போதைப்பொருள் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை! கோயம்பத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவரை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த அதிர்ச்சியான சம்பவம். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அமுதனின் பெற்றோர் முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைத்த நிலையில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன் ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் கலந்து கொண்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை வலியுறுத்துகிறார். அதே நேரத்தில் கோவையில் 19 வயது கல்லூரி மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போதைப்பொருள் பயன்பாடு குறித்து கல்லூரி விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று உயிரிழந்த மாணவரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 5 பேர் பிடித்து விசாரிக்கப்பட்...
தமிழ்நாட்டில் 10 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் இ ஆ ப வெளியிட்டுள்ள அறிவிப்பில், உளவுத்துறை டிஜிபியாக பணிபுரிந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார், வேலூர் சரக டிஐஜியாக பணிபுரிந்த தர்மராஜன், பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு காவல் துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவசீர்வாதம் உள்ளிட்ட 3 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. சென்னை காவல்துறையின் தெற்கு இணை ஆணையராக பணிபுரிந்த பகர்லா செபாஸ் கல்யாண், உளவுப் பிரிவு உள்பாதுகாப்பு டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜியாக பணிபுரிந்த சரவணன், சென்னை சிஐடி உளவுத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டார். திருவாரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த கராட் கரூண் உத்தவராவ், சென்னை குற்றவியல் உளவுத்துறை பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த மயில்வாகனன், சென்னை சிறப்பு பி...