முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்..

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்.. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் லயோலா மணிக்கு நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் சி ஜோசப் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரான லயோலா மணி ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் தி.மு.க ஆட்சியில் பாடநூல் கழக தலைவராக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இதற்கான பணி நியமன ஆணையை லயோலா மணியிடம் நேரில் வழங்கினார். இந்த நியமனம் மூன்று ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டது.  இதற்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பொறுப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி இருந்து வந்தார்,  இந்த அமைப்பின் தலைவராக லயோலா மணி மேற்கொள்ளவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் தங்குதடையின்றி விநியோகம் செய்வதைக் கண்காணிப்பது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க...
சமீபத்திய இடுகைகள்

DVAC இயக்குனரான ஏ. அருண், ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராகப் பணியிட மாற்றம்

 தமிழ்நாடு அரசு  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) இயக்குனரான ஏ. அருண், ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். DVAC-ன் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சென்னை காவல்துறை ஆணையரான ஏ. அருண், ஐபிஎஸ் சமீபத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார் தற்போது அவர் அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் 1998-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, DVAC-யின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே DVAC-யின் சிறப்பு புலனாய்வு பிரிவு-1-ன் ஐஜியாக பணியாற்றினார். இப்போது, அவருக்கு DVAC இயக்குநரின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், அருண் ஐபிஎஸ் மீது பல்...

ரூபாய் .15 கோடி மதிப்பு போதைப்பொருளைக் கடத்த முயன்ற நான்கு குருவிகள் கைது விசாரணை தீவிரம்

சிவகங்கை நகர் காவல்துறையினர் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (வயது 35), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அபுசகுபர் சாதிக் (வயது 26), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (வயது 28), முகமதுரபீக் (எ) பாபு (வயது 30) ஆகிய நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது  அவர்களிடம் நடத்திய சோதனையில் 3.100 கிலோ அளவுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. அதனுடன் 3 செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். காவல்துறை தகவல் படி இந்தப் போதைப்பொருளை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதைப் பங்கிட்டுக் கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், காவல்துறைக்கு தகவல் வரவே பிடத்துள்ளனர் அந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளி...

இரு பேருந்துகள் மோதிய சாலை விபத்தில் ஆறு பேர் மரணம் 41 பேர் படுகாயம்

மதுரை- திருச்சிராப்பள்ளி நான்கு வழிச்சாலை வஞ்சிநகரத்தில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி  KMR Tranz  தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. கீழ் மற்றும் மேல்தள படுக்கை வசதி கொண்ட பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில்  செல்லும் சாலையில் நுழைந்த போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்றுச் கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் மீது, வேகமாக மோதிய விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 பேர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை சுற்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர். அரசு பேருந்து மீது மோதிய வேகத்தில், தனியார் ஆம்னி பேருந்து மீண்டும் இடது புறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிறுத்தப் பயணிகள் நிழற்குடையில் மோதியது. முதற்கட்ட விசாரணையில், விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் 3 பேரும், ஆம்னி பேருந்தில் சென்றவர்கள் 2 பேரும், பேருந்து நிறுத்தத்தில் உறங்கியவர் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்திருப்பதாக கொட்டாம்பட்டி காவல்நிலையத் தகவல்....

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு,

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை தலைமையில் நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி வட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடந்தது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். மாநாட்டு பந்தல் முகப்பு பகுதி, ஆழியாறு அணை, தென்னை மரங்கள் போன்று படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரங்குக்குள், 20 ஆயிரம் நபர்கள் வரை அமரும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலிருந்து பார்க்கும் வகையில், 'எல்.இ.டி.,' திரைகள் அமைக்கப்பட்டன. மாலை, தமிழர் பண்பாடு கலாச்சாரம் கலந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. கே.அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' அமைப்பு துவங்கிய பின்னர் , அவரது தலைமையில் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தது. இதனால், மாநிலம் முழுவதுமிருந்து, முன்னணி அமைப்பினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொள்ளாச்சியில் நடந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட த...

தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை ராஜினாமா செய்தனர்

திமுக ஆட்சியில் தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவரான ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை தற்போது தான் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த திட்டக்குழுவின் பொறுப்புகள் காலியாகின. திமுக ஆட்சியில் திட்டக்குழுவின் தலைவராக அப்போதய முதல்வர் மு. க.ஸ்டாலின் செயல்பட்டார். அவருக்கு கீழ் திட்டக்குழுவின் துணை தலைவராக பொருளாதாரம் அறிந்தவர் என  பலரும் கூறும் ஜெ. ஜெயரஞ்சன், ஆர் சீனிவாசன், எம் விஜயபாஸ்கர் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலரான சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பநாதன், சிவராமன் உள்ளிட்டவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருந்தனர் .அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான நிலையில் இந்த திட்டக்குழுவின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த ஜெ ஜெயரஞ்சன் செயல் துணை தலைவராக்கப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த  பின் திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் என அனைவரும் ...