தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகளுடன் 1,000 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு. சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதலான ஜெ.ஜெயலலிதாவின் நகைகள், மற்றும் சொத்து ஆவணம் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 1991-96 ஆம் ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக ரூபாய்.66 கோடிக்கு சொத்து குவித்ததாக அப்போது முன்னாள் சட்ட அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி உயர்நீதிமன்றம் முலம் அனுமதி கோரி நீதியரசர் சீனிவாசன் அனுமதி வழங்க ஆளுநருக்கு உத்தரவிட்டு அப்போது ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டியால் அனுமதி வழங்கப்பட்ட வழக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூலம் வழக்கு தொடரப்பட்டது பின்னர் அதில் துணைக் கண்காணிப்பாளர் நல்லம் நாயுடு மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பின்னர் வழக்கு விசாரணை கர்நாடகா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் தண்டனை வழங்கப்பட்டது...
தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கும் வரை, விதிகளின் படி தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை ஒதுக்க முடியாதென மத்திய அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் (SSA) நிதியுதவி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படுகிறது. இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டு தோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற விகிதாச்சாரப் பகிர்வு முறையில் நிதி வழங்கப்படுகிறது.இந்த நிதியைப் பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கையின் அம்சமான PM ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழ்நாடு உட்பட மாநிலங்களுக்கிடையே நிதியை மத்திய அரசு கடந்தாண்டு முதல் நிறுத்தி விட்டது. அந்த வகையில் சர்வ சிக்ஷ் அபியான் திட்டத்தில் 2023-24 ஆம் கல்வ...