குடியரசு தின அணிவகுப்பு 2025-ன் முழு ஒத்திகையைக் காண்பதற்கான அனுமதிச் சீட்டுகளை ஆமந்திரன் தளம், செயலி மூலம் பெறலாம் குடியரசு தின கொண்டாட்டங்கள் (ஆர்டி.சி) 2025-க்கான பதிவுச் சீட்டுகளைப் பெற முன்னெப்போதும இல்லாத ஆர்வம் காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 23, அன்று புதுதில்லியின் கடமைப் பாதையில் நடைபெறவுள்ள அணிவகுப்பின் முழு ஒத்திகையைக் காண பாதுகாப்பு அமைச்சகம் அனுமதிச் சீட்டுகளை வழங்குகிறது. அனுமதிச் சீட்டுப் பதிவை பின்வரும் செயலி / தளத்திலிருந்து பயனர் நேரடியாகப் பெறலாப்: ஆமந்திரான் இணையதளம் (aamantran.mod.gov.in) அனுமதிச் சீட்டுகளுக்கான பதிவு 2025 ஜனவரி 13 அன்று தொடங்கியது. ஜனவரி 17 வரை அனுமதிச் சீட்டுகளைப் பெறலாம். குடியரசு தினக் கொண்டாட்டங்கள் - 2025 தொடர்பான தகவல்களை rashtraparv.mod.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம்.
முன்னாள் அதிமுகவின் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி ஊழல் வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகப் பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிவில் அமலாக்கத்துறை, ‛‛தமிழ்நாட்டின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் வைத்திலிங்கம். PMLA-2002 சட்டத்தின் படி 2024 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையாச் சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் முடக்கியது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.