முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு

 PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு! தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் பழங்கோட்டை ஊராட்சியில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புற)  PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடவடிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகுதியற்ற நபர்களைப் பயனாளிகளாகத் தேர்வு செய்தல், அரசு நிதியை விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்குதல், ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரச...
சமீபத்திய இடுகைகள்

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். அதிபர் மேக்ரோன் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்குப் பிரதமர் நன்...

தேசிய நெடுஞ்சாலைகளின் மாற்றம் : வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு பலம் சேர்க்கிறது

தேசிய நெடுஞ்சாலைகளின் மாற்றம் : வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்திற்கு பலம் சேர்க்கிறது கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழும், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்காரியின் வழிகாட்டுதலின் கீழும், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு புதிய இணைப்பு சகாப்தத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்து, பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தி, போக்குவரத்துத் திறனை மேம்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்📢பைத் தேசிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக அங்கீகரித்து, இணைப்பை விரிவுபடுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைமைப்பின் விரிவாக்கம், சாதனை அளவிலான கட்டுமான வேகம், விரைவுச்சாலைகளின் மேம்பாடு ஆகியவை இந்தியாவின் ...

இந்தியா-பிரான்ஸ் ATL பாலம் பள்ளி கண்டுபிடிப்பு

நிதி ஆயோக்  இந்தியா-பிரான்ஸ் ATL பாலம் பள்ளி கண்டுபிடிப்பு ஆய்வகங்கள் மூலம் இருதரப்பு கண்டுபிடிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறது அடல் இன்னோவேஷன் மிஷன் & டசால்ட் சிஸ்டம்ஸின் முக்கிய முயற்சியானது இந்தியாவிலும் பிரான்சிலும் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களை பகிரப்பட்ட புதுமை சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் இணைக்கிறது. மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட பாரத் இன்னோவேட்ஸ் 2026 இன் ஓரத்தில், பிரான்சின் நைஸ் நகரில் LoI கையெழுத்திட்டது. பிரான்ஸ்/டெல்லி: மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரின் கூட்டு உறுதியால் வழிநடத்தப்பட்டு, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புத்தாக்கத் தலைமையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்த, அடல் இன்னோவேஷன் மிஷன் (AIM), NITI ஆயோக் மற்றும் La Fondation Dassault Systèmes ஆகிய இரு நாடுகளிலும் ATL இளம் கூட்டுறவு பிரிட்ஜை நிறுவியுள்ளன. இந்த முயற்சி பிரான்சில் முதல் பள்ளி கண்டுபிடிப்பு ஆய்வகத்தை நிறுவுகிறது, இந்தியாவின் அடல் டிங்கரிங் லேப் (ATL) கட்டமைப்பால்...

பழனி உள்ளிட்ட 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு

பழனி, சமயபுரம் உள்ளிட்ட பரம்பரை அல்லாத 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு வெளியீடு  கோயில்களின் விவரம், இணையத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் (Non-hereditary Trustees) விண்ணப்பங்கள் மூலம் முறையாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தகுதிகள், நியமன முறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.1. அறங்காவலர்கள் தகுதிகள்இந்து மதம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.பின்னணி: ஒழுக்கமானவராகவும், இறை நம்பிக்கை உடையவரா...

3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணிக்கு அரசு வழக்கறிஞர் நியமனம் அறிவிக்கை

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில்  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உச்ச நீதி​மன்றம், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கூடு​தல் அட்​வகேட், கூடு​தல் அரசு வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், அரசு வழக்​கறிஞர்​கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்​டத்​துறை அமைச்​சர் நிர்மல்குமாருக்கு காங்​கிரஸ் கட்சி சார்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது.  தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் ...