தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தவெக வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் ஏற்கனவே நல்ல பொறுப்பு அக்கட்சியில் வகித்து வந்த நிலையில் அதிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவது அதிகரிக்கும் நிலை, சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பக்கத்தில் ஆகஸ்ட் 2, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் ஙார்பில் பச்சேரி சி. ஆர். சுந்தர்ராஜன் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் மாநாடு போல நடைபெற்றது. சிவகங்கை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதகுபட்டியில் கனிமம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மேடையில் உரையாற்றியபோது, மதியம் உணவாக பிரியாணி வழங்கும் இடத்தில் கூடிய மக்கள் கூட்டம் அலைமோதியது சிவகங்கையில் முதலில் தவெக சார்பாக நடந்த பிரம்மாண்ட அரசியல் நகர்வு! தவெகவில் 10,000 பேரை இணைக்க ரூபாய் . 2 கோடி செலவில் பிரம்மாண்ட மேடை தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி பலத்தையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் வகையில், பிரம்மாண...
மத்தியப் புலனாய்வுப் பிரிவான சிபிஐ-யில் இணை இயக்குனராகப் பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்ணி (IPS:1998:TN), மே 25, 2026 அன்று மத்திய அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலுடன் முன்கூட்டியே சொந்த மாநிலமான தமிழ்நாடு பணிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ காரணம் 'தனிப்பட்ட காரணங்கள்' (personal grounds) என்று கூறப்பட்டாலும், புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தனது நிர்வாகத்தை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது DVAC இயக்குநரான சி. மகேஸ்வரிக்கு பதிலாக, இவரை டி.வி.ஏ.சி இயக்குநராக நியமிக்க அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் குல்கர்ணி, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசில் கூடுதல் இயக்குநர் பதவிக்கு தகுதி பெற்றவர். சிபிஐ-யில் இணை இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில், பஞ்சாயத்து ஒதுக்கீடு மற்றும் நிரவ் மோடி வழக்கு உள்ளிட்ட உயர்மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்த குழுவில் இருந்தவர். மேலும், 2024-ஆம் ஆண்டு கு...