முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு 3 ஆண்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை

திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு மூன்றேகால் ஆண்டுகள் சிறை தண்டனை திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்த எழும்பூர் நீதிமன்றம்  2023-ஆம் ஆண்டு ஆளுநர்-நடிகை குஷ்பூ பற்றி ஆபாசமாக, அவதூறாகப் பேசிய பேச்சுக்கு விசாரணை முடிவில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது . பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்வதென்றால் ஒரு மாத கால அவகாசம் என தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மாநில ஆளுநர் குறித்து அவதூறான கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாடு ஆளுநர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பா...
சமீபத்திய இடுகைகள்

வங்காள தேச BNP கட்சித் தலைவர் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

வங்காள தேசத்தில் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்ததில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி வந்தது. வங்க தேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 18 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நடந்தது. வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில், ஒரு த...

மகளிர் உரிமை தொகை வழங்கிய வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது

மகளிர் உரிமை தொகை  என்பதே தவறு அது எந்த உரிமை? அது யாருக்குள்ள உரிமை? இதில் உரிமை உள்ளவர்கள் யார்?, உரிமை இல்லாதவர்கள் யார்? எந்த அடிப்படையில் எதற்கான உரிமை என்பது குறித்து சரியான விளக்கம் இதுவரை இல்லை ஆனால் அது மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில்  திமுக அரசு குடும்ப அட்டையில் கணவர் இல்லாத அல்லது கணவரை குடும்மத் தலைவராக ஏற்காத அல்லது காட்டாத தங்களை மட்டும் முன் நிறுத்தி மாற்றம் செய்த பெண்களில் 60 சதவீதம் தவிர்த்து 40 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகையை வங்கியில் 5000 ரூபாய் செலுத்தி பெண்களின் உரிமைத்தொகை என்கிற பெயரில்  தங்களது ஓட்டு வங்கிக்கான ஒரு திட்டமிட்ட லஞ்சத்தைக் கொடுத்திருப்பது தான் மகளிர்உரிமைதொகை எனும் பெயரில்  திமுக அரசு குடும்ப அட்டைப் பெண்களில் 60 சதவீதம் தவிர்த்து 40 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே வங்கியில் 5000 ரூபாய் செலுத்தி பெண்களின் உரிமைத்தொகை என்கிற பெயரில்  தங்களது ஓட்டு வங்கிக்கான லஞ்சத்தைக் கொடுத்திருப்பது  மற்ற் உரிமை இல்லாத மகளிரை கொந்தளிக்க வைத்துள்ளது ஏனென்றால் இது அரசு பணம், நமக்குத் தெரிந்து ஒரு மாநகராட்சி மன்ற உறு...

அரசியலென்பது தற்போது தொழில் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

முன்னர் மண்டைவெல்லம் விற்ற சிலுவம்பாளையம் பழனிசாமிக்கு வேலை போட்டுக் கொடுத்ததாக அமைச்சரின் தாக்கு! காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொள்வார்  திமுக கூட்டணிக்கு கங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும், காங்கிரஸில் ஆளில்லை, நாம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்த முடியாது என திமுகவின் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியது தான் தற்போது பேசுபொருளாகிறது மேலும், மண்டைவெல்லம் விற்ற எடப்பாடி (சிலுவம்பாளையம்) பழனிசாமிக்கு நான் தான் பொதுபணித்துறை அமைச்சராக இருந்த போது வேலை போட்டுக் கொடுத்தது  எனப் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலை குனியாது எனும் தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்ததில் தமிழ்நாடு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஎஸ்.இராஜகண்ணப்பன் மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்த்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இராஜகண்ணப்பன் பேசுகையில்," மதுரை கிழக்குத் தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் திமுக வெற...

நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது

நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை அளந்து அத்துமால் செய்து தர அரசு கடடணம் போக ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய பறந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு ஊழல் தடுப்புக் காணிகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனா். காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாருக்குச சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு நில ஆர்ஜித நடவடிக்கை மூலம் வழங்க முடிவு செய்து அதற்கான இழப்பீடு பெற விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் நில எடுப்புப் பிரிவுக் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு தனக்கு ரூபாய்.1 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இந்தத் தொகையை லஞ்சமாகத் தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிபபுத் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகாா் செய்த நிலையில் அவர்கள் ஆலோசனைப்படி ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடைத் தெருவுக்கு வருமாறு க...