முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நடிகை கௌதமி சொத்து மோசடி நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் நடிகை கௌதமி தடிமல்வா அதிமுகவில் இருந்து விலகினார் 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தவர். 13 ஆண்டு காலம் கமலஹாசன் உடனிருந்த பின் பிரிந்து பாஜகவில் இருந்த காலத்தில் இவர் தான் சென்சார் வாரிய பதவி பெற்றார், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004-ஆம் ஆண்டு நடிகை கௌதமிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பொது அதிகார முகவராக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார். அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நடிகை கௌதமி பெயரிலும் அவரது மனைவி நாச்சம்மை பெயரிலும் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரில், கோட்டையூர் அழகப்பன், நாச்சம்மை, மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு ...
சமீபத்திய இடுகைகள்

தாய்லாந்து – இந்தியா இடையேயான 10-வது பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை

பாதுகாப்பு அமைச்சகம் இந்தியாவும், தாய்லாந்தும் உற்பத்தி, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புதல் தாய்லாந்து – இந்தியா இடையேயான 10-வது பாதுகாப்பு தொடர்பான உரையாடல் 2026 ஜூன் 16 அன்று பாங்காங்கில் நடைபெற்றது.  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களில் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த உரையாடலுக்கு தாய்லாந்தின் பாதுகாப்புத்துறைக்கான துணை நிரந்தர செயலாளர் அட்மிரல் நட்டபோல் டியூவானிச்சும், இந்திய பாதுகாப்புத்துறை இணைச் செயலாளர் திரு சத்யஜித் மொகந்தியும் இணைந்து தலைமை தாங்கினார்கள். இந்த உரையாடலில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து இருதரப்பும் விவாதித்து பிராந்திய வளர்ச்சியில் உள்ள கண்ணோட்டங்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் உறுதிபூண்டனர். முந்தைய உர...

நடிகை சுகன்யா வழக்கில் 30 ஆண்டுகள் கடந்து வந்த தீர்ப்பு மேல்முறையீட்டு முடிவில் தீர்வாகும்

நடிகை சுகன்யா குறித்து நீண்ட கால சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பன் அளித்த ஒரு  அவதூறு பேட்டியை ஒளிபரப்பியதற்காக, சன் டிவி நிறுவனத்திற்கு ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.                                       ( வழக்கு தாகல் செய்த காலத்தில்)  தற்போது அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது வழக்கின் துவக்கம் :- 1996-ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பனை பேட்டி கண்டு அதனை சன் டிவி ஒளிபரப்பிய. பேட்டியில் கொள்ளையன் வீரப்பன் நடிகை சுகன்யா குறித்து தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்கு எதிராக நடிகை சுகன்யா தொடர்ந்த. வழக்கை விசாரித்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 2015- ஆம் ஆண்டில் சன் டிவி ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சன் டிவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தற்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்தது. மேற்கண்ட ஒளிபரப்புக்கு முன் அநாவசிய...

ஜம்புத் தீவுப் பிரகடன தினம் நினைவைப் போற்றிய தமிழ்நாடு மாநில ஆளுநர்

மன்னர் "மருது பாண்டியர் சகோதரர்கள் மகத்தான போர்களில் ஈடுபட்டு, தங்கள் மண்ணுக்கும் மரியாதைக்கும் மேலாகப் போரிட்ட பழம்பெரும் போர்வீரர்கள். முதல் இந்திய சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேய படையெடுப்பாளர்களை விரட்டவும், விரட்டவும் ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தினர். இந்தியாவின் தென் பகுதி ஜாமூன் (கடற்படை) பழத்தை ஒத்திருப்பதால், இது வேதங்கள் மற்றும் புராணங்களில் ஜம்புத்தீவு என்றும், சங்க இலக்கியங்களில் நாவலந்தீவு என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த இந்திய தேசத்தைக் காக்க, திருச்சிராப்பள்ளியிலிருந்து மருது பாண்டியர்கள் "ஜம்புத்தீவுப் பிரகடனத்தை" வெளியிட்டனர். மொழி, தொழில், இனம் எனப் பல பிரிவுகள் இருந்தாலும், முழு இந்தியாவும் ஒரே தேசம் என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்ட க்ஷத்திரியரின் தெளிவான அழைப்பு அது. இந்த அறிவிப்பு இந்திய சுதந்திர வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிற்கிறது! சுதந்திரத்திற்கான தீவிர ஏக்கத்துடன் எழுதப்பட்ட இந்த அறிக்கை, ஒரு கோழையைக் கூட கிளர்ச்சியில் எழச் செய்யும் திறன் கொண்டது. பிரிட்டிஷ் இராணுவத்தில் அடிமைத்தனமாகப் பணிபுரியும் சக நாட்டு மக்க...