முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பீடு

ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பீடு ஜூன் 2026-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்தது) 73.45 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2025-டன் ஒப்பிடுகையில் 9.48 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது. ஜூன் 2026-க்கான மொத்த இறக்குமதி (சரக்குகள் மற்றும் சேவைகள் இணைந்தது) 88.76 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜூன் 2025 உடன் ஒப்பிடுகையில் 26.85 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் குறிக்கிறது. 2026-27-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 232.73 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 11.37 சதவீத நேர்மறை வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 270.15 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 17.55 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. ஜூன் 2025-ல் 34.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதி, ஜூன் 2026-ல் 40.41 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஜூன் 2025-ல் 54.08 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சரக்கு இறக்...
சமீபத்திய இடுகைகள்

அமலாக்கத்துறை சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேரத்தில் உள்ளே வந்தது.

 ED-அமலாக்கத்துறை சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேரத்தில் உள்ளே வந்தது. இனி என்ன நடக்கும் என்பதையும் பார்க்கலாம் , சென்னை காவல்துறையிடம் இருந்து ரூபாய் 35 கோடி வரை எம்எல்ஏ “குதிரை பேரம்” நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அணைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நகலெடுத்துள்ளனர். வழக்கில் சந்தேகப்படும் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தில் பணமோசடி கோணத்தை ஆய்வு செய்ய இதில் வாய்ப்புள்ளது: வி செந்தில்பாலாஜி மீதான சட்டமன்ற உறுப்பினர் ‘குதிரை பேரம்’ வழக்கில் ஆவணங்களின் நகல் கிடைத்த பின் வழக்கில் பணமோசடி கோணத்தில் ஏஜென்சி விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஊத்தங்கரை தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.இளையராஜாவிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 60 லட்சம் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  35 கோடி ரூபாய் சட்டமன்ற உறுப்பினருக்கு “குதிரை பேரம்” நடந்ததாகக் கூறப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்க இயக்குனரகம் திங்கள்கிழமை கிரேட்டர் சென்னை காவல்துறையிடம் பெற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் தமிழக வெற்றிக்...

கரூர் கோவில் நிலங்கள் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு ஏற்பு

கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் முறையீடு: கோவில்களின் 3,084 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு செய்ய அனுமதி வழங்கயதற்கு எதிராக அவசர வழக்கு தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை கோவில்களின் 3,084 ஏக் கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி அளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் அவசர வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது  திருத்தொண்டர் சபை அறக் கட்டளையின் அறங்காவலர் ராதா கிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ள தகவல் :- கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், புகழிமலை பாலசுப் பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில்களுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 3,084 ஏக்கர் நிலங்கள் உள்பட ஏராளமான நிலங்கள் உள்ளன. இவை பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையவை. இந்த நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்கள் 3,390 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு இருந்தன. இதுதொடர் பாக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து இருந்தது. அ...

லோக்பால் இயக்குநராக சோனல் மெஹ்லாவத் நியமனம்

லோக்பால் இயக்குநராக சோனல் மெஹ்லாவத் நியமனம்  மத்திய பணியாளர்கள் திட்டத்தின் கீழ், புதுதில்லியில் உள்ள லோக்பால் இயக்குநராக, 2011-ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக் கணக்குச் சேவை (ஐ.டி.ஏ.எஸ்.) அதிகாரியான சோனல் மெஹ்லாவத் என்பவரை மத்திய அரசு நியமித்தது.  பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட உத்தரவின்படி, தகுதிவாய்ந்த அதிகாரம் ஐந்தாண்டு பதவிக்காலத்திற்கான அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறையால் மத்தியப் பிரதிநிதித்துவத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட மெஹ்லாவத், அவர் பதவிக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, ஊழல் எதிர்ப்பு ஓம்புட்ஸ்மேனில் இயக்குநராகப் பணியாற்றுவார். மத்திய பணியாளர் திட்டத்தின் விதிகளின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று DoPT உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் லோக்பாலின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளின் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக லோக்பால் உள்ளது.லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்ற...

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்..

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்.. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் லயோலா மணிக்கு நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் சி ஜோசப் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரான லயோலா மணி ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் தி.மு.க ஆட்சியில் பாடநூல் கழக தலைவராக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இதற்கான பணி நியமன ஆணையை லயோலா மணியிடம் நேரில் வழங்கினார். இந்த நியமனம் மூன்று ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டது.  இதற்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பொறுப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி இருந்து வந்தார்,  இந்த அமைப்பின் தலைவராக லயோலா மணி மேற்கொள்ளவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் தங்குதடையின்றி விநியோகம் செய்வதைக் கண்காணிப்பது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க...

DVAC இயக்குனரான ஏ. அருண், ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராகப் பணியிட மாற்றம்

 தமிழ்நாடு அரசு  ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் (DVAC) இயக்குனரான ஏ. அருண், ஐபிஎஸ் தமிழ்நாடு காவல் பயிற்சிக் கல்லூரியின் இயக்குனராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். DVAC-ன் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சென்னை காவல்துறை ஆணையரான ஏ. அருண், ஐபிஎஸ் சமீபத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார் தற்போது அவர் அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் 1998-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, DVAC-யின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு தற்போதைய DVAC ஐஜி சி. மகேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே DVAC-யின் சிறப்பு புலனாய்வு பிரிவு-1-ன் ஐஜியாக பணியாற்றினார். இப்போது, அவருக்கு DVAC இயக்குநரின் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், அருண் ஐபிஎஸ் மீது பல்...

ரூபாய் .15 கோடி மதிப்பு போதைப்பொருளைக் கடத்த முயன்ற நான்கு குருவிகள் கைது விசாரணை தீவிரம்

சிவகங்கை நகர் காவல்துறையினர் நேற்று சிவகங்கை இந்திரா நகர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளையான்குடியைச் சேர்ந்த ரசூல்தீன் (வயது 35), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அபுசகுபர் சாதிக் (வயது 26), திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (வயது 28), முகமதுரபீக் (எ) பாபு (வயது 30) ஆகிய நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது  அவர்களிடம் நடத்திய சோதனையில் 3.100 கிலோ அளவுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. அதனுடன் 3 செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்தனர். காவல்துறை தகவல் படி இந்தப் போதைப்பொருளை சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மலோசியாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் மூலம் கடத்தும் திட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலேயே போதைப்பொருளை பங்கிட்டு பிரித்து விற்பனை செய்து பணமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதைப் பங்கிட்டுக் கொள்வதில் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறால், காவல்துறைக்கு தகவல் வரவே பிடத்துள்ளனர் அந்த போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பப்பட இருந்தது உள்ளி...