திமுக ஏற்பாட்டில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் இன்று சென்னை வந்தார். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்திருந்தனர். 2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுவதில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்தனர். அதன்படி, நாளை நடைபெறும் தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் பங்கே...
நிதியைச் சேர்க்க நீதிக்கே வைக்கப்பட்ட 'தீ'-நீதிபதி குறித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கொதிப்பு. டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் முடிவு செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. நேற்று, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாக வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனால் அந்தக் கதை ஒரு பெரிய திருப்பத்தை எடுத்து இன்னும் பெரிய தீயை மூட்டுகிறது - அவரது அறைகளில் ஒன்றில் பணம் நிறைந்திருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் உள்ள அறையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்...