முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

LPG முன்பதிவு விதிகள் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம்

LPG முன்பதிவு விதிகள் மாற்றம், வாடிக்கையாளர்களுக்கு  நிவாரணம்! எல்பிஜி நிரப்பு முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டது இப்போது அடுத்த சமையல் ஏரிவாயு உருளை (சிலிண்டரை) 25 நாட்களுக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம் கிராமப்புற LPG வாடிக்கையாளர்களுக்கு  நிவாரணம் இதற்கு முன் 45 நாள் இடைவெளியில் இருந்து மாற்றம்  கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட அனைத்து உள்நாட்டு LPG வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான 25 நாள் விதியை  பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்டர்-ரீஃபில் முன்பதிவு இடைவெளியைக் குறைக்க முடிவு செய்தது மத்திய அரசு எல்பிஜி (LPG) சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மிக முக்கியமான மாற்றத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களிலிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய எல்பிஜி முன்பதிவு மற்றும் விநியோக விதிகள் படி சிலிண்டர் முன்பதிவு இடைவெளி குறைப்பு முன்னதாக நகர்ப்புறங்களில் 25 நாட்களும், கிராமப்புறங்களில் 45 நாட்களும் இடைவெளி கடைப்பிடிக்க...
சமீபத்திய இடுகைகள்

குடி போதையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தில் சிக்கி பலியான PSNA தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்

கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் திண்டுக்கல் PSNA தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களான சூர்யா திண்டுக்கல், யுவசஞ்சித் திண்டுக்கல், ஜோசுவா திண்டுக்கல், முரளி திண்டுக்கல், ஜீவா திண்டுக்கல், சந்தோஷ் மதுரை, பிரசன்னா மதுரை, விஸ்வா சேலம், ஆகியோர் தொடர் விடுமுறை என்பதால், அவர்களின் நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய காரில் இந்த மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் தெரிவிக்காமல் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 2026 செப்டம்பர் 4-ஆம் தேதி நள்ளிரவு 11:42 மணி அளவில், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற அந்தக் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றிய லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதால் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், மீட்புக்குழுவினர் காரை வெட்டி எடுத்து 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து கேரளா மாநில காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பராமரிப்பு பண...

ஊழல் வழக்கில் கைதாகும் முன்னால் திமுக அமைச்சர்களில் முதலிடத்தில் கே. என். நேரு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது DVAC முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை (ED) வழங்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.: கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது இந்த டெண்டர் முறேகடு மற்றும் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூபாய் 1,020 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கே.என்.நேருவின் சகோதரர் இரவிச்சந்திரன் லஞ்சப் பணம் கைமாறுவதைக் கண்காணித்ததாகவும், மற்றொரு சகோதரர் மணிவண்ணன் அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. ...

இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 6 சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல்

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதன்படி, 6 அக்டோபர் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் தனி மற்றும் தாராபுரம் தனி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தேர்தல்  (அட்டவணை): தேர்தல் அறிவிப்பாணை மற்றும் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் செப்டம்பர் 9, 2026  வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 17, 2026 வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 18, 2026 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 19, 2026  வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அக்டோபர் 6, 2026 வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இடைத்தேர்தல் நடக்கும் பிற தொகுதிகள்: பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி  மற்றும் மேற்கு வங்கம்: ரெஜினா Block மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகள்       அஸ்ஸ...