தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தரிசனத்திற்காக வருகை தந்தார் . அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது சாமி தரிசனம் செய்தார். பின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பெண்கள் பெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துள்ளன மதுவால் தங்கள் குடும்பம் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு பெண்கள் கலங்குகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தாய் ,சகோதரிகள், மகள்களுக்கு பாதுகாப்புக்கு நான் உறுதியளிக்கிறேன் . நம் ஆட்சி அமைந்ததும் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்,தமிழ்நாட்டிலேயே சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவுகள் கற்பனை கோட்டையாக கானல் நீராக மாறிவிடும். திமுக வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் அதை உங்கள் கண்களில் பார்க்கிறேன் என்று கூறினார். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகைத் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரை விட்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பி...
டெல்லி யூனியன் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநிலத்தில் முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என 2021-22 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக்கொள்கையைக் கொண்டு வந்தார் . இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்தது. சௌத் பிளாக் என்ற நிறுவனம் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு ரூபாய் .100 கோடி லஞ்சம் கொடுத்தாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது. மேலும் தனியாருக்கான லாபம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 2022-ஆம் ஆண்டு டெல்லி தலைமைச் செயலாளர் மதுபான கொள்கையில் முறைகேடு நடப்பதாக கூறி ஆளுநர் சக்சனாவிற்கு அறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த ஊழலில் வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போதைய கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சேர்க்கப்பட்டு...