முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பின் வாங்கிய திருமா காட்டுமன்னார்கோவிலில் ஜோதிமணி போட்டியிடுவதாக அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிகவின் தலைவர் திருமா மறுபரிசீலனை செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திமுக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மாநில அரசியலுக்கு திருமா வருவதை திமுக விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஒரு வேளை வெற்றி பெற்றால் திருமாவுக்கு அமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவி கொடுக்க நேரிடுமாம்.  வி சி கட்சித் தலைவர் திருமா போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான க. இளையபெருமாள் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிகட்சி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியல் சில நாள்களுக்கு முன் அவர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமா போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகிய நிலையில் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிப...
சமீபத்திய இடுகைகள்

கோட்ஷேக்கள் கட்சியாக காந்தி கடசி விலகிய பிரமுகர் விளாசல்

அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி, மற்றும் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர். 37 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர், இப்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தனது துணிச்சலான கருத்துக்களுக்காகவும், கொள்கை முடிவுகளுக்காகவும் அறியப்படுகிறார்  அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் : "பொதுச்சேவை என்பது நோக்கமும் செயலும் ஒன்றுபட்டு இருக்கும்போது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. நீண்ட கால சிந்தனைக்குப் பிறகு, மக்களுடன் நேரடியாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் என் முயற்சி, கட்சியின் தற்போதைய செயல்முறையுடன் இனி பொருந்தவில்லை என்று நான் உணர்ந்துள்ளேன்.ஒரு அரசியல் கட்சியின் மூலம் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள், அந்தக் கட்சியின் மூலம் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அதே நேரத்தில், 'அந்தக் கட்சி நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்கிறதா? சமூகத்திற்கு உண்மையாக பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அது அர்த்தமுள்ள வாய்ப்புகளை அளிக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டும்கட்சி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதம். அ...

திமுக அ.ராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு மன்னிப்புக் கேட்க யூ-டியூபர் மாரிதாஸ் மறுப்பு

திமுக அ.ராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு மன்னிப்புக் கேட்க     யூ-டியூபர் மாரிதாஸ் மறுப்பு.   2 ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பிக்கள் அல்லது எம்.எல்.ஏ க்கள் அல்லது திமுக கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தலைவர் என்ன துரைமுருகனையாவது அனுப்பி எனக்கு ஆறுதல் சொன்னாரா? நான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு தான் அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. இந்த 2 மாதம் என் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்தச் சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது ஒன்றை சிபிஐ எடுத்தார்களா? ஒருநாள் அழகிரி நேரில் வந்து சிறையில் என்னை சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கிக் கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். ஸ்டாலின் தான் எல்லாம் செய்தார் எனக் கூறி அப்ரூவராகி விட்டு வெளியே வர வ...

மேலூர் தவிர மற்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை  அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார். பட்டியலில் மேலூர் தொகுதி தவிர பொன்னேரி(தனி)- துரை சந்திரசேகர், வேளச்சேரி- ஆசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூர் (தனி)- செல்வம் பெருந்தகை.  சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம், ஊத்தங்கரை-  (தனி) குப்புசாமி, கிருஷ்ணகிரி- செல்ல குமார், பென்னாகரம்- ஜி.கே.எம். தமிழ் குமரன், ஆத்தூர் (தனி)- எஸ்.கே. அர்த்தனாரி, ஈரோடு(கிழக்கு)- கோபிநாத்பழனியப்பன், உதகமண்டலம் பி. ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம்- சூர்ய பிரகாஷ், சிங்காநல்லூர்- ஸ்ரீநிதி நாயுடு, துறையூர் (தனி)- விச்சு லெனின் பிரசாத், கடலூர் சந்திரசேகரன், மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகம்மது, அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன், காரைக்குடி- எஸ். மாங்குடி, உசிலம்பட்டி- டி. சரவணகுமார், சிவகாசி- கணேசன் அசோகன், திருவாடானை- ராம கரு மாணிக்கம், ஸ்ரீவை...