அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் இராகுல் நவீன் இன்று சென்னை வருகை தந்தார்.டில்லியிலிருந்து 3 நாள் பயணமாக வந்த இராகுல் நவீன், நிலுவையிலுள்ள நகராத வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழ்நாடு தொடர்பான தேக்கமான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை உயர் அலுவலர்களுடனும் மத்திய அரசு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழ்நாடு வருகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான ஊழல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது ஊழல் வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ஊழல் செய்து லஞ்சம் பெற்ற வழக்கு விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள்...
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், 2026 ஏப்ரல் மாதத்தில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை வெளியீடு, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போகும் எனத் தகவல் இது தொடர்பாக ஆலோசனை நடத்த, “தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் அலுவலர்கள் குழு, சென்னை வந்தது.தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளின் பதவிக்காலம், 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் மக்கள் புதிய அரசுகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஐந்து மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் வாயிலாக, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, 5 மாநிலங்களிலுள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 5 கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 714 ஐ.ஏ.எஸ்., கொண்ட தேர்தல் பணி அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்கு 233 ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், 497 செலவி...