சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு சென்னை உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒரு வழக்கில் தோல்வியுற்றனர். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1421 நாட்கள் சுமார் 4 ஆண்டுகள் காலதாமதமானது. அதாவது தாமதம் செய்தனர் காரணம் கேட்டால் அவர்கள் கூறிய பதில் "கோப்புகள் தொலைந்து விட்டது!" என்பதே தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்ஷவா மற்றும் நீதிபதி G.அருள்முருகன் இணை அமர்வு அதை கடுமையாக கண்டித்தது: "போதுமான காரணமே இல்லை மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது" "இது ஒட்டு மொத்த அலட்சியமாகவே இருக்கலாம், அல்லது எதிர் தரப்புடன் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம்!" அல்லது லஞ்சம் வாங்க பேரம் பேசுகின்ற முறையாகக் கூட இருக்கலாம் "அரசு என்பதால் தாமதம் மன்னிக்கப்படும் என்று நினைக்கக் கூடாது" இந்த வழக்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் இது அலட்சியமா, திட்டமிட்ட சதியா எனக் கண்டறிய வேண்டும் இந்தத் தீர்ப்பின் நகல் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் உச்ச நீதிம...
பாஜகவால் பழி வாங்கப்பட்டவர் பத்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் அதிமுக பொதுச் செயளாளர் பதவி வரும் எனக் காத்திருந்த வி. கே.சசிகலா நடராஜன் புதிதாக கட்சிமைத் தொடங்கவில்லை! ஆனால் விலைக்கு வங்கி அதில் இணைந்துள்ளார் .மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு 'அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தார். அதைத்தான் தனது கட்சிப் பெயராக விலைக்கு வாங்கி வி. கே.சசிகலா நடராஜன் அறிவித்தார். அதாவது அஇபுதமமுக கட்சியை வாங்கி இணைந்துள்ளார். அதுவே தேர்தல் ஆணையத்தின் பதிவு. கூறும் உண்மை. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல் போட்டிகளில்...