தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் .100 கோடி மோசடி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. குமார் என்ற பி.டி.அரசக்குமார் கைது.. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகவும், NOC தடையில்லா சான்றிதழ் லஞ்சம் மூலம் பெற்றுத் தருவதாகவும் மோசடி. தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சென்னை குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை.. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி அதை மாவட்டம் தோரும் நிர்வாகிகள் நியமித்து நடத்தி வந்துள்ளார் இந்த பி.டி. குமார் எனும் B.T.அரசகுமார். தி.மு.க பிரமுகரான அரசகுமார், முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு. விசாரணை இனி தீவிரமடையும் இதில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை PMLA சட்டமும் பாயும். மோசடி, லஞ்சம், குண்டர் சட்டம் பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு; 2013- ஆம் ஆண்டில் ரூபாய் .14 லட்சம் மோசடி...
மதம் மாறிய பின் ஜாதிச் சலுகை தமிழ்நாடு அரசாணை (G.O. No. 31) அரசியலமைப்பிற்கு முரணானதென ரத்து செய்த உயர் நீதிமன்றம்
தூத்துக்குடி என்.சமீர் அகமது பழைய பெயர் என்.பரமசிவம். ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்தவர், இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது பெயரையும் கயத்தாறில் சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மாற்றிய மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் மதம் லெப்பை’ உட்பிரிவின் கீழ் தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கயத்தாறு வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்ததை நிராகரித்தார். அதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2022 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் மதம் ஜாதி லெப்பை’ எனக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வட்டாச்சியருக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் . பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது அட்டவணைப் பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்...