முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு அரசு லண்டனில் தகுதியான தொழில் நிறுவனங்களுடன் புதிய MOU

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், லண்டனில் ரூபாய் .11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கிரேட் பிரிட்டன் லண்டன் நகர் சென்றுள்ள நிலையில், இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Samvardhana Motherson International Limited.முதலீட்டுத் தொகை: ரூபாய் .11,000 கோடி. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி ஆகிய பிரிவுகளில் இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தப் புதிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டுதல் துறையின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனத்தின் பிரிவுத் தலைவர் பேரி பெயிண்டர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா  Motherson International Ltd., நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டி...
சமீபத்திய இடுகைகள்

சித்தர் வழங்கிய ஆப்பிள் நிறுவன முத்திரையாகி வளர்ந்த கதை

சித்தர் கடித்து வழங்கிய ஆப்பிள் நிறுவன முத்திரையாகி வளர்ந்த சுவாரஸ்யக் கதை சிறப்புச் செய்திகள் :                          திருப்பதி ரெங்கநாதன்    லக்ஷ்மி நாராயண் சர்மா எனும் லக்ஷ்மண் தாஸ்  உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர்  கிராமத்தில் ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்தார். மிக இளமையான வயதிலேயே ஆன்மீகத் தேடலின் வீட்டை விட்டு வெளியேறி, வட இந்தியா முழுவதும் துறவியாகத் திரிந்த பின்னர், தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். 1958-ஆம் ஆண்ட்டில் முழுமையாக துறவு வாங்கி சந்நியாசம் மேற்கொண்டார். ஹிந்து ஆன்மீக குரு மற்றும் ஹனுமன் பக்தர் சீடர்களால் இவர் அன்போடு "மஹாராஜ்-ஜி" என அழைக்கப்பட்டார் ஒருமுறை பாபா இரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்ட ஆங்கிலேய  கிழக்கிந்திய ரயில்வே பரிசோதகர் (TT), 'நீம் கரோலி' என்ற அடுத்த நிறுத்தத்தில் பாபாவை இரயிலிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார். பாபா இரயிலை விட்டு இறங்கி அருகில...

விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்த வரலாற்றுப் பார்வை

 "சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்  இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூடிக வாகனே இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து  குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி இன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் எனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவத்(து) இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து........."...

சதுர்த்தி நாளில் மதுரை அன்னை ஸ்ரீ மீனாட்சியைக் காணவந்த ஐந்து வயது துர்கா

தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை கொண்டுவரப்பட்டு, சதுர்த்தி தினமான இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.  'துர்கா' என்ற 5 வயது (பெண் யானையைக் குறிக்கும்  சொல்.   பிடி, அதவை, வடவை, கரிணி,அத்தினி,) கொண்டுவரப்பட்டு, இன்று காலை கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.  அஸ்ஸாமிலிருந்து தமிழ்நாடு கோவில்களுக்கு 5 வளர்ப்பு யானைகளைக் கொண்டு வருவதற்கான அனுமதியை அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் வழங்கினர். மாநிலங்களுக்கு இடையேயான இந்த யானைகள் இடமாற்றத்திற்குத் தேவையான தடையின்மைச் சான்றிதழ் (NOC) மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அந்த 5 யானைகளான துர்கா  5 வயது பெண் யானை, மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறது. மற்றும் ஹிராலால், சிவா, ரூப்சிங், பிஜூலி, இந்த யானைகள் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீ திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் சங்கர மடம், மயிலாடுதுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும்...

கொள்ளையடிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளும் கெஞ்சிப் பேசி சில்லறை பார்க்கும் போக்குவரத்து அலுவலர்களும் பாதிப்பில் மக்கள்

விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமணங்கள் வார இறுதி தொடர் விடுமுறையை ஒட்டி, தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை விமானம் போல கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும், மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.ஆன்லைன் முன்பதிவு ரெட்பஸ் உள்ளிட்ட தளங்களின்படி பல்வேறு முக்கிய நகரங்களுக்கான தற்போதைய கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:முக்கிய வழித்தடங்களின் பேருந்து கட்டண விவரம்சென்னை - கோயம்பத்தூர் ரூபாய் 6,154 வரை உயர்வு (வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகம்). பெங்களூரிலிருந்து கோயம்பத்தூர் செல்ல ரூபாய் 650 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 3,200 ஆக மாறியுள்ளது.சென்னை - மதுரை: ரூபாய் 4,000 வரை வசூலிக்கப்படுகிறது.சென்னை - திருச்சிராப்பள்ளி: ரூபாய் 3,999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருநெல்வேலி: வழக்கமாக ரூபாய் 750 - ரூபாய் 1,000 ஆக இருந்த டிக்கெட், தற்போது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுகிறது.சென்னை - கும்பகோணம்: ர...