சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது, நடந்தது என்ன? சிவகங்கை அருகே இரண்டு இளைஞர்களை விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கின் விவரங்கள் வருமாறு: கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள்: தெய்வேந்திரன் (வயது 27): சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கோயமுத்தூரில் கார் வாடகைத் தொழில் செய்து வந்தார். பூப்பாண்டி (வயது 25): சிவகங்கை மாவட்டம், சிறுவேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது நண்பர் தெய்வேந்திரன் சமீபத்தில் புதிய மாருதி எர்டிகா காரை வாங்கியிருந்தார். அதை சர்வீஸ் செய்துவிட்டு, நண்பர் பூப்பாண்டியுடன் சிவகங்கை - காளையார்கோவில் செல்லும் சாலையில் உள்ள பழமலைநகர் - கொடிக்காடு கண்மாய் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு மது குடித்துளளனர். அப்போது இருசக்கர வாகனங்களில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் இவர்களைச் சூழ்ந்தததும். ஆபத்தை உணர்ந்து இருவரும் கண்மாய்க்குள் ஓடினர். ஆனால், அந்தக் கும்பல் அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் தலை மற்றும...
சடடசபையில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டம் 2026, தமிழ்நாடு தொழில் எளிதாக்கல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் திருத்தச் சட்டம், தமிழ்நாடு ஊதியம் வழங்குதல் திருத்த சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் இரண்டாம் திருத்த சட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி திருத்த சட்டம், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாம் திருத்தச் சட்டம், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி இரண்டாம் திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குதல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதே சமயம் தனியார் பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. வழக்கு நீலிமன்றத்தில் உள்ளதால் இந்த நிலை இது ...