தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 30-07-2026) காலமானார். அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன. ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமுனா ராணி. வரதராஜுலு திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அக் காலத்திலேயே நடத்தி வந்துள்ளார். ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார். தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 1...
தில்லைக்கும், திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்த பெருமாள் பாண்டியன் மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் " கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப வெண்டிரை மகர வேலை கொடுபண்டியன் ஆயிரம் பணைபணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒரு பெருங்கடவுளும் வந்தினிதுறையும் பெருங்காவிரியிடை நிலத் திலங்கு திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலாபாரமேறிப்பொன்மாலையன்ன பொலிந்து தோன்றவும் பொன் வேய்ந்தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅல் உதய வெற்பெயவர்மன் திருவளர் குலமணிச் சிங்காசனமிசை மரகத மலையென மகிழ்ந்தின தேறிந்தரபாண்டியன்" பாண்டிய மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் பொது ஆண்டு 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடினான். மஹாராஜாதி இராஜ ஸ்ரீபரமேஷ்வரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைஉடையவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவனான மன்னன் பிற்காலப் பாண்...