முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ATM கொள்ளையர் அடகாசம்

ஏடிஎம் (ATM) இயந்திரங்களை உடைத்தோ அல்லது ஒட்டுமொத்தமாக இயந்திரத்தையே தூக்கிச் சென்றோ கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டின் சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று முக்கிய ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அண்மையில் நடந்த முக்கிய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விபரம் :- திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு- செப்டம்பர் 5, 2026: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஹிட்டாச்சி (Hitachi) ஏடிஎம் மையத்தில், முழு ஏடிஎம் இயந்திரத்தையுமே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த இயந்திரத்தில் சுமார் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு காவலர் யாருமில்லை அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - ஆகஸ்ட் 27, 2026: கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கேஸ் வெல்டிங் டார்ச்  மூலம் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ரூபாய் 11.5 லட்சம் முதல் ரூபாய் 12 ல...
சமீபத்திய இடுகைகள்

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜே.எம்.எச். அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), சென்னை வேளச்சேரி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஜே.எம்.எச். அசன் மவுலானா  தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, தனது தேர்தல் செலவுக் கணக்குகளை முறையாகவும் உண்மையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 10A-ன் கீழ் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.  அசன் மவுலானா தனது தேர்தல் செலவாக ரூபாய் 17,03,548 மட்டுமே கணக்கு காட்டியிருந்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் அவர் நாளிதழ்களில் கொடுத்த விளம்பரங்களுக்காக சுமார் ரூபாய் 32,05,915 செலவிட்டது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவரது மொத்த செலவு ரூபாய் 49 லட்சத்தைத் தாண்டியது, இது அப்போதைய தேர்தல் செலவு உச்சவரம்பான ரூபாய் 30.80 லட்சத்தை விட அதிகமாகும். இந்தத் தடையின் காரணமாக, ஆகஸ்ட் 2026 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் நாடாளுமன்ற (மக்களவை/மாநிலங்களவை) அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் (சட்டப்பேரவை/சட்ட மேலவை) வேட்பாளராகப் போட்டியிட முட...

ஆசிரியர் தினத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்

1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினம் 2 ஆம் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் அரசியல் கலந்த ஆசிரியர் உயர் பதவிக்கு வந்ததால் இந்த நிலை அதற்கு முன்னும் உண்மையான ஆசிரியர்கள் இருந்தனர், சமூகத்தில் மதிக்கப்பட்டனர் மாணவர்கள் கற்கவும், புதிய கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும், படிப்பில் உள்ள சவால்களைச் சமாளிக்கவும் உதவுவதால், ஆசிரியர்கள் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் பாடங்களை விளக்குகிறார்கள், கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள், மேலும் மாணவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவுகிறார்கள். ஒரு பாடம் கடினமாகத் தோன்றும்போது, ​​தொடர்ந்து முயற்சி செய்யுமாறு ஆசிரியர்கள் குழந்தைகளை ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல், மாணவர்கள் கற்றலில் அதிக நம்பிக்கையையும் வசதியையும் பெற உதவும்.  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுகிறார்கள்: புதிய கருத்துகளைப் புரிந்துகொள்ளுங்கள் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களின் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்துங்கள் நம்பிக்கையை உருவாக்குங்கள் நல்ல கற்றல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் ...

இந்த வாரத்தில் தமிழ்நாட்டில் லஞ்ச ஊழலில் சிக்கி கைதானவர்கள்

ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களை ஏமாற்றி ரூபாய் .1 கோடி லஞ்சம்: 3 வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் ! "அரசு வனத்துறை நிலத்தை பட்டா வழங்குவதாகக் கூறி, 3 தலைமுறையாக வாழ்வாதாரத்தை இழந்த மலைவாழ் மக்களை மிரட்டி லஞ்சம்"  ஜவ்வாது மலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை பாதித்த ஊழல்; ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் வனச்சரகர்கள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்; மாவட்ட வன அலுவலர் உத்தரவு  திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில், அரசுக்கு சொந்தமான காப்புக் காடு வனத்துறை நிலத்தை திருவண்ணாமலை மாவட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சாமை, திணை, வரகு, தேன் மற்றும் பலாமரம் வளர்ப்பு போன்ற விவசாய விளைபொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் தங்கள் நிலத்தை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான காட்டு நிலங்களைச் சுமார் 3 தலைமுறைகளாக அனுபவித்து வரும் மலைவாழ் மக்களுக்கு...

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

 நகராட்சி நிர்வாகத் துறையின் டெண்டர் முறைகேடு காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சம்பந்தப்பட்ட இடங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் DVAC சோதனை ! முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புள்ள 19 இடங்களும் அதில் அடக்கம், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அதிரடி சோதனையானது “ரூபாய் .1000 கோடி வேலைவாய்ப்பு முறைகேடு” சம்பந்தப்படடது, “நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பேர் பணியமர்த்தலில் திமுக கட்சி நிதி வசூல் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றமானது திமுக முதன்மைச் செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு  அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்பான 19 இடங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) திருச்சிராப்பள்ளி தில்லைநகர் இல்லத்தில் 10-க்கும் மேற்பட்ட விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர்  இன்று 05.09.2026 காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் .1000 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு முறைகேடு மற்றும் டெண்டர் ஒப்பந்தங்களில் சட்டவிரோத பணப்...

பல சொத்துக்களைக் குவித்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தவறான பண முதலீட்டு நபர்கள் இடங்களில் ED சோதனை

சென்னை, இராமநாதபுரம், கோழிக்கோடு, கண்ணூர்,   மல்லாபுரம் மற்றும் திருச்சூர். ஆகிய ஊர்களில் உள்ள 18 இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடந்தது. மேலும்   மொத்தம் 5 வழக்குகளும் அதிலுள்ளன. தென் பிராந்தியத்தின் அனைத்து மண்டலங்களிலும் 30 வளாகங்களில் பல்வேறு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ED ஒரே நேரத்தில் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் நாஷா முக்த் பாரத் கட்டளையின் கீழ் இந்தத் தேடல்கள் நடத்தப்பட்டன. தேடுதல் வளாகம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விரிந்து பரவியுள்ளது. PMLA ன் கீழ் விசாரிக்கப்படும் 8 வெவ்வேறு வழக்குகளிலும் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மெத்தப்பேட்டமைன் கடத்தல் மற்றும்  ஹவாலா பரிவர்த்தனைகள்  அடங்கும். தமிழ்நாட்டில்  இராமநாதபுரத்தில் தலா 2 இடங்களிலும், சென்னையில் 6, நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணியில் 6 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. 950 கிராம் முதல் 54.6 கிலோ எடையுள்ள மெத்தப்பெட்டமை...

புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுரடியில் 1200 கோடியில் அமைகிறது

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று 3 செப்டம்பர் 2026 அன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துறைசார்ந்த பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் நவீனமயமாக்கல் அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கிய நலத்திட்டங்கள் & நிதியுதவியில் ரூபாய் 1 கோடி இழப்பீடு: பணியின் போது துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இயல்பாக இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கான கருணைத் தொகை (Ex-gratia) ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்வு. காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளுக்கான சில்லறை செலவின நிதி  கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பணியிடங்களை நிரப்பும் வகையில் விரைவில் 10,000 அதில் பாதி மகளிர் புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.நவீனமயமாக்கல் & உள்கட்டமைப்பு ரூபாய் 212 கோடி நவீனமயமாக்கல்: செயற்கை நுண்ணறிவு (AI), அதிநவீன டிஜிட்டல் தடையவியல் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகளுடன...