முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளில் தலைவர்கள் அஞ்சலி

 டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: "நமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் ஆழ்ந்த ஞானமும், உறுதியான தலைமையும் மிகவும் பெருமைக்குரியவை. ஜனநாயகம் மற்றும் ஒற்றுமையின் பாதுகாவலராக அவரது முயற்சிகள் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அன்னாரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.” என்றார் மேலும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார் நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை  முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (03.12.2023)  மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி)
சமீபத்திய இடுகைகள்

பாஜக-வின் மூன்று மாநிலத் தேர்தல் வெற்றி 2024 ஆம் ஆண்டின் வெற்றியின் கட்டியம் கூறல்

பாஜக-வின் மூன்று மாநிலத் தேர்தல் வெற்றி 2024 ஆம் ஆண்டின் வெற்றியை  கட்டியம் கூறுகிறது' - நடைபெற்று முடிந்த நான்கு  சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.  ஆட்சியிலிருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்தது. இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறதென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை  அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது  “இன்றைய ஹாட் டிரிக் வெற்றி, 2024 ஆம் ஆண்டுக்கான ஹாட்டிரிக் வெற்றியை உறுதி செய்துள்ளது.” எனத் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களிடம் 40 நிமிடங்கள் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோஷம் தான் வெற்றி அடைந்தது. நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் வெற்றியடைந்தன” என்றார். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மக்கள் தம் மீது அன்பை பொழிந்தனர் , பாஜக வெற்று வா

அமலாக்கத்துறை உயர் அலுவலருக்கு அரசு மருத்துவ அலுவலர் லஞ்சம் கொடுத்து வாங்கிய வழக்கில் இனி என்ன நடக்கும்

சட்டம் விதிகள், அரசானைகள் எல்லாம்  சொல்வது யாதெனில் , இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் கொடுத்தவன் குற்றவாளி, இலஞ்சம் வாங்குவதும் குற்றம் வாங்கியவன் குற்றவாளி  இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுபவர் மத்திய அரசின்  பணியாளர் உயர் அலுவலர், அவர் இலஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுபடும் நபர் மாநில அரசின் ஊழியர் அரசு மருத்துவ அலுவலர்.  இலஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் மத்திய அரசு பணியாளரைக் கைது செய்த  தமிழ்நாடு அரசு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை,   ஏற்கனவே 31 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கொடுத்ததாகக் கூறும் தமிழ்நாடு  அரசு மருத்துவ அலுவலரைக் கைது செய்யாமல் தான் பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டு எழாமலில்லை  செலவு கணக்கில் காட்டாமல் 31 லட்சம் ரூபாய்  இலஞ்சம் கொடுக்க மட்டும் அரசு மருத்துவ அலுவலருக்கு பணம் எங்கிருந்து வந்தது? என்ற வினா எழாமல் இல்லை, நேற்றுக் கொடுக்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் மட்டுமே இலஞ்ச ஒழிப்புத்துறையால் மருத்துவர் கொண்டுவந்து அவரால் கொடுக்கப்பட்ட பினாப்தலின் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களாகும் அரசு மருத்துவ அலுவலர் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் அவர் ஏன் 51 இலட்

கனிமவள புவியியல் சுரக்கத்துறையின் 49 நபர்கள் பணியிடமாற்றம்

கனிமவள புவியியல் சுரக்கத்துறை அலுவலர்கள் பணியிட மாறுதல் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் கூடுதல் பொறுப்பு வகித்த கரூர் மாவட்ட உதவி இயக்குநர் ஜெயபால், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு.  திருச்சிராப்பள்ளி மாவட்ட இணை இயக்குநர் சரவணன், பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக்  கவனிக்க உள்ளார், பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று  நபர்களும்  பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சிராப்பள்ளி, கடலூர், சிவங்கை, அரியலூர்  மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாடு முழுவதுமுள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் 49 நபர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு  ஆணை யிட்டுள்ளது அது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் உதவி புவியியலாளர்களாக உள்ள 23 நபர்கள் உதவி இயக்குநர்களாகப் பதவி உயர்வு பெற்று ஒரு மாதத்துக்கு மேலாகிறது. அதை அமல்படுத்த தற்போது அரசு ஆணை யிட்டுள்ளது. மற

நாய் இறைச்சிக்குத் தடை தென்கொரியா அதிபர் மாளிகை முற்றுகை

நாய் இறைச்சிக்குத் தடை காரணமாக தென்கொரியா அதிபர் மாளிகையில் முற்றுகைப் போராட்டம்       சர்வதேச விலங்குகள் உரிமைக் குழுக்களின் விமர்சனங்களுடன் உலகளவில் வளர்ந்து வரும் நாய் இறைச்சி நுகர்வோருக்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த நாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, நாய் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகங்களுக்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவியுடன் கூடிய சலுகைக் காலம் வழங்குவதாகவும் தென் கொரிய அரசு அறிவித்திருக்கிறது  அரசின் இந்த முடிவை கண்டித்து நாடு முழுதும் நாய் பண்ணை உரிமையாளர்கள், நாய் இறைச்சிப் பிரியர்கள் தென்கொரிய அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்தி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதன் காரணமாக தென் கொரியா நாட்டில்  பரபரப்பு .  தென் கொரியாவின் ஆளுங்கட்சியான பீப்பிள் பவர் கட்சி  இந்த மாத இறுதிக்குள் நாய் இறைச்சியை உட்கொள்வதற்குத் தடைவிதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

திண்டுக்கல் அருகில் ரூபாய் .20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்க துறை உயர் அலுவலர் கைது திண்டுக்கல்லில் ரூபாய். 20 லட்சம் இலஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறையின் உயர் அலுவலரை தமிழ்நாடு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் தடுப்பு கண்காணிப்புத்  துறையினர்  விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திப் பிடித்துக் கைது செய்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர் சுரேஷ்பாபு.  மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக  2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தது வந்த  வழக்கிலிருந்து சுரேஷ்பாபு பின்பு விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், விசாரிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூபாய். 3 கோடி லஞ்சம் தரவேண்டுமென்றும் அமலாக்கத் துறை உயர் அலுவலர் ஒருவர் அந்த மருத்துவரிடம் பேரம் பேசியதாகவும். பின்பு முடிவாக, ரூபாய்.51 லட்சம் தருவதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு ஒப்புக்கொண்டதாகவும் அதன்படி முதல் தவணையாக அமலாக்கத் துறை  உயர் அலுவலரிடம் கடந்த மாதம் ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும். இந்த நிலையில், இரண்டாவது தவணையா