முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மும்மொழிக் கொள்கையை மத்தியரசு 2029 ஆம் ஆண்டு வரை தள்ளி வைக்க முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை யோசனை

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பயிற்று மொழி குறிந்து கருத்து, அதில் "கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப...
சமீபத்திய இடுகைகள்

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். குறு விவசாயிகளுக்கு ரூபாய் .50,000 வரை பயிர்க்கடன்கள் -முழு தள்ளுபடி. சிறு விவசாயிகள் - 50 சதவீதம் கடன் தள்ளுபடி 20,000 தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கை. “5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி...” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்கள்,இன்று  ரூபாய் 50,000 வரை மட்டும்”என அறிவிப்பு அதிலும் மே 2025-பிப்ரவரி 2026 என்று கால அளவீடு செய்தது தான் இது ஏமாற்றம் இல்லையா?  50 சதவீதம் தள்ளுபடி இல்லை ரூபாய் 50,000 மட்டுமே கால அளவு   கட்டுப்பாடு வேறு உள்ள நிலையில் பயனடையும் உண்மை விவசாயிகள் யார் என்பது இனி மேல் தான் தெரியும்.              சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வி...

ஆனைமங்கலம் கோவிலின் தற்போதய நிலை, பரிதாபங்கள்

ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டு வந்தார்கள். அந்த செப்பேடுகளை தமிழ்நாடு கொண்டு வரவேண்டும் என பேசுகிறவர்களுக்கு அந்த ஊரின் திருக்கோவிலை நாம் எந்த லட்சணத்தில் வைத்துள்ளோம் எனத் தெரிய வேண்டாமா? இந்த பொக்கிஷங்கள் போல பல ஆயிரம் ஆவணங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் தமிழகத்தில் பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை எவரும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. பாதுகாப்பாக எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்கட்டும். இந்த ஊராட்சியில் ஆனைமகானம், மஞ்சவாடி, ஒர்குடி, பூலாங்குடி, ஆனைமங்கலம், என தேவூர் அருகில் உள்ள பழமையான கிராமம் கி.பி. 985 ஆம் ஆண்டில் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் . இன்றைய இந்தோனேசியப் பகுதியான 'ஸ்ரீவிஜய' நாட்டின் சைலேந்திரகுல மன்னரான மாற விஜயதுங்க வர்மன், தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் 'சூடாமணி விகாரம்' என்ற பிரம்மாண்ட பௌத்த வழிபாட்டுத் தலத்தைக் கட்டுகிறார். இராஜராஜ சோழன், அந்த பௌத்த விகாரையின் பராமரிப்புச் செலவுகளுக்காக 'ஆனைமங்கலம்' கிராமத்தின் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார். தந்...

காவல்துறையில் சமீப பணி மாற்றங்கள்

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று மே மாதம் 25 ஆம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு . சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை கவனித்த மகேஸ்வர் தயாள் காவல் நிர்வாக ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் முக்கிய பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.  திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கரூர் வி.செந்தில் பாலாஜி,    திரச்சிராப்பள்ளி கே.என் நேரு,    திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,    விழுப்புரம் டாக்டர்.கே.பொன்முடி,  திருவணணாமலை டாக்டர் எ.வ.வேலு,   காட்பாடி டி.துரைமுருகன்,       கோயமுத்தூர் எஸ்.பி.வேலுமணி,       திருவாரூர் ஆர்.காமராஜ்,    விராலிமலை டாக்டர்.சி.விஜயபாஸ்கர்,      வேலூர் கே.சி.வீரமணி,   கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,    பாலக்கோடு கே.பி.அன்பழகன்,   ஆகிய...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த குடிமைப் பணி (அகில இந்திய சேவை) அதிகாரிகள், தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கான 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி மற்றும் ஆசிரியர் வைப்பு நிதி ஆகியவற்றுக்கான ஆண்டு கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் இன்று (2026 மே 25) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின் https://cag.gov.in/ae/tamil-nadu/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தாதாரர்கள்/அதிகாரிகள் தங்களது கணக்கு விவரப் பக்கத்தில் ஆண்டு கணக்கு அறிக்கையினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்துள்ள அதிகாரிகள் மற்றும் சந்தாதாரர்களுக்கு இது குறி...

பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்

பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 25, 2026)  நடைபெற்ற பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேருக்கு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார் புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (25.05.2026) நடைபெற்ற  விருது வழங்கும் விழாவில், 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  வழங்கினார்.  பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேரந்த ஏழு பேருக்கு பத்மவிருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி பத்ம பூஷன்  விருது பெற்றார். நாற்பது ஆண்டுக...

பெங்களூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவுரை

நிலுவையில் உள்ள சுரங்கம் மற்றும் ஆய்வுத் திட்டங்களை விரைந்து நிறைவுசெய்யுமாறு மத்திய அமைச்சர்  கிஷண் ரெட்டி அனைத்து முகமைகளுக்கும் அறிவுறுத்தல் நாட்டின் கனிமப் பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த வளர்ச்சி நோக்கங்களை வலுப்படுத்தும் வகையில், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து நிறைவு செய்யுமாறு அனைத்து சுரங்கம் மற்றும் ஆய்வு முகமைகளுக்கு மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி  அறிவுறுத்தியுள்ளார். இந்தியப் புவியியல் ஆய்வு மையம், தேசிய பாறை இயக்கவியல் நிறுவனம், இந்தியச் சுரங்கப் பணியகம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி ஆய்வுப் பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் பெங்களூரில் நடைபெற்ற தொடர் உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவை ஒவ்வொரு நிறுவனச் செயல்முறையின் அடித்தளமாக அமைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இத்துறையில் செயல்படும் ஒவ்வொரு முகமையிடமிருந்தும், மக்களும் மத்திய அரசும் விரைவு, பொறுப்புடைமை உண்மையான விளைவுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர் என்று கூறினார். வளர்ச்...