முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நால்வரும் கூடுதலாகக் கைது

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை மரண வழக்கில், சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர், திருப்புவனம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரை சிறையில் அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. மடப்புரம் அஜித்குமார் படுகொலை மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4காவல்துறை அலுவலர்களைச் சிறையிலடைக்க உத்தரவு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் அதிகார வரம்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் சில காவல்துறை பணியாளர்கள் மீதான நீதித்துறையின் நடவடிக்கை தற்போது எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ‘தடயங்களை மறைத்தல்’ என்ற சாதாரணப் பிரிவின் கீழ் மூடி மறைக்க முயன்ற இந்த வழக்கினை, மதுரை மாவட்ட நீதிமன்றம் தற்போது ‘கொலை வழக்காக’ மாற்றியுள்ளது. இது லாக்-அப் மரணங்களை வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ சித்தரிக்க முயலும் பணி ச...
சமீபத்திய இடுகைகள்

இடைத்தேர்தல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதிதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிக்கு பானுமதி ஆகியோர் இந்த இரு தொகுதிகளின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வான மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அறிவிக்கப்பட்ட தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக அமமுக, புதிய நீதிக் கட்சி மற்றும் பாமக தவிர பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது. திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்புடன் புதிய லேட்பாளர்கள் மற்ற கட்சிகள் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இடைத்தேர்தல் தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு இடைத்தேர்தல் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களைக் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ச. ஜோசப் விஜய் இன்று 10 செப்டம்பர் 2026 அறிவித்துள்ளார். தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதி: கே. மரகதம் குமரவேல் (தவெக துணைப் பொதுச் செயலாளர்) தாராபுரம் (தனி) தொகுதி: பி. சத்தியபாமா (திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர்) இருவரும் தவெக தலைமையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய கூட்டணியில் இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள். பின் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதே தொகுதிகளில் தவெக சார்பில் மீண்டும் களம் கண்டுள்ளனர்.

சட்டம் நீதி மின்துறை அமைச்சர் கூற்று திமுக தலைவர் கைது MISA வுக்கா? இல்லை USHA வுக்கா? விவாதம் தீவிரம்!

திமுக தலைவர் கைது MISA வுக்கா? இல்லை USHA வுக்கா? சட்டம் நீதி மின்துறை அமைச்சர் CTR.நிர்மல் குமார் பேசிய கசமுசா விவாதம் உண்மை நிலை என்ன?வன்மத்தைக் காட்ட வீடியோ வெர்ஷன்.. விளக்குவதற்கு எக்ஸ் தளத்தில் லெட்டர்ஸ் வெர்ஷன்.    தமிழ்நாடு சட்டசபையில்  சட்டம் நீதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார், அவசரகால நிலை எனும் Emergency கால 'மிசா' (MISA) சட்டம் மற்றும் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது குறித்துப் பேசிய கருத்துக்களில் அவர் மிசா கைதி அல்ல என்ற வாதம்: அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட மிசா காலக்கட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டாரே தவிர, அவர் மிசா சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்படவில்லை, அதற்கான எந்தவொரு அரசுப் பதிவுகளோ அல்லது குறிப்புகளோ இல்லை. மேலும்  மிசா காலக்கட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்குகளிலும் பலர் கைது செய்யப்பட்டனர். மு.க.ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் தான் கைது செய்யப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளனவ...