முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தனியார் பள்ளி சங்கம் நடத்தி ஊழலில் சிக்கும் முன்னால் ஆட்சியாளர்கள்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்  நடத்தி, மாநிலம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகளிடம் மாவட்ட சங்கம் அமைத்து அரசு அங்கீகாரம் மற்றும் தடையின்மைச் சான்றுகள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில், அதன் தலைவர் பி.டி. குமார் என்ற அரசகுமாரை சமீபத்தில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினராரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது இந்த நிலையில், சென்னை காவல்துறையின் தீவிர விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்கள படி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் படை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையின் போது, அவர் வாங்கிய லஞ்சப் பணம் எங்கு சென்றது, யாருக்கெல்லாம் கைமாறியது என்பது குறித்த பல திடுக்கிடும் தகவல் மற்றும் ஆவணங்களும் கணக்கு விவரங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தர உயர்வு, மற்றும் DTCP/CMDA சான்றிதழ்கள் போன்ற சட்டப்பூர்வ அனும...
சமீபத்திய இடுகைகள்

எத்தனால் கலந்த பெட்ரோல் பற்றிய உண்மைகள் குறித்து அரசு வெளியீடு

எத்தனால் கலந்த பெட்ரோல் பற்றிய உண்மைகள்: தவறான கருத்துக்களிலிருந்து உண்மைகளைப் பிரித்தல் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டம் தொடர்பான சில தவறான கூற்றுகள் சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டன. பின்வரும் புள்ளி வாரியான தெளிவுபடுத்தல்கள், அறிவியல் சரிபார்ப்பு, விரிவான கள அனுபவம் மற்றும் தொழில்துறை தரவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தக் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து, உண்மை நிலையை முன்வைக்கின்றன. உரிமைகோரல் 1: 2023க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 பெட்ரோலில் இயங்க முடியாது. E15-plus எரிபொருள் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது, E19-E20 எரிபொருள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த காலகட்டத்தில், பரவலான எஞ்சின் செயலிழப்பு அல்லது எத்தனால் கலவை காரணமாக வாகனம் பழுதடைந்தது பற்றிய சரிபார்க்கப்பட்ட செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. எத்தனால் கலவையானது இயந்திரங்கள் அல்லது எரிபொருள் அமைப்புகளுக்கு முறையான சேதத்தை ஏற்படுத்தியிருந்தால், அத்தகைய தோல்விகள் பெரிய அளவிலான உத்தரவாதக் கோரிக்கைகள், சேவை பிரச்சாரங்கள் மற்றும் பரவலான நுகர்வோர் புகார...

வண்டல் மண் எடுக்க 4 ஆயிரம் லஞ்சம் நீர்வளத்துறை ஆய்வாளர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டம் செல்லையா மகன் எட்வர்ட் (வயது 49). இவர் தனது விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்திலுள்ள மாங்குளத்திலிருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதுதொடர்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளரான லோகநாதன்(வயது 41) என்பவரை நேரில் அணுகிய போது, அவர் அனுமதி வழங்க ரூபாய் .4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட்,  அது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் மற்றும் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறி வைத்து பிடிக்கத் திட்டமிட்டு அதற்கு நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து எட்வர்டிடம் இருந்து அரசு சாட்சிகள் முன்னிலையில் ரூபாய் .4 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கிய லோகநாதனை ஊழல் தடுப்புக் க்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம்...

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நேற்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘சமுத்திர மந்தன்’ எனப்படும் தேசிய கடல்சார் ஆய்வுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு 2030-31 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு ரூ.84,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பரந்த அளவிலான கடல்சார் ஆற்றல் திறனை முழுமையாக வெளிக்கொண்டு வரும் நோக்கில், 2025-ம் ஆண்டு சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட நவீன காலச் சமுத்திர மந்தன் என்ற தொலைநோக்குப் பார்வையை இத்திட்டம் நனவாக்குகிறது. இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டில் எண்ணெய் வளங்கள் ஆய்வு, உற்பத்தியை விரைவுபடுத்துதல், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுதல் ஆகியவ...

ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

சுதந்திர தினத்தில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலையை பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது,மேலூர் - காரைக்குடி நான்கு வழிச் சாலை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு இடையேயான பயணம் எளிதாகும்.பயண விவரங்கள் மற்றும் பயன்கள்பயண நேரம்: தற்போதைய 1 மணி 15 நிமிடப் பயணம் சுமார் 40 நிமிடங்களாகக் குறையும்.சுங்கச்சாவடி: மேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் பிராமணபட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திட்டப் பகுதி: மேலூர் - திருப்பத்தூர் (27 கி.மீ) மற்றும் திருப்பத்தூர் - காரைக்குடி (19 கி.மீ) பிரிவுகளை உள்ளடக்கியது.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்பட்டு வரும் 46-கிமீ மேலூர்-காரைக்குடி நான்கு வழி புறவழிச்சாலை மார்ச் மாதம் 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது முடிந்தது இது தென் தமிழ்நாடு முழுவதும் மேம்பட்ட இணைப்பு மற்றும் விரைவான பயணத்தை உறுதியளிக்கிறது. 46-கிமீ மேலூர்-காரைக்குடி புறவழிச்சாலை இந்தி...

கபினியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பு நாளை மறுநாள் மேட்டூர் வந்தடையும்

கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று ஆகஸ்.1 ல் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காட்சி! இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்!  "இயற்கை யாருக்கும் சொந்தமானதல்ல.." கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன, இந்த நேரத்தில் அதிக நீரைத் தேக்கினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம்..! ''தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெறுக..''  என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தகவல் "கபினி அணை நிரம்பி வருகிறது. அணை நிரம்பியதும் நீரை வெளியேற்ற வேண்டும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீரை வெளியேற்றக் கூடாது என்று போராடும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் . வேண்டுகோள்.   "கபினி அணையின் நீர் இருப்பு குறித்த தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் வழங்கி வருகின்றனர்.  அணைக்கு வரும் நீரின் அளவு (வரத்து)...

தேர்வு வினாத்தாள் இனி வெளியாகி மோசடி நடந்தால் கடுமையான தண்டனை புதிய சட்டம் அமலானது

இனித் தேர்வு வினாத்தாள் வெளியாகி மோசடி நடந்தால் கடுமையான தண்டனை: 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை , ரூபாய் 10 கோடி அபராதம் பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் வெளியாகி மோசடி , ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட "பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்தச் சட்டம், 2026" நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தற்போது சட்டமாகியுள்ளது. வினாத்தாள் மோசடியாக வெளியாகுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு:  5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூபாய் 50 லட்சம் வரை அபராதமும் விதிக்க . ஒழுங்கமைக்கப்பட்ட  வினாத்தாள் வெளியிடும் கும்பல்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்வு மோசடிகளுக்கு:  குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூபாய் 10 கோடி அபராதம். தேர்வு நடத்தும் சேவை நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் ரூபாய் 5 கோடி வரை அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை தேர்வு பணிகளில் இருந்து தடை. விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு விசாரணைக் குழுக்க...