பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை தலைமையில் நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி வட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடந்தது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். மாநாட்டு பந்தல் முகப்பு பகுதி, ஆழியாறு அணை, தென்னை மரங்கள் போன்று படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரங்குக்குள், 20 ஆயிரம் நபர்கள் வரை அமரும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலிருந்து பார்க்கும் வகையில், 'எல்.இ.டி.,' திரைகள் அமைக்கப்பட்டன. மாலை, தமிழர் பண்பாடு கலாச்சாரம் கலந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. கே.அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' அமைப்பு துவங்கிய பின்னர் , அவரது தலைமையில் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தது. இதனால், மாநிலம் முழுவதுமிருந்து, முன்னணி அமைப்பினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொள்ளாச்சியில் நடந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட த...
திமுக ஆட்சியில் தமிழ்நாடு திட்டக்குழுவின் செயல் துணை தலைவரான ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் பதவிகளை தற்போது தான் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அந்த திட்டக்குழுவின் பொறுப்புகள் காலியாகின. திமுக ஆட்சியில் திட்டக்குழுவின் தலைவராக அப்போதய முதல்வர் மு. க.ஸ்டாலின் செயல்பட்டார். அவருக்கு கீழ் திட்டக்குழுவின் துணை தலைவராக பொருளாதாரம் அறிந்தவர் என பலரும் கூறும் ஜெ. ஜெயரஞ்சன், ஆர் சீனிவாசன், எம் விஜயபாஸ்கர் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், நர்த்தகி நடராஜ், சுற்றுச்சூழல் ஆர்வலரான சுல்தான் அகமது இஸ்மாயில், அமலோற்பநாதன், சிவராமன் உள்ளிட்டவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் இருந்தனர் .அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான நிலையில் இந்த திட்டக்குழுவின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் திட்டக்குழுவின் துணை தலைவராக இருந்த ஜெ ஜெயரஞ்சன் செயல் துணை தலைவராக்கப்பட்ட நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன், நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் என அனைவரும் ...