இணையதள மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 205 பேர் கைது பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 205 சைபர் குற்றவாளி களை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவேற்ற https://cybercrime.gov.in தளத்தில் பதிவான புகார்களை சென்னை காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு தீவிரமாக ஆய்வு செய்ததில், பணத்தாசை காட்டி பொது மக்களின் வங்கிக் கணக்குகளை பெறும் சைபர் குற்றவாளிகள், அவற்றை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்ததையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 6. மற்றும் 7-ஆம் தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு வங்கிகளில் செயல்பட்டு வந்த 310 'மியூல்' வங்கிக் கணக்குகள் (மோசடிக்கு பயன்படுத்தப்படும் வாடகைக் கணக்குகள்) கண்டறியப்பட்டன. அதன் மூலம் நடந்த பணப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், இணைய மோசடிகளுக்காகவே இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. சென்னை, கோயம்பத்த...
சேலத்தில் ராகினி என்ற பெண் மற்றும் அவரது கணவருடன் இணைந்து, பணத்தாசை பிடித்த பொதுமக்களிடம் ரூபாய் 800 கோடி வரை பெரும் பண மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரத்தின் முக்கியப் பின்னணிகள் குறித்துக் காண்போம் ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் ரூபாய் 8,000 வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இந்தத் தம்பதி முக்கியமாக உள்ளூர் தொழிலதிபர்களையும், பெரிய முதலீட்டாளர்களையும் மட்டுமே குறிவைத்து கச்சிதமாக இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளனர், நிறுவனத்திற்கு AF3, AF4 போன்ற சிறப்பு உரிமங்கள் (Licenses) வாங்குவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்றுள்ளனர். தற்போது இந்த மெகா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறையில் வழக்குப் பதியாமல் காலம் தாழ்த்தி வருவதாகலும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவின் (EOW) தலையீடு, மற்றும் PMLA சட்டம் மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் எதிர...