முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையத்தின்புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள்

இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையம் ஒரு புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசகத்தை அறிமுகம் செய்துள்ளது ஆவணக்காப்பக விவகாரங்களுக்கான உயர் ஆலோசனை அமைப்பான இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையம் (ஐ.எச்.ஆர்.சி), பதிவுகளை உருவாக்குபவர்கள், பாதுகாப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களின் அகில இந்திய மன்றமாக செயல்படுகிறது. இது பதிவுகளின் மேலாண்மை மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. 1919-ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐ.எச்.ஆர்.சி, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஐ.எச்.ஆர்.சி-யின் தனித்துவமான அடையாளம் மற்றும் அதன்  நெறிமுறைகளைத் தெரியப்படுத்துவதற்காக, புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசக வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. மைகவ் (MyGov) இணையதளத்தில் 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டியில், மொத்தம் 436 உள்ளீடுகள் பெறப்பட்டன. தில்லியைச் சேர்ந்த திரு ஷௌர்யா பிரதாப் சிங் வடிவமைத்து சமர்ப்பித்த இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசகம் தேர்வு செய்யப்பட்டு இரண்டுக்குமான முதல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலச்சினை மற்றும் சிறந்த குறிக்கோள் வாசகங்களின் தலா நான்கு உள
சமீபத்திய இடுகைகள்

மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது  மத்திய நேரடி வரிகள் வாரியம் 25.04.2024 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. கடைசியாக நீட்டிக்கப்பட்ட தேதியான 30.09.2023-க்கு அப்பால் இதுபோன்ற படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. படிவம் 10ஏ / படிவம் 10ஏபி- க்கான விண்ணப்பங்கள் வருமான வரித் துறையின் மின்னணு முறையிலான போர்ட்டலில் தாக்கல் செய்யலாம். 07/2024 சுற்றறிக்கையின் முழுவிவரத்தை www.incometaxindia.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு அடித்தள ஆளுகை குறித்த தேசிய கருத்தரங்கு

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு அடித்தள ஆளுகை குறித்த தேசிய கருத்தரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் ஆகியோர் புதுதில்லியில் தொடங்கி வைத்தனர் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, "73-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் 30 ஆண்டுகளுக்குப் பின் அடித்தள ஆளுகை" என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் தனது உரையில், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கான அடித்தள டிஜிட்டல் ஆளுமையை வெளிப்படுத்துவதற்கான இந்தியாவின் தனித்துவ வாய்ப்பை வலியுறுத்தினார். கிராமப்புற மாற்றத்திற்கான இயந்திரங்களாக பஞ்சாயத்துகளை அவர் உருவகப்படுத்தினார். பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதையும் ஊரகக் குடிமக்களுக்கு அதிகாரமளித்தலையும் மேற்

தொழில்துறையின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல்

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகத்தின் சார்பில் "பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ள இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவுக்கான இந்திய தர நிர்ணய விவரக்குறிப்பு" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம் சார்பில், "பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ள ( ready to use )  இட்லி மாவு, தோசை மாவு மற்றும் வடை மாவுக்கான  இந்திய தர நிர்ணய  விவரக்குறிப்பு" என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று (25-04-2024) நடைபெற்றது.   பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் தலைவர் ஜி. பவானி, இந்நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கிக் கூறினார். ஒவ்வொரு மாதமும் தொழில்துறையின் நலனுக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் புதிய தொடர் கலந்துரையாடல்  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.  தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு  புதிய தரநிலைகள

பணி செய்யச் சென்ற இடத்தில் பழகி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல்துறை சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பணி செய்யச் சென்ற இடத்தில் பழகி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவல்துறை சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்  திண்டுக்கல் மாவட்டம், கருதம்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 35). கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இந்த நிலையில் முகநூல் மூலம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய சார்பு ஆய்வாளர் சிவக்குமாருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவக்குமார் திருமணமானவர். காரைக்குடி வள்ளுவர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து சுமதியுடன்  குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்போது சுமதி எட்டு மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் சிவக்குமார் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அவரது குடும்பத்தார் மிரட்டுவதாகவும் கூறி சுமதி நேற்று முன்தினம் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அது தொடர்பான செய்திகள் வெளியானது தொடர்ந்து சார்பு ஆய்வாளர் சிவக்குமாரை நேற்று இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை பணியிடை  நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஊழல் செய்து சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளருக்கும் அவர் மனைவிக்கும் தண்டனை மற்றும் சொத்துகள் பறிமுதல்

ஊழல் செய்து சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் உனக்கும் அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு. ரூபாய் 100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவு.  திருச்சிராப்பள்ளியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளருக்கும், அவர் மனைவிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், பில்லாதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், வயது 79. இவர், 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை உள்ள பணி செய்த காலத்தில், துறையூர், உறையூர், முசிறி, அடுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் பகுதிகளில் சார்பதிவாளராகப்பணி செய்துள்ள காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமாக அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி, வயது 65,  என்பவர் பெயரிலும் 32 லட்சத்து, 25 ஆயிரத்து 532 ரூபாய் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில்

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை

கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய நடுத்தர தூர  ஏவுகணை சோதனை 2024 ஏப்ரல் 23 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கட்டளையின் செயல்பாட்டு திறனை நிரூபித்ததுடன், புதிய தொழில்நுட்பங்கள் மதிப்பிடப்பட்டது