முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மத்திய பதிவு சட்டத்திற்கு விரோதமாக மாநில பதிவு திருத்தச்சடடம் 34 சி உள்ள நிலையில் அதை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் புதிய திருத்தம் பிரிவு 34-C  சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ரத்து செய்தது. போலிப் பத்திரப்பதிவுகளைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தன்னிச்சையானதாக இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த  உத்தரவைப் பிறப்பித்தது.பிரிவு தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற இந்த புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியதன்படி, அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது அசல் மூலப் பத்திரம், சொத்தின் முந்தைய அசல் பத்திரம் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  பத்திரம் பதிவு செய்வதற்கு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட தற்போதைய வில்லங்கச் சான்றிதழ் .  பூர்வீகச் சொத்தாக இருந்தால் வருவாய்த்துறை வழங்கிய பட்டா.அசல் பத்திரம் தொலைந்திருந்தால் காவல்துறை வழங்கிய கண்டுபிடிக்க முடியவில்லை என்ற Non-traceable Certificate மற்றும் ஆங்கில தமிழ் நாளிதழ்களின் விளம்பரம். தேவை என்ற நிலையில் இந்தச் சட்டத்திருத...
சமீபத்திய இடுகைகள்

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் ஏல இணையதளம் துவக்கம்

 தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் ஏல இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பின் (நாஃபெட்) NAFEX.in என்ற ஏல இணையதளத்தை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர்  சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர்  கிரிஷன் பால் குர்ஜா, கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் அஷீஷ் குமார் பூடானி, நாஃபெட் தலைவர் ஜீதாபாய் அஹிர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு இன்று NAFEX.in, டிரிஷ்டி, ஈஆர்பி, நாஃபெட் கல்யாண் ஆகிய நான்கு பெரும் முன்முயற்சிகளை தொடங்கியுள்ளதாக கூறினார். NAFEX.in, இதர முன்முயற்சிகள் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். ஏனென்றால், 2014-ம் ஆண்டு நாஃபெட் மூடப்படும் நிலையில் இருந்தது என்றும், இந்த முயற்சிகளின் காரணமாக, தற்போது நாஃபெட் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். அத்துடன் ரூ.500 கோடி லா...

பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், குடிமக்கள் சார்ந்த சேவைகளை மேம்படுத்த மண்டலப் பயிலரங்கம்

பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், குடிமக்கள் சார்ந்த சேவைகளை வழங்கலை மேம்படுத்துவதற்கான மண்டலப் பயிலரங்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில், சேவையிலிருந்து வளமை என்ற தலைப்பில் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், சேவை வழங்குதல் குறித்த மண்டலப் பயிலரங்கை இன்று நடத்தியது. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜம்மு-காஷ்மீர் அரசின் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு. ஜாவீத் அகமது தார், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு. விவேக் பரத்வாஜ், பிற உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுச் சேவை மையம், ஜம்மு-காஷ்மீர் அரசின் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதி...

போர்ட் லூயிஸ் துறைமுகத்திலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் தர்காஷ் புறப்பட்டது

மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் துறைமுகத்திலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் தர்காஷ் புறப்பட்டது இந்தியக் கடற்படையின் மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான தர்காஷ், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பணிகளுக்காக, மொரிஷியஸ், போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் தனது பயணத்தை நிறைவுசெய்து, 22 ஜூன் 2026 அன்று புறப்பட்டது. இந்தப் பயணத்தின் போது, கப்பல் பணியாளர்கள், நட்பு ரீதியில்  விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்பந்துப் போட்டி, மொரிஷியஸ் தேசிய கடலோரக் காவல்படை வீரர்களுக்கான தொழில்முறைப் பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு துறைமுக நடவடிக்கைகளில் பங்கேற்றனர். மேலும், 21 ஜூன் 2026 அன்று இந்தக் கப்பல் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது. இதில், புலம்பெயர்ந்த இந்தியர்கள், உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 450 பேர் கலந்துகொண்டது மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஐஎன்எஸ் தர்காஷ் நீர்மூழ்கிக் கப்பலின் படைப்பிரிவு அதிகாரி கேப்டன் ரோஹித் மிஸ்ரா, காவல்துறை ஆணையர் திரு ராம்பேர்சாத் சூரூஜேபல்லி, பிஎம்எஸ்எம், மொரிஷியஸ் நாட்டிற்கான இந்திய காவல்  ஆணையரும், மொரிஷியஸ் நாட்...

தமிழ்நாடு 14 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு 14 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல்துறை ஆணையர்கள் நியமனம். உள்துறைச் செயலாளர் கே.மணிவாசன்  உத்தரவு: தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் அதிகாரியான ஆயுஷ் மணி திவாரி தற்போது  தலைமையிடத்து கூடுதல் டிஜிபி-யாக நியமனம், திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையரான எஸ்.ராஜேந்திரன்  மதுரை மாநகர் காவல்துறை ஆணையராகவும், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் கபில்குமார் சரத்கர் வட சென்னை கூடுதல் ஆணையராகவும், வடசென்னை பணியில் இருந்த பிரவேஷ் குமார் இப்போது கடலோரப் பாதுகாப்புக் குழும ஐஜி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி-யான எஸ்.ராஜேஸ்வரி  திருப்பூர் மாநகர் காவல்துறை ஆணையராகவும், சேலம் மாநகர் காவல்துறை ஆணையர் அனில் குமார் கிரி தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாகவும், சென்னை போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையரான ஜி.கார்த்திகேயன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி-யாகவும், அப் பணியில் இருந்த பி.சாமுண்டீஸ்வரி சென்னை போக்குவரத்து காவல்த...

திருமறைக்காட்டின் ஆலய வாரணி ஆதினத்திற்கு உரிய நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் வெளியேற்றம் சட்டப்படி துவங்கியது

திருமறைக்காடு எனும் வேதாரண்யம் இலங்கை இராவணன் அரண்மணையின் பின்பகுதிதான் அதன் கோடியக்கரை இலங்கை யாழ்ப்பாணக் கோயில்களில் வேதாரணியத்தின் செல்வாக்கு  யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் வேதாரணியக் குருக்கள் மரபினர் பூஜகர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்தகாலத்தில், யாழ்ப்பாணத்து ஆலயத் திருவிழாக் காலங்களில் வேதாரணியம் வழியாக நெடுந்தீவுக்கு வரும் தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்படுவர். இவ்வாறு ஒன்றிணைதலை, 'மேளங்கட்டுதல்' எனச் சொல்லும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு. யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவின் நடுக்குறிச்சியில் அமைந்துள்ள பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், நெடுந்தீவில் நைமித்திய பூசை இடம்பெற்ற முதலாவது ஆலயம் எனக் கருதப்படுகிறது.       ' உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு '   “சுமார் 300ஆண்டு காலப் பழமையுடன், இந்தியாவுக்கு அணித்ததாய் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டிருந்த வேளையில், வேதாரணியத்துச் சைவக் குருமார், சைவப் பண்டாரங்கள் ஆரம்ப காலங்களில் இங்கு கொடியேற்றி, திருவிழாக்களை நடத்தி வந்தனர். கர்ப்பக் கிரஹ விக்கிரகமும் வேதாரணியத்தில...

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி.

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி. சட்டப்பேரவையில் அப்பா எங்கே எனக் கேட்டு சிறு கதை சொன்ன முதலமைச்சர் ரசித்துச் சிரித்த எடப்பாடி கே. பழனிசாமி. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தவிர பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என்ன நிலைமை என்பது தெரியாது, ஜேசிடி பிரபாகர் சிறப்பாகவே நடத்துகிறார். மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஒரு திருத்தம் சொல்லி அதை இணைக்கச் சொல்கிறார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஒப்புதலோடு அதை இணைத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தீர்மானம் நிறைவேற்றுகிறார். குரல் வாக்கெடுப்புக்குப்பின்னே தீர்மானம் நிறைவேறுகிறது. மறுநாள், "புதிய திருத்தம் குறித்து எங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை தருகிறார். அதன் பின்னே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகமும், "புதிய திருத்தம், ஏற்புடையதல்ல" என்கிறார். அதற்குப் பின்னர்...