முன்னர் மண்டைவெல்லம் விற்ற சிலுவம்பாளையம் பழனிசாமிக்கு வேலை போட்டுக் கொடுத்ததாக அமைச்சரின் தாக்கு! காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொள்வார் திமுக கூட்டணிக்கு கங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும், காங்கிரஸில் ஆளில்லை, நாம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்த முடியாது என திமுகவின் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியது தான் தற்போது பேசுபொருளாகிறது மேலும், மண்டைவெல்லம் விற்ற எடப்பாடி (சிலுவம்பாளையம்) பழனிசாமிக்கு நான் தான் பொதுபணித்துறை அமைச்சராக இருந்த போது வேலை போட்டுக் கொடுத்தது எனப் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலை குனியாது எனும் தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்ததில் தமிழ்நாடு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஎஸ்.இராஜகண்ணப்பன் மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்த்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இராஜகண்ணப்பன் பேசுகையில்," மதுரை கிழக்குத் தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் திமுக வெற...
நில அளவை அத்துமால் ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய நில அளவை ஆய்வாளா் கைது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை அளந்து அத்துமால் செய்து தர அரசு கடடணம் போக ரூபாய்.50,000 லஞ்சம் வாங்கிய பறந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு ஊழல் தடுப்புக் காணிகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனா். காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் குமாருக்குச சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு நில ஆர்ஜித நடவடிக்கை மூலம் வழங்க முடிவு செய்து அதற்கான இழப்பீடு பெற விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் நில எடுப்புப் பிரிவுக் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு தனக்கு ரூபாய்.1 லட்சம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இந்தத் தொகையை லஞ்சமாகத் தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிபபுத் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் புகாா் செய்த நிலையில் அவர்கள் ஆலோசனைப்படி ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடைத் தெருவுக்கு வருமாறு க...