முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அமலாக்கத்துறை சிக்கலில் காங்கிரஸ் ப.சிதம்பரம், ஊழல் வழக்கில் சிக்கப்போகும் அமைசசர் கே. என்.நேரு

அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் இராகுல் நவீன் இன்று சென்னை வருகை தந்தார்.டில்லியிலிருந்து 3 நாள் பயணமாக வந்த இராகுல் நவீன், நிலுவையிலுள்ள நகராத வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழ்நாடு தொடர்பான தேக்கமான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை உயர் அலுவலர்களுடனும் மத்திய அரசு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழ்நாடு வருகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான ஊழல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி  அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது  ஊழல் வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ஊழல் செய்து லஞ்சம் பெற்ற வழக்கு விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள்...
சமீபத்திய இடுகைகள்

தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போகும் நிலை தலைமை தேர்தல் ஆணையர் ஆய்வு

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், 2026  ஏப்ரல் மாதத்தில் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்கு தள்ளிப்போகலாம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாக இருந்த தேர்தல் அறிவிப்பு அட்டவணை வெளியீடு, மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போகும் எனத் தகவல்  இது தொடர்பாக ஆலோசனை நடத்த, “தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உயர் அலுவலர்கள் குழு, சென்னை வந்தது.தமிழ்நாடு பாண்டிச்சேரி, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளின் பதவிக்காலம், 2026 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் மக்கள் புதிய அரசுகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஐந்து மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் வாயிலாக, தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, 5 மாநிலங்களிலுள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 5 கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 714 ஐ.ஏ.எஸ்., கொண்ட தேர்தல் பணி அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்கு 233 ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், 497 செலவி...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் மன்னிப்புக் கேட்ட NCERT. மற்றும் CBSE உறுவாக்கிய கணித வினாத்தாளும்

உச்ச நீதிமன்றத்தின்  கண்டனம் மன்னிப்புக் கேட்ட NCERT. 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு; அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடப்புத்தகம் வழங்கப்படும் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து NCERT மன்னிப்புக் கேட்டு அறிக்கை.  சமூக அறிவியல் பாடப்புத்தகம் பகுதி 2 NCERT தற்போதுள்ள நடைமுறையின்படி, 24-02-2026 அன்று 8 ஆம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகமான எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியோண்ட், தொகுதி II ஐ NCERT வெளியிட்டது. பாடப்புத்தகத்தைப் பெறும்போது, ​​"நம் சமூகத்தில் நீதித்துறையின் பங்கு" (பக்கம் 125 முதல் 142 வரை ) என்ற தலைப்பில் சில பொருத்தமற்ற உரைகள் மற்றும் தீர்ப்பின் பிழைகள் கவனக்குறைவாக அத்தியாயம் எண் 4-ல் ஊடுருவியிருப்பது (எழுதியவர் தவறு அச்சடித்தவர் தவறு இல்லாமல் எப்படி ஊடுருவும் ) கவனிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையும் (கல்வி அமைச்ச...

அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத டி எஸ் பிக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத துணைக்காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்துக்கு எதிராகப் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு . சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகா மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார்  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக தனிப்படைக் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், இராமச்சந்திரன் ஆகியோரை CBI கைது செய்த வழக்கில் நீதிமன்றத்தில் CBI தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் காவல் மரணம் நிகழ்ந்தபோது, மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்ட வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனு இரண்டு முறை தள்ளுபடியானது. தனிப்படைக் காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு ...

5-OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை

ஆபாசமான படக்காட்சிகளை ஒளிபரப்பியதாகத் தெரிவித்து , 5  OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது. உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய ஐந்து தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. குறிப்பாக, சந்தாதாரர்களைக் கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான பல காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தளங்கள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் கண்காணிக்கிறது. ஏற்கனவே 'உல்லு' மற்றும் 'ஆல்ட் பால...

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் நல்லகண்ணு காலமானார்,

இடதுசாரிக் கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்,      இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இராமசாமி-கருப்பாயி தம்பதியினருக்கு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, 10 குழந்தைகள்  உள்ள விவசாயக் குடும்பத்தில்  4 சகோதரர்கள், 5 சகோதரிகள் கொண்ட பெரிய விவசாயக் குடும்பம், இவர் 3-வது குழந்தையாகப் பிறந்தார். 1958- ஆம் ஆண்டில் ரஞ்சிதம் மனைவியானார் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, மனைவி ஆசிரியர் பணியில் குடும்பத்தைக் கவனிக்க   திருநெல்வேலி மாவட்டக் கமிட்டி உறுப்பினர் அண்ணாசாமியின் மகள்தான் இவர் மனைவி   ஆர். நல்லகண்ணு முழு நேரக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதால், மனைவி ரஞ்சிதம் தனது ஆசிரியர் பணி வருமானத்தில் குடும்பம் பார்த்து வந்த நிலை, 1948-ஆம் ஆண்டில் கம்யூனிஸட் கட்சி  பாரதத்தை தந்திரமாக ஆண்ட பிரதமர் பணக்கார  ஜவகர்லால் நேருவின்  காலனிய ஆதிக்கக் கைக்கூலியான காங்கிரஸ் அரசைத் தூக்கி எறிய வேண்டுமென்...