முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிரந்தரத் துணை வேந்தர் நியமனம் வரை புதிய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிரந்தர துணை வேந்தர் நியமனம் வரை புதிய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ரவியின் பதவிக்காலம் மற்றும் ஓராண்டு பணி நீட்டிப்புக்காலம்  ஆகஸ்ட் 21, 2026 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பு துணை வேந்தராக நியமனம் ஆன ஜே. ஜெயகாந்தன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவான Syndicate உறுப்பினராகவும், அறிவியல் புல முதன்மைப் பேராசிரியர் Dean of Science ஆகப் பணியாற்றுகிறார். மேலும், உயிரித் தகவலியல் எனும் Bioinformatics துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். கடந்த திமுக ஆட்சி முதல் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே நிலவும் துணைவேந்தர் தேர்வுக் குழு மற்றும் யூஜிசி தொடர்பான சட்டச் சிக்கல்களால், பல்கலைக்கழகத்தின் தினசரி நிர்வாக நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருக்க இந்த இடைக்கால ஏற்பாடு தற்போது செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளின்படி மூத்த பேராசிரியரான இவருக்கு இந்தக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த நியமனம் முறையா...
சமீபத்திய இடுகைகள்

ஈசனைக் காண கைலாயம் போனவர்கள் நேபளத்தில் தற்போதய நிலை

நேபாளத்தின் ராசுவா  மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சுமார் 400 பேர் குறித்து தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளனர். இன்று புதன்கிழமை  ஆகஸ்ட் 26, 2026 அதிகாலையில் போதே கோசி  நதியில் பனி உறுகி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எல்லைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 390 ஆன்மீக சுற்றுலா யாத்ரீகர்கள் ராசுவாகதி  எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்  அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் 105 இந்தியர்கள், 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் சில வெளிநாட்டினரும் நேபாளிகளும் அடங்குவர். நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் மிதேரி பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பல பாலங்களும் சாலைகளும் சேதமடைந்தன.நேபாளம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது காத்மாண்டு நகரில் தொடங்கி திபெத் எல்லை வழியாகச் செல்லும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். காத்மாண்டுவிலிருந்து ரசுவாகடி மற்றும் கெருங்  எல்லை வழியாக திபெத் நுழைந்து கைலாஷ் செல்வது பொதுவான வழியாகும்.  இப்பயணம் பொதுவாக...