சுதந்திரப் போராட்ட வீரர் தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது. இந்த நிலையில், ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியின் அஸ்தியை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அனிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஒரே மகள் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார். இவர் 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் எமிலி ஷென்கல் இவரது தய் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள ஆ...
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரம் முக்கியம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை கடந்த 3-3-2025 முதல் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை தனியார் மழலையர் பள்ளி விவகாரத்தில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' எனக் கோரப்பட்டது. அதன்படி வகுக்கப்பட்ட இளம் மழலையர் பள்ளி விதிகள் :- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த அரசு அறிவிப்பில், “இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் https://share.google/DZI1Fl3aDxkz43x9R அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி...