முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு

இந்தியாவில் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி எண் 597-க்கு பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், National Judicial Data Grid (NJDG)-இன் 16.07.2026 நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் 16.07.2026 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நிலுவை வழக்குகள் 96,024 ஆகும்,  30 ஆண்டுகளுக்கும் மேலாக 26 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக – 558 வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக – 10,094 வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக – 24,611 வழக்குகள், 1 ஆண்டுக்கும் மேலாக – 49,248 வழக்குகள், நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 64,72,536 ஆகும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 80,660 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,52,152 வழக்குகள், 10 ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு அனுமதியற்ற வீட்டு மனைப்பிரிவை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அனுமதியற்ற வீட்டு மனைப்பிரிவை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.06.2027 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசாணை. நகர்ப்புற வளர்ச்சித் துறை 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அணைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 30.06.2027 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த .அரசாணை எண் 78-ன் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை ஆன்லைன் வழியாக சட்டப்பூர்வமாக வரன்முறைப்படுத்திக் கொள்ள முடியும். 20 அக்டோபர் 2016 அல்லது அதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளாக இருக்க வேண்டும். மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது 20.10.2016-க்கு முன் விற்கப்பட்டு, அதற்கான விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  சமதளப் ப...

ஹெபடைடிஸ் நோய் 21 கோடி மக்களுக்கு பரிசோதனை 6லட்சம் பேருக்கு சிகிச்சை

ஹெபடைடிஸ் நோய் தொடர்பாக 21 கோடி பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் தேசிய வைரல் ஹெபடைடிஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்  தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (27.07.2026) உலக ஹெபடைடிஸ் தினம் 2026-ஐ அனுசரித்தது.“ஹெபடைடிசை ஒழிப்போம் வாருங்கள்” என்பது உலக ஹெபடைடிஸ் தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், 2018-ஆம் ஆண்டு உலக ஹெபடைடிஸ் தினத்தன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நீடித்த வளர்ச்சி இலக்கின் குறிக்கோள் 3.3-க்கு இணங்க, ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக 2030-ம் ஆண்டுக்குள் வைரல் ஹெபடைடிஸை ஒழிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இன்றைய நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் சிறப்புரையாற்றினார்.  ஹெபடைடிஸ் இல்லாத இந்தியாவை நோக்கிய அரசின் உறுதிப்பாட்டை தனது உ...

நாட்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததாக அரசு அறிவிப்பு

நாட்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல் இந்திய ரயில்வே பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் 135 ரயில் விபத்துகள் நடந்த நிலையில், 2025-26-ம் ஆண்டில் 16 விபத்துகள் (88 சதவீதம் குறைவு) மட்டுமே நடந்தன. 2026-27-ம் நிதியாண்டில் (2026 ஜூன் வரை) 2 விபத்துகள் நடந்துள்ளன. பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளுக்கான செலவினம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு ரூ.39,200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27-ம் நிதியாண்டில் ரூ.1,20,389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 2026 ஜூன் 30 வரை 10,395 லெவல் கிராசிங்குகளில் இண்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்களில் விழிப்புணர்வை மேம்படுத்த அனைத்து எஞ்சின்களிலும் விழிப்புணர்வு கட்டுப்பாட்டு உபகரணம் பொருத்தப்பட்டுள்ளன. மூடுபனி பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ் அடிப்பட...

நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கீடுவதற்கான அடிப்படை ஆண்டு மாற்றியமைப்பு

நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கீடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024 ஆக மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. புதிய அடிப்படை ஆண்டை கணக்கில் கொண்டு, மாதாந்திர விலை தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகள், 434 நகரங்களில் உள்ள 1,465 கிராமப்புற சந்தைகள், 1,395 நகர்ப்புற சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, மின்னணு வர்த்தகம் அல்லது இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை கண்டறியும் வகையில் தலா 25 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகைக் கொண்ட 12 நகரங்களில் 12 இணையவழி சந்தைகளும் இந்த தரவு சேகரிப்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் மாற்றியமைக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பில் மொத்த எடை கொண்ட பொருட்களின் எண்ணிக்கை 299-லிருந்து 358 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் நுகர...

கடந்த திமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் ஊழல் முறைகேடு ED நடவடிக்கை அடிப்படையில் DVAC வழக்குப் பதிவு செய்து சோதனை

கடந்த திமுக ஆட்சியில் முன்னாள் மின்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சரான வி.செந்தில்பாலாஜி, டாஸ்மாக் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர் எஸ்.விசாகன், முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் டி ராமதுரை முருகன், பி.பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் பிஏ பாஸ்கர், அவரது கூட்டாளியான ரதீஷ் ராஜ், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கார்த்திக், சண்முகவேல் ஆகியோர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கரூர் இரமேஷ்வரன்பட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் பழைய வீட்டில் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் சோதனை நடத்துகிறது. கரூர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடக்கிறது முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, சில முன்னாள் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுபான ஆலை உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனம் மதுபானக் கொள்முதல், டெண்டர் முறைகேடுகள் மற்றும் வரம்பு மீறிய நிதி முறைகேடுகள...