சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பதிவிரக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் ஜன நாயகனை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி . 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்குவதை திரைப்படத் தணிக்கை வாரியம் நிறுத்தி வைத்தது.தொடர்ந்து, நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன. தற்போது, மறுதணிக்கை நிறைவடைந்ததாகவும் தேர்தல் நிறைவடைந்த பிறகு மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வியாழக்கிழமை மாலை வெளியான நிலையில், இன்று அதிகாலை 3 மணிநேர முழுப் படமும் வெளியானது.இதனால் படக...
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒற்றைக் குழந்தை குடும்பங்களுக்கு பொருளாதார ஊக்குவிப்புக் கொள்கைகளைக் கோரும் தொடர்புடைய மனுவையும் நிராகரித்தது.ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது மத்திய மாநில அரசின் கொள்கை முடிவுகள் சார்ந்த விஷயம் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மனுவில் பயன்படுத்தப்பட்டிருந்த தரம் குறைந்த மொழிநடைக்காக மனுதாரரை நீதிமன்றம் வன்மையாக கண்டித்தது. ஜாதிவாரிக் சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நிறுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இது அரசின் கொள்கை சார்ந்த கொள்கை முடிவான Policy Decision என்பதால், தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது மனுவில் பயன்படுத்தப்பட்டிருந்த மொழிநடை சரியில்லை எனக் கூறி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் மனுதாரரை கண்டித்தார்....