முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும்

பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும் இந்திய ரயில்வே துறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது  குறிப்பிட்டுள்ள ரயில்வே நிறுத்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிவில் ஏறத் தவறினால் அவரது இருக்கை உடனடியாக காவியாக இருப்பதாக அறி விக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகயும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே உத்தரவு வந்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பயணி தனது பபயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்தப்  பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒருக்கப்படும். முந்தைய விதிமு றைகளின்படி, ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிளையங்கள் அல்லது ஒரு மணிநேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியதிருந்தது ஆனால், தற்போது அனைத்து இரயில்களி லும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் எனப்படும் கையடக்கக் கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பய...
சமீபத்திய இடுகைகள்

பூட்டான் பிரதமர், செர்பிய குடியரசின் அதிபருடன் பாரதப் பிரதமர் சந்திப்பு

பூட்டான் பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026 இல் கலந்து கொள்ள இந்தியாவிற்கு வருகை தந்த பூட்டான் பிரதமர் மேதகு திரு ஷெரிங் டோப்கேவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். 2025 நவம்பரில் பிரதமர் திரு மோடி பூட்டானுக்கு மேற்கொண்ட பயணத்தின் மிகவும் வெற்றிகரமான விளைவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். பூட்டானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கும், கெலேஃபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி திட்டத்திற்கும் இந்தியா அளித்த ஆதரவிற்காக பூட்டான் பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்தார். எரிசக்தி, இணைப்பு மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மை போன்ற முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் பூட்டானும் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பரஸ்பரம...

தமிழ்நாட்டில் ஆறு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும்  நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான  தேர்தல் மார்ச் மாதம் 16 ஆம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2026 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக நாடாளுமன்ற இராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி சிவா, கனிமொழி சோமு, ஜி.கே.வாசன் உள்ளிட்ட நாடாளுமன்ற 6 உறுப்பினரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதையொட்டி, நாடாளுமன்ற 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள  காலியாகும் 37 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில்  வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 5 ஆம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை  மார்ச் மாதம் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் மாதம் 9 ஆம் தேதி. போ...

தவெக தலைவர் நடிகர் விஜய் கூட்டணிக்குத் தயாராகும் அதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன்

வஞ்சினம் உரைத்தலென்பது போருக்குச் செல்லும் முன் வேந்தரோ, படை வீரரோ, "குறிப்பிட்ட காரியத்தை எதிரிக்கு எதிராகச் சாதிப்பேன்; இல்லையேல் இன்னன் ஆவேன்" என்று கடும் சினத்துடன் சூளுரைக்கும் அலலது சங்கல்பம் (சத்தியம்) செய்யும் பழங்கால சத்திரிய மரபு. இது வீரத்தின் அடையாளமாகவும், பகைவருக்குத் தன் வலிமையை உணர்த்தும்  நுட்பமாகவும், மன உறுதியை வெளிப்படுத்தும் செயலாகவும் இலக்கியங்களால் போற்றப்படுகிறது. புறநானூற்றில், மனனன் தலையாலங்கானத்துச் செருவென்ற பண்டியன் நெடுஞ்செழியன் தன்னை இளையவன் என இகழ்ந்த வேந்தர்களை வெல்வேன் எனப் பாடிய வஞ்சினப் பாடல் மிகச் சிறந்தது.வழக்கில் இரண்டாம் குற்றவாளி என சதியால் தீர்ப்பு வருவது அறியாமல் வி. கே.சசிகலா நடராஜன் முதல் குற்றவாளியாகவே காலமான செல்வி ஜெ.ஜெயலலிதா சமாதியில் அடித்து என்ன வஞ்சினம் உரைத்தார். சமாதியில் அடித்து சத்தியம் செய்வது அல்லது சபதம் எடுப்பது உண்மையில் சத்திரிய இனங்களின் குறியீடு.  இந்த மாதிரியான குறியீடுகள் தம் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம் சந்ததியினருக்கு கடத்திவரும் பூர்வீக இனக்குழுக்களுக்கான தனித்துவ அடையாளங்கள்.  இது தன்னாட்சி கள்ள...