PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு! தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் பழங்கோட்டை ஊராட்சியில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புற) PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடவடிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகுதியற்ற நபர்களைப் பயனாளிகளாகத் தேர்வு செய்தல், அரசு நிதியை விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்குதல், ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரச...
பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். அதிபர் மேக்ரோன் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்குப் பிரதமர் நன்...