முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டம்

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார், 1971- ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உயர் நீதிமன்றம் மீண்டும் கொண்டு வந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த சூழலில், தகுதி அடிப்படையிலேயே அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரத்துடன் ஆட்சியிலிருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை, சில வாரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டம்  வீழ்த்தியது. பிரதமர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால், தனி விமானத்தில் பயணித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா.மாணவர் போராட்டங்களின் போது, அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் கூறி, ...
சமீபத்திய இடுகைகள்

வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாடப்பட வேண்டும் உள்துறை அமைச்சகம் உத்தரவு.

மத்திய மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட வேண்டும். அதன்பிறகு தான் தேசியக்கீதம் பாட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு.  அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்  ‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம்  உத்தரவு. தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நடத்திவைத்த முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா மற்றும் சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும், அதன்பிறகு தேசிய கீதமும், பிறகு தமிழ் தாய் வாழ்த்தும் முறையாகப் பாடல்கள் இசைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான்  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்', தேசிய கீதம் மற்றும் மாநில மொழிப்பாடல்கள் பாடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலங்...

5 தொகுதி நீதிமன்றம் விதித்த தடை காரணமாக மீதமுள்ள இரண்டு தொகுதி தேர்தல் பரிட்சை நடக்கும் நிலை

தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை திருச்சிராப்பள்ளி (கிழக்கு), பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஒரு தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும், வரிகள் செலுத்துவோரின் பணத்தை வீணாக்காமல் இருக்கவும் இந்தத் தடை அவசியமென நீதிமன்றம் கருத்து. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிப்பதிலிருந்து, சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது. திருச்சிராப்பள்ளி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில், வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற...

HR & CE சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டு காலம் அதை அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி பட்டா பெறலாம்.

தமிழ்நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் ஸ்தலங்கள் மட்டுமல்ல, அவை தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கலந்த பொருளாதாரத்தின் உன்னத அடையாளங்களாகும். இத்தகைய போற்றுதலுக்குரிய திருக்கோவில்களின் வருமானத்தில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் பன்னிரண்டு சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தத்தொகை, 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையச் சட்டத்தின் பிரிவு 96-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளைகளின் நிர்வாக நிதி' என்ற கணக்கில் சேர்க்கப்படும். நிதியை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரே முழுமையாக நிர்வகிக்கிறார்.  HR & CE சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, இந்த நிதியைக் கொண்டு துறையின் அன்றாடச் செலவுகள், அலுவலர்கள் மற்றும் பணி ஊழியர்களின் ஊதியங்கள், இதர சலுகைகள் போன்ற நிர்வாக ரீதியான செலவினங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்; வேறு எந்தவொரு காரியத்திற்கும் இதைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை. ஆனால், கடந்த காலங்களில் இந்த நிர்வாக நிதி அதன் உண்மையான நோக்கத்தை மீறி, சட்டத்...

திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இந்தியத் திரையுலகின்  புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தனது 88 ஆவது வயதில்   மைசூருவில் காலமானார். திரையுலகினராலும் ரசிகர்களாலும் அன்போடு "ஜானகி அம்மா" என்றும், "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" (இசைக்குயில்) என்றும் அவர் போற்றப்படுகிறார்.   1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா கிராமத்தில் பிறந்தார்.  மூன்று வயது முதலே பாடல்களைப் பாடத் தொடங்கினார்.  1957 ஆம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு'  தமிழ்த் திரைப்படத்தில் "பெண் என் ஆசை பாழானது" என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.   தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, கொங்கணி, துளு, சிங்களம், ஆங்கிலம் உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடியுள்ளார்.  ஒரு சிறு குழந்தை, 16 வயதுப் பெண், நடுத்தர வயதுப் பெண் மற்றும் வயதான பாட்டி என எந்தவொரு வயதினருக்கும் ஏற்கும் வகையில் தனது குரலை மாற்றிப் பாடும் அசாத்தியத் திறமை பெற்றவர்.  எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான் போன்ற தலை...

ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் 08.07.2026 அன்று ஒரு சிறப்பு ஆய்வு இயக்கம்

காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு - தில்லியில் சாலைகள் தரநிலைகளுக்கு இணக்கமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தேசிய தலைநகர் பிராந்தியம் தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம், 'ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் 08.07.2026 அன்று ஒரு சிறப்பு ஆய்வு இயக்கத்தை நடத்தியது. இந்த ஆய்வின் போது, தில்லி மாநகராட்சியின் (MCD) அதிகார வரம்பிற்குட்பட்ட 79 சாலைப் பகுதிகளில் 78 சாலைகளில், ஒரு முனை முதல் மறு முனை வரை தார் போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது, ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளது. 07.01.2025 அன்று ஆணையத்தால் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்ட, தில்லி பகுதியில் நகர்ப்புற சாலைகளை அமைத்தல், பசுமையாக்குவது ஆகியவற்றுக்கான தரநிலைக் கட்டமைப்புக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட சாலை மறுசீரமைப்புப் பணிகளின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப் பணிக்காக, தில்லி மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட சாலைப் பகுதிகளை ஆய்வு செய்ய, ஆணையத்தின் 10 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ஆய்வானது, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சுமா...

680 கிலோமீட்டர் தூரப் பாதையில் கவச் 4.0 பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

வடக்கு ரயில்வே மண்டலத்தில் 680 கிலோமீட்டர் தூரத்திற்கு 206 கோடி ரூபாய் மதிப்பில் கவச் பாதுகாப்பு முறையை செயல்படுத்த ரயில்வே ஒப்புதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டத்திற்குட்பட்ட ரேவாரி-தில்லி, சாகுர்பஸ்தி-பத்திண்டா ஆகிய வழித்தடங்களின் கிளைப் பாதைகள் உள்ளிட்ட 680 கிலோமீட்டர் தூரப் பாதையில் கவச் 4.0 பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளைத் தடுத்தல், சிக்னல்களைத் தாண்டிச் செல்வதால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதன் மூலம் ரயில் பாதுகாப்பை மேம்படுத்த இந்த கவச் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ரயில்களின் இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவசரக் காலங்களில் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும் வசதி கொண்டது. அடர்ந்த பனிமூட்டம் போன்ற மோசமான வானிலையிலும் ரயில்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் இயங்குவதற்கு இது பெரிதும் உதவும...