இந்தியத் தேர்தல் ஆணையம் சமூக வலைதளங்களில் வெளியாகும் தேர்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் பிரச்சாரங்களைக் தீவிரமாகக் கண்காணிக்கிறது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட தவறான பதிவுகள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன. விளம்பரங்களுக்கு முன் அனுமதி டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) முன் அனுமதி பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சமூக வலைதளக் கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தனிநபர் தாக்குதல் மற்றும் வெறுப்புப் பேச்சு: தனிநபர் தாக்குதல், வன்முறையைத் தூண்டும் பதிவுகள் அல்லது தேர்தல் விதிகளை மீறும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களை நிர்ப்பந்திக்கும் வகை...
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கிய தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கரமான வெடி விபத்தில் 22-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததனர் கடந்த 5 ஆண்டுகளாக பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக, காலமுறைப்படி பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளாததும், தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததும் குறித்து கடுமையான கேள்விகள் எழுகின்றன. உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளையும் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணீக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலை எனச் செயல்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத்துறையின் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ன. ...