முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை

60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை – 320 பணியாளர்கள்  ஒரே நேரத்தில் நுழைந்து கணக்கில் வராத பணம், முறைகேடுகள் குறித்து சோதனை! நேற்று ஜூன் மாதம் 4, 2026: தமிழ்நாடு முழுவதும் உள்ள 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் பிற்பகல் 2.30 மணியளவில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிரடிச் சோதனை நடத்தியது. சுமார் 320 காவல்துறை பணியாளர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நுழைந்து, கணக்கில் வராத பணம் மற்றும் பிற முறைகேடுகளைச் சோதனை செய்தனர் ஜூன் 4 ஆம் தேதி ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான மிகச் சிறந்த நாள்  என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் பெருங்கூட்டத்தைப் பயன்படுத்தி, DVAC அதிகாரிகள் திட்டமிட்டு இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 சார்பதிவாளர் அலுவலகங்கள். பிற்பகல் 2.30 மணியளவில், போலீஸார் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து, வெளியேறும் வழிகளை முற்றுகையிட்டனர்  பணியாளர்கள்: சுமார் 320 காவல் பணியாளர...
சமீபத்திய இடுகைகள்

தநா மின் வாரிய ஹாட்டிஸ்க்கள் களவு கோவிநாத் கைது செய்யப்பட்டு, பெங்களூருவில் விசாரணை

 தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திலிருந்து திருடப்பட்ட முக்கியமான தரவுகளுடன் கூடிய 18 ஹார்ட் டிஸ்க்குகளில் 16 மீட்பு மீதி இரண்டு தேடுதல் இது டெண்டர்கள், கொள்முதல் மற்றும் விசாரணைகள் பற்றிய இரகசிய விவரங்களைக் கொண்டது.  நாசவேலை செயலில், குறைந்தபட்சம் 18 ஹார்ட் டிஸ்க்குகளில் இரகசியத் தரவுகள் உள்ளன, குறிப்பாக டெண்டர்கள், கொள்முதல் மற்றும் நடப்பு தொடர்பான பதிவுகள்  அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின்  தலைமையகத்தில் இருந்து  திருடப்பட்டுள்ளன கடின நகல்கள் இருக்கும் நிலையில், அனைத்து முக்கிய சாப்ட் காப்பிகளும் மாயமாகிவிட்டன. சர்வரில் இருந்தால் இது களவு போகாது ஆனால் ஹாட் டிஸ்க் என்பதால் ஊழல் திருட்டு நடந்துள்ளது, வார இறுதியில் மே மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சில பணியாளர்கள் இருந்தபோது திருட்டு நடந்துள்ளது. புதிய மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் ஆர்.நிர்மல்குமார் துறைக்கு வந்து, தவறு செய்பவர்கள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம் என எச்சரித்ததையடுத்து, மே மாதம் 30 ஆம் தேதியன்று பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், கம்ப்யூட்டர் சிஸ்டம், ப்ராஜெக்...

ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி புதிய இயக்கம் அண்ணாமலையின் தனி வழி

ஒரே நாடு .ஒரே தேர்தல் நோக்கி புதிய இயக்கம்  அண்ணாமலையின்  தனி வழி. இன்று மதியம் 12 மணிக்கு , சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். என  பாஜகவிலிருந்து முறையாக விலகிய கே.அண்ணாமலை https://www.instagram.com/annamalai_kuppusamy https://www.facebook.com/share/18bJfU31t4/ https://youtube.com/@annamalai.k https://x.com/annamalai_k ஆகிய லிங்க் மூலம் சமூக வலைத்தளங்களில் பேசினார் அதில் "எனக்கு முதல் வாய்ப்பு தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து லக்னோவில் படித்ததற்கும், பின்னர் டெல்லியில் இருப்பதற்கும், ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகள் டிரெயினிங், அதன் பிறகு கர்நாடகாவில் 8 லிருந்து 9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் சுற்றினேன். அதனால் தான் நான் எப்போதும் சொல்வேன் – “நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், அதே நேரத்தில் பாரம்பரியத் தமிழன்” என்ற அடையாளத்தோடு எல்லோரிடமும் பேசுவேன். இன்றைய தமிழ்நாட்டு அரசியலில், ஒரு பெரு...

எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி போட்டி

எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார் .ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் ராகுல் கா...

கனிமவளக் கொள்ளையைத் தடுத்து அரசு வருவாய் கூட்ட முதல்வர் ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கனிமவளங்களின் துறை உயர் அலுவலர்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.  அதில் அரசின் நிலை இனித் தெரியவரும் Ministry of Geological Mines Mineral Resources New Law & Act, Rules மீறாமல் இருந்தால் சரி, தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ரூபாய் .4,500 கோடி அளவில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில், வேலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே சம்மன் அனுப்பியது. மாவடட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.          Supreme Court today called on the Tamil Nadu government to furnish details of all FIRs registered in relation to the alleged Rs.4730 cr worth of illegal sand mining/theft of mineral in the state. Case Title: M.LAKSHMANAN Versus THE UNION OF INDIA AND ORS., SLP(...