முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகளுடன் 1,000 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு.  சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.66 கோடிக்கு சொத்து குவித்ததாக அப்போது முன்னாள் சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உயர்நீதிமன்றம் முலம் அனுமதி கோரி நீதியரசர் சீனிவாசன் அனுமதி வழங்க ஆளுநருக்கு உத்தரவிட்டு அப்போது ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டியால் அனுமதி வழங்கப்பட்ட வழக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் வழக்கு தொடரப்பட்டது பின்னர் அதில் துணைக் கண்காணிப்பாளர் நல்லம் நாயுடு மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பின்னர் வழக்கு விசாரணை கர்நாடகா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் தண்டனை வழங்கப்பட்டது...
சமீபத்திய இடுகைகள்

தேசியக் கல்விக் கொள்கை மத்திய அமைச்சர் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பதில்

தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை, விதிகளின் படி தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாதென மத்திய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (SSA) நிதியுதவி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற விகிதாச்சாரப் பகிர்வு முறையில் நிதி வழங்கப்படுகிறது.இந்த நிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையின் அம்சமான PM ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழ்நாடு உட்பட மாநிலங்களுக்கிடையே நிதியை மத்திய அரசு கடந்தாண்டு முதல் நிறுத்தி விட்டது. அந்த வகையில் சர்வ சிக்ஷ் அபியான் திட்டத்தில் 2023-24 ஆம் கல்வ...

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்; தமிழ்நாடு பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்.தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டார், தமிழ்நாடு பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம் கடந்த சில தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தையும்  பலத்தஅடியாக இருக்கிறது. காரணம் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருந்த நிலையில் அவர் செய்த ஜாதி ரீதியாக மாநிலத்தின் தலைவர்கள் நியமனம் தான். குறிப்பாக, நடந்து முடிந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் 3 வது முறையாக பூஜ்யம் சீட்டுகள் கிடைத்தன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் துவண்டு போயினர். மேலும், இண்டி கூட்டணியில் காங்கிரஸூக்கான மௌசும் குறைந்தது. எனவே, கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொறுப்பார்கள் ஆதிதிராவிடர் வகுப்பு சார்ந்த பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹேல் பஞ்சாப் மாநிலத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பொறுப்பாளராக சையத் நசீர் ஹூசேன் நிய...

IDFC உள்ளிட்ட தகுதி இல்லாத நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து, RBI அறிவிப்பு

IDFC உள்ளிட்ட தகுதி இல்லாத நிதி நிறுவனங்களின் உரிமம் ரத்து, IDFC மற்றும் ரிலையன்ஸ் வணிகம் உட்பட 17 NBFC நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உரிமம்  (லைசென்ஸை) ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி. IDFC லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 20 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழை RBI வசம் திருப்ப ஒப்படைத்துள்ளன.  இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னால் வணிகத்திலிருந்து வெளியேறுதல், இணைப்புகள் மற்றும் நிறுவனங்களை மூடுதல் மற்றும் பணியாளர்கள் நடத்தும் மோசடி குறித்து புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதன் அடிப்படையில் 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன இது தவிர, மேற்கு வங்காளத்தில் பதிவுசெய்யப்பட்ட 17 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் வெளியிடப்படவில்லை. காமதேனு நிதி நிறுவன தனியார் நிறுவனத்தின் உரிமம் மீட்டெடுக்கப்பட்...

காசி தமிழ் சங்கமம் (KTS) 3.0

இந்தியாவில் காசி தமிழ் சங்கமம் (KTS) 3.0 இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி,  வரை உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற உள்ளது. இந்த மதிப்புமிக்க கலாச்சார முயற்சி தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பண்டைய நாகரிக பிணைப்பைக் கொண்டாடுவதையும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் முதல் முறையாக, பங்கேற்பாளர்கள் பிரயாகராஜில் மஹாகும்பமேளாவைக் காணவும் , அயோத்தியில் புதிதாகத் திறக்கப்பட்ட ராமர் மந்திரைப் பார்வையிடவும் முடியும். இந்த ஆண்டு நிகழ்வின் முக்கிய கருப்பொருள் அகஸ்தியரின் சித்த மருத்துவ முறை (பாரதிய சிகிச்சை), பாரம்பரிய தமிழ் இலக்கியம் மற்றும் தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அவர் அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதாகும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு 'Y’ பிரிவு பாதுகாப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு 'Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. ''Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பர்; விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும். சமீபத்தில் விஜய் மேற்கொள்ளபா போகும் பயணங்களில் முட்டை அடிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ட்விட்டரில் நடந்த குழு உரையாடல்களில் பேசியது டிரெண்டான நிலையில் இந்தப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு. இந்தியாவில் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு அளவுகோல்களை வைத்துள்ளதன்படி பாதுகாப்பு தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு X, Y, Z, Z+ போன்ற பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன. முதலாவது .:-X கேட்டகரி (X Category Security)  இது மிகக் குறைந்தபட்ச பாதுகாப்பு அளவாகும். பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் (ஒரு முறை ஒருவர்) வழங்கப்படும். காவல்துறை அல்லது பிற பாதுகாப்பு அமைப்புகளால் இந்த பாதுகாப்பு வழங்கப்படும். இரண்டாவதாக .:- Y கேட்டகிரி ...