முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

காவல்துறை சித்ரவதை படுகொலை குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான வினாக்கள் எழுப்பிய நிலையில் சிபிசிஐடி விசாரணை

எந்த வழக்கிலும் காவல் துறை அடித்து விசாரிப்பது என்கிற போக்கும் உடனே நீதி வேண்டும் என்கிற போக்கும் மாற வேண்டும் ; நமது எதிரியாகவே இருந்தாலும் அடித்து விசாரிப்பதை ஆதரிக்கக் கூடாது.  போலீஸ் சித்திரவதையில் செய்யாத  குற்றத்தை செய்ததாக ஒத்துக் கொள்ள வைப்பது கொடூரமானது. இறந்து போனதாகக் கருதப்பட்ட பாண்டியம்மாள் உயிரோடு வந்த கதை நாம் அறிந்தது தான்.இதே காவல் நிலையத்தில் கடந்த காலத்தில் வெள்ளைக் கண்ணு மகன் ஜெகன் என்ற நபர் இதேபோல் கொல்லப்பட்ட சம்பவம் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய வரலாறு உண்டு"மக்களிடம் ஆத்திரமாகவும், கோபத்துடனும் நடந்துகொள்ளும் இந்த காவல்துறை தான், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் அமைதி காத்து வருகின்றனர். அதிகார திமிரும், தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தைரியமும்தான் காவல்துறையின் குற்ற நடவடிக்கைகள் பெருகக் காரணம்."- என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கேள்விதிருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கொலை : சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை கிடைக...
சமீபத்திய இடுகைகள்

நாடு தழுவிய அளவில் உள்நாட்டு செல்போன் ஒளிபரப்பு அமைப்பின் சோதனை

இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது எச்சரிக்கைகளை விரைவாகப் பரப்புவதை உறுதி செய்வதற்காக, நாடு தழுவிய அளவில் உள்நாட்டு செல்போன் ஒளிபரப்பு அமைப்பின் சோதனை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் சோதனைச் செய்திகளை மொபைல் போன்களில் பெறலாம்; கணினி சரிபார்ப்பு கட்டத்தின் போது பெறுநர்களிடமிருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை C-DOT-வளர்ந்த அமைப்பு இப்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது; பேரழிவுகள் மற்றும் வானிலை நிகழ்வுகள் குறித்து 19+ இந்திய மொழிகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறை (DoT), குடிமக்களுக்கு சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் மொபைல் மூலம் இயக்கப்படும் பேரிடர் தொடர்பு அமைப்புகளை தீவிரமாக மேம்படுத்தி வருகிறது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) பரிந்துரைத்த பொதுவான எச்சரிக்கை நெறிமுறையை (CAP) அடிப்படையாகக் கொண்ட, தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) உருவாக்கிய ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப...

இரயில் கட்டணம் உயர்வு நாளை முதல்

இரயில்வே அமைச்சகம்  ரயில்களில் கட்டண உயர்வு நாளை (01.07.2025) முதல்  அமலுக்கு வருவதாக மத்திய ரயில்வே துறை  தகவல் தெரிவித்துள்ளது. அதாவது  ஏசி மற்றும் ஏசி வசதி அல்லாத ரயில்களுக்கான கட்டண உயர்வு என்பது  சுமார் அரை பைசா முதல் இரண்டு பைசா வரையிலும் இருக்கும் என்று  மத்திய ரயில்வே வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஏசி வசதி அல்லாத இரண்டாம் வகுப்பு ரயிலைப் பொறுத்தவரையில் கிலோ மீட்டர் வாரியாக கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. அதன்படி 500 கிலோமீட்டர் வரை எந்த ஒரு கட்டண உயர்வும் இல்லை. 501 கிலோமீட்டர் முதல் ௧௫௦௦ கிலோமீட்டர் வரை ரூ. 5 வரையிலான கட்டண உயர்வை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல 1501 முதல் 2500 கிலோமீட்டர் வரை ரூ. 10 கட்டணமும், 2501 கிலோமீட்டர் முதல் 3000 கிலோமீட்டர் வரை  ரூ. 15 வரையிலும் கட்டண உயர்வை  மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் முதல் வகுப்பைப் பொறுத்தவரையில் ஏசி ரயில்களில் கிலோமீட்டருக்கு அரை பைசா வரை கட்டண உயர்வு என்பதுஅதிகரித்துள்ளது.மெயில் மற்றும் ...

மேலூர் வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்ட விசிக கடையடைத்து நடந்த போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மளிகை கடையில்  அப் பகுதிக்கு திருமாவளவன் வருகை முன்னிட்டு கூடிய கூட்டம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வணிகர்கள் சங்கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட நிலையில் பரபரப்பானது. பென்னிகுயிக் பேருந்து நிலையம் அருகில் உள்ள மளிகை கடையில், சிலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துண்டறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்து பணம் கேட்டுள்ளனர். குறைந்த பணம் கொடுத்த காரணத்தினால், கடை மற்றும் அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இரண்டு தரப்பிலும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் மாமூல் கேட்ட நபர்கள் மீது காவல்துறையினர் கைது செய்ய வில்லை என வணிகர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மேலும், ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் எனவும் வணிகர் சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்து ஆர்ஜித விலை நிர்ணயித்து அரசிதழ் வெளியீடு.

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்து ஆர்ஜித விலை நிர்ணயித்து அரசிதழ் வெளியீடு. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெறுகிறது. பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில்  மொத்தமாக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிற நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டதன்படி மொத்தம் 3331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூபாய்.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய்.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட விலையின்படி கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு தமிழர்கள் தான் விளக்கம் தரவேண்டிய ஏஎஸ்ஐ கருத்துத் தேவை

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்து முகவடிவமைப்பை இங்கிலாந்து பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள நிலையில் மத்திய அரசின் தொல்லியல் துறை கீழடி குறித்து ஆய்வறிக்கையை வெளியிடுமா என தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார் அவரது எக்ஸ்வலைதளப் பக்கத்தில் : "கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி!" என  கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டு 10ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்தன. அதன் மூலம் கீழடியில் நகர...