காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகன வசதி கார் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆகஸ்ட் 12, 2026 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவர் பேசிய உரையில் " சொந்த வாகனம் இல்லை: தான் தலைமைச் செயலகத்திற்கு 280 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்கு வர பயணப்படிகள் வழங்கப்பட்டாலும், தனக்கு சொந்தமான வாகனம் இல்லை. வாடகை வாகனத்தில்தான் வந்து போகிறேன். தனது காட்டுமன்னார்கோவில் தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அங்கு மக்களைச் சந்தித்து நேரில் பணியாற்ற தன்னிடம் வாகன வசதி இல்லை. தனிச் செயலாளரை நியமித்து, அவருக்கு ஊதியம் வழங்கி வேலை வாங்குவதற்குக் கூட தன்னிடம் போதிய வசதி இல்லை. தற்போதைய சூழலில் முக்கால்வாசி எம்.எல்.ஏ-க்களின் நிலைமை இதுதான். காலணி அதாவது செருப்புக் கூட அணிய முடியாத அளவிற்கு எளிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் இந்த அவையில் இருக்கிறார்கள், மாநிலத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத, தூய்மையான அரசு அமைய வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை அரச...
உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைக்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்றம் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு அறிவிப்பில் சென்னை முதன்மை அமர்வில் 10.08.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் Sitting Arrangement-ல் பகுதி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு பின்வரும் வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன: 1.நீதிபதி கே. கோவிந்தராஜனுக்கு பழைய முதல் முறையீடுகள் 2.நீதிபதி என். ரமேஷுக்கு பழைய குற்றவியல் திருத்தங்கள் 3.நீதிபதி ஜி.கே. முத்துக்குமாருக்கு சேவை தொடர்பான பழைய ரிட் மனுக்கள் 4.நீதிபதி ஆர். ராஜேஷ் விவேகானந்தனுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள் 5.நீதிபதி எஸ். ரவீக்குமாருக்கு வரி தொடர்பான பழைய ரிட் மனுக்கள் 6.நீதிபதி இ.மனோகரனுக்கு– பழைய சிவில் சீராய்வு மனுக்கள் 7.நீதிபதி எஸ். அல்லிக்கு பழைய குற்றவியல் மேல்முறையீடுகள் இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனி நீதிபதி ஆக அமர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த மாற்றம் 10 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு மற்றும் வழக்கு ...