முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தவெக காங்கிரஸ் கூட்டணி ஆடசி என்பதால் ஆட்சி அமைக்கத் தடுமாற்றம்

 தவெக தலைவர் விஜய் முதல்வராக 7ஆம் தேதி தவெக தலைவர் பதவி ஏற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தடபுட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு, விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது தகவல் தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருக்கிறது. இது அனைத்துமே தவெக உடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்த பின்பே அரங்கேறிய சம்பவம் என்பதும், இதன் பின்னணியில் என்ன நடந்தது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையான 118 தொகுதிகள் இல்லாத நிலையில் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக  கோர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வந்திருக்கிறார், மேலும் பாமக தரப்பிலும் செங்கோட்டையன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி தரப்பு தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள், எடப்பாடி இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை என்றாலும் கூட பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி பக்கம...
சமீபத்திய இடுகைகள்

மேற்கு வங்காள முதல்வராகும் சுவேந்து அதிகாரி மே 9 ஆம் தேதி பதவியேற்பு

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தோல்வியடைந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தவறான காரணங்களைச் சொல்லி நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என அடம் பிடித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் தான் அவர் மீது பாயும்!.எதையும் மதிக்கத் தெரியாத அகம்பாவங்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை  மேற்கு வங்காளத்தில் மே மாதம் 9-ஆம் தேதியில் பதவியேற்பு விழா முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு ஆளுனர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறர்,       சுவேந்து அதி​காரி மற்றும் அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனையில் இறுதியில்  மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.​வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதி​காரி பதவி​யேற்க உள்​ளார். இதன் மூலம், தன் அரசி​யல் குரு​வான மம்தா பானர்​ஜி​யின் இடத்தை தட்​டிப் பறித்த சுவேந்து அதி​காரி. மேற்கு வங்காள தேர்​தலில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​த பாஜகவின் சட்​டமன்​றக் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்​டம், கொல்​கத்​தா​வில் நாளை வெள்ளிக்​ கிழமை மே  மாதம் 8 ஆம்...

அதிமுக எம்எல்ஏக்கள் 20 பேர் மாயம் முழு மெஜாரிட்டி பெறுகிறார் முதல்வர் விஜய்

மே மாதம் 4 ஆம் தேதி ,2026 அன்று 17 வது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான முடிவுகளை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 மே மாதம் 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் 16வது தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையை ஆளுநர் கலைத்துள்ளார்.                புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவையை வரவழைப்பதன் மூலம் அடுத்த அரசியலமைப்புச் சட்டச் செயல்முறை இப்போது தொடங்கும். எம்.எல்.ஏ.க்கள். உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்த பிறகு, சட்டசபை அதன் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும். இதைத் தொடர்ந்து, சபையில் பெரும்பான்மை ஆதரவைக் கோரும் கட்சியோ அல்லது கூட்டணியோ, தேவைப்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிறுவியதும், புதிய அரசாங்கம் முறையாக பதவியில் தொடரும். இந்த நடைமுறைகள் முடியும் வரை, நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள அரசாங்கம் பொதுவாக ஒரு கவனிப்புத் திறனில் செயல்படுகிறது.ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் ...