முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார்

தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 30-07-2026) காலமானார்.  அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன. ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமுனா ராணி. வரதராஜுலு  திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அக் காலத்திலேயே நடத்தி வந்துள்ளார். ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார். தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 1...
சமீபத்திய இடுகைகள்

தில்லைக்கும், திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்த பெருமாள்

தில்லைக்கும், திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்த பெருமாள் பாண்டியன் மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் " கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப வெண்டிரை மகர வேலை கொடுபண்டியன் ஆயிரம் பணைபணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒரு பெருங்கடவுளும் வந்தினிதுறையும் பெருங்காவிரியிடை நிலத் திலங்கு திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலாபாரமேறிப்பொன்மாலையன்ன பொலிந்து தோன்றவும் பொன் வேய்ந்தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅல் உதய வெற்பெயவர்மன் திருவளர் குலமணிச் சிங்காசனமிசை மரகத மலையென மகிழ்ந்தின தேறிந்தரபாண்டியன்" பாண்டிய மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் பொது ஆண்டு 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடினான். மஹாராஜாதி இராஜ ஸ்ரீபரமேஷ்வரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைஉடையவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவனான மன்னன் பிற்காலப் பாண்...

இந்திய சட்ட வரலாற்றில் முதன்முறையாக, லா ஃபார்ம்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் கட்டாயப் பதிவு,

இந்திய சட்ட வரலாற்றில் முதன்முறையாக, லா ஃபார்ம்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் கட்டாயப் பதிவு, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய மாநில பார் கவுன்சில் தனது முதல் கூட்டத்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கும் வரை, அத்தியாவசிய சட்டப்பூர்வ, நிதி மற்றும் நிர்வாகப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI ) 31.07.2026 அன்று 9 பக்கங்களைக் கொண்ட விரிவான இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது .தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் மட்டக் குழுவால் ஜூலை 2026-ல் வெளியிடப்பட்டன. இதில் பி.எஸ்.அமல்ராஜ் , கே. பாலு, எம். வேல்முருகன் ஆகியோர் வெற்றி பெற்ற முக்கிய உறுப்பினர்களாவர்.தேர்தல் மார்ச் 30, 2026 ல் நடந்த வாக்குப்பதிவு சதவீதம்: 81 சதவீதம் மொத்த இடங்கள்: 23 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (2 நியமன இடங்கள் தவிர்த்து) முன்னுரிமை வாக்கு முறையில் 86 நாட்கள் நடைபெற்றது. முக்கிய வெற்றி பெற்றவர்கள்பி.எஸ். அமல்ராஜ் (...

வி.செந்தில் பாலாஜி மீது கைது வாரண்ட் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

வி.செந்தில் பாலாஜி மீது கைது வாரண்ட் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - பாஸ்போர்ட் ஒப்படைக்க உத்தரவு! சென்னை   உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,  திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு எதிராக சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணையின் போது, ​​பொது கருவூலத்திற்கு  ரூபாய் 17 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அரசு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் கூறுகையில், ரூபாய் 17 கோடி என்பது பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே என்றும், பொது கருவூலத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறைந்தபட்சம் ரூபாய் 100 கோடியாக இருக்கலாம் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் காவலில் வைத்து விசாரணை செய்வது முற்றிலும் அவசியம் என்றும் அரசு பப்ளிக் பிராஷகியூட்டர் தெரிவித்துள்ளது. Party Fund' பெயரில் மாதம் ரூபாய் 102 கோடி களவாடியது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐஏஎஸ் விசாகன் உள்ளிட்டோர் மீது வழக்கு; மன்...

உயர் நீதிமன்றத்தில் வாதிட 83 அரசு வழக்கறிஞர்களை சட்ட அதிகாரிகளாக நியமனம்

தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் வாதிட  83 அரசு வழக்கறிஞர்களை சட்ட அதிகாரிகளாக நியமித்தது.    தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் அதன் மதுரை கிளைக்கும் மாநில அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 83 சட்ட அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் இவர்களுடன் 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்களையும் பொதுத்துறை நியமனம் செய்துள்ளது.    சென்னை உயர் நீதிமன்றத் தலைமை அமர்வு மற்றும் மதுரை கிளைக்கு 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் உட்பட மொத்தம் 91 வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், பி.வி. பாலசுப்பிரமணியம், டி. கௌதமன், பி. சரவணன், ஏ. அப்துல் ஹமீது, ஜே. பரதன், எஸ். அர்ஜுன் சுரேஷ், எஸ். குமரேசன் மற்றும் கவிதா நித்யானந்தன் ஆகிய 8 பேர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் மற்றும் கௌதமன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மாநில அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர், கூடுத...

ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேம்படுத்த 2 புதிய மண்டலங்கள்

தமிழ்நாட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேலும் திறம்படவும், விரைவாகவும் செயல்படுத்தும் நோக்கில், புதிய மண்டலங்கள் பிரித்து தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு.    ஹிந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கையாக புதிதாக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்கள் உருவாக்கம்; வடக்கு மண்டலத்திற்கு சென்னை, தெற்கு மண்டலத்திற்கு திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையில் கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம், கோயில் நிர்வாகம், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கோயில் சொத்துகள் பாதுகாப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, வரவு மற்றும் செலவு ஒப்புதல், தணிக்கை, குத்தகை மற்றும் ஏல அனுமதி, திருப்பணிகள், கும்பாபிஷேகம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் கூடுதல் ஆணையர்களுக்கு பகிர்ந்தளிப்பு, தமிழ்நாடு ஹிந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம், 1959-ன் பிரிவுகள் 13 மற்றும் 13-A கீழ் நிர்வாக அதிகார வரம்புகள் நிர்ணயம் தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு, அரசாணை. மாநிலம் முழுவதும் சென்னை (வட மண்டலம்) மற்றும் திருச்சிராப்பள்ளி (தென் மண்...