தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்.. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் லயோலா மணிக்கு நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் சி ஜோசப் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரான லயோலா மணி ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் தி.மு.க ஆட்சியில் பாடநூல் கழக தலைவராக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இதற்கான பணி நியமன ஆணையை லயோலா மணியிடம் நேரில் வழங்கினார். இந்த நியமனம் மூன்று ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பொறுப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி இருந்து வந்தார், இந்த அமைப்பின் தலைவராக லயோலா மணி மேற்கொள்ளவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் தங்குதடையின்றி விநியோகம் செய்வதைக் கண்காணிப்பது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க...
தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) இயக்குனரான ஏ. அருண், ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். DVAC-ன் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சென்னை காவல்துறை ஆணையரான ஏ. அருண், ஐபிஎஸ் சமீபத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார் தற்போது அவர் அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் 1998-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, DVAC-யின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே DVAC-யின் சிறப்பு புலனாய்வு பிரிவு-1-ன் ஐஜியாக பணியாற்றினார். இப்போது, அவருக்கு DVAC இயக்குநரின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், அருண் ஐபிஎஸ் மீது பல்...