இறக்குமதி செய்யப்பட்ட தடை விதிக்கப்பட்ட 364 மெட்ரிக் டன் பாகிஸ்தான் உலர் பேரிச்சம் பழங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது பாகிஸ்தானில் உற்பத்தியான பொருட்கள் மூன்றாம் நாடுகளின் வழியாக ரகசியமாக வழிமாற்றப்பட்டு தவறான தகவல்களுடன் இறக்குமதி செய்வது குறித்த தகவல் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்தது. இதையடுத்து கண்ட்லா துறைமுகத்தில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட தடை விதிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 364 மெட்ரிக் டன் உலர் பேரிச்சம் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையில் பாகிஸ்தானில் உற்பத்தியானது என்பது தெரிய வந்தது. இந்த பேரிச்சம் பழங்களை கொண்ட கொள்கலன்கள் முதலில் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு பின்னர் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக மற்றொரு கொள்கலன்களில் மாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசிடம் மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது தேர்வுத் தாள் வெளியானதற்கு எதிரான கடுமையான நடவடிக்கை குறித்து, கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வீடியோ செய்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து தவறுதலாக நீக்கப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழு கெடு விதித்த நிலையில் பேஸ்புக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பெர்க் 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடா ளுமன்ற நிலைக்குழு நேற்று கெடு விதித்திருந்தது. 3 நாளில் ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட லாம் என மக்களவை செயலகத்தின் இயக்குநர் ஜோதிர்மயி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார். அரசு நடவடிக்கை: நாட்டின் பிரதமரின் வீடியோ நீக்கப்பட்டதற்கு...