முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஸ்ரீ ரங்கம் கோயில் ரூபாய்.50 கோடி நில மோசடி திமுக நிர்வாகி மீது FIR பதிவு

 ஸ்ரீ ரங்கம் கோயில் நில மோசடி > *ரூ.50 கோடி கோயில் நிலம் ஆவணங்களில் கபளீகரம்!* > *திமுக நிர்வாகி மீது FIR பதிவு* - 2022-ல் போலி பதிவு ஆவணங்கள் மூலம் கோயில் நிலம் கையகப்படுத்தல் - திமுக நிர்வாகி ஈடுபாடு - FIR பதிவு - ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தில் திமுக கட்சி அலுவலகம் செயல்பாடு - மோசடி மதிப்பு: ₹50,00,00,000/- (50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி - ரூ.50 கோடி FIR விவரம் | ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரூ.50 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக திமுக பிரமுகர் மீது FIR. IPC 420, 468, HR&CE Act 29 விவரம்.  ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி, Srirangam temple land fraud, திமுக நில அபகரிப்பு, HR&CE land case, தமிழ்நாடு கோயில் நில மோசடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி: ரூபாய் .50 கோடி கோயில் நிலத்தை அபகரித்ததாக திமுக பிரமுகர் மீது FIR - முழு சட்ட விவரம்  தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் .50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் S.சிவ ராம்குமார் மீது ஸ்ரீரங்கம் க...
சமீபத்திய இடுகைகள்

மூத்த பத்திரிகையாளர் பாயல் மேத்தா காலமானார்

மூத்த பத்திரிகையாளரும் சிஎன்என்-நியூஸ்18  தொலைக்காட்சியின் உதவி ஆசிரியருமான பாயல் மேத்தா ( வயது 46), மும்பையில் காலமானார். மும்பைக்குச் சென்றிருந்த பாயல் மேத்தாவுக்கு, 2026 செப்டம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு (நெஞ்சுவலியோ அல்லது கடுமையான அசெளகரியமோ) ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 20 இன்று அதிகாலையில் காலமானார்,  அவர் நாடாளுமன்றச் செய்திகள், மத்திய அரசு மற்றும் பாஜக அரசியல் நகர்வுகளைத் துல்லியமாக சேகரித்து வழங்குவதில் மிகவும் பிரபலமானவர், இவரது திடீர் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல அரசியல் தலைவர்களும், இந்தியப் பத்திரிகையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

23 வருட ஏமாற்றமா? அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை - OC/BC/MBC மாணவர்களுக்கு வாய்ப்பு எங்கே?

தமிழ்நாட்டில் அயல்நாட்டு உயர் கல்வி உதவித்தொகை பற்றி தகவலின் உண்மை நிலவரம் இதோ: தமிழ்நாட்டில் முழுமையான அயல்நாட்டு ஸ்காலர்ஷிப் திட்டம் SC/ST மாணவர்களுக்கு மட்டுமே பெரிய அளவில் உள்ளது. OC/BC/MBC மாணவர்களுக்கு அதே அளவு திட்டம் இல்லை என்பது தான் பல ஆண்டுகளாக விவாதமாக உள்ளது. *1. SC / ST மாணவர்களுக்கான திட்டம் - அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி திட்டம்* - தொடங்கப்பட்டது 2003-ல், 2023-ல் சீரமைக்கப்பட்டது - தகுதி: குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை, ரூ.8-12 லட்சம் இருந்தால் ரூ.24 லட்சம் வரை - வயது: முதுகலைக்கு 35, PhD-க்கு 40 - உலக Top 1000 QS பல்கலைக்கழகங்களில் படிக்கலாம், டியூஷன் + தங்குமிடம் + விமான டிக்கெட் + விசா அனைத்தும் அடங்கும் - 2025-26ல் அரசு ரூ.131 கோடி ஒதுக்கி 362 மாணவர்களுக்கு வழங்கியுள்ளது  *2. BC / MBC / DNC மாணவர்களுக்கு என்ன உள்ளது?* தமிழ்நாடு அரசின் நேரடி அயல்நாட்டு ஸ்காலர்ஷிப் BC/MBC-க்கு இல்லை. ஆனால் இவை உள்ளன: - *மத்திய கல்வி நிறுவன ஸ்காலர்ஷிப்:* IIT, IIM, NIT, மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் BC/MBC/DNC மாணவர்களுக்கு ஆ...

தொழிலதிபரான எம் எல் ஏ ஒருநாள் பிச்சைக்காரரான அனுபவம்

மஹாராஷ்டிராவின் மிகப்பணம் படைத்த பாஜக எம்.எல்.ஏ மற்றும் தொழிலதிபரான பராக் ஷா, செப்டம்பர் 2026-ல் அவரது ஆடம்பர வாழ்க்கையை விடுத்து, மும்பை வீதிகளில் ஒரு நாள் பிச்சைக்காரர் வேடமிட்டு யாசகம் பெற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. இந்த சுவாரசியமான சம்பவம்  பிச்சைக்காரனாக மாறியதற்கான காரணம் பராக் ஷா ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் மும்பை காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தனக்கு ரூபாய் .3,383 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.  அவர் குஜராத்தி ஜைனம் எனும் சமண மதத்தைச் சேர்ந்தவர். ஜைன மதப் புனித மாதத்தையொட்டி, மனிதர்களுக்குள் இருக்கும் அகந்தை, பணத் திமிர் மற்றும் அதிகார போதையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவரது ஆன்மீகக் குருவான நம்ரமுனி மகாராஜின் அறிவுரையின்படி இந்த வித்தியாசமான முயற்சியை அவர் மேற்கொண்டார். அடையாளம் தெரியாத தோற்றமாக மாறிய வேடம்: தனது பாதுகாவலர்கள், சொகுசு கார்கள் மற்றும் விலைமதிப்பற்ற உடமைகளைத் தவிர்த்துவிட்டு, அழுக்கான ஆடைகள்...

வீரமங்கை வேலுநாச்சியாரை 8 ஆண்டுகள் பாதுகாத்த விருப்பாச்சி கோபால நாயக்கர் - மறக்கப்பட்ட வரலாறு!

விருப்பாச்சி கோபால நாயக்கர் வரலாறு - வேலுநாச்சியாரை பாதுகாத்த மாவீரர்* திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே உள்ள விருப்பாச்சி பாளையத்தின் 19-வது பாளையக்காரர். மதுரை நாயக்கர்கள் காலத்தில் தமிழகம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் விருப்பாச்சி. இயற்பெயர் *திருமலை குப்பள சின்னய்ய நாயக்கர்*. 1725-ல் வீரய்யா நாயக்கர் - காமாட்சி அம்மாள் தம்பதிக்கு பிறந்தார். இவர்தான் பிற்காலத்தில் கோபால நாயக்கர் என்று அழைக்கப்பட்டார். 1772 ஜூன் 25 காளையார் கோவில் போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயர் - ஆற்காடு நவாப் கூட்டுப்படையால் கொல்லப்பட்டார். கணவரையும், நாட்டையும் இழந்த ராணி வேலுநாச்சியார் தனது கைக்குழந்தை வெள்ளச்சி, அமைச்சர் தளவாய் பிரதானி தாண்டவராய பிள்ளை, தளபதிகள் மருது பாண்டியர் சகோதரர்களுடன் தப்பினார். பிரதானி தாண்டவராயன் பிள்ளை தான் விருப்பாச்சியை தேர்வு செய்தார். காரணம், அப்போது விருப்பாச்சி மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயரால் எளிதில் நுழைய முடியாத பாதுகாப்பான இடம். இராணி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்த *திண்டுக்க...

சிட்டா அடங்கலுக்கு மீன் வறுவல் லஞ்சம்! ஆடியோ வைரல் - பணியிடை நீக்கம்

கரூர் தேவர்மலை VAO கார்த்தி அதிர்ச்சி - சிட்டா அடங்கலுக்கு மீன் வறுவல் லஞ்சம்! ஆடியோ வைரல் - பணியிடை நீக்கம் கரூர் மாவட்டம் தேவர்மலையில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வருபவர் கார்த்தி. அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயக் கடன் பெறுவதற்காக சிட்டா அடங்கல் கேட்டு மனு அளித்திருந்தார். சம்பவத்தன்று விவசாயி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிட்டா ரெடியாகிவிட்டதா என கேட்டுள்ளார். அதற்கு VAO கார்த்தி, "பாளையத்தில் இருக்கிறீர்களா? வரும்போது ஒரு கடையில் இரண்டு மீன் வறுவல் நல்லா எண்ணெயில் பொரித்து, வெங்காயம் தனியாக கட்டி வாங்கி வாருங்கள்" என்று கூறியதாக தெரிகிறது. அருகில் இருந்த விவசாயியின் மகன் போனை வாங்கி, "அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா?" என கேட்க, சுதாரித்துக் கொண்ட VAO, "ஹலோ ஹலோ சரியாக கேட்கவில்லை, நீங்கள் மீன் வாங்கி வர வேண்டாம், வந்து சிட்டாவை வாங்கிக் கொள்ளுங்கள்" என கூறி போனை வைத்துள்ளார்.`Karur, VAO, Lanjam` இந்த உரையாடலை விவசாயி தரப்பு ஆடியோ ரெக்கார்ட் செய்துள்ளது. தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து மாவட்ட...

கருப்பு முருகானந்தம் மீது புகாரளித்த பாஜக பெண் பிரமுகரின் பதவி பறிப்பு - பரபரப்பில் தமிழக பாஜக

தமிழ்நாடு பாஜகவின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளரான திவ்யா சேஷாத்ரி (எ) டாக்டர் திவ்யா MP, கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.*"Divya Seshadri"* *"Karuppu Muruganandam"* முன்னதாக, மாநில பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் மீது, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் திவ்யா சேஷாத்ரி, பாஜக தேசிய மற்றும் மாநில தலைமையிடம் செப்.12 அன்று விரிவான புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறி, கருப்பு முருகானந்தத்தை மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உடனடியாக நீக்கினார்.  இதனை தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு மற்றும் விதிகளின்படி, புகார் அளித்த திவ்யா சேஷாத்ரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் வகித்து வந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு முருகானந்தம் தரப்பில், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்று...