இந்தியாவில் நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியீடு நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி எண் 597-க்கு பதிலளித்த சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், National Judicial Data Grid (NJDG)-இன் 16.07.2026 நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவின் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் 16.07.2026 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய உச்சநீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நிலுவை வழக்குகள் 96,024 ஆகும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 26 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக – 558 வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக – 10,094 வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக – 24,611 வழக்குகள், 1 ஆண்டுக்கும் மேலாக – 49,248 வழக்குகள், நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில்: மொத்த நிலுவை வழக்குகள் – 64,72,536 ஆகும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக – 80,660 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக – 4,52,152 வழக்குகள், 10 ...
தமிழ்நாடு அனுமதியற்ற வீட்டு மனைப்பிரிவை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் 30.06.2027 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசாணை. நகர்ப்புற வளர்ச்சித் துறை 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அணைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 30.06.2027 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த .அரசாணை எண் 78-ன் கீழ் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களின் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை ஆன்லைன் வழியாக சட்டப்பூர்வமாக வரன்முறைப்படுத்திக் கொள்ள முடியும். 20 அக்டோபர் 2016 அல்லது அதற்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளாக இருக்க வேண்டும். மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது 20.10.2016-க்கு முன் விற்கப்பட்டு, அதற்கான விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமதளப் ப...