முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பதிவிரக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம்

சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பதிவிரக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி . 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை திரைப்படத் தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.தொடர்ந்து, நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன. தற்போது, மறுதணிக்கை நிறைவடைந்ததாகவும் தேர்தல் நிறைவடைந்த பிறகு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வியாழக்கிழமை மாலை வெளியான நிலையில், இன்று அதிகாலை 3 மணிநேர முழுப் படமும் வெளியானது.இதனால் படக...
சமீபத்திய இடுகைகள்

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒற்றைக் குழந்தை குடும்பங்களுக்கு பொருளாதார ஊக்குவிப்புக் கொள்கைகளைக் கோரும் தொடர்புடைய மனுவையும் நிராகரித்தது.ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது மத்திய மாநில அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்த விஷயம் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனுவில் பயன்படுத்தப்பட்டிருந்த தரம் குறைந்த மொழிநடைக்காக மனுதாரரை நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது.  ஜாதிவாரிக் சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நிறுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  இது அரசின் கொள்கை சார்ந்த கொள்கை முடிவான Policy Decision என்பதால், தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது மனுவில் பயன்படுத்தப்பட்டிருந்த மொழிநடை சரியில்லை எனக் கூறி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மனுதாரரை கண்டித்தார்....

உயர் நீநிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தன்னை நீக்கும் முன் முந்தி ராஜினாமா செய்தார்

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள நீதிபதி யஸ்வந்த் வர்மா இல்லத்தில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பதவி நீக்க நடவடிக்கை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். பரவாயில்லை. இப்பவாவது மனசு வந்ததே... மனசாட்சி உறுத்திச்சோ என்னவோ... இல்லை ஆனால் குடியரசுத் தலைவர் நீக்கம் செய்வதற்கு முன் உச்சத்திலேந்து எச்சரிக்கை வந்ததை முன்னிட்டு  அவராகவே ராஜினாமா செய்தார் இனி கைது நடவடிக்கை வருமா என்பது இனிமேல் தான் தெரியும்.                 அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். அவரது வீட்டில் எரிந்த கரன்சி நோட்டுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்

சென்னை பெருமாநகர காவல்துறை ஆணையர் அருணுக்குப் பதில் அபினவ் தினேஷ் மோடக் நியமனம்

 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், சென்னை பெருமாநகர காவல்துறை ஆணையர் அருண் மாற்றம் பதிலாக அபினவ் தினேஷ் மோடக் புதிய ஆணையராக நியமனம் . ஏப்ரல் மாதம் 10, ஆம் தேதி 2026 ல் தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் அபினவ் தினேஷ் மோடக் IPS. நியமனம் அருண் IPS. மாற்றத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு, புதிய ஆணையர் சட்டம்-ஒழுங்கை கவனிப்பார். மேலும், மாற்றப்பட்ட முந்தைய கமிஷனர் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஒரு முக்கிய நிர்வாக நடவடிக்கையாக, சென்னை நகர காவல் ஆணையர் ஏ. அருணைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக அபின் தினேஷ் மோடக்கை உடனடியாக நியமிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்தியத் தேர்தல் ஆணையச் செயலாளர் லதா திரிபாதி, மாநிலத் தலைமைச் செயலாளருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மோட...

பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு

பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு. ஆலங்குளம் உதவி ஆய்வாளர் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு.  குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 நபர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை:  அதில் கண்டுள்ள படி 07.04.2026-ம் தேதி 23.30 மணிக்கு ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் K.சுபாஷ் சந்திர போஸ் நிலைய பொறுப்பிலிருந்த போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் (தாலுகா), மருதம்புத்தூர், S.பிரதிபா வயது 17 என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவை பெற்று புகார்மனுவின் தன்மைக்கேற்ப சட்டப்பிரிவுகள் 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT -"ன். படி பதிவு செய்தார் அதன் விபரம். புகார் மனு அனுப்புநர்: எஸ். பிரதீபா மருதம்புத்தூர், ஆலங்குளம் (தாலுகா), தென்காசி மாவட்டம். பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர், ஆலங்குளம் காவல் நிலையம், ஆலங்குளம். ஐயா, இன்று 7-04-2026 மதியம் சுமார் 12.45 மணியளவில், மூன்று நபர்கள் எனது சித்தப்பா மணிகண்டன் என்பவரை, எங்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்து எங்களது பனைமரத்தில் ஏறச் சொல்லி வற்புறுத்தி...

தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உளவுப் பிரிவு டிஜிபி ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், உளவுப் பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு.  தமிழ்நாடு தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம் தேர்தல் ஆணையம் உத்தரவு.      தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் சமயத்தில் உயர் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2026 ல் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு புதிய தலைமைச் செயலாளராக (Chief Secretary) எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏற்கனவே இருந்த நா. முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-க்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்இந்த மாற்றம் தேர்தல் ஆணையத்தின் நேரடி உத்தரவின் கீழ் ஏப்ரல் 8, 2026 அன்று அறிவிக்கப்பட்டது.  ...

8 வது போஷன் பக்வாடா 2026-ன் தேசியத் துவக்க விழா

‘வாழ்க்கையின் முதல் ஆ று ஆண்டுகளில் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துதல்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, 8வது போஷன் பக்வாடா 2026-இன் தேசியத் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், 2026 ஏப்ரல் 9 முதல் 23 வரை போஷன் பக்வாடாவைக் கொண்டாடும். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், 8வது போஷன் பக்வாடாவை 2026 ஏப்ரல் 9 முதல் 23 வரை கொண்டாடும். ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்: “நல்ல ஊட்டச்சத்து பெற்ற குழந்தையே ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம். போஷன் அபியான் என்பது வெறும் அரசுத் திட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு தாய்க்கும் குழந்தைக்கும் முழுமையான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான ஒரு மக்கள் இயக்கமாகும்.” மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி அவர்களி...