முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

உச்சநீதிமன்றத்தில் வழக்கும் மாநில சபாநாயகர் வழங்கிய தீர்ப்பும் இனி வரப்போகும் இறுதி முடிவும்

தமிழ்நாடு அரசியல் ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆட்சியைக் காப்பாற்ற நடந்த குதிரை பேரப்புகாரில் தவெக அரசின் பொதுச்செயலாளரும் மாநில அமைச்சருமான புஸ்ஸி N.ஆனந்த், மற்றும் மாநில சபாநாயகர் J.C.D.பிரபாகர் மற்றும் அஇஅதிமுகவிலிருந்து தவெவிற்கு ராஜினாமா செய்த பின் மாறிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது CBI விசாரணை நடத்தக் கோரி வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்த நிலையில் அதன் விசாரணை துவங்க உள்ளது, இந்த நிலையில் அந்த நால்வர் சார்பில் கேவியட் மனு மட்டுமே தாக்கல் செய்து காத்திருக்கும் நிலையில் ”முதலமைச்சர் சி ஜோசப் விஜய் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளார். அதிமுகவின் 21 பேர் மீது நடவடிக்கை இல்லை. ராஜினாமா செய்த 4 பேர் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என செய்தியாளர் சந்திப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று கூறியதாவது:- 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி அதிமுக எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்...
சமீபத்திய இடுகைகள்

சிங்கப்பெண் காவல் படை இந்தியச் சட்டத்தின் வழி நீதிமன்றம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளப் பாதுகாக்கும்

தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ,தொடங்கி வைத்தார் முதல்வர்.  எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கப்பட்டது. முதல்வரது நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில்  சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலட்சினையை அறிமுகம் செய்து திட்டத்தின் முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டார். பின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் ரோந்து வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர்சி. ஜோசப் விஜய் , காவலர்கள் இருந்த வாகனத்தையும் இயக்கினார், நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பெண்களின் மரியாதை, கண்ணியத்தைக் காக்க அரசு அதிமுக்கிய முன்னுரிமை அளிக்குமென்றார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போதைபொருள் நடமாட்டம் தான் காரணம் எனக்கூறிய முதலமைச்சர், பல வருடங்களாக போதைப்பொருள் பிரச்சனை கண்டுகொள்ளப்படாமல் இருந்ததாக விமர்சித்தார். பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்க வேண்டாம் என எச்சரித்...

பாஜகவின் வரலாற்றில் தலைவராக அண்ணாமலை பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதது

பாஜகவில் இருந்து விலகிய புதிய பரினமத்தில் உறுவான தலைவர் கே அண்ணாமலையின் புதிய இயக்கம் ஒரே லிங்க் மட்டுமே அதில் எழுட்சியாக 17  லட்சம் பேர் இதுவரை இணைந்துள்ளனர், இது கடந்த தேர்தலில் பாஜக வாங்கிய வாக்குகளை விட அதிகம் தமிழ்நாடு பாஜக வின் தலைவர்களுக்கு இது அதிர்ச்சி வைத்தியம் தான், ஒரே பரபரப்பு. திரும்பிப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியம் ஆன டெல்லி தேசியத் தலைமை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் பார்வையும் மக்கள் தலைவராக உறுவான கே.அண்ணாமலை என்ற தனித் தலைவர் பக்கமே  இப்போது திருப்பியிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தலைவரான கே.அண்ணாமலை, மூன்று தினம் முன் "வீ தி லீடர்ஸ்" (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி, வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் களமாட உள்ளார் பொதுத்தேர்தலில் தங்களது இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வந்ததுமே அரசியல் வட்டாரத்தில் லேசான சலசலப்புத் தான் ஏற்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக வெளியாகி வரும் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைமையை அ...

தமிழக முதல்வரைச் சந்தித்த தொழிலதிபர்கள்

தமிழ்நாடு முதலமைச்சரை இன்று இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் ஆர். வரதராஜன்,  ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர்  ராஜ்ஸ்ரீ பதி,  சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அர்ஜுன் கோத்தாரி,  பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம். சில்வெஸ்டர்,  EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின்  Chief Strategy Officer  ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்

ஏழைகளுக்கு அதிகாரமளித்த ல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டு நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 3.23 கோடியில் இருந்து, 2026 மே மாதத்தில் 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ல் 39 சதவீத பகுதிகள் மட்டுமே சுகாதார வசதிகள் பெற்றிருந்த நிலையில், 12.11 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்து கிராமங்களும் 100 சதவீதம் சுகாதார கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்களின்...