முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை

போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை! கோயம்பத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த அதிர்ச்சியான சம்பவம். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அமுதனின் பெற்றோர் முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைத்த நிலையில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் கலந்து கொண்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் கோவையில் 19 வயது கல்லூரி மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போதைப்பொருள் பயன்பாடு குறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 5 பேர் பிடித்து விசாரிக்கப்பட்...
சமீபத்திய இடுகைகள்

காவல்துறையில் பணி மாறுதலும் ஊழல் சீரமைப்பும்

தமிழ்நாட்டில் 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு  தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இ ஆ ப வெளியிட்டுள்ள அறிவிப்பில், உளவுத்துறை டிஜிபியாக பணிபுரிந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார், வேலூர் சரக டிஐஜியாக பணிபுரிந்த தர்மராஜன், பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு காவல் துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. சென்னை காவல்துறையின் தெற்கு இணை ஆணையராக பணிபுரிந்த பகர்லா செபாஸ் கல்யாண், உளவுப் பிரிவு உள்பாதுகாப்பு டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜியாக பணிபுரிந்த சரவணன், சென்னை சிஐடி உளவுத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டார். திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த கராட் கரூண் உத்தவராவ், சென்னை குற்றவியல் உளவுத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த மயில்வாகனன், சென்னை சிறப்பு பி...

தேசத் தலைவர் நேதாஜி அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்சநீமன்றத்தில் மகள் மனு அரசுக்கு நோட்டீஸ்

சுதந்திரப் போராட்ட வீரர் தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது.  இந்த நிலையில், ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியின் அஸ்தியை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அனிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஒரே மகள் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார். இவர் 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் எமிலி ஷென்கல் இவரது தய் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள ஆ...

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரம் முக்கியம்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை கடந்த 3-3-2025 முதல் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை தனியார் மழலையர் பள்ளி விவகாரத்தில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' எனக் கோரப்பட்டது.   அதன்படி  வகுக்கப்பட்ட            இளம் மழலையர் பள்ளி விதிகள் :- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  அதுகுறித்த அரசு அறிவிப்பில், “இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் https://share.google/DZI1Fl3aDxkz43x9R அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி...

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பைமானா பகுப்பாய்வு இணையதளம்

பைமானா தளம்: தரவு அடிப்படையிலான உள்கட்டமைப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிகழ்நேரத்தில் திறம்படக் கண்காணிக்கும் நோக்கில் 'பைமானா' எனப்படும் தேசியக் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு, உள்கட்டமைப்புக் கண்காணிப்பு, பகுப்பாய்வு இணையதளம் 2025 செப்டம்பர் 25 அன்று தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இத்தளம், 150 கோடி ரூபாய் அல்லது அதற்கும் அதிக மதிப்பிலான மத்திய அரசுத் துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கிறது. இதற்கு முன்னதாகப் பயன்பாட்டில் இருந்த கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இத்தளத்தில், உள்கட்டமைப்புத் திட்டங்களின் மத்தியக் களஞ்சியமாக இதனை விரிவுபடுத்தும் வகையில் பைமானா-சிஆர்ஐபி என்ற புதிய பிரிவு 2026 ஜூலை 8 அன்று இணைக்கப்பட்டது. தற்போது 20-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், திட்ட அமலாக்க முகமைகள் இத்தளத்தின் மூலம் திட்டப் பணிகளின் விவரங்களைத் தொடர்ச்சியாகப் பதிவேற்றம் செய்து வருகின்ற...

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்   நதிகளுக்கு இடையேயான நீர்ப் பகிர்விற்காக தேசிய தொலைநோக்குத் திட்டத்தை (NPP) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் கீழ் தீபகற்பப் பகுதியில் 16 நதி இணைப்புத் திட்டங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் 14 நதி இணைப்புத் திட்டங்கள் என மொத்தம் 30 நதிகள் இணைப்புத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் (NWDA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமைத் திட்டமான கென்-பெத்வா நதிகள் இணைப்புத் திட்டம் ரூ.44,605 கோடி மதிப்பீட்டில் தற்போது செயலாக்க நிலையை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் சுமார் 11.88 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 62 லட்சம் மக்களுக்குக் குடிநீரும், 103 மெகாவாட் நீர்மின்சாரமும், 27 மெகாவாட் சூரிய மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். மேலும், கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைக்கும் போலவரம் நீர்ப்பாசனத் திட்டம் தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் போலவரம் திட்ட ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது...