முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி, ₹72,000 கோடியை எட்டியது.

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி, இதுவரை இல்லாத அளவு ₹72,000 கோடியை எட்டியது. உறைந்த இறால் இந்தியாவின் சாதனை கடல் ஏற்றுமதிக்கு ₹47,973 கோடி பங்களிக்கிறது 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதிகள் சாதனையாக ₹72,325.82 கோடியாக (அமெரிக்க டாலர் 8.28 பில்லியன்) உயர்ந்தது, இதன் அளவு 19.32 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது என்று MPEDA வெளியிட்ட தற்காலிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மொத்த ஏற்றுமதி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்கு வகிக்கும் ரூ.47,973.13 கோடி (5.51 பில்லியன் அமெரிக்க டாலர்) பங்களிப்பை வழங்கி, முதன்மை வளர்ச்சி இயக்கியாக உறைந்த இறால் இருந்தது. இறால் ஏற்றுமதி அளவு 4.6% மற்றும் மதிப்பில் 6.35% வளர்ச்சியடைந்தது, இந்தியாவின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி கூடையில் அதன் ஆதிக்கத்தை வலுப்படுத்தியது. மொத்தமாக 2.32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இறக்குமதியுடன், அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 19.8% அளவு மற்றும் மதிப்பில் 14.5% குறைந்துள்ளது, இது முதன்மையாக பரஸ்பர கட்டணங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கி...
சமீபத்திய இடுகைகள்

சிவில் சர்வீசஸ் தினத்தில் விவசாயக் குழு விவாதத்தில் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பு

புது தில்லியில் சிவில் சர்வீசஸ் தினத்தில் விவசாயக் குழு விவாதத்தில் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார் விவசாயிகளுக்கு நம்பிக்கை மற்றும் எளிமையான அமைப்புகள் தேவை, கடன் மட்டுமல்ல: ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் எளிய செயல்முறைகள் மற்றும் மனிதாபிமான அணுகுமுறையால் KCC ஆதரிக்கப்பட வேண்டும்: ஸ்ரீ சிவராஜ் சவுகான் தொழில்நுட்பம் பயனுள்ளது, ஆனால் அதன் வரம்புகளை புரிந்து கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் ஸ்ரீ சிங் சவுகான் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் சிறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஒருங்கிணைந்த விவசாயத்தை வலியுறுத்துகிறார் பயன்கள் எளிமையாகவும், திறம்படவும் விவசாயிகளைச் சென்றடைந்தால் மட்டுமே திட்டங்கள் வெற்றி பெறும்: ஸ்ரீ சௌஹான் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான், விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் நடைமுறைகள், அதிக வட்டி விகிதங்கள், சிக்கலான கடன் நடைமுறைகள் மற்றும் உணர்ச்சியற்ற முறைகள் ஆகியவற்றிலிருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, விவசாய நிதி முறையை மிகவும் எளிமையான, நடைமுறை, மனிதாபிமான மற்றும் விளைவு சார்ந்ததாக மாற்ற வேண்டியதன் அவச...

பெர்லினில் ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ராஜ்நாத்சிங் உரை

பெர்லினில் ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றிய போது, ரக்ஷா மந்திரி இந்தியா-ஜெர்மனி பாதுகாப்பு தொழில்துறை கூட்டுறவை மேம்படுத்த அழைப்பு விடுத்தார். வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க ஆத்மநிர்பர் பாரத் கீழ் இணைந்து உருவாக்க, இணை-வளர்ச்சி மற்றும் இணை-புதுமையை உருவாக்க ஜெர்மன் தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பதில்கள், நம்பகமான மூலோபாய கூட்டாண்மைகள் மற்றும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள விருப்பம் ஆகியவை காலத்தின் தேவை: ஸ்ரீ ராஜ்நாத் சிங் "மேற்கு ஆசியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைந்த மூலோபாயம் அமைதி, தொலைநோக்கு மற்றும் பயனுள்ள நிறுவன ஒருங்கிணைப்புடன் உலகளாவிய நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் திறனை பிரதிபலிக்கிறது" "ஆத்மநிர்பர் பாரத் என்பது வெறும் கொள்முதல் திட்டம் அல்ல; இது இணைந்து உருவாக்க, இணை வளர்ச்சி மற்றும் இணை கண்டுபிடிப்புகளுக்கான அழைப்பு" என்று ரக்ஷா மந்திரி ஸ்ரீ ராஜ்நாத் சிங் ஏப்ரல் 21, 2026 அன்று பெர்லினில் ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். ஐரோப்பிய ந...

தேஜகூ சார்ந்த பாமக தலைவர் கூட்டத்தில் ஊடுருவிய சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யா

பாமக தலைவர் மருத்து வர் அன்புமணியின் பிரச்சாரக் கூட்டத்தில் அத்துமீறிப் புகுந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் கைதால் கதறல்.! சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்த போது  நாம் தமிழர் கட்சியின் சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளரும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளான வித்யா தேவையில்லாமல் கூட்டத்தில் உள்ளே புக முயன்றதை அடுத்து காவல்துறை அவரை அழைத்துச் சென்ற நிலையில் கண்ணீர் விட்டார் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தேசிய  ஜனநாயகக் கூட்டணி அதிமுகவின் வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அதே நேரத்தில், மேட்டூர் நோக்கிச் செல்வதற்காக வித்யா  அவரது ஆதரவாளர்களுடன் அந்த வழியாக வந்துள்ளார் அப்போது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டப்பகுதிக்குள் அவர் நுழைய முயன்றார். கூட்ட நெரிசல் மற்றும் ...

சீமான் கூடடத்தில் அதிகம் கலந்து கொள்ளும் வாக்குரிமை இல்லாக ஈழ அகதிகள்

சீமான் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கை முகாம் அகதிகள், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கண்ட உண்மை,      தமிழ்நாட்டில், இலங்கை உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்காக 107-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்கள் மண்டபம், கொட்டாப்பட்டு, காரையூர், ஒக்கூர் போன்ற  இடங்கள் உட்பட பல மாவட்டங்களில் அமைந்துள்ளன, மேலும் இந்த முகாம்களில் உள்ளவர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் இல்லை ஆகவே இங்கு வாக்குரிமை இல்லை,   தமிழ்நாடு அரசு, இலங்கை அகதிகள் முகாமை "இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்" எனப் பெயரை மாற்றம் செய்தாலும் சட்டம் ஒன்றுதான் . முக்கிய முகாம்கள்: மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம் , கொட்டாப்பட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் , கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் காரையூர் மற்றும் ஒக்கூர் புதூர் உள்ளிட்ட பல அகதிகள் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் அல்லது கொட்டடிகளில் உள்ள மக்களுக்குத் தமிழ்நாடு அரசு இலவச வீடு, கல்வி, மற்றும் அடிப்படை வசதிகளை, 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்கள...

கோயமுத்தூர் வடக்கு தொகுதி தேர்தல் ரத்தாகுமா ஆழந்த உறக்கத்தில் ஆணையம்

கோயம்பத்தூர் தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து செய்யக் கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்       தர்ணாவில் ஈடுபட்டார்.  செய்தியாளர்களிடம் பேசிய அம்மன் அர்ஜுனன்: "தமிழ்நாட்டில் எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன, ஆனால் இது போன்ற அராஜகத்தை நான் பார்த்ததே இல்லை. குறிப்பாகத் தெற்குத் தொகுதியில் அடுக்கடுக்கான அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. காவல்துறையினரால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை.பணம் விநியோகிப்பவர்களை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தாலும், தேர்தல் அதிகாரிகள் அவர்களைத் தப்பவிடுகிறார்கள். கரூரைச் சேர்ந்த 18 பேரைச் சுயேட்சை வேட்பாளர்களாகத் தெற்குத் தொகுதியில் நிறுத்தியதே குழப்பத்தை ஏற்படுத்தத்தான். இன்று இந்தத் தொகுதி ஒரு கலவர பூமியாக மாறியுள்ளதுதேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் ...

சமூக வலைத்தளப் பதிவர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

இந்தியத் தேர்தல் ஆணையம் சமூக வலைதளங்களில் வெளியாகும் தேர்தல் தொடர்பான பதிவுகள் மற்றும் பிரச்சாரங்களைக் தீவிரமாகக் கண்காணிக்கிறது. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட 11,000-க்கும் மேற்பட்ட தவறான பதிவுகள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன. விளம்பரங்களுக்கு முன் அனுமதி டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) முன் அனுமதி பெற வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சமூக வலைதளக் கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தனிநபர் தாக்குதல் மற்றும் வெறுப்புப் பேச்சு: தனிநபர் தாக்குதல், வன்முறையைத் தூண்டும் பதிவுகள் அல்லது தேர்தல் விதிகளை மீறும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களை நிர்ப்பந்திக்கும் வகை...