முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது, நடந்தது என்ன?

சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது,  நடந்தது என்ன? சிவகங்கை அருகே இரண்டு இளைஞர்களை விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கின் விவரங்கள் வருமாறு:  கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள்: தெய்வேந்திரன் (வயது 27): சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கோயமுத்தூரில் கார் வாடகைத் தொழில்  செய்து வந்தார். பூப்பாண்டி (வயது 25): சிவகங்கை மாவட்டம், சிறுவேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது நண்பர் தெய்வேந்திரன் சமீபத்தில் புதிய மாருதி எர்டிகா காரை வாங்கியிருந்தார். அதை சர்வீஸ் செய்துவிட்டு, நண்பர் பூப்பாண்டியுடன் சிவகங்கை - காளையார்கோவில் செல்லும் சாலையில் உள்ள பழமலைநகர் - கொடிக்காடு கண்மாய் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு மது குடித்துளளனர். அப்போது இருசக்கர வாகனங்களில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் இவர்களைச் சூழ்ந்தததும். ஆபத்தை உணர்ந்து இருவரும் கண்மாய்க்குள் ஓடினர். ஆனால், அந்தக் கும்பல் அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் தலை மற்றும...
சமீபத்திய இடுகைகள்

சடடசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்

சடடசபையில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026, தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குதல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.  அதே சமயம் தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. வழக்கு நீலிமன்றத்தில் உள்ளதால் இந்த நிலை  இது ...

மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடியில் வாகனக் கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம்

மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழிச்சாலையில் பிராமணம்பட்டி திறக்கப்படாத சுங்கச்சாவடியில்  வாகனக் கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம் துவக்கம் பட்டாக்குறிச்சி பேச்சில்லா கிராமம் நெல்மேனி அய்யனார் கோவில்  அருகில்            மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை 338  எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் திருப்பத்தூர் வெளிப்பகுதி வழியாகச செல்கிறது. ஆறு ஆண்டு கால திட்டப்பணிகள் பூர்த்தியடைந்த நிலையில் தற்போது வாகனங்கள் இந்த நான்குவழிச்சாலையில் செல்லத்துவங்கியுள்ளன. இந்த சாலையில் திருப்புத்தூரிலிருந்து 6 கி.மீ.,தூரத்தில் பிராமணம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இருபுறமும் தலா நான்கு வழிகளில் வாகனங்கள் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் இயங்கும் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் வந்து நின்றவுடன் திரையில் கடட்ணத்தொகை தெரிகிறது. தானாக கட்டணம் வசூலித்த பின்னர் வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இது போன்று இருபுறமும் தலா 3 வழிகளில் சென்சார் முறையில் தானியங்கியாக ஆட்கள் இல்லாமல் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு தணிக்கையாகிறத...

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலம்

அகிலம் முழுதும் பிரசித்தி பெற்ற மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் அழைப்பிதழ் விநியோகம் தொடங்கி பக்தர்களுக்கான அனுமதி வரை பல்வேறு விவகாரங்களில் பக்தர்கள் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக கும்பாபிஷேகத்தில் அரசியல் வி.ஐ.பி. கலாச்சாரம் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள்,  அலைக்கழிக்கப்பட்ட விவகாரம் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்ததும், புனித நீருக்கு பதிலாகக் குடிநீரைக் காவலர்கள் மூலம் தெளித்தது பாதைகளை முழுமையாக அடைத்தது, அனுமதிச்சீட்டுகளை கட்சிக்காரர்களுக்கு அதிகமாக வழங்கியது ஆன்மீக அரசியல் கட்சியின் தலைவர்கள் உதாசீனப் படுத்திய நிகழ்வு மற்றும் ஆன்மீக நம்பிக்கை இல்லாத பல நாத்தீகவாதிகளை அனுமதித்தது, கோவி அறங்காவலர்களை புறக்கணித்தது என அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இது குறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பதிவில், இந்தக் குளறுபடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசே முக்கியக் கார...

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார்

டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உசசநீதிமன்னத்தின் வழக்கறிஞருமான  முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஆவார். சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக  2026 செப்டம்பர் 17 ல் அவர் 79வது வயதில் காலமானார்,  1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழகப் பிரதிநிதியாக இரண்டு முறைகள் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். மத்திய இணை அமைச்சர்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசில், 2013 முதல் 2014 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக திறம்படச் செயல்பட்டார். நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாகவும் செயலாற்றியுள்ளார். அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வருவதற்கு காரணமாக ஆர்...

பள்ளிக்கல்வித் துறையில் திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கு சோதனையும் வழக்கும்

திமுக அரசின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடக்கும் போதே மத்தியக் குற்றப் பிரிவுக் காவல்துறை அறிக்கையில் சொல்லப்படுவது யாதெனில் “தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu- இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையாளரிடம் அளித்த புகாரில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ததில் தொடர்புடைய P.T.அரசகுமார் என்ற நபரை 27.06.2026 ஆம் தேதியன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு, பின் குண்டர் தடுப்புச் சட்டக் காவலில் வைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு, இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு, மாநில...

நடிகர் விஜய் சேதுபதியின் விமர்சனம் அரசியல் சினிமா எனும் இரட்டை வேடம்

சமீப காலத்தில் மக்களின் கலாச்சார பன்பாடடுக்கு கேடான பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவாய் ஈட்டும் நடிகர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடையே பேசும்போது, "நாற்காலி என்பது எல்லார் வீட்டிலேயும் இருக்கும், அது கிடைக்கும் போது அதிகாரம் வரும், அதுதான் போதை" என்றார் அதற்கு முன் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட உணவகம் அல்லது கஃபே (Café) திறப்பு விழாவின் போது விஜய் சேதுபதி, போதைப்பொருள் குற்ற வழக்கு தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும்,  இயக்குனர் அமீர் மூவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட பழைய காணொளிக்காட்சி மற்றும் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பகிரப்படுகின்றன. திரைப்படத் தொடர்பு: இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான 'இறைவன் மிகப்பெரியன்' திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்தார். இந்தத் திரைப்படத்தின் மற்றும் உணவகக் கூட்டாண்மை வணிகத்தின் அடிப்படையில் அமீருக்கும் ஜாபர் சாதிக்குக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட  நிலையில் ஜாபர் சாதிக் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானதை அடுத்து, அவருடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் சமூக வல...