முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இந்தியாவில் டீசல், பெட்ரோலின் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரிகள் குறைப்பு

உலகின் பிற நாடுகள் ஒற் றைப்படை-இரட்டை, 4 நாள் வேலை வாரங்கள், பள்ளி மற்றும் அலுவலகங்களை மூடுதல் மற்றும் எரிபொருள் விலையை 20-30 சதவீதம் உயர்த்துதல் போன்ற கடுமையான எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் போது, நமது பரதப் பிரதமரின் கீழ் இந்தியாவுக்கு   எல் பி ஜி எரிசக்தி பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலையில் ஒரு சோலையாக உள்ளது.  வணிக ரீதியான LPG விநியோகத்தை எளிதாக்குவதற்கு மேலும் ஒரு நடவடிக்கை எடுத்து, இந்திய அரசு மாநிலங்களின் வணிக LPG ஒதுக்கீட்டை 70 சதவீதம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது, மேலும் 20 சதவீதம் ஒதுக்கீடு எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற உழைப்புத் தொழில்கள் போன்ற தொழில்களுக்கு வழங்கப்படுகிறது. குழாய் எரிவாயு மாற்றாக இல்லாத தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் பெட்ரோலின் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரிகளை லிட்டருக்கு ரூபாய் .13 ல் இருந்து ரூபாய் .3 ஆகவும், டீசல் மீதான நில் (பூஜ்ஜியம்) லிட்டருக்கு ரூபாய் .10 ல் இருந்து ரூபாய் .3 ஆகவும் குறைக்கிறது இந்திய அரசு.
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு நான்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றம்

தமிழ்நாடு நான்கு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம், காஞ்சிபுரம் எஸ்பியாக ஜவஹர், பெரம்பலூர் எஸ்பியாக பிரபாகர், தஞ்சாவூர் எஸ்பியாக சுந்தரவதனம் மற்றும் தென்காசி எஸ்பியாக மயில்வாகனன் நியமனம் காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் மாறுதல் செய்து உத்தரவு. மாற்றமானவர்களை ; தேர்தல் ஆணையம் மேற்கண்ட அதிகாரிகள் பணியில் சேர்ந்தது தொடர்பான அறிக்கையை நாளை மார்ச் மாதம் 28 ஆம் தேதி காலை 11.00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், தஞ்சாவூர், தென்காசி, பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களைப் பணியிட மாற்றம் செய்து  உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டும், தீவிர பரப்புரையையும் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் தேர்தலை நேர்மை...

அதிமுக 2 வது தமாகா (மூ) வேட்பாளர் பட்டியல் வெளியானது,

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜகூ சார்பாக அதிமுகவில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவரம்:- 1. கும்மிடிபூண்டி - V. சுதாகர், 2. பொன்னேரி (தனி) - சிறுணியம் P. பலராமன், 3. திருத்தணி - திருத்தணி கோ. அரி, 4. திருவள்ளூர் - B.V. ரமணா, 5. மாதவரம்- மாதவரம் V. மூர்த்தி, 6. திருவொற்றியூர் - K. குப்பன், 7. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- K. பழனி, 8. தாம்பரம் - சிட்லபாக்கம் ச. இராசேந்திரன், 9. செங்கல்பட்டு - M. கஜா (எ) கஜேந்திரன், 10. செய்யூர் (தனி) - E. ராஜசேகர் 11. மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல், 12. காஞ்சிபுரம் - V. சோமசுந்தரம், 13. அரக்கோணம் (தனி) - சு. ரவி, 14. காட்பாடி- V. ராமு, 15. ஆற்காடு- S.M சுகுமார், 16. வேலூர் - S.R.K அப்பு, 17. அணைக்கட்டு - த. வேலழகன், 18. குடியாத்தம் (தனி)- G. பரிதா, புருஷோத்தமன், 19. வாணியம்பாடி  - G. செந்தில்குமார் 20. ஆம்பூர் - R. வெங்கடேசன், 21. ஊத்தங்கரை (தனி) - T.M. தமிழ்செல்வம், 22. பர்கூர் - E.C. கோவிந்தராசன்...

தவெக மேடையில் நடனமாடி பணியிடை நீக்கமான தலைமை ஆசிரியை

நடிகர் விஜய் நடித்த சிவகாசி  திரைபபடப் பாடலுக்கு கட்சி மேடையில் நடனமாடிய கிருஷ்ணவேனி (வயது 58) தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்  "கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வாரியா...." என்ற பாடலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வரியா என்ற விஜய் பட பாடலுக்கு ஒரத்தநாட்டில் நடந்த த.வெ.க. மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும், வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடதக்கது.ஒரத்தநாடு பகுதி  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டதில் ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டார். அப்போது மேடையில் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், உற்சாக...

மதப் பிரசங்கி பால் தினகரன் பித்தலாட்டம் மும்பையில் வழக்குப் பதிவு

மதப் பிரசங்கி பால் தினகரன் பித்தலாட்டம் மும்பையில் வழக்கு பதிவு.   மதபோதகர் பால் தினகரன் குடும்பம் மீது மும்பையில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு .மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மீரா ரோடு பகுதியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ‘இயேசு அழைக்கிறார்' அமைப்பு சார்பில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மகாரஷ்டிரா மாநில பிரார்த்தனைத் திருவிழா என்ற பெயரில் நடைபெற்றது, தினமும் 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்து திரட்டப்படடனர். இதில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன், அவரது மகன் சாமுவேல் தினகரன் அவரது மனைவி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை என்று மதப் பிரசங்கம் செய்தனர். இந்தக் கூட்டத்தின் போது, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், பிசாசுகள், பேய்கள் விலகி ஓடுகிறது எனவும் நோய்களை குணமாக்குவதாகக் கூறி அமானுஷ்ய மற்றும் பேய், பிசாசு மற்றும் மந்திரச்சடங்குகள் நடைபெற்றதாக ஏமாற்றிய சம்பவம் பலரை அதில் நடிக்க வைத்து அரங்கேறிதாக ஆதாரங்களுடன் மும்பை  சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, பால் தினகரன் அவ...