முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

விண்ணேத்திபாறை மங்கள தேவியில் மறைந்து போன திராவிடக் கொள்கை

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், குமுளி அருகே விண்ணேத்திப்பாறை, கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்தில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் உள்ளது. சேரன் செங்குட்டுவனால் 2,000 ஆண்டுகளுக்கு முன் இமயமலை கல் கனகதிவிஜயனை வென்று கொண்டுவந்து நிறுவப்பட்ட இந்தக் கோட்டம், கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் ஸ்தலமாகும். இது தமிழ்நாடு-கேரளம் எல்லையில் அமைந்துள்ள கோட்டம் கவனிப்பாரற்று கிடக்கிறது, அரசு ஒரு குடமுமுக்கு நடத்தவில்லை,  1976-க்குப் பிறகு இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லை சர்ச்சையால் பராமரிப்பு குறைந்து சிதிலமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.        சோழ தேசம் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரை பாண்டிய நாட்டு கடைச்சனேந்தல் எனும் கடைச்சிலம்பேந்தல் ஏரிக்கரையிலிருந்து அக்கினிப் பிழம்பாக பந்தடி பாண்டியர் அரண்மனை அகில் கடந்து வாயில் நுழைந்த கண்ணகி மனம்‌ கலங்கியவளாய்‌ மன்னனை நோக்கி  " நீர்வார்‌ கண்ணை  எம்முன்‌ வத்தோய்‌! யாரையோ நீ! மடக்கொடி யோய்‌!" எனத்‌  தேராமன்னா செப்புவது உடையேன்‌, எள்ளறு சிறப்பின்‌ இமையவர்‌ வ...
சமீபத்திய இடுகைகள்

நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி பயிற்சி உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி கோரிய மனுவின் மீது பதிலளிக்க உத்தரவு நிலத் தகராறுகளைக் கையாளும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு முறையான சட்டக் கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. நம் நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த சிவில் வழக்குகளில் 66 சதவீதம் அலுவலர்கள் நடத்திய ஊழல் காரணமான நிலத் தகராறுகள் தொடர்பானவை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைச் சட்டக் கல்வி பயிலாத வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரிப்பது முறையாக இருக்காது. 'எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முறையான சட்டப் பயிற்சி வழங்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்' எனக்கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஸி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா முன்வைத்த வாதத...

தாட்கோ நிர்வாகத்தில் லஞ்சப் பெருச்சாளிகள் நடவடிக்கை கேட்கும் ஒப்பந்ததாரர்

ஒப்பந்தப் பணிக்கான மொத்த தொகையில், 10 சதவீதத்தை கமிஷனாக தரக் கேட்ட 'தாட்கோ' அலுவர்கள் மீது புகார் அது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒப்பந்ததாரர், ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார்'தாட்கோ' என்பது , தமிழ்நாடு அட்டவணைப் பட்டியல் ஜாதி மற்றும் மலைவாழ் மக்கள் இனம் சார்ந்த வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில்,படடியல் ஜாதி மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், வீடுகள் கட்டுவது, சாலைவசதி, மின்சாரம், தண்ணீர் தொட்டி, அறிவுசார் மையங்கள், சமுதாயக் கூடங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்கின்றன. இந்தப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை, எஸ்.சி., - எஸ்.டி. பட்டியல் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, அரசாணை உள்ளதாகவும். ஆனால், தாட்கோ அலுவலர்கள், அதைக் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு வேண்டிய தனிப்பட்ட நபர்களுக்கு, 'டெண்டரில்' முன்னுரிமை அளிப்பதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஒப்பந்தப் பணிகளை 'எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் அந்த அலுவலர்கள் லஞ்சத்தை கடடாயக் கமிஷனாகக் கேட்பதாகப், புகார் எழுந்துள்ளது. ஒப்பந்தத் தொகைய...

தென்னிலையில் பயணியை தாக்கிய அரசு ஓட்டுநர் நடத்துனர், மீது நடவடிக்கை தேவை

கரூர் - கோயம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை, தென்னிலையில் பயணியை தாக்கிய அரசு ஓட்டுநர் நடத்துனர், மீது அரசின் நடவடிக்கை தேவை : கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளைத் தாக்கிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கரூரில் தரமற்ற கடையில் பேருந்தை நிறுத்தியதை தட்டிக்கேட்ட பயணியை ஓட்டுநர் தாக்கிய வீடியோ வைரலானது. அதேபோல், திருச்சியில் அசுர வேகத்தில் பேருந்தை இயக்கியதை கண்டித்த பயணியை, ஓட்டுநர் அன்புராஜ் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் சம்பவம்: கரூரில், டீக்கடையில் ஓட்டுநருக்கு இலவச டீ/வடை கிடைப்பதற்காக, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்படும் கடையில் பேருந்தை நிறுத்தியதை தட்டிக்கேட்ட பயணி தாக்கப்பட்டுள்ளார். திருச்சி சம்பவம்: திருச்சியில், தனியார் பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டியதைக் கண்டித்த பயணி சரவணனை, ஓட்டுநர் அன்புராஜ் தாக்கி மிரட்டினார்.நடவடிக்கை: திருச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிருப்தி: இதுபோன்ற சம்பவங்கள் த...

இளையராஜா கருத்தால் ஆளப்போறன் தமிழன் ஆர்ப்பரிக்கும் தவெகவினர்

இசைஞானி இளையராஜா-வின் YouTube பக்கத்தில் அவருடைய இசையில் வெளிவந்த பழைய பாடல்களை தொடர்ச்சியாக அவர் பதிவிட்டு வருகிறார்  ஆனால் இரண்டு நாளில் தேர்தல் முடிவு வரும் நிலையில்  அப்படி ஒரு நிகழ்வு , இது எங்கள் நீதி என்ற படத்தில் உள்ள “சின்னத் தம்பி உன்னை நம்பி” எனத் தொடங்கும் பாடலை 20 மணி நேரத்திற்கு முன்பாகப் பதிவிட்டுள்ளார்  அதில் நடிகர் விஜய்-ன் இள வயதுப் புகைப்படம் இருந்ததால் அந்த வீடியோ இப்போது செய்தி ஆகியத…இசைஞானி இளையராஜா தளபதி விஜய்  "சின்ன தம்பி உன்னை நம்பி காத்திருக்கு இந்த நாடு" இசை ஞானி முன் கூட்டியே முடிவைக் கணித்துவிட்டார். என ரசிகர்கள் தவெகவினர்  ஆளப்போறான் தமிழன் என சமூக வலைதளங்களில் வைரலாகிறது இசையின் மூலம் எண்ணற்ற இதயங்களில் நீங்கா இடம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  இசைஞானி இளையராஜா பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை கௌரவ உறுப்பினர்."சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு"- விஜய்க்கு இளையராஜா ஆதரவுதலெக தலைவர் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தபோது, அவர் தமிழ்நாடு முதலமைச்சராவார் என இளையராஜா கணித்ததாக ஒரு வீடியோ வைரலானது. நடிகர் விஜய்க...

தமிழ்நாட்டில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் உத்தரவு

தமிழ்நாட்டில் 84 மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவு.  சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆா்.தோத்திர மேரி, சேலம் மாவட்ட வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சென்னை 10-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளராகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் .சுபா தேவி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனா். மேலும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியான ஈ.சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜாதா குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்...

62 மையங்களில் தமிழ்நாடு வாக்கு எண்ணிக்கை தயார் நிலையில் ஆணையம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 62 மையங்களில் மே மாதம் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதில் 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் QR குறியீடு அடையாள அட்டை கட்டாயம். மதுரையில் அதிகபட்சமாக 5 மையங்கள் அமைந்துள்ளன. அதன் முக்கிய விவரங்கள்: மொத்த மையங்கள்: 62,  பாதுகாப்பு.சிறப்பம்சம்: QR குறியீடு அடையாள அட்டை கட்டாயம்.ஆய்வு: மாவட்ட ஆட்சியர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர்.   ஒவ்வொரு தொகுதிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அரசியல் ஆதரவாக செயல்படலாம் எனற நிலை வரக்கூடாது எனபதால் மேலிட மத்திய உயர் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர், வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் வேட்பாளர் பிரதிநிதிகளுடனும் அரசு அலுவலர்களான தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைகளை நடத்தினர். ஏப்ரல் மாதம் 23 -ஆம் தேதி ஆண் வாக்காளர்கள் 2.35 கோடி பேரும், (ஒட்டுமொத்த ஆண் வாக்காளர் எண்ணிக்கையில் 83.96 சதவீதம்), பெண் வாக்காளர்கள் 2.52 கொடி பேரும் (எண்ணிக்கையில் 86.20 சதவீதம்), மூன்றாம் பாலினத்தவர்கள் 4517 பேரும் ( ஒட்டுமொத்த 54.44 சதவீதம் ) வாக்க...