தமிழ்நாட்டில் 84 மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவு. சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் ஆா்.தோத்திர மேரி, சேலம் மாவட்ட வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், சென்னை 10-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சென்னை உயா்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளராகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ் .சுபா தேவி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனா். மேலும், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியான ஈ.சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு வணிக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜாதா குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 62 மையங்களில் மே மாதம் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதில் 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் QR குறியீடு அடையாள அட்டை கட்டாயம். மதுரையில் அதிகபட்சமாக 5 மையங்கள் அமைந்துள்ளன. அதன் முக்கிய விவரங்கள்: மொத்த மையங்கள்: 62, பாதுகாப்பு.சிறப்பம்சம்: QR குறியீடு அடையாள அட்டை கட்டாயம்.ஆய்வு: மாவட்ட ஆட்சியர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அரசியல் ஆதரவாக செயல்படலாம் எனற நிலை வரக்கூடாது எனபதால் மேலிட மத்திய உயர் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர், வாக்கு எண்ணிக்கை மையங்கள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் வேட்பாளர் பிரதிநிதிகளுடனும் அரசு அலுவலர்களான தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைகளை நடத்தினர். ஏப்ரல் மாதம் 23 -ஆம் தேதி ஆண் வாக்காளர்கள் 2.35 கோடி பேரும், (ஒட்டுமொத்த ஆண் வாக்காளர் எண்ணிக்கையில் 83.96 சதவீதம்), பெண் வாக்காளர்கள் 2.52 கொடி பேரும் (எண்ணிக்கையில் 86.20 சதவீதம்), மூன்றாம் பாலினத்தவர்கள் 4517 பேரும் ( ஒட்டுமொத்த 54.44 சதவீதம் ) வாக்க...