முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பச்சேரி சி.ஆர்.எஸ். உள்ளிட்ட பலர் தவெகவில் இணைப்பு விழா

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தவெக வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் ஏற்கனவே நல்ல பொறுப்பு அக்கட்சியில் வகித்து வந்த நிலையில் அதிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவது அதிகரிக்கும் நிலை, சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பக்கத்தில் ஆகஸ்ட் 2, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் ஙார்பில் பச்சேரி சி. ஆர். சுந்தர்ராஜன் ஏற்பாட்டில்  மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் மாநாடு போல நடைபெற்றது. சிவகங்கை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதகுபட்டியில் கனிமம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு  இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மேடையில் உரையாற்றியபோது, மதியம் உணவாக பிரியாணி வழங்கும் இடத்தில் கூடிய மக்கள் கூட்டம் அலைமோதியது சிவகங்கையில் முதலில் தவெக சார்பாக நடந்த பிரம்மாண்ட அரசியல் நகர்வு! தவெகவில் 10,000 பேரை இணைக்க ரூபாய் . 2 கோடி செலவில் பிரம்மாண்ட மேடை தமிழக வெற்றிக் கழகத்தின்  உட்கட்சி பலத்தையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் வகையில்,  பிரம்மாண...
சமீபத்திய இடுகைகள்

மாநிலப் பணிக்குத் திரும்பிய சிபிஐ இணை இயக்குனர்

மத்தியப் புலனாய்வுப் பிரிவான சிபிஐ-யில்  இணை இயக்குனராகப் பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்ணி (IPS:1998:TN), மே 25, 2026 அன்று மத்திய அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலுடன் முன்கூட்டியே  சொந்த மாநிலமான தமிழ்நாடு பணிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ காரணம் 'தனிப்பட்ட காரணங்கள்' (personal grounds) என்று கூறப்பட்டாலும், புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தனது நிர்வாகத்தை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது DVAC இயக்குநரான சி. மகேஸ்வரிக்கு பதிலாக, இவரை டி.வி.ஏ.சி இயக்குநராக நியமிக்க அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் குல்கர்ணி, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசில் கூடுதல் இயக்குநர்  பதவிக்கு தகுதி பெற்றவர். சிபிஐ-யில் இணை இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில், பஞ்சாயத்து ஒதுக்கீடு மற்றும் நிரவ் மோடி வழக்கு உள்ளிட்ட உயர்மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்த குழுவில் இருந்தவர். மேலும், 2024-ஆம் ஆண்டு கு...

தனியார் பள்ளி சங்கம் நடத்தி ஊழலில் சிக்கும் முன்னால் ஆட்சியாளர்கள்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்  நடத்தி, மாநிலம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகளிடம் மாவட்ட சங்கம் அமைத்து அரசு அங்கீகாரம் மற்றும் தடையின்மைச் சான்றுகள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில், அதன் தலைவர் பி.டி. குமார் என்ற அரசகுமாரை சமீபத்தில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினராரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது இந்த நிலையில், சென்னை காவல்துறையின் தீவிர விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்கள படி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் படை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையின் போது, அவர் வாங்கிய லஞ்சப் பணம் எங்கு சென்றது, யாருக்கெல்லாம் கைமாறியது என்பது குறித்த பல திடுக்கிடும் தகவல் மற்றும் ஆவணங்களும் கணக்கு விவரங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தர உயர்வு, மற்றும் DTCP/CMDA சான்றிதழ்கள் போன்ற சட்டப்பூர்வ அனும...

எத்தனால் கலந்த பெட்ரோல் பற்றிய உண்மைகள் குறித்து அரசு வெளியீடு

எத்தனால் கலந்த பெட்ரோல் பற்றிய உண்மைகள்: தவறான கருத்துக்களிலிருந்து உண்மைகளைப் பிரித்தல் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டம் தொடர்பான சில தவறான கூற்றுகள் சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டன. பின்வரும் புள்ளி வாரியான தெளிவுபடுத்தல்கள், அறிவியல் சரிபார்ப்பு, விரிவான கள அனுபவம் மற்றும் தொழில்துறை தரவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து, உண்மை நிலையை முன்வைக்கின்றன. உரிமைகோரல் 1: 2023க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 பெட்ரோலில் இயங்க முடியாது. E15-plus எரிபொருள் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது, E19-E20 எரிபொருள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த காலகட்டத்தில், பரவலான எஞ்சின் செயலிழப்பு அல்லது எத்தனால் கலவை காரணமாக வாகனம் பழுதடைந்தது பற்றிய சரிபார்க்கப்பட்ட செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. எத்தனால் கலவையானது இயந்திரங்கள் அல்லது எரிபொருள் அமைப்புகளுக்கு முறையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தால், அத்தகைய தோல்விகள் பெரிய அளவிலான உத்தரவாதக் கோரிக்கைகள், சேவை பிரச்சாரங்கள் மற்றும் பரவலான நுகர்வோர் புகார...

வண்டல் மண் எடுக்க 4 ஆயிரம் லஞ்சம் நீர்வளத்துறை ஆய்வாளர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டம் செல்லையா மகன் எட்வர்ட் (வயது 49). இவர் தனது விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்திலுள்ள மாங்குளத்திலிருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதுதொடர்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளரான லோகநாதன்(வயது 41) என்பவரை நேரில் அணுகிய போது, அவர் அனுமதி வழங்க ரூபாய் .4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட்,  அது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் மற்றும் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறி வைத்து பிடிக்கத் திட்டமிட்டு அதற்கு நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து எட்வர்டிடம் இருந்து அரசு சாட்சிகள் முன்னிலையில் ரூபாய் .4 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கிய லோகநாதனை ஊழல் தடுப்புக் க்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம்...

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நேற்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பரந்த அளவிலான கடல்சார் ஆற்றல் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும் நோக்கில், 2025-ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட நவீன காலச் சமுத்திர மந்தன் என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் நனவாக்குகிறது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டில் எண்ணெய் வளங்கள் ஆய்வு, உற்பத்தியை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல் ஆகியவ...

ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

சுதந்திர தினத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலையை பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது,மேலூர் - காரைக்குடி நான்கு வழிச் சாலை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு இடையேயான பயணம் எளிதாகும்.பயண விவரங்கள் மற்றும் பயன்கள்பயண நேரம்: தற்போதைய 1 மணி 15 நிமிடப் பயணம் சுமார் 40 நிமிடங்களாகக் குறையும்.சுங்கச்சாவடி: மேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் பிராமணபட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திட்டப் பகுதி: மேலூர் - திருப்பத்தூர் (27 கி.மீ) மற்றும் திருப்பத்தூர் - காரைக்குடி (19 கி.மீ) பிரிவுகளை உள்ளடக்கியது.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டு வரும் 46-கிமீ மேலூர்-காரைக்குடி நான்கு வழி புறவழிச்சாலை மார்ச் மாதம் 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது முடிந்தது இது தென் தமிழ்நாடு முழுவதும் மேம்பட்ட இணைப்பு மற்றும் விரைவான பயணத்தை உறுதியளிக்கிறது. 46-கிமீ மேலூர்-காரைக்குடி புறவழிச்சாலை இந்தி...