முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பாண்டிச்சேரி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னாள் பாஜக வேட்பாளர்களாக அறிவிப்பு

பாண்டிச்சேரி முன்னாள் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னாள் பாஜக வேட்பாளர்களாக அறிவிப்பு  பாஜக போட்டியிடும் தொகுதிகளில் 9-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் படி, ஒரு முன்னாள் அமைச்சர் தவிர அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பாஜக மத்திய தேர்தல் குழு கட்சியின் தேசியத்தலைவர் நிதின் விபின் தலைமையில் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய தேர்தல் குழு அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றதில் பாண்டிச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான 9 தொகுதிகளின் வேட்பாளர்களை தலைமைப்பொறுப்பாளரும் பாஜக தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் வெளியிட்டார்.  அதன்படி :  மண்ணாடிப்பேட்டை அமைச்சர் நமச்சிவாயம்,     ஊசுடு- எம்எல்ஏ தீப்பாஞ்சான்,  காலாப்பேட்- எம்எல்ஏ கல்யாணசுந்தரம்,  இராஜ்பவன்- மாநிலத்தலைவர் ராமலிங்கம்,  முதலியார்பேட்டை அமைச்சர் ஜான்குமார்,  மணவெளி- சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,  திருநள்ளார்- எம்எல்ஏ ராஜசேகரன்,            நிரவி டிஆர்பட்ட...
சமீபத்திய இடுகைகள்

கொள்கை இழந்த தலைவர்களின் கூட்டணி அதிகாரத்தின் பலியாடுகள்

பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கட்சியும், காலஞ்செனற முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உயிர் தோழி வி. கே சசிகலா நடராஜன் தலைமையிலான புதிய கட்சியான அஇபுதமமுக கட்சியும் கூட்டணி, அரசியல் மாற்றத்தின் பெயரில் முன்வைக்கப்பட்டாலும், அதன் மையத்தில் தெளிவாக தெரியும் ஒன்றைப் பார்வை என்பது இது திட்டமிட்ட ஜாதி வாக்குப் பிரிப்பு அரசியல் முயற்சியாகவே பார்க்கலாம். குறிப்பாக வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோரில் சிலர் வாக்கு வங்கியின் திசையை உடைத்து, அந்த ஒருமைப்பாட்டைச் சிதைக்கின்ற நகர்வாகவே இந்தக் கூட்டணி வெளிப்படுகிறது. பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் 1989 முதல் நீண்ட காலமாக களத்திலிருந்து நேரடியாகவே அரசியல் செய்து வந்த தலைவர், முன்னால் முதல்வர்கள் காலஞ்சென்ற டாக்டர். எம்ஜிஆர், செல்வி ஜெ.ஜெயலலிதா, டாக்டர் மு.கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களை எதிர்த்தும், ஆதரித்தும் செயல்பட்டவர். அதே நேரத்தில், வி. கே.சசிகலா நடராஜன் செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பின்புலப் பொம்மையாக வைத்து நேரடி அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்காமல் கிச்சன் கேபினட் இன்கேமரா அரசியல் செய்த அரசியல் ஆளுமை; தமிழகத்து நடிகையானாலும் கர்நாடக அந்த...

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய முடியாது ஆனால் இடைக்காலம் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்,

முன்னாள் சிறப்பு டிஜிபி ரா ஜேஷ் தாஸுக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய முடியாது ஆனால் இடைக்காலம் நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்,   கடந்த அதிமுகவின் ஆட்சியில் காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ்.  இவர் பியூலா வெங்கடேசன் ஐஏஎஸ் முன்னாள் கணவர் கடந்த 2021ஆம் ஆண்டுபாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து வழக்கை விசாரித்த விழுப் புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ராஜேஷ் தாசுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.       (பணியில் இருந்தபோது) அதைதையடுத்து  உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கை விசா ரித்த சென்னை உயர்நீதி மன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாதென்றும் திட்டவட்டமாக தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில் மேற் கண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தர வுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்," இந்த விவகாரத் தில்உயர்நீத...

தேசிய பாதுகாப்பு பயிற்சி மற்றும் அங்கீகாரத்தை மேம்படுத்த முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) மற்றும் Sashastra Seema Bal (SSB) அகாடமி ஆகியவை தேசிய பாதுகாப்பு பயிற்சி மற்றும் அங்கீகாரத்தை மேம்படுத்தவும், தேசிய பாதுகாப்பு சிறப்பிற்கு வழிவகுக்கும் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. SSB அகாடமியில் நடத்தப்படும் பல்வேறு பயிற்சித் திட்டங்களுக்கு RRU கல்விசார் அங்கீகாரத்தை வழங்கும் ஒரு முறையான கட்டமைப்பை மூலோபாய கூட்டாண்மை நிறுவுகிறது. இந்த ஒத்துழைப்பு தேசிய பாதுகாப்பில் கல்வி ஆராய்ச்சிக்கும், எல்லைக் காவல் படைகளின் நடைமுறை, தரைத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழும் நிறுவப்பட்ட RRU இன் முதன்மை நோக்கம், தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் SSB நடத்தும் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகும். தொழில்முறை மேம்பாட்டின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதற்காக, RRU அதன் அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் புலம் சார்ந்த பட்டறைகள் மூலம் SSB பணியாளர்களுக்கு நேரடி பயிற்சியை வழங்கும். இந்த முன்முயற்சி SSBக்கான பயிற்சி ...

'பிரம்மம் 2026’ - வருமான வரிச் சட்டம், 2025 குறித்து வருமான வரித் துறையின் நாடு தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் ‘பிரம்மம் 2026’ - வருமான வரிச் சட்டம், 2025 குறித்து வருமான வரித் துறையின் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினார். மத்திய நிதியமைச்சர் புதிய பயனர் நட்பு வருமான வரி இணையதளம் 2.0 ஐயும் வெளியிட்டார் FM ஸ்ரீமதி. சீதாராமன் பச்சாதாபம், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான வரி நிர்வாகத்திற்கு அழைப்பு விடுக்கிறார், மேலும் புதிய வரிச் சட்டத்தில் ஸ்திரத்தன்மை, எளிமை மற்றும் குறைந்தபட்ச திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறார். பிராரம்ப் 2026 அவுட்ரீச்சின் கீழ் திறன் மேம்பாடு மற்றும் நாடு தழுவிய பட்டறைகளை வருவாய் செயலாளர் சிறப்பித்துக் காட்டுகிறார் CBDT தலைவர் 'நாக்ரிக் தேவோ பாவா' வழிகாட்டுதலின் குடிமக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வலியுறுத்துகிறார் விரிவான தகவல்கள் அடங்கிய பிரசுரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர 10 பிராந்திய மொழிகளிலும் பரவலான பரப்புரை மற்றும் விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டன. CBDT வீடியோக்கள், பிரசுரங்கள் மற்றும் MyGov நிச்சயதார்த்த முயற்சிகள் உள்ளிட்ட...