நிபந்தனை ஜாமீன் விதிமுளைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூப் நடத்திய சவுக்கு சங்கரை ஆந்திராவில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் மோசடி வழக்குகளில் கைதாகி, பின்னர் உடல்நலக் குறைவால் 12 வார கால இடைக்கால ஜாமீனில் வெளிவந்தவர், நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆஜராகத் தவறியதனால் அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனிப்படைகாவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அவரை ஆந்திராவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு காவல்துறை ‘குண்டர் தடுப்பு சட்டத்தின்’ (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை சிறையிலேயே அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர், அவர் மகன் துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த சட்ட நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்நால் அரசு அவரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி கே. பழனிசாமி தெரி...
ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸ் மூன்றாவது மகள் கவிதா ஜெய்கணேஷ் மருத்துவமனையில் நடந்தது இது? "எங்கள் குடும்பத்தைப் பிரித்த ஜிகே மணிக்கு மருத்துவமனையில் என்ன வேலை என கவிதா கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது." சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சூழலில், அவரை நலம் விசாரிக்க வந்த அக்கட்சியின் ஜி.கே. மணியை, மருத்துவர் ராமதாஸின் மூன்றாவது மகள் கவிதா ஜெயகணேஷ் கடுமையாகச் சாடியதுடன் திட்டி திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. காலங்கடந்து நடந்த போதும் சரியாக நடந்துள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மருத்த...