முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தவெகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு அதிகமானோர் மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சிப் பிரமுகர்கள், இன்று முதல்  தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொண்ட நிலையில், விருப்ப மனு பெற விரும்பும் கட்சியினர் , பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது  https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை முன்பே குறிப்பிட்ட த...
சமீபத்திய இடுகைகள்

புஜ் ராணுவ மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

புஜ் ராணுவ மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார் புஜ் ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், தென் பிராந்திய தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் உடன் இணைந்து பார்வையிட்டார். புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 3 முதல் 5 வரை நடைபெற்ற முகாமில் கட்ச் பிராந்தியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர். இந்த முயற்சியைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இந்திய ராணுவம் வீரர்களின் நலன் மற்றும் ராணுவ-குடிமக்கள் ஒத்துழைப்புக்கு இது ஒரு பாராட்டத்தக்க எடுத்துக்காட்டு என்று விவரித்தார். தொலைதூர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இத்தகைய விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்தியா

 இங்கிலாந்தை வென்று 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 6 -வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றது. 111 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி. 80 பந்துகளில் 175 ரன்களை எடுத்த இந்தியாவின்  சூர்யவன்ஷி. ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று வரலாற்று சிறப்புமிக்க ஆறாவது பட்டத்தை வென்றதற்காக இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் பலதிசைகளில் இருந்தும் வருகிறது, இது இளைஞர் கிரிக்கெட்டில் இந்தியாவின் நீடித்த சிறந்து விளங்குவதற்கு குறிப்பிடத்தக்க சான்றாகும். இந்த மறக்கமுடியாத வெற்றியானது வைபவ் சூர்யவன்ஷியின் ஒரு பரபரப்பான பிளிட்ஸ்கிரீக் நாக் மூலம் இயக்கப்பட்டது, அவரது மூச்சடைக்கக்கூடிய 80 பந்துகளில் 175 ரன்கள் இவ்வளவு இளம் வயதிலேயே அசாதாரணத் திறமை, தன்னம்பிக்கை மற்றும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இளம் கேப்டன் ஆயுஷ் மத்ரேவின் சிறந்த தலைமைத்துவம், நிதானமாக முடிவெடுப்பது மற்றும் முக்கியமான தருணங்களில் குழு வளங்களை திறம்பட பயன்படுத்தி, பார்வை மற்றும் அமைதியுடன் விளையாட்டு வெற்றி பக்கத்தை வழிநடத்தியதற்காக அவருக்கு சிறப்பான பாராட்டுக்கள். இந...

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் உச்சநீதிமன்றத் தடை நீக்கம் விசாரணை மீண்டும் புதிதாகத் துவங்குகிறது

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை  உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.  அதனால், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமித்துக் கொள்ளலாம் எனப் பொருளல்ல. உயர்நீதிமன்றம் அவசர கால வழக்காக எடுத்து விசாரித்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.  தமிழ்நாடு அரசின் சட்டங்கள் சரியா என்பது குறித்து முதலிலிருந்து மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் புதிதாக  முதலிலிருந்து  விசாரித்தாலும் தமிழ்நாடு அரசின் சட்டங்கள் உயிர் பெறுமா என்பது சந்தேகமே அச்சட்டங்கள் ஆளுநரின் உரிமையில் குறுக்கிடுவதாக இருக்கிறது என்பதுதான் முக்கியமான பிரச்சனை.  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஜனாதிபதி ஆளுநர் தாமதமே செய்தாலும், அவர்களின் அதிகாரத்தில் மாநில அரசுகளோ நீதிமன்றங்களோ தலையிட முடியாது என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு தெளிவாக  ஏற்றுக்கொண்டு விட்டது. அது தீர்ப்பு அல்ல என்றாலும் சட்ட ரீதியான கர...

மடப்புரம் கோவில் காவலாளி அடித்துப் படுகொலை செய்த வழக்கில் புகார்தாரி நிகிதா கைதாவது எப்போது

காவல்துறை விசாரணைக் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கில்  நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை சென்னை  உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தகவல்,   காவலர்களுக்கு நீதிபதி கடுமையான கண்டனம் காவல்துறை விசாரணை க் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரண வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையிலிருக்கட்டும் என உத்தர விட்டார். சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் நிகிதா என்பவரது காரை நிறுத்தி வைக்க ச் செய்ய கோவில் காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார். அவரும் நிகிதாவின் காரை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டதாகவும...