முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திமுக ஏற்பாட்டில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில முதல்வர்கள் பல கட்சிகளின் தலைவர்கள் சென்னை வருகை

திமுக ஏற்பாட்டில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் இன்று சென்னை வந்தார். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்திருந்தனர். 2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுவதில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்தனர். அதன்படி, நாளை நடைபெறும் தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் பங்கே...
சமீபத்திய இடுகைகள்

நிதியைச் சேர்க்க நீதிக்கே வைக்கப்பட்ட 'தீ'-நீதிபதி குறித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கொதிப்பு.

நிதியைச் சேர்க்க நீதிக்கே  வைக்கப்பட்ட 'தீ'-நீதிபதி குறித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கொதிப்பு.              டில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் முடிவு செய்துள்ளது.   டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா. நேற்று, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாக வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனால் அந்தக் கதை ஒரு பெரிய திருப்பத்தை எடுத்து இன்னும் பெரிய தீயை மூட்டுகிறது - அவரது அறைகளில் ஒன்றில் பணம் நிறைந்திருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.  அதன்பேரில், தீயை அணைக்க வந்த போது, நீதிபதியின் வீட்டில் உள்ள அறையில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதனைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் நீதித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்...

கஞ்சா வழக்கில் கைதாகி வெளிவந்த பின் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட்டு வந்த போது ரௌடி படுகொலை இருவர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு முடித்து வெளி வந்த ரௌடி படுகொலை! கொல்லப்பட்ட நபர் மனோஜ் (வயது 23) காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளி வந்தவரை பகலில் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. ஆந்திரப் பிரதேசத்திலிருந்து இலங்கைக்கு கடந்தவிருந்த 124 கிலோ கஞ்சாவை 2024 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக காரைக்குடி இரட்டை முனீஸ்வரன் கோவில் ஊருணி பகுதியைச் சேர்ந்த நபர் மனோஜ்  உள்ளிட்டோரை குன்றக்குடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்த மனோஜ் காரைக்குடி நகரில் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இன்று காலை 10 மணிக்கு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு 2 இருசக்கர வாகனங்களில் அவரது நண்பர்கள் சபீக், கார்த்திக் ஆகியோருடன். டி.டி.நகர் 5-வது வீதியில் சென்ற போது, பின்புறமாக காரில் வந்த ஒரு கும்பல், அவர்களது இரு சக்கர வாகனங்களை இடித்துத் தள்ளியதில் நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்தார். பின்னர் எழுந்து, 100 அடி சாலைய...

ஆளுநர் மூலம் அமலாக்கத்துறைக்குச் சென்ற டாஸ்மாக் ஊழல் மனு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என.ரவி மூலம் அமலாக்கத்துறைக்குச் சென்ற டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி மனு தான் தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் ஆதாரங்கள் சேதாரம் இல்லாமல் சிக்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநிலத்தின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் 1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல்.! 2023- ஆம் ஆண்டில் புதிய தமிழகம் கட்சி சார்பில் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது பின்னர் ஆளுநரிடம் மனுவாக அளிக்கப்பட்டது.! அதை அப்படியே நம் வாசகர்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.  டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் விபரம் வருமாறு: 1)  மதுபான ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து எவ்விதமான  வெளிப்படைத் தன்மையும் இல்லை. 2)  ஆயத் தீர்வை விதிகளின்படி, மதுபான ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் ஆயத் தீர்வைகள் வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவுக்குச் செலுத்தப்படும். ஆனால், இப்பொழுது தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படக்கூடிய மொத்த மதுபானங்களில் 60 சதவீதம் சரக்குகளுக்கு ஆயத்தீர்வை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 40...