"அன்புத் தாய்மார்களே, அருமை பெரியோரே, இனிய குழந்தைகளே!" என்ற உரைக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் மிகச்சிறந்த பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 11, 2026 அன்று 90 வது வயதில் காலமானார். சாலமன் பாப்பையா பிப்ரவரி மாதம் 22, 1936 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் சாத்தான்குடியில் பிறந்தார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது இனிய குரலிலும் நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் பல்லாயிரக்கணக்கான பட்டிமன்றங்களை நடத்தி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருக்குறள் மற்றும் பல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய முறையில் உரை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.1961-ஆம் ஆண்டில், புதுக்கோட்டையில். 'பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா?' என்ற விவாதத் தலைப்புகளில், 'புதுமைக் கவிஞனே' என்ற தலைப்பில் உரை நிக...
கம்பூர் ரூபா மீதான பட்டியல் பழங்குடி, வன்கொடுமை வழக்கு முடித்து வைப்பு, பணியிடை நீக்கம் ரத்து செய்ய மக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கம்பூர் ஊராட்சிச் செயலாளர் ரூபா மீது தொடரப்பட்ட ஜாதிய வன்கொடுமை எனும் PCR வழக்கு பொய்யானது என காவல்துறை விசாரணையில் நிரூபிக்கப்பட்டு, அது காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது. கம்பூர் ஊராட்சியில் தூப்புறவு ஊழியர் சசிகலா என்பவர், ஊராட்சிச் செயலாளர் ரூபா தன்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் மேலூர் காவல்துறையினரிடம் அரசு மருத்துவமனையில் புகார் அளித்ததன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வட்டார வளர்ச்சி அலுவலரால் ரூபா தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல்துறையில் அளித்த புகாரைத் தொடர்ந்து தீவிர புலனாய்வு விசாரணை நடத்தினர். அதில், சசிகலா குறிப்பிட்ட தேதியில் ரூபா அங்கு பணியிலேயே இல்லை என்பதும், தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காக முந்தைய ஊராட்சிச் செயலாளரின் தூண்டுதலின் பேரில் இந்த பொய்யான புகார் அளிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் உண்மையில்லை என முடிவு செய்யப்பட்டு, 'Mistake of Fact' என்ற அடிப்படையில் எஸ்சி/எஸ்டி (PCR) வழக்கு முற்றிலு...