முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பாஜகவிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் கட்சிக்கு இழப்பு தொண்டர்கள் வருத்தம்,

பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளரும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களின் பொறுப்பாளருமான முத்துப்பேட்டை கருப்பு முருகானந்தம் செயல்பட்டு வந்தார். சங்கப்பணி, கட்சிப்பணி என நாகபடடினம், திருவாரூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை என மணடலத்தின் பாஜகவை நீண்ட காலம் வழிநடத்தும் தலைவராகவே அகமுடையார் தேவர் சமூகத்தின் பாஜக முகமாக விளங்கினார் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் பெண் ஒருவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், தனது மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்துள்ளார். கட்சியில் ஏற்கனவே இருந்த ஆளுமை நிறைந்த ஒரு தலைவர் கரு. நாகராஜன் சிவகங்கை மாவட்டம் சென்னையில் வசித்தவர் இதே போல ஒரு குற்றச்சாட்டு காரணமாக வெளியறறப்பட்டு, தற்போது வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆகச் செயல்படுகிறார்,   தற்போது  அதே சமயம் ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம்

தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம்  தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு  தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்காக முதல் தவணையாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்கிறது அரசு  ஜூன் 22ஆம் தேதியிட்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கத் திட்டம்  தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் தாய்மார்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்  ஜூன்.மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் .28 ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 107 மையங்களில்  100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம்  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழ்நடு அரசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான டெண்டரை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே .செப்டம்பர் 10, 2026 ஆம் தேதியன்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பை வழங்கியது.  அரசு...

சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது, நடந்தது என்ன?

சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது,  நடந்தது என்ன? சிவகங்கை அருகே இரண்டு இளைஞர்களை விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கின் விவரங்கள் வருமாறு:  கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள்: தெய்வேந்திரன் (வயது 27): சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கோயமுத்தூரில் கார் வாடகைத் தொழில்  செய்து வந்தார். பூப்பாண்டி (வயது 25): சிவகங்கை மாவட்டம், சிறுவேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது நண்பர் தெய்வேந்திரன் சமீபத்தில் புதிய மாருதி எர்டிகா காரை வாங்கியிருந்தார். அதை சர்வீஸ் செய்துவிட்டு, நண்பர் பூப்பாண்டியுடன் சிவகங்கை - காளையார்கோவில் செல்லும் சாலையில் உள்ள பழமலைநகர் - கொடிக்காடு கண்மாய் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு மது குடித்துளளனர். அப்போது இருசக்கர வாகனங்களில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் இவர்களைச் சூழ்ந்தததும். ஆபத்தை உணர்ந்து இருவரும் கண்மாய்க்குள் ஓடினர். ஆனால், அந்தக் கும்பல் அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் தலை மற்றும...

சடடசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்

சடடசபையில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026, தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குதல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  அதே சமயம் தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. வழக்கு நீலிமன்றத்தில் உள்ளதால் இந்த நிலை  இது ...

மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடியில் வாகனக் கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம்

மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழிச்சாலையில் பிராமணம்பட்டி திறக்கப்படாத சுங்கச்சாவடியில்  வாகனக் கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம் துவக்கம் பட்டாக்குறிச்சி பேச்சில்லா கிராமம் நெல்மேனி அய்யனார் கோவில்  அருகில்            மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை 338  எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் திருப்பத்தூர் வெளிப்பகுதி வழியாகச செல்கிறது. ஆறு ஆண்டு கால திட்டப்பணிகள் பூர்த்தியடைந்த நிலையில் தற்போது வாகனங்கள் இந்த நான்குவழிச்சாலையில் செல்லத்துவங்கியுள்ளன. இந்த சாலையில் திருப்புத்தூரிலிருந்து 6 கி.மீ.,தூரத்தில் பிராமணம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இருபுறமும் தலா நான்கு வழிகளில் வாகனங்கள் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் இயங்கும் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் வந்து நின்றவுடன் திரையில் கடட்ணத்தொகை தெரிகிறது. தானாக கட்டணம் வசூலித்த பின்னர் வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இது போன்று இருபுறமும் தலா 3 வழிகளில் சென்சார் முறையில் தானியங்கியாக ஆட்கள் இல்லாமல் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு தணிக்கையாகிறத...