முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மஹாகவி பாரதி நினைவு நாளில் காலமான பேராசிரியர் தமிழறிஞர் பதம ஸ்ரீ சாலமன் பாப்பையா

"அன்புத் தாய்மார்களே, அருமை பெரியோரே, இனிய குழந்தைகளே!" என்ற உரைக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 11, 2026 அன்று 90 வது வயதில் காலமானார். சாலமன் பாப்பையா பிப்ரவரி மாதம் 22, 1936 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் சாத்தான்குடியில் பிறந்தார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இனிய குரலிலும் நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.1961-ஆம் ஆண்டில், புதுக்கோட்டையில். 'பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா?' என்ற விவாதத் தலைப்புகளில், 'புதுமைக் கவிஞனே' என்ற தலைப்பில் உரை நிக...
சமீபத்திய இடுகைகள்

கம்பூர் ரூபா மீதான பட்டியல் பழங்குடி, வன்கொடுமை வழக்கு முடித்து வைப்பு, பணியிடை நீக்கம் ரத்து செய்ய மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பூர் ஊராட்சிச் செயலாளர் ரூபா மீது தொடரப்பட்ட ஜாதிய வன்கொடுமை எனும் PCR வழக்கு பொய்யானது என காவல்துறை விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அது காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. கம்பூர் ஊராட்சியில் தூப்புறவு ஊழியர் சசிகலா என்பவர், ஊராட்சிச் செயலாளர் ரூபா தன்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் மேலூர் காவல்துறையினரிடம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்ததன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலரால் ரூபா தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து தீவிர புலனாய்வு விசாரணை நடத்தினர். அதில், சசிகலா குறிப்பிட்ட தேதியில் ரூபா அங்கு பணியிலேயே இல்லை என்பதும், தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காக முந்தைய ஊராட்சிச் செயலாளரின் தூண்டுதலின் பேரில் இந்த பொய்யான புகார் அளிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் உண்மையில்லை என முடிவு செய்யப்பட்டு, 'Mistake of Fact' என்ற அடிப்படையில் எஸ்சி/எஸ்டி (PCR) வழக்கு முற்றிலு...

தலையை சந்திக்கும் தளபதி தவெகவின் அரசியல் எழுட்சி நடவடிக்கை

தலையை சந்திக்கும் தளபதி தவெகவின் அரசியல் எழுட்சி நடவடிக்கை   தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் - அஜித்குமார் சந்திப்பு மற்றும் திமுகவின் அரசியல் முரண்பாடுகள், தமிழக அரசியல் களம் தற்போது ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தில் நிற்கிறது.      தனி விமானம் அல்லாமல் பயணிகள் விமானத்திலேயே இலண்டன் சென்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்  இதற்காக நேற்று இரவு 10 மணியளவில் சென்னையிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் (EK 547) பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் செல்ல உள்ளார். இந்த விமானம் மூலம் துபாய் சென்றடையும் முதலமைச்சர், அங்கிருந்து லண்டன் செல்லும் அதிநவீன ‘டபுள் டக்கர்’ முதல் வகுப்பு விமானத்தில் தனது பயணத்தைத் தொடர்கிறார்.அதேவேளையில், முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முன்-தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பிற அரசு உயர் அதிகாரிகள் ஏற்கனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வரின் இந்த அரசுமுறை லண்டன் பயணத்தின் மூலம், தமிழ் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் தொழிற்துறை வளர்ச்சியும் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரி...

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நால்வரும் கூடுதலாகக் கைது

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை மரண வழக்கில், சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர், திருப்புவனம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரை சிறையில் அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. மடப்புரம் அஜித்குமார் படுகொலை மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4காவல்துறை அலுவலர்களைச் சிறையிலடைக்க உத்தரவு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் அதிகார வரம்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் சில காவல்துறை பணியாளர்கள் மீதான நீதித்துறையின் நடவடிக்கை தற்போது எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ‘தடயங்களை மறைத்தல்’ என்ற சாதாரணப் பிரிவின் கீழ் மூடி மறைக்க முயன்ற இந்த வழக்கினை, மதுரை மாவட்ட நீதிமன்றம் தற்போது ‘கொலை வழக்காக’ மாற்றியுள்ளது. இது லாக்-அப் மரணங்களை வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ சித்தரிக்க முயலும் பணி ச...

இடைத்தேர்தல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதிதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிக்கு பானுமதி ஆகியோர் இந்த இரு தொகுதிகளின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வான மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அறிவிக்கப்பட்ட தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக அமமுக, புதிய நீதிக் கட்சி மற்றும் பாமக தவிர பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது. திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்புடன் புதிய லேட்பாளர்கள் மற்ற கட்சிகள் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இடைத்தேர்தல் தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு இடைத்தேர்தல் மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களைக் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ச. ஜோசப் விஜய் இன்று 10 செப்டம்பர் 2026 அறிவித்துள்ளார். தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதி: கே. மரகதம் குமரவேல் (தவெக துணைப் பொதுச் செயலாளர்) தாராபுரம் (தனி) தொகுதி: பி. சத்தியபாமா (திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர்) இருவரும் தவெக தலைமையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய கூட்டணியில் இடைத்தேர்தலைச் சந்திக்கின்றன. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏற்கனவே அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள். பின் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதே தொகுதிகளில் தவெக சார்பில் மீண்டும் களம் கண்டுள்ளனர்.