திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு மூன்றேகால் ஆண்டுகள் சிறை தண்டனை திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்த எழும்பூர் நீதிமன்றம் 2023-ஆம் ஆண்டு ஆளுநர்-நடிகை குஷ்பூ பற்றி ஆபாசமாக, அவதூறாகப் பேசிய பேச்சுக்கு விசாரணை முடிவில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது . பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்வதென்றால் ஒரு மாத கால அவகாசம் என தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மாநில ஆளுநர் குறித்து அவதூறான கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாடு ஆளுநர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பா...
வங்காள தேசத்தில் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்ததில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி வந்தது. வங்க தேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. 18 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நடந்தது. வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில், ஒரு த...