LPG முன்பதிவு விதிகள் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்! எல்பிஜி நிரப்பு முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டது இப்போது அடுத்த சமையல் ஏரிவாயு உருளை (சிலிண்டரை) 25 நாட்களுக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம் கிராமப்புற LPG வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இதற்கு முன் 45 நாள் இடைவெளியில் இருந்து மாற்றம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட அனைத்து உள்நாட்டு LPG வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான 25 நாள் விதியை பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்டர்-ரீஃபில் முன்பதிவு இடைவெளியைக் குறைக்க முடிவு செய்தது மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மிக முக்கியமான மாற்றத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களிலிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக விதிகள் படி சிலிண்டர் முன்பதிவு இடைவெளி குறைப்பு முன்னதாக நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் இடைவெளி கடைப்பிடிக்க...
குடி போதையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தில் சிக்கி பலியான PSNA தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் திண்டுக்கல் PSNA தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களான சூர்யா திண்டுக்கல், யுவசஞ்சித் திண்டுக்கல், ஜோசுவா திண்டுக்கல், முரளி திண்டுக்கல், ஜீவா திண்டுக்கல், சந்தோஷ் மதுரை, பிரசன்னா மதுரை, விஸ்வா சேலம், ஆகியோர் தொடர் விடுமுறை என்பதால், அவர்களின் நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய காரில் இந்த மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் தெரிவிக்காமல் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 2026 செப்டம்பர் 4-ஆம் தேதி நள்ளிரவு 11:42 மணி அளவில், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற அந்தக் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றிய லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதால் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், மீட்புக்குழுவினர் காரை வெட்டி எடுத்து 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து கேரளா மாநில காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பராமரிப்பு பண...