டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதிக்க மறுப்பு. அடுத்த விசாரணை தேதி வரையில் விசாரணை நடத்த இடைக்காலத் தடை உத்தரவு. தாங்கள் சட்டத்தை மீறவில்லை என்று அமலாக்கத்துறை யினர் தரப்பு கூறியதை எழுத்துபூர்வமாக அடுத்த விசாரணை தேதியில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நிலையில் தான் தற்போது தற்காலிகமாக தடை அதை சிலர் விளம்பரத்திற்கு ஆரவாரம் செய்து பிரஸ்தாபித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிந்த ஆதாரபூர்வமான ஊழல் டாஸ்மாக்கில் நடந்திருக்கிறது. என்பது பரவலாக பேசப்படும் நிலையில் இதில் உச்சநீதிமன்றம் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தற்காலிகமாக ஒரு தடை ஒன்று விதித்திருக்கிறது. இதற்கு முன்பு கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுபோன்று இடைக்காலத்தடை விதித்தது, பின்னர் வேறு நீதிபதிகளால் அந்தத் தடை நீக்கப்பட்டது. அதனால் இன்றைய தடை உத்தரவு இறுதித் தீர்ப்பு அல்ல. ஒரு அரசு அலுவலர் லஞ்சம் பெறுகிறார் எ...
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் சிஙகம்புணரி ஸ்ரீ சேவுகமூர்த்தி கௌசலா அறக்கட்டளையின் பத்தாவதாண்டு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, பாரத நாகரிகத்தில் கோமாதாவின் புனிதமான ஸ்தலம் பார்வையிட்டு ஆன்மீகம், வாழ்வாதாரம், ஸ்திரத்தன்மை மற்றும் இயற்கையுடனான நமது காலத்தால் அழியாத பிணைப்பின் உருவகமாக அவர் விவரித்தார். இந்த மரியாதை சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் நாகரிக நெறிமுறைகளை பிரதிபளிப்பதாகக் குறிப்பிட்டார். இது பாரதத்தின் கலாச்சாரக் கட்டமைப்பில் ஆழமாகப் பின்னிப் பிணைந்த ஒரு கொள்கை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியாவின் மாற்றப் பயணத்தை ஆளுநர் எடுத்துரைத்தார். இயற்கை விவசாயம் போன்ற பண்டைய ஞானத்தைப் புதுப்பித்து, நவீன கண்டுபிடிப்புகளுடன் கலப்பதன் மூலம் தலைமைத்துவம், புத்துயிர் பெறுகிறது. இந்த அணுகுமுறை, உலகளாவிய இருத்தலியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நிலையான, உள்ளடக்கிய மற்றும் இணக்கமான எதிர்காலத்திற்கான பாதையை உலகிற்கு வழங்குகிறது என்று அவர் கூறினார். ஸ்ரீ சேவுகமூர்த்தி கௌசலா அறக்கட்டளையின் பங்களிப்புகளைப் பாராட்டிய அவர், உடனடி, கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார், இந்த இலட்சியங...