முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாட்டில் காவல் துணை ஆய்வாளர்கள் தேர்வில் ஊழல் முறைகேடுகள் தடுக்க ஓய்வு நீதிபதி நியமனம்

தமிழ்நாட்டில் காவல் துணை ஆய்வாளர்கள் தேர்வில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக நியமன தேர்வு பட்டியல் ரத்து. சென்னை உயர் நீதிமன்றம் மாநிலத்தில் 615 காவல் துணை ஆய்வாளர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்த பின் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டு அன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) தயாரித்த தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, முன்னாள் தலைமை நீதிபதி என். பால் வசந்தகுமார் மேற்பார்வையில் பட்டியலை மீண்டும் தயாரிக்க உத்தரவிட்டது. TNUSRB தயாரித்த தேர்வுப் பட்டியல், தகுதியுள்ள வேட்பாளர்களைக் கூட, திறந்த பிரிவின் கீழ் கருத்தில் கொள்ளாமல், அந்த சமூகங்களைச் சேர்ந்த பிற வேட்பாளர்கள் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறும் வகையில், அவர்களின் வகுப்புப் பிரிவுகளின் கீழ் கட்டுப்படுத்துவதன் மூலம், வகுப்புப் பிரிவுகளின் நோக்கத்தையே தோற்கடித்துவிட்டதென நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். பட்டியல் சாதி பிரிவின் கீழ் கருதப்பட்ட ஆறு வேட்பாளர்கள் முறையே 83, 83, 82.50, 81.50, 81.25 மற்றும் 81.25 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் என்றும், இது திறந்த பிரிவின் கீழ் கடைசி ஆ...
சமீபத்திய இடுகைகள்

நிறைவேற்று மனு மீதான விசாரணையை விரைவில் முடிக்க உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் சுற்றறிக்கை

சொத்துக்கள், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சிவில் வழக்குகளில் நீதிமன்றத்தின்  தீர்ப்புகளை அமல்படுத்தக் கோரும் (EP)  விசாரணை  கோரி தாக்கல் செய்யப்படும். மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சொத்துக்கள், வாகனங்கள் ஜப்தி செய்யப்படும். வழக்குகளில் தொடர்புடைய சொத்துக்களை மீட்டு சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும். இந்த EP. மனுவின் கீழ் நீண்ட காலமாக நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ளதாகவும், இதனால் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றவர்கள், அதன் பயனை அடைய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நிலுவையிலுள்ள அனைத்து EP மனுக்களை ஆறு  மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதில், ''பல்வேறு நீதிமன்றத்தில...

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா அமைச்சர் பொன்முடி நீக்கம் மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக நியமனம்

தமிழ்நாடு அமைச்சர் பொறுப்பிலிருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். அமைச்சர் பொறுப்பிலிருந்த பொன்முடியும் நீக்கம்  செய்யப்பட்டு, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழஞ அமைச்சர்கள் சிவசங்கர், ராஜ கண்ணப்பன், முத்துசாமி ஆகியோரிடம் மாற்றப்பட்டவர்களின் துறைகள் பகிர்ந்து தரப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்த மின்சார வாரியத் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல  மற்றொரு துறையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, குடியிருப்பு மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துச்சாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறை, பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல முன்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்து, நீக்கப்பட்ட மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு அமைச்சரவைக்கான மாற்றத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மனோ தங்கராஜுக்கு என்ன பொறுப்ப...

சிந்து VS சிம்லா ஒப்பந்தங்கள் ரத்து பலன் இந்தியாவுக்கே சேறும்

இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்ததால் தற்போது பாகிஸ்தானுக்குச் செல்லும் செனாப் நதி நீர் ஓட்டம் குறைந்து வருகிறது செனாப் நதி வேத காலத்திலிருந்தேபாரதமக்களுக்குத் தெரிந்திருக்கிறது.பொ.ஊ.மு. 325 ஆம் ஆண்டில் கிரேக்க மகா அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரியா நகரத்தை சிந்துவின் (இன்றைய உக்சு செரீப் அல்லது மிதன்கோட் அல்லது பாகிஸ்த்தானில் சச்சரன்) சங்கமத்தில் நிறுவியதாகக் கூறப்படுகிறது. சிந்து மற்றும் பஞ்சாப் நதிகளின் ஒருங்கிணைந்த நீரோடை தற்போது பஞ்சநாடு நதி என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் ஜீலம் நதியில் முன்னறிவிப்பின்றி அதிகளவு நீரை திறந்து விட்டு பாக்கிஸ்தான் நாட்டிற்குள் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. Water war துவங்கியது. "1960 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மூலோபாய தவறுகளில் ஒன்றாகும்" என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மேல் நதிக்கரைப் பகுதியில் இந்தியாவ...

தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் உத்யோக் விகாஸ் விருதைப் பெற்றது.

தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC) உத்யோக் விகாஸ் விருதைப் பெற்றது. பாலக்காடு தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி கேரளாவின் தொழில்துறை நிலப்பரப்பை மறுவடிவமைக்கும்: மத்திய கனரக தொழில்கள், பொது நிறுவனங்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் ஸ்ரீ பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா இந்தியா முழுவதும் பசுமை தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கேரள மாநிலத்தில் முன்னணி செய்தி நாளிதழான ஜன்மபூமி டெய்லி ஏற்பாடு செய்த உத்யோக் விகாஸ் நிகழ்வின் போது, ​​தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC) உத்யோக் விகாஸ் விருதைப் பெற்றது. இந்த நிகழ்வில் கனரக தொழில்கள், பொது நிறுவனங்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் ஸ்ரீ பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா கலந்து கொண்டார். இந்தியா முழுவதும் அதிநவீன பசுமைத் தொழில்துறை ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதற்கான மத்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார். தனது உரையின் போது, ​​பாலக்காட்டில் உள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி கிளஸ்டரின் (IMC) மாற்றத்திற்கான திறனைப் பாராட்டிய ஸ்ரீ வர்மா, இந்த திட்டம் கேரளா மற்றும் நாட்டின் பரந்த தெற்குப் ப...

வெளிச்சத்திற்கு வரும் இருட்டுக்கடை விவகாரம்: இறுதியில் அல்வா யாருக்கு?

வெளிச்சத்திற்கு வரும் இருட்டுக்கடை விவகாரம்: இறுதியில் அல்வா யாருக்கு? திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்பதில், கடையின் உரிமையாளரெனக் கருதப்படும் மூன்றாம் தலைமுறை கவிதாவின் சகோதரர் நயன் சிங், சார்பில் இன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் என்பவர் இருட்டுக்கடை நிறுவனம் தனக்குத் தான் சொந்தமென நாளிதழ்களில் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் முன் வரலாறு இது :-  தென்காசி - புளியங்குடி சாலையிலுள்ள சொக்கம்பட்டி சுதந்திரம் அடையும் முன் சமஸ்தான ஜமீனாக இருந்தது. அதிலிருந்த பல குதிரைகளுக்கு பராமரிக்கும் வேலை மற்றும் நல்ல தரமான உணவளிக்க வட இந்தியாவில் ஒட்டகம் மற்றும் குதிரை மேய்த்த அனுபவஸ்தவர் சிலர் வந்தனர். அவர்களுடைய பராமரிப்பில் இந்த ஜமீனிலிருந்த குதிரைகள் நன்கு போஷாக்குடன் வளர்ந்தன. அவர்கள் குதிரைகளுக்கு அளித்த உணவுகளில் ஒன்றுதான் இந்த சொக்கம்பட்டி அல்வா. காலப்போக்கில் அந்த ஜமீன் ஆட்சி நிர்வாகம் 1952 ஆம் ஆண்டில்  முடிவடைந்தவுடன் அங்கு வேலை செய்தவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. அவர்கள் திருநெல...

அரசு பணியாளர்களுக்கான புதிய பணி நடைமுறை விதி திருத்தம் குறித்து அரசாணை

 தமிழ்நாடு அரசின் 26.3.2025 தேதியிட்ட அரசாணையில்,   அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு அலுவலர்கள் ஆகிய மக்கள் பணியாளர்கள் எழுதும் புத்தகங்களில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இருத்தல் கூடாது. மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ கூடாது.  இதற்கான சுய அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.   அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. பதிப்பகத்தாரிடமிருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அரசின் அனுமதி பெறவேண்டும்.  அரசு ஊழியர்களின் புத்தகங்கள்  சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.  இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ...