முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அரசு வழக்கறிஞர் நியமனம் புலனாய்வு செய்து தேர்வானதால் தாமதம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்கள் Government Pleaders  மற்றும் Public Prosecutors நியமனம் செய்வதற்கான பணிகள் தற்போது நிறைவடைகின்றன. சட்டத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் ஓய்வு பெற்ற நிலையில், மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி புதிய செயலாளராக சமீபத்தில் நியமனம் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் இந்த நியமன செயல்முறைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டன.சிவகங்கை மாவட்டத்தில் 13 அரசு வழக்கறிஞர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்,     நியமனங்கள் அனைத்தும் உரிய சட்ட விதிகளின்படியே எவ்வித முறைகேடுகளுமின்றி நேர்மையான முறையில் நடத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாக நடக்கவும்,  இதில் யாராவது பணம் கேட்டாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ உடனடியாக புகார் அளிக்கலாம்" என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெர...
சமீபத்திய இடுகைகள்

உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக நியமனம்

உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக நியமனம்      தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) என்பது பொதுமக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பொருட்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளும் அரசு நிறுவனம். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பாதுகாப்பு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இக்கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் மற்றும் ராகி ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் விலைக்குக் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லைத் தனக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகள் மற்றும் தனியார் முகவர்கள் மூலம் அரிசியாக அரவை செய்கிறது. நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை விநியோகம் செய்கிறது. மாநிலத்தின் மொத்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகளை இக்கழகமே நேரடியாக நடத்தி வர...

தவெகவில் பலரை இணைந்து நடத்தும் 60 வயது இளைஞர் அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள்

இரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் எனும் புஸ்ஸி ஆனந்த். இவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் தற்போது உள்ளார்.  ஆரம்ப காலத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், முதலில் அரசியல்வாதியின் உதவியாளராகத்  பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிரமாக நடிகர் விஜய்யின் ரசிகராக மாறி பண்டிச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவரானார். நடிகர் விஜய்யின் தந்தை திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என அழைக்கப்படுகிறார். நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய போது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு  வ...

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

72-வது தேசிய திரைப்பட விருதுகள்  திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக மம்மூட்டி மற்றும் கார்த்திக் ஆர்யனும், சிறந்த நடிகையாக யாமி கௌதமும் தேர்வு செய்யப்பட்டனர். 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள நேஷனல் மீடியா சென்டரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டதில் மலையாள மொழி நடிகர் மம்மூட்டி மற்றும் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை யாமி கௌதம் வென்றார். ‘ப்ரமயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டியும், ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர்களாகத் தேர்வாகினர். அதே போல ’ஆர்டிகிள் 370’ படத்துக்காக யாமி கவுதம் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார்.     2024-ஆம் ஆண்டில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை உள்ளடக்கி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் அடங்கிய நடுவர் குழு விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்தது.  வி...