தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், லண்டனில் ரூபாய் .11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கிரேட் பிரிட்டன் லண்டன் நகர் சென்றுள்ள நிலையில், இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Samvardhana Motherson International Limited.முதலீட்டுத் தொகை: ரூபாய் .11,000 கோடி. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி ஆகிய பிரிவுகளில் இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தப் புதிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டுதல் துறையின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனத்தின் பிரிவுத் தலைவர் பேரி பெயிண்டர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா Motherson International Ltd., நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டி...
சித்தர் கடித்து வழங்கிய ஆப்பிள் நிறுவன முத்திரையாகி வளர்ந்த சுவாரஸ்யக் கதை சிறப்புச் செய்திகள் : திருப்பதி ரெங்கநாதன் லக்ஷ்மி நாராயண் சர்மா எனும் லக்ஷ்மண் தாஸ் உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் கிராமத்தில் ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்தார். மிக இளமையான வயதிலேயே ஆன்மீகத் தேடலின் வீட்டை விட்டு வெளியேறி, வட இந்தியா முழுவதும் துறவியாகத் திரிந்த பின்னர், தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். 1958-ஆம் ஆண்ட்டில் முழுமையாக துறவு வாங்கி சந்நியாசம் மேற்கொண்டார். ஹிந்து ஆன்மீக குரு மற்றும் ஹனுமன் பக்தர் சீடர்களால் இவர் அன்போடு "மஹாராஜ்-ஜி" என அழைக்கப்பட்டார் ஒருமுறை பாபா இரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய ரயில்வே பரிசோதகர் (TT), 'நீம் கரோலி' என்ற அடுத்த நிறுத்தத்தில் பாபாவை இரயிலிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார். பாபா இரயிலை விட்டு இறங்கி அருகில...