முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

குடியரசு தின அணிவகுப்பு 2025-ன் முழு ஒத்திகையைக் காண அனுமதிச் சீட்டு

குடியரசு தின அணிவகுப்பு 2025-ன் முழு ஒத்திகையைக் காண்பதற்கான அனுமதிச் சீட்டுகளை ஆமந்திரன் தளம், செயலி மூலம் பெறலாம் குடியரசு தின கொண்டாட்டங்கள் (ஆர்டி.சி) 2025-க்கான பதிவுச் சீட்டுகளைப் பெற முன்னெப்போதும இல்லாத ஆர்வம் காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, 2025 ஜனவரி 23,  அன்று புதுதில்லியின் கடமைப் பாதையில் நடைபெறவுள்ள அணிவகுப்பின் முழு ஒத்திகையைக் காண பாதுகாப்பு அமைச்சகம் அனுமதிச் சீட்டுகளை வழங்குகிறது. அனுமதிச் சீட்டுப் பதிவை பின்வரும் செயலி / தளத்திலிருந்து பயனர் நேரடியாகப் பெறலாப்: ஆமந்திரான் இணையதளம் (aamantran.mod.gov.in) அனுமதிச் சீட்டுகளுக்கான பதிவு 2025 ஜனவரி 13 அன்று தொடங்கியது. ஜனவரி 17 வரை அனுமதிச் சீட்டுகளைப் பெறலாம். குடியரசு தினக் கொண்டாட்டங்கள் - 2025 தொடர்பான தகவல்களை rashtraparv.mod.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம்.
சமீபத்திய இடுகைகள்

முன்னாள் அதிமுகவின் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் சொத்துகளை முடக்கியது ED

முன்னாள் அதிமுகவின் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி ஊழல் வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகப் பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறையால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பதிவில் அமலாக்கத்துறை, ‛‛தமிழ்நாட்டின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர், முன்னாள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் வைத்திலிங்கம். PMLA-2002 சட்டத்தின் படி‌ 2024 டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வைத்திலிங்கத்தின் ரூபாய்.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையாச் சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் முடக்கியது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHAI ன் உத்தரவில் தமிழ்நாட்டில் 124 கிலோ மீட்டர் சாலையை கைப்பற்றிய அதானி குழுமம்

தமிழ்நாட்டில் 124 கிலோ மீட்டர்  சாலையை கைப்பற்றிய அதானி குழுமம். NHAI ன் உத்தரவு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அதனது டோல்-ஆபரேட்-டிரான்ஸ்பர் (TOT) திட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள NH 38 சாலையின் 124 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியை நிர்வகிக்கும் உரிமை அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ள திட்டத்திற்காக ஏலம் நடத்தப்பட்டதில் சுமார் ரூபாய்.1,692 கோடி தொகையைக் குறிப்பிட்டு, அதிகபட்ச ஏலத் தொகையை முன்வைத்து அதானி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை வென்றுள்ளது. NH 38 சாலை என்பது வேலூர் முதல் தூத்துக்குடி வரையில் செல்லும் 601 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை.NH 38 சாலையில் மதுரை பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையின் நிர்வாகம் செய்யும் உரிமைக்கான ஏலம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. NHAI நிர்வாக குழுவின் ஒப்புதலுக்கு பின்னர் அதானி சாலை போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியது ஒப்பந்தத்திற்காக அதானி குழுமம் மட்டுமல்லாமல் மேலும் 4 நிறுவனங்கள் போட்டியிட்டதில் ஐ.ஆர்.பி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ...

பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்குறுதியை நம்ப முடியாது டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டக் குழு அறிக்கை

மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்  கே.அண்ணாமலை நேற்று முன்தினம் மேலூர் நாட்டு கள்ளர் குலத் தலைவர்களான அம்பலக்காரர்கள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்களை அழைத்து மத்திய சுரங்கத் துறை அமைச்சரின் வாயிலாக அனுமதி இல்லை என கூறுவார் என ஒரு உத்தரவாதம் கொடுத்தார். மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும்    விவசாயிகள் நலன் சார்ந்தே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன் என்றார். நமது பாரதப் பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றவர் மேலும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தன்னரசு மேலநாட்டின் தலைமைக்கிராமம் அ...

OBC பிரிவினருக்கான கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் வலியுறுத்தல்

இதற பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல். அட்டவணைப் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம், அதில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், இதற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை உடனடியாக அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் எஸ் ஜோதிமணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வலியுறுத்தல்.   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அட்டவணை பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகப் பல வழக்குகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அட்டவனைப பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரமுண்டு என அறிவித்தது. அதுமட்டுமின்றி, பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை அறிமுகப...

சுவாமி விவேகானந்தரை நினைவில் கொள்ளும் போதெல்லாம் மக்கள் நினைவில் நிற்கும் முகவை மன்னர்

இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்லும் கடற் பயணத்திற்கு  உதவினார். 1893 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட சுவாமி விவேகானந்தர், துறவி தான் என்பதை சேதுபதி மன்னர் நேரில் சந்தித்து இராமவிலாசம் அரண்மனையில் வரவேற்று அவரது நாவில் ஒரு திருச்சிராப்பள்ளி அச்சு வெல்லம் வைத்தார் அது 15 நிமிடம் வரை கறைந்து போகாத நிலையில் துறவியாக அவரை வணங்கி ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடையுமாறு பண பொருட்கள் உதவி அனுப்பி வைத்தார். சிகாகோ அரங்கில் ஹிந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலை நிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26 ஜனவரி 1897 ஆம் தேதியன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பிரிக்கப்படாத வங்காளத்தில் கொல்கத்தா நகரில் ஒரு பிரபுத்துவக் காயஸ்தா குடும்பத்தில் பிறந்த விவேகானந்தர், சிறு வயதில் மதம் மற்றும் ஆன்மீகத்தின் மீது நாட்டம் கொண்டார். 18 வயதில் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்தித்த பின் பக்தியுடன் பின்பற்றுபவர் மற்றும் சன்னியாசத் துறவியானார்.நவீன இந்தியாவில் ஹிந்து மதத்தின் மறும...

கார்த்தி சிதம்பரம் மீது லஞ்சம் பெற்று சலுகைகள் வழங்கியது குறித்து நான்காவது வழக்கை பதிவு செய்த சிபிஐ

ஜானி வாக்கர் எனும் பெயர் கொண்ட விஸ்கி மதுபான விற்பனைக்குள்ள தடையை நீக்க 15,000 அமெரிக்க டாலர் பணம் லஞ்சமாகப் பெற்றதாக சிவகங்கை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு ஜானி வாக்கர் எனும் பெயர் கொண்ட விஸ்கி மதுபானம் மீதான விற்பனைக்கு உள்ள தடையை நீக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு, டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் 15,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் செலுத்தியதாக புதிய லஞ்ச ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது ஜானி வாக்கர் விஸ்கி விற்பனை தடையை நீக்க 15,000 டாலர் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு இங்கிலாந்தின் பிரபல மதுபான நிறுவனமான டியாகோ ஸ்காட்லாண்ட் நிறுவனத் தயாரிப்புகளை இந்தியாவில் வரி இல்லாமல் விற்பனை செய்ய இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சி கழகம் 2005- ஆம் ஆண்டில் தடை விதித்தது. இதனால் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஜானி வாக்கர் எனும் பெயர் கொண்ட விஸ்கி மதுபான விற்பனை வெகுவாகக் குறைந்தது. இதில் டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் 70 சதவீதம் பாதிப்படைந்ததனால் ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனைக்கு தடையை நீக்க முன்னள் மத்திய நிதியமைச்சர் ப....