முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வனத்துறைச் சட்டத்திற்கு எதிராக தேனி மாவட்டம், மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராம மக்கள் போராட்டம்

தேனி மாவட்டம், மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் வசித்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக,  7 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்  ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்புக்காடு காப்பகம் (Reserve forest)  காரணம் காட்டி அப்பகுதியில் வசிக்கும் மக்களை சட்டப்படி வெளியேற்ற உத்தரவிடப்பட்டது .வருஷநாடு மற்றும் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4,011 குடும்பங்களுக்கு வெளியேற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.  மக்களின் கோரிக்கையில் மத்திய அரசின் மக்களை வெளியேற்றும் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எனவும் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act, 2006)-ன் கீழ் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூர்வ உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் தமி...
சமீபத்திய இடுகைகள்

பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் மற்றொரு நபர் ஐசியுவில்

பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் . பழனி துறவி பெயரில் உள்ள மடத்தின் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை  திமுக ஆட்சிகாலத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நிதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக் பணியில் இருந்தவராவார், தற்போது பழனியில் ரூபாய் .100 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்தில் நடந்த மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்த காவல் முடிந்து சிறைக்கு திரும்பிய சில மணிநேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மரணம் நிகழ்ந்து அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளை மடத்திற்குச் சொந்தமான ரூபாய் .100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (வயது 65), மதுரை மத்திய சிறையில் நேற்று ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி ...

ரூபாய் .50,000 லஞ்சம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது

ரூபாய் .50,000 லஞ்சம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது  சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக, ரூபாய் .50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (RDO) சரவண பெருமாள் பணிபுரிந்து வருகிறார். சவுடு மண் எடுப்பதற்கு  வருவாய் கோட்டாட்சியர் தான் முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அனுமதி கோரி மனுச் செய்தவவரிடம், ரூபாய் .50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சரவண பெருமாள் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர், இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இன்று காலை அவர்கள் அறிவுறுத்தலின்படி மனுதாரர் அரசு சாட்சியுடன் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் .50 ஆயிரம் பணத்தைக் கொண்டு சென்று கொடுத்தார். அதை கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த கோட்டாட்சியரின் அரசு ஓட்டுந...

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

அனைத்து மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான மாநில அளவில் அனைத்​துக் கட்​சிகளின் நாடளுமன்ற உறுப்பினர்கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் முதல்​வர் சி. ஜோசப் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று நடை​பெற்றது  கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்த நிலையில், “அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என திமுக நிபந்தனை விதித்தது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடூ அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை. நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக-...

FCRA 2026 திருத்த மசோதா முறைகேடு தடுக்கும்

FCRA 2026 திருத்த மசோதாவின் மூலம், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நிதி கண்காணிப்பு மேலும் வலுவடைகிறது! வெளிப்படைத்தன்மை: வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதிகள் எங்கு, எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் துல்லியமாகப் பராமரிக்க உதவுகிறது.பாதுகாப்பு: நாட்டின் இறையாண்மை மற்றும் பொது அமைதிக்கு எதிராக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது.சட்டப்பூர்வ அனுமதி: சமூக, கல்வி, மத மற்றும் கலாச்சாரப் பணிகளுக்குத் தகுதியான தொண்டு நிறுவனங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டு உதவியைப் பெற வழிவகை செய்கிறது.கணக்கீட்டு முறை: ஆண்டுதோறும் வரவு-செலவு கணக்குகளை அரசிடம் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்குவதன் மூலம் முறைகேடுகளைத் தவிர்க்கிறது.வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (FCRA) மற்றும் அதில் கொண்டு வரப்படும் புதிய சட்டத்திருத்தங்களை முக்கியமாக அரசியல் எதிர்க்கட்சிகள், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGOs), மற்றும் சிறுபான்மையின மத அமைப்புகள் எதிர்க்கின்றனர்.இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் அவர்களின் முதன்மையான வாதங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:1. அர...

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 15 நீதிபதிகள் நியமனம்,  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்காக உச்சநீதிமன்ற கொலீஜியம் 15 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை வெளியிட்டுள்ளதில் வழக்கறிஞர்கள் பிரிவிலிருந்து கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னீஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன், ரவிக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன் மற்றும் எல்லப்பன் மனோகரன் ஆகிய 8 பேர் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதித்துறை அதிகாரிகள் பிரிவில்இருந்து முனைவர் பி. முருகன், எம். டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுசாமி மற்றும் என். குணசேகரன் ஆகிய 7 பேர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மொத்தம் 15 பேர் புதிய நீதிபதிகளாக பதவியேற்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது

தேசிய12 வது கைத்தறி தினம்

தேசத்தின் உயிர்நாடி விவசாயம்  அடுத்தபடியாக நெசவு மானம் காக்கும் மாண்பு கொண்ட  கைத்தறித் தொழிலையும், நெசவாளர் பெருமக்களின் உழைப்பையும் போற்றும் வகையில்.  1905 ஆம் ஆண்டு துவங்கிய சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சியாக,  2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 12 ஆவது தேசிய கைத்தறி தினம் இன்று   "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும் நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு"...... இதன் .விளக்கம்: "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும்" – நெசவு செய்யும்போது தறியின் மிதிக்கட்டையை அதாவது பெடலை கால்களால் மாறி மாறி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நெசவாளர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தத் தறியிலேயே அமர்ந்து கால்களால் மிதித்து மிதித்து, அந்த மரக்கட்டையே தேய்ந்து போயிருக்கும். காஞ்சிபுரம் சென்றால் கால் ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்பதன் அர்த்தமும் இதுதான், "நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு" – அந்த மிதிக்கட்டை சும்மா தேயவில்லை; தன் பிள்ளைகளை அல்லது சேய்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும், அவர்கள் பசி இல்லாமல், செழிப்பாக வளர வேண்டும் என்பதற்காக அந...