ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸ் மூன்றாவது மகள் கவிதா ஜெய்கணேஷ் மருத்துவமனையில் நடந்தது இது? "எங்கள் குடும்பத்தைப் பிரித்த ஜிகே மணிக்கு மருத்துவமனையில் என்ன வேலை என கவிதா கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது." சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சூழலில், அவரை நலம் விசாரிக்க வந்த அக்கட்சியின் ஜி.கே. மணியை, மருத்துவர் ராமதாஸின் மூன்றாவது மகள் கவிதா ஜெயகணேஷ் கடுமையாகச் சாடியதுடன் திட்டி திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. காலங்கடந்து நடந்த போதும் சரியாக நடந்துள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மருத்த...
தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, பரப்புரை முடித்து கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். மகாதானபுரம் சந்திப்பில் சைக்கிளில் வலம் வந்து தொண்டர்களை உற்சாகமிகச் சந்தித்தார். பின்னர் கன்னியாகுமரி சீரோ பாயிண்ட். வரை சாலை வழி சந்திப்பை நிகழ்த்தினார். மகாதானபுரம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளில் நடிகர் விஜய் பேசுகையில், "இந்தக் கோடை கால வெப்பத்தில் எனக்காக நீங்க வந்திருக்கீங்க. உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். இங்கு சில விஷயங்களை நான் அறிவிக்கலாம் என இருக்கிறேன். இலஞ்சமில்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் போய் சேரும். அதற்கெனத் தனியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டைப் போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும். மீன்பிடித் தடைக்கால நிதி ரூபாய் .8,000 லிருந்து ரூபாய் .20,000 மாக உயர்த்தப்படும் இலங்கைக் கடற்படையிடம் பிடிபட்ட படகுகளை தூதரகத்தில் பேசி மீட்கும் வரை படகு உரிமையாளருக்கு ரூபாய்.5 லட்சம் நிதி வழங்கப்படும் மீனவர்கள் படகு டீசல் மானியம் 1,500 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும் கடல்தா...