்டின்படி, உணவு தானிய உற்பத்தி 3,305.34 லட்சம் டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14-ல்  இருந்த 2,650.47 லட்சம் டன் என்பதோடு ஒப்பிடுகையில் இது 650 லட்சம் டன்  அதிகமாகும். கடந்த பல ஆண்டுகளாக அரிசி, கோதுமை, சோளம், பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்ற முக்கியமான உணவு தானியங்களின் உற்பத்தி அளவு குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவில் அதிகரித்து வந்துள்ளது. இந்த வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது. மோட்டா ரக தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பு நாட்டில் ஊட்டச்சத்து தானியங்களை அதிகரிக்கச் செய்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவசாயிகள் சார்பான அரசின் கொள்கைகள் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்தியாவில் வேளாண் துறை தொடர்ந்த வளர்ச்சியை அடைந்திருப்பதோடு வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி அடையும். இந்த மதிப்பீடுகள் இந்திய வேளாண் துறையி

1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த நான்கு முக்கிய முன்முயற்சி

கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், நாட்டில் உள்ள 1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த நான்கு முக்கிய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், நாட்டில் உள்ள 1,514 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த நான்கு முக்கிய முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் மேற்கொண்ட விரிவான ஆலோசனைகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது. வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் முந்தைய நிதியாண்டின் எண்ணிக்கையிலிருந்து 10 சதவீதம் வரை கூடுதலாக கிளைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வங்கிகளுக்கு இணையாக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் கடன் தொடர்பான தீர்வு நடைமுறைகளை மேற்கொள்ளலாம். முன்னுரிமைத்துறை கடன் இலக்குகளை அடைவதற்கான காலக்கெடுவை மேலும்

திரிபுரா சாலைவழி திட்டம்

பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் செயல்படும் இணைப்புத் திட்டமிடல் குழு அதன் 49வது அமர்வில் திரிபுரா சாலைவழி திட்டத்தை பரிந்துரைத்தது பிரதமரின் விரைவு சக்தி தேசிய திட்டத்தின் 49வது இணைப்பு திட்டமிடல் குழு கூட்டம் திரிபுராவில் சாலைவழித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. நேற்று புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தளவாடப் பிரிவு சிறப்புச் செயலர் திருமதி சுமிதா தவ்ரா தலைமை தாங்கினார். கோவாய்-தெலியமுரா-ஹரினாவில் 134.9 கிமீ நீளம் கொண்ட சாலைப் பகுதியை மேம்படுத்தவும், திரிபுராவில் NH-208 இன் நடைபாதையை விரிவுபடுத்தவும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2,486 கோடி ஆகும். இந்த சாலை கோவாய், கோமதி மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டங்கள் வழியாக கோவாய், தெலியமுரா, ட்விடு, அமர்பூர், கர்புக் மற்றும் திரிபுராவின் ஹரினா போன்ற இடங்களை இணைக்கிறது. இது அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், திரிபுராவில் பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்தத் திட்ட

மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு

தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவமான கொள்கை அரசு வேலைவாய்ப்பு நியமனங்களை முறைப்படுத்தியுள்ளது: மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தேசிய வேலைவாய்ப்புத் திருவிழா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவமான கொள்கை அரசு வேலைவாய்ப்பு நியமனங்களை முறைப்படுத்தியுள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறையின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து எடுத்துரைத்தார். அரசின் பெரும்பாலான நிர்வாக சீர்திருத்தங்கள் இளைஞர்களை மையப்படுத்தியவை என்று அவர் தெரிவித்தார். அரசின் வேலைவாய்ப்புத் திருவிழா இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்கும் மிகப் பெரிய முன்முயற்சி என்று அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் விரைவான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய மற்றும் பாரபட்சமற்ற பணி நியமன நடைமுறைகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முன்பு பணிநியமன நடைமுறைகளில் இருந்த சிக்கல்களை எடுத்துரைத்த