முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புகழ்பெற்ற வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

 கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற வில்லன் நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் (வயது 74) புற்றுநோய் காரணமாகக் காலமானார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றது தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்து திரைப் பயணத்தைத் தொடங்கினார். 'லகான்' படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி...
சமீபத்திய இடுகைகள்

சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அமைச்சர் ர. வினோத்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று 6.8.2026 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். ​மாநில சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு  அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டது.   மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூபாய் 14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  புதிய திட்டங்களாக  இயற்கை பேரிடர்களிலிருந்து விவசாயிகளின் கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் ரூபாய் 31 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்.    பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பதநீர் மற்றும் பனங்கருப்பட்டி போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கவும் ரூபாய் 16 கோடி நிதியில் ‘தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம்’ நிறுவப்படும். கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா உயர் மகசூல் கறவை மாடுக...

கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது NHAI நடவடிக்கை

கான்பூர் - லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை கான்பூர் - லக்னோ விரைவுச்சாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக, ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. திட்டத்தைச் செயல்படுத்திய 'பிஎன்சி இன்ஃப்ராடெக்' நிறுவனத்தை எதிர்கால ஏலங்களில் பங்கேற்கத் தடை விதிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், ரூ.3 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திட்ட மேற்பார்வையில் அலட்சியமாகச் செயல்பட்ட 3 முதன்மைப் பொறியாளர்கள் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய திட்ட இயக்குநர் முன்பணி புரிந்த  துறைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் மற்றும் தற்போதைய திட்ட இயக்குநர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஐஐடி கரக்பூர் பேராசிரியர் கே.எஸ். ரெட்டி தலைமையிலான குழு தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்புப் பணிகள் முடியும் வரை ச...

மத்திய அமைச்சரவைச் செயலாளரான டி.வி. சோமநாதன் பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு

மத்திய அமைச்சரவைச் செயலாளரான  டி.வி.  சோமநாதன் IAS பதவிக் காலத்தை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அமைச்சரவைச் செயலாளராக டி.வி. சோமநாதன் பணியாற்றுகிறார்.  இதேபோல சிக்கிம்  ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் மத்திய உள்துறைச் செயலாளராக பணியாற்றுகிறார். இவ்விரு அதிகாரிகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிற நிலையில், டி.வி.சோமநாதன், கோவிந்த் மோகன் இருவரின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தப் பதவி நீட்டிப்பு ஓராண்டு காலத்துக்கு அளிக்கப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக உயரிய நிர்வாகப் பதவியான மத்திய அமைச்சரவைச் செயலாளர் எனும் Cabinet Secretary யாகப் பணியாற்றும்  புகழ்பெற்ற IAS ஆவார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், 1987ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடியவிருந்த இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு 30 ஆகஸ்ட் 2027 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது.  இந்தியாவின் 33வது அமை...

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், சில ஆண்டு நிலையாணைகளில் திருத்தம்

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4)-இன் கீழ், மற்றும் 2022 முதல் 2025 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட நிலை ஆணைகள் மற்றும் 09.01.2026 தேதியிட்ட நிலை ஆணை எண். 7-ஐ ரத்து செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதன்மூலம்  உத்தரவிடுகிறார். தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35-இன் துணை விதி (4) என்பது, தமிழக அரசில் அதிகாரப் பகிர்வு (Delegation of Powers) மற்றும் கோப்புகள் கையாளப்படும் நிலைகளை முறைப்படுத்தும் ஒரு முக்கியமான சட்ட விதியாகும்.அண்மையில் (ஆகஸ்ட் 2026-இல்) இந்த விதியின் கீழ் வழங்கப்பட்ட நிலை ஆணைகளில் தமிழ்நாடு அரசு மிக முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இவ்விதி குறித்த முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:1. விதியின் முக்கிய நோக்கம்முதலமைச்சரின் பிரத்தியேக அதிகாரம்: இந்த விதியின் கீழ், மாநிலத்தின் மிக முக்கியமான நிர்வாக முடிவுகள், நியமனங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு முதலமைச்சரின் (Chief Minister) நேரடி ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நிலை ஆணைகள் (Standing Orders): முதலமைச்சர் அவ்வப்போது நிர்வாக வசதிக்காக எ...