முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

எம் எல் ஏ காடடுமன்னார் கோவில் எல் இ. ஜோதிமணி கோரிக்கை முதல்வர் கவனம் பெற்றது

காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான  ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகன வசதி கார் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆகஸ்ட் 12, 2026 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது அவர் பேசிய உரையில் " சொந்த வாகனம் இல்லை: தான் தலைமைச் செயலகத்திற்கு 280 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். சட்டமன்றத்திற்கு வர பயணப்படிகள் வழங்கப்பட்டாலும், தனக்கு சொந்தமான வாகனம் இல்லை. வாடகை வாகனத்தில்தான் வந்து போகிறேன். தனது காட்டுமன்னார்கோவில் தொகுதி 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அங்கு மக்களைச் சந்தித்து நேரில் பணியாற்ற தன்னிடம் வாகன வசதி இல்லை. தனிச் செயலாளரை நியமித்து, அவருக்கு ஊதியம் வழங்கி வேலை வாங்குவதற்குக் கூட தன்னிடம் போதிய வசதி இல்லை. தற்போதைய சூழலில் முக்கால்வாசி எம்.எல்.ஏ-க்களின் நிலைமை இதுதான். காலணி அதாவது செருப்புக் கூட அணிய முடியாத அளவிற்கு எளிய நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் இந்த அவையில் இருக்கிறார்கள், மாநிலத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத, தூய்மையான அரசு அமைய வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை அரச...
சமீபத்திய இடுகைகள்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைப்பு

 உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மாற்றியமைக்கப்பட்டது சென்னை உயர்நீதிமன்றம் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு அறிவிப்பில்   சென்னை முதன்மை அமர்வில் 10.08.2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் Sitting Arrangement-ல் பகுதி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு பின்வரும் வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன: 1.நீதிபதி கே. கோவிந்தராஜனுக்கு பழைய முதல் முறையீடுகள் 2.நீதிபதி என். ரமேஷுக்கு பழைய குற்றவியல் திருத்தங்கள் 3.நீதிபதி ஜி.கே. முத்துக்குமாருக்கு சேவை தொடர்பான பழைய ரிட் மனுக்கள் 4.நீதிபதி ஆர். ராஜேஷ் விவேகானந்தனுக்கு பழைய இரண்டாவது முறையீடுகள் 5.நீதிபதி எஸ். ரவீக்குமாருக்கு வரி தொடர்பான பழைய ரிட் மனுக்கள் 6.நீதிபதி இ.மனோகரனுக்கு– பழைய சிவில் சீராய்வு மனுக்கள் 7.நீதிபதி எஸ். அல்லிக்கு பழைய குற்றவியல் மேல்முறையீடுகள் இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனி நீதிபதி ஆக அமர்ந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த மாற்றம் 10 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதிய நீதிபதிகளுக்கான அமர்வு மற்றும் வழக்கு ...

மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை சேர்க்க மாநில காங்கிரஸ் தலைவர் பிரதமரருக்கு கடிதம்

தெலங்கானா மாநில அரசு செய்ததுபோல், மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் ஜாதியைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 9 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியவர். அதில் SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான 4,147 ஜாதிப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 46 லட்சம் ஜாதிப் பதிவுகள் உருவாகின. இவ்வளவு துண்டு துண்டான தரவுகள் உருவானதால், அவற்றைப் பயன்படுத்த முடியாதவை என அரசே குறிப்பிட்டது. இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்: முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, குறியீடுகளுடன் கூடிய ஜாதிப் பட்டியல்கள்  எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஏற...

FCRA திருத்தச் சட்டத்திற்கு JPC குழு அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 உறுப்பினர்களுடன் அமைப்பு

 பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 பல கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் மசோதா, 2026  நாடாளுமன்ற கூட்டு  குழுவின் (JPC) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, விரிவான ஆய்வுக்காக இது 31 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு  அனுப்பப்பட்டது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 2026 குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வார இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.        தொண்டு செய்வதாக NGO என்ற பெயரை வைத்துக்கொண்டு தொண்டே செய்யாத தொண்டு நிறுவனங்கள் கோடிக் கணக்கில் பெரும் வெளிநாட்டு நிதிகளுக்கு வருமானவரித் துறைக்கு சரியான வரவு செலவு கணக்குக் காட்டாமல் இத்தனை ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள், மற்றும் பல நடவடிக்கை காரணமாக மற்றும் பாஜகவின் நரேந்திர மோடி அரசைக் கவிழ்க்க பெரும் நிதியை NGO க்கள் மூலம் இரக்கப்பட்டுள்ளது, இதற்கு முடிவு கட்டவே இ...

போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை

போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை! கோயம்பத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த அதிர்ச்சியான சம்பவம். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அமுதனின் பெற்றோர் முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைத்த நிலையில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் கலந்து கொண்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் கோவையில் 19 வயது கல்லூரி மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போதைப்பொருள் பயன்பாடு குறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 5 பேர் பிடித்து விசாரிக்கப்பட்...

காவல்துறையில் பணி மாறுதலும் ஊழல் சீரமைப்பும்

தமிழ்நாட்டில் 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு  தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இ ஆ ப வெளியிட்டுள்ள அறிவிப்பில், உளவுத்துறை டிஜிபியாக பணிபுரிந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார், வேலூர் சரக டிஐஜியாக பணிபுரிந்த தர்மராஜன், பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு காவல் துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. சென்னை காவல்துறையின் தெற்கு இணை ஆணையராக பணிபுரிந்த பகர்லா செபாஸ் கல்யாண், உளவுப் பிரிவு உள்பாதுகாப்பு டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜியாக பணிபுரிந்த சரவணன், சென்னை சிஐடி உளவுத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டார். திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த கராட் கரூண் உத்தவராவ், சென்னை குற்றவியல் உளவுத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த மயில்வாகனன், சென்னை சிறப்பு பி...

தேசத் தலைவர் நேதாஜி அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி உச்சநீமன்றத்தில் மகள் மனு அரசுக்கு நோட்டீஸ்

சுதந்திரப் போராட்ட வீரர் தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அஸ்தி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது.  இந்த நிலையில், ரெங்கோஜி ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியின் அஸ்தியை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, அவரது மகள் அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அனிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஒரே மகள் அனிதா போஸ் பிஃபாஃப் ஆவார். இவர் 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார் எமிலி ஷென்கல் இவரது தய் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள ஆ...