டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: "நமது வரலாற்றின் முக்கியமான தருணங்களில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் ஆழ்ந்த ஞானமும், உறுதியான தலைமையும் மிகவும் பெருமைக்குரியவை. ஜனநாயகம் மற்றும் ஒற்றுமையின் பாதுகாவலராக அவரது முயற்சிகள் தலைமுறைகளைக் கடந்து தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அன்னாரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.” என்றார் மேலும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார் நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (03.12.2023) மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி)
பாஜக-வின் மூன்று மாநிலத் தேர்தல் வெற்றி 2024 ஆம் ஆண்டின் வெற்றியை கட்டியம் கூறுகிறது' - நடைபெற்று முடிந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. ஆட்சியிலிருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்தது. இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறதென பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது “இன்றைய ஹாட் டிரிக் வெற்றி, 2024 ஆம் ஆண்டுக்கான ஹாட்டிரிக் வெற்றியை உறுதி செய்துள்ளது.” எனத் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களிடம் 40 நிமிடங்கள் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோஷம் தான் வெற்றி அடைந்தது. நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் வெற்றியடைந்தன” என்றார். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மக்கள் தம் மீது அன்பை பொழிந்தனர் , பாஜக வெற்று வா