முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சிவகாசி செங்கமலபட்டியில் லைசென்ஸ் இல்லாத பட்டாசு ஆலை விபத்து நால்வர் பலி

நால்வர் பலியான சிவகாசி செங்கமலபட்டியில் சட்ட விரோத பட்டாசு ஆலை வெடிவிபத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா செங்கமலப்பட்டியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான வெடிவிபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இன்று காலை 8:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், அவரது மகன்கள் ராம்பிரகாஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமான அனுமதியின்றி மறைமுகமாக ஒரு தகர ஷெட் அமைத்து பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளனர், இன்று காலையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாஸ்பரஸ், கந்தகம்  உள்ளிட்ட வேதிப்பொருட்களின் இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது வெடி விபத்தின் வீரியம் மிகவும் அதிகமாக இருந்ததால், பட்டாசு தயாரித்த அந்த தகரக் கொட்டகை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது, விபத்தில் சிக்கி இராம்பிரகாஷ் (வயது32), இன்னாசி முத்து (வயது 44), ஐயப்பராஜ் (வயது 37) மற்றும் பாண்டித்துரை (வயது 35) ஆகிய நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர...
சமீபத்திய இடுகைகள்

மத்தியக் கல்வி அமைச்சராகக் (கூடுதல் பொறுப்பு) ஏற்றார் பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி

பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி  தற்போதைய இந்திய மத்திய அமைச்சரவையில் மத்தியக் கல்வி அமைச்சராகக் (கூடுதல் பொறுப்பு) ஏற்றார்,  நீட்-யுஜி தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து தர்மேந்திரப் பிரதான் பதவியை ராஜினாமா செய்ததால், நேற்று இவருக்கு இக்கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பாக, இவர் வகித்து வந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராக கல்வித் துறைக்கு கூடுதலாகப் தற்போது பொறுப்பு வகிக்கிறார் கர்நாடகாவின் தார்வாட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை  உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலம்  விஜயபுரால் 27 நவம்பர் 1962 ல் பிறந்து, ஹூப்பள்ளியில் உள்ள கே.எஸ். கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே இராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில்  இணைந்து பணியாற்றிய பிரகலாத் ஜோஷி தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் கர்நாடகாவின் ஹூப்ளி இத்கா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தைப் பெற்றார். நாடாளு...

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குடியரசுத் தலைவர் ஏற்பு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி அதை குடியரசுத் தலைவர் மாளிகை ஏற்றுக்கொண்டது இந்திய அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த நீட் உள்ளிட்ட தேர்வு கசிவு ஊழல்களுக்கு பொறுப்பேற்று அவர் விலகியிருப்பது, பாஜக அரசின் கல்வித் துறை நிர்வாகத்தின் முழுமையான தோல்வியை வெளிச்சமிட்டுக் காட்டும் நிகழ்வு பாஜக அரசுக்கு ஒரு பின்னடைவு அதில் சந்தேகமில்லை. பல நாட்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்த மாணவர் போராட்டங்கள், கரப்பான் பூச்சி ஜனதா போன்ற சில இயக்கங்களின் உறுதி நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளின் பாஜக எதிர் நிலை ஆதரவு ஆகியவை இறுதியில் அரசை பின் வைத்துள்ளன. “தேசவிரோத சக்திகள்” என முத்திரை குத்தும் அரசின் முயற்சிகள் தோற்றுப்போனதோடு, மாணவர்களின் உண்மையான கோபத்தை அடக்க முடியவில்லை. தர்மேந்திரப் பிரதான் ஒரு அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தேர்வு அமைப்புகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான குளறுபடிகள், லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைப் பாதித்ததற்கு பொறுப்பேற்காமல் நீண்ட நாட்கள் இழுத்தடித்த அரசின் அணுகுமுற...

கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும். கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், ரயில்வேயின் தற்போதைய வழித்தடத்தை 46 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும். ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். பல்லாரிக் கோட்டை, குமாரசாமி ஆலயம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.  அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் இரும்புத்தாது, நிலக்கரி, எஃகு, உரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாகும். தற்போதைய விரிவாக்கப் பணிகளின் மூலம் 16.22...

26 நாட்களுக்குப் பிறகு சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்து வைத்த மத்திய அமைச்சர்

சமூக ஆர்வலராக சில அரசியல் குழுவின் மூலம் அறியப்படும் சோனம் வாங்சுக் 26 நாட்களுக்குப் பிறகு அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த பாஜகவின் தலைவர்கள் முன்னிலையில் அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்," என வாங்சுக்  குறிப்பிட்டுள்ளார். பல நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ளார். "மிக விரைவில் ஒரு தனி வீடியோவில் இந்த நிபந்தனைகள் குறித்து நான் விரிவாக விளக்குவேன். நீங்கள் எங்கும் எந்தவொரு வன்முறையும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என வாங்சுக் அதில் எழுதியுள்ளார்.சமூக விரோ...

மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்பு

மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்பு    ரவ்னீத் சிங் பிட்டு இந்தியாவில் மத்திய அமைச்சர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்தார். ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். இந்திய ஜனாதிபதி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தலில் இவரை முன்வைத்து களமிறங்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்ததை பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். ரவ்னீத் சிங் பிட்டு (ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம். தலைமை செயலாளர் சாய் குமார் இன்று பிறப்பித்த உத்தரவில், ”ஐஏஎஸ் விதிகள் 1954, விதி 4(2)-ன் கீழ், நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர்  மற்றும் ஆணையர் என்ற தற்காலிகப் பதவி ஒரு வருட காலத்திற்கு  அல்லது தேவை முடியும் வரை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் பதவியில் நியமிக்கப்படுகிறார்,  ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவியை, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையானதாக அரசு அறிவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து மத்திய அரசு பணிக்கு சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.