கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற வில்லன் நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் (வயது 74) புற்றுநோய் காரணமாகக் காலமானார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றது தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்து திரைப் பயணத்தைத் தொடங்கினார். 'லகான்' படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி...
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று 6.8.2026 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். மாநில சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூபாய் 14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய திட்டங்களாக இயற்கை பேரிடர்களிலிருந்து விவசாயிகளின் கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் ரூபாய் 31 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பதநீர் மற்றும் பனங்கருப்பட்டி போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கவும் ரூபாய் 16 கோடி நிதியில் ‘தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம்’ நிறுவப்படும். கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா உயர் மகசூல் கறவை மாடுக...