மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது பூர்வீக தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு புதியதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகத் தகவல், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு வந்த போது இன்று மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்க் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற இரு நீதிபத...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகில் கண்ணிகைப்பேரிலுள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையான St Peter's Paul Seafoods Exports நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலையில் இருந்த அளவீட்டு வால்வில் measure valve ஏற்பட்ட பழுது காரணமாக அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் (NDRF) 4வது பட்டாலியன் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. தமிழ்நாடு அரசு, இந்த விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதுடன், ஆலை உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கசிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் அமைச்சர் ராஜ்மோகன் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் தொழில...