முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு முதல்வராக தலெக தலைவர் ஜோசப் விஜய்,சந்திரசேகர் நாளை பதவி ஏற்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்,சந்திரசேகர் தமிழ்நாடு  முதலமைச்சராக நாளை மே மாதம் 10, 2026  பகல் 11 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்க உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் சிபிஐ, சிபிஐ (எம்), ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, ஆளுநர் மாளிகையில் தவெக தலைவரும், சட்டப்பேரவைக்கு குழுத் தலைவருமான ஜோசப் விஜய் இன்று மே 9 அன்று மக்கள் பவனில் நேரில் சந்தித்தார். அப்போது, அவர் கோரிக்கை ஏற்று ஆட்சியமைக்க ஆளுநர் முதல்வராக நியமித்து பதவிஏற்க உத்தரவிட்டார், அவருடன் சில முக்கியத் தலைவர்கள் கே. ஏ. செங்கோட்டையன், புஸ்ஸி என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முதல்வருடன் பத்து அமைச்சர்கள் பதவி ஏற்கிறனர். விழா ஏற்பாடுகளை அரசு சிறப்பாகசா செய்து வருகிறது. பிரச்சினைகளும், சவால்களும் தான் ஒரு மனிதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன! தவெக கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டில்  நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை தமிழக வெற்...
சமீபத்திய இடுகைகள்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமனம் முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பதவியில் பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மத்திய ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முப்படைகளின் தற்போதைய தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சவுகான், மே 30, 2026 அன்று ஓய்வு பெறுகிறார். லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, செப்டம்பர் 1, 2025 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை, ராணுவப் படைத் துணைத் தலைவராகவும், மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை, மத்திய படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த மூத்த ராணுவ அதிகாரி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றுள்ளார். டிசம்பர் 14, 1985 அன்று 'கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவின் 8-வது படைப் பிரிவில், அவர் ...

தவெக காங்கிரஸ் கூட்டணி ஆடசி என்பதால் ஆட்சி அமைக்கத் தடுமாற்றம்

 தவெக தலைவர் விஜய் முதல்வராக 7ஆம் தேதி தவெக தலைவர் பதவி ஏற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தடபுட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு, விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது தகவல் தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறது. இது அனைத்துமே தவெக உடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்த பின்பே அரங்கேறிய சம்பவம் என்பதும், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையான 118 தொகுதிகள் இல்லாத நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக  கோர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வந்திருக்கிறார், மேலும் பாமக தரப்பிலும் செங்கோட்டையன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள், எடப்பாடி இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என்றாலும் கூட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி பக்கம...