முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் வாக்களித்த என்ஆர்ஐ 3 பேர் கைது

தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் வாக்களித்த என்ஆர்ஐ 3 பேர் கைது கனடா நாட்டு குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்; குடியுரிமை பெற்ற நாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் சென்றபோது விரல்களில் இருந்த மையால் பிடிபட்டனர்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் வாக்களித்திருப்பது தொடர்பாக நேற்றிரவு வரை 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக தொடர்ந்து வெளிநாட்டினர் கைதாகி வருகின்றனர். தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் தமிழகத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு செல்ல முயன்றிருக்கின்றனர். ஆனால், அவர்களின் விரலில் இருந்த ஓட்டு போட்டதற்காக அடையாளத்திற்கு வைக்கப்பட்ட மை அவர்களைக் காட்டி கொடுத்திருக்கிறது. கையில் மை உடன், வெளிநாட்டு பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்களை பிடித்து விசாரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உத்தரவு . அதையடுத்து சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி என சர்வதேச விமான நிலையங்களில்,...
சமீபத்திய இடுகைகள்

டெல்லி ஆம்னி பேரூந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்சிபி நடவடிக்கை

டெல்லியில் தனியார் ஸ்லீப்பர் பேருந்தில் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆழ்ந்த கவலைக்குரிய ஊடகச் செய்திகளை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. புகாரின்படி, உயிர் பிழைத்தவர், வேலை முடிந்து வீடு திரும்பும் போது, ​​டிரைவர் மற்றும் கண்டக்டரால் பஸ்சுக்குள் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தலைவர், NCW, ஸ்ரீமதி. இந்த விவகாரத்தில் உடனடி, கடுமையான மற்றும் காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு விஜய ரஹத்கர் கடிதம் எழுதியுள்ளார். ஏழு நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை (ATR) ஆணையம் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர், பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), விசாரணையின் நிலை, குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கைது மற்றும் காவல் நிலை, நடத்தப்பட்ட மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனை, விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சான்றுகள் ஆகியவற்றின் மீது ஆணையம் ஏடிஆரை நாடியுள்ளது. உயிர் பிழைத்தவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு, பாதுகாப்பு, ஆலோசனை, சட்ட உத...

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனராக மகேஷ்குமார் அகர்வால் நியமனமாக வாய்ப்பு

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலையில் தமிழ்நாடு புதிய டிஜிபியாக நியமிக்கப்படும் பதவிக்கான முயற்சியில் மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் அவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல். தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் நிர்வாக ரீதியில் பல்வேறு நல்ல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். முதல்வருக்கான தனிச் செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். அந்த வகையில் வடக்கு மண்டல ஐஜியான அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக இடமாற்றம் செய்தார். தேர்தல் நேரத்தில் உளவுத் துறை ஐஜியாக அவினாஷ் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்த நிலையில் தற்போது புதிய மாற்றம் நடந்துள்ளது. அது போல் கடந்த அரசால் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்த வெங்கட்ரமணனை தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மாற்றி, அவருக்கு பதிலாக சந்தீப் ராய் ரத்தோர் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட டிஜிப...

இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின்  (Confederation of Indian Industry) தென் மண்டலத் தலைவர் பி.ரவிச்சந்திரன்,  தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ.முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தொழிற்துறை வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கொள்கை ரீதியிலான பங்களிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுடன் இந்தியத் தொழிற் கூட்டமைப்பு கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மை குறித்தும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் நிலையான பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில் லஞ்ச லாவண்யமின்றி கமிஷன் இல்லாமல் தமிழ்நாட்டை வளப்படுத்த தொழில் அதிபர்கள் வரலாம் என்ற நிலை முன்னெடுப்பாகப் பார்க்க முடிகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நேற்று தமிழ்நாடு அர...

தமிழ்நாடு பத்து காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

பத்து காவல்துறை அதி காரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.  உளவுத் துறையில் டிஜிபியான பாலநாக தேவி  சைபர் கிரைம் டிஜிபியாக  நியமிக்கப்பட்டார். வேலூர் சரக டிஐஜி-யான தர்மராஜன் சென்னை உளவுத்துறை (பாதுகாப்பு) டிஐஜி-யாக நியமனம்.. சென்னை சட்டம் – ஒழுங்கு (தெற்கு மண்டலம்) இணை ஆணையரான ப.கெர்லா செபாஸ் கல்யாண் சென்னை உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) டிஐஜி-யாக மாற்றப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜி-யான சரவணன் சென்னை சிஐடி (CID) உளவுத்துறை டிஐஜி-யாக நியமனம். திருவாரூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கராட் கருண் உத்தவ்ராவ் சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்பி-யாக மாற்றம். தென்காசி மாவட்டக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சென்னை ஸ்பெஷல் பிரான்ச் CID (I) எஸ்பி-யாக நியமனம். தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் மதன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID (I) எஸ்பி-யாக மாற்றம். ‘Q’ பிரிவு சிஐடி கண்காணிப்பாளர் சண்முகம் ஸ்பெஷல் பிரான்ச் CID (II) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரோ மண்டல குற்றப் பிரிவு சிஐடி கண்காணிப்பாளர் மாதவன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID ...

மீண்டும் புதுவை முதல்வரானார் ரெங்கசாமி

மீண்டும் புதுவை முதல்வரானார் ரெங்கசாமி. பாண்டிச்சேரி யூனியன் பிரதேச 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் என்.ரெங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதியிலும், அ.தி.மு.க ஒரு தொகுதியிலும்,ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் ல.ஜ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது  30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாண்டிச்சேரி சட்டப்பேரவைக்கு, ஆட்சி அமைப்பதற்கு 16 தொகுதிகள் தான் தேவை. ஆகவே 18 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ-க்கள், சட்டமன்றக் குழு கூடி அதன் தலைவராக என்.ரெங்கசாமியை தேர்வு செய்தனர். பாண்டிச்சேரி 2026 சட்டப்பேரவைமுதல்வர் என்.ரங்கசாமி பெற்ற மொத்த எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார், குடியரசுத்தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையைடுத்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர். ஆன்மிகம், ஆருடம், நல்ல நேரம் அகியவற்றில் அதீத நம்பிக்கை உடையவரான என்.ரங்கசாமி, பதவியேற்புக்காக தன்னுடைய ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தை ஆளுநர் மாளிகைக்கு தெரிவி...

ராகுல் மற்றும் கார்கே கோஷ்டிப்பூசலால் கேரள முதல்வராகத் தேர்வான வி.டி. சதீசன்

ராகுல் மற்றும் கார்கே கோஷ்டிப்பூசலால்  கேரள முதல்வராகத் தேர்வான வி.டி. சதீசன்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் பெயரை ராகுல் முன்மொழிந்த நிலையில், ரமேஷ் சென்னிதாலா பெயரை மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்த நிலையில் இருவருக்குமான கோஷ்டி பூசல் தீர ஐந்து நாட்கள் கடந்தது,  இந்த நிலையில் தற்போது  கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டார், கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஜக்கிய ஜனநாயக முன்னணி எனும் கூட்டணி 102 தொகுதிகளிலும், கம்யூனிஸட் இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றியை பெற்ற நிலையில்  காங்கிரஸ் கட்சியினுள் கேரளம் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி ...