வி.செந்தில் பாலாஜி மீது கைது வாரண்ட் உச்சநீதிமன்னம் இடைக்கால தடை - பாஸ்போர்ட் ஒப்படைக்க உத்தரவு! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு எதிராக சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணையின் போது, பொது கருவூலத்திற்கு ரூபாய் 17 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அரசு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் கூறுகையில், ரூபாய் 17 கோடி என்பது பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே என்றும், பொது கருவூலத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறைந்தபட்சம் ரூபாய் 100 கோடியாக இருக்கலாம் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் காவலில் வைத்து விசாரணை செய்வது முற்றிலும் அவசியம் என்றும் அரசு பப்ளிக் பிராஷகியூட்டர் தெரிவித்துள்ளது. Party Fund' பெயரில் மாதம் ரூபாய் 102 கோடி களவாடியது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஐஏஎஸ் விசாகன் உள்ளிட்டோர் மீது வழக்கு; மன்னார்குடி மதுபான ஆலையி...
தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் வாதிட 83 அரசு வழக்கறிஞர்களை சட்ட அதிகாரிகளாக நியமித்தது. தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் அதன் மதுரை கிளைக்கும் மாநில அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 83 சட்ட அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் இவர்களுடன் 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்களையும் பொதுத்துறை நியமனம் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை அமர்வு மற்றும் மதுரை கிளைக்கு 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் உட்பட மொத்தம் 91 வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், பி.வி. பாலசுப்பிரமணியம், டி. கௌதமன், பி. சரவணன், ஏ. அப்துல் ஹமீது, ஜே. பரதன், எஸ். அர்ஜுன் சுரேஷ், எஸ். குமரேசன் மற்றும் கவிதா நித்யானந்தன் ஆகிய 8 பேர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் மற்றும் கௌதமன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர், கூடுத...