தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சிப் பிரமுகர்கள், இன்று முதல் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக தலைமை நிலையச் செயலகம் இருக்கும் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக யாரும் தலைமை நிலையச் செயலகத்திற்கு வர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொண்ட நிலையில், விருப்ப மனு பெற விரும்பும் கட்சியினர் , பின்வரும் இணைப்பைப் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK இந்த இணைப்பின் வாயிலாக விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும். இவற்றை முன்பே குறிப்பிட்ட த...
புஜ் ராணுவ மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார் புஜ் ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், தென் பிராந்திய தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் உடன் இணைந்து பார்வையிட்டார். புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 3 முதல் 5 வரை நடைபெற்ற முகாமில் கட்ச் பிராந்தியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர். இந்த முயற்சியைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இந்திய ராணுவம் வீரர்களின் நலன் மற்றும் ராணுவ-குடிமக்கள் ஒத்துழைப்புக்கு இது ஒரு பாராட்டத்தக்க எடுத்துக்காட்டு என்று விவரித்தார். தொலைதூர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இத்தகைய விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.