தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்த செல்லலாம். அல்லது ஒருவேளை அதிகமான பணத்தை எடுத்து சென்று பறக்கும் படையிடம் எனும் சோதனை அலுவலர்களிடம் சிக்கினால் அடுத்ததாக என்ன நடக்கும்? என்பது பற்றி தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் கடந்த 2019ல் நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது போல வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எப்போதும் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பதை நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்ததன்படி நாடாளுமன்ற. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, ஏப்ரல் மாதம் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகள் என ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜுன் மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தான் எந்தக் கட்சி எத்தனை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா சிவபுரிப்பட்டி கிராமத்தில் சிவராத்திரி மறுநாள் நடந்த பாரிவேட்டை நிகழ்ச்சிக்கு. வனத்துறை மற்றும் காவல்துறை அனுமதி தராத போது, முன் விரோதமாக இரண்டு தரப்பினர் மோதிக் கொண்டதில் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் இரண்டு தரப்பிலும் புகார் செய்திருந்த நிலையில், 17 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஒரு வாரம் காலம் கடந்த நிலையில் தற்போது வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது. காவல்துறை அனுமதி தராத ஒரு நிகழ்வில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமுற்ற நிலையில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க மிகுந்த தயக்கம் காட்டுவதாகவும் பேசப்படுகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு, ஊர் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நிலையில் காவல்துறை அலட்சியப் போக்கும் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனத் தகவல்