முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பல் பிடுங்கிய பல்வீர் சிங்க் IPS மற்றும் இதர காவல்துறை அலுவலர்கள் மீது அறப்போர் இயக்கம் மனு

விசாரணை என்ற பெயரில் பல் உடைத்து காது கிழிக்கும் பல்வீர்சிங் IPS மற்றும் அவருடைய செயல்களுக்குத் துணை போன காவலர்களை காப்பாற்றுவதற்காக செய்தித் தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் கடந்த நான்கு நாட்களாக இந்தக் கொடூர சம்பவம் குறித்த எந்த விவாதங்களும் செய்தித் தொலைக்காட்சி சேனல்களில் நடத்தப்படவில்லை என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.  கடந்த நான்கு  நாட்களாக அவர்கள் நடத்திய பல் பிடுங்கும் விவாதங்கள் பற்றிய தொகுப்பை நீங்கள் காணலாம்  ஆகையால் இவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரத்தில் பலரது பற்களை உடைத்து மர்மமாகத் தாக்கி கொடிய சட்ட விரோதச் செயலில் ஈடுபட்ட பல்வீர் சிங்க் IPS மற்றும் இதர காவல்துறை  அலுவலர்கள் மீது FIR பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் சார்பில் முதல்வர், தலைமை செயலர் மற்றும் காவல் துறைத் தலைவருக்கு புகார் மனு அளித்துள்ளார்கள்   சட்டமன்றத்தில் முதல்வர் விசாரணை நடைபெறும் என்று அறிவித்த சில மணி நேரத்தில் புகார் அளித்த ஒருவர் கீழே விழுந்து பல் உடைந்ததாகச் ச

நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா புகாரில் ரூ.3 லட்சம்; பறிமுதல் ஆனது ரூபாய் .3 கோடி

நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா புகாரில் ரூ.3 லட்சம்; பறிமுதல் ஆனது ரூபாய் .3 கோடி! ரஜினிகாந்த்  மகளி  ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு நடிகர் ரஜினிகாந்த் பூர்வீக பணக்காரர் இல்லை தொழிலாளியாய் இருந்து நடிக்க வந்து சம்பாதித்தவர் அவரிடம் பூர்வீக பழமையான நகை இருக்க வாய்ப்பில்லை விலைக்கு வாங்கிய நகை தான் அவர்களிடம் இருந்தது மகள் ஐஸ்வர்யா தன் லாக்கரிலிருந்து 3.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்தநிலையில், வீட்டு பணிப்பெண்ணிடமிருந்து ரூபாய் 3 கோடி மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. அதனால், மற்ற நகைகள் குறித்து பணிப்பெண் மற்றும் கார் ஓட்டுனரிடம் காவல்துறை தீவிரமாக விசாரிக்கின்றனர்.'லாக்கரிலிருந்து களவு  போன நகைகள் எவ்வளவு, ஏன் குறைத்து என மதிப்பிட்டு புகார் அளித்தார்' என, ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த, காவல்துறையினர்திட்டமிட்டுள்ளனர். மேலும் காவல்துறை, ஈஸ்வரி வீட்டிலிருந்து, 40 சவரன் நகையைப் பறிமுதல் செய்தனர். இந்த நகை, நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து திருடப்பட்ட

நிதியாண்டு முடிகிறது நாளையிலிருந்து பல விஷயங்களில் மாற்றம்

 வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரப்போகும் 10 புதிய மாற்றம் நடப்பு நிதியாண்டு வருகின்ற மார்ச் 31, 2023 முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அதாவது இன்னும் 2 நாள்களில் புதிய நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. புதிய வருமான வரி விதிப்பில் வரவுள்ள புதிய மாற்றங்கள்: மாத சம்பளம் வாங்குவோர்களுக்காக. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையில் டிடிஎஸ் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சத்திற்குள் வருமானம் பெற்றவர்கள், புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது மட்டுமின்றி ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள தனி நபர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ், கூடுதல் கட்டணமாக 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.புதிய வரி விகித அடுக்குகள்.பழைய வருமான வரி விதிப்படி, ரூபாய் 3 லட்சம் வரை வருமானம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் புதிய வருமான வரி விதி மாற்றங்களின் படி, இனிவரும்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகம்

இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகம் எரிசக்தி மற்றும் இயற்கை எரிவாயு துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்று பிரதமர் கருத்து இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிசக்தி மற்றும் இயற்கை எரிவாயு துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு இயற்கை எரிவாயு துறையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தமான ஒருங்கிணைந்த கட்டண அமலாக்கத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி தொடர் ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்திருந்தார். ‘ஒரே நாடு, ஒரே தொகுப்பு, ஒரே கட்டணம்' என்ற மாதிரியை

ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் தொடக்கம்

ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் தொடக்கம்: பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு முதலாவது வணிக கடற்படை கொடியை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அணிவித்தார் ஒருவார கால தேசிய கடல்சார் தின கொண்டாட்டங்கள் புதுதில்லியில் இன்று தொடங்கின.  தேசிய கடல்சார் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல்  நீராவி கப்பலான எஸ்எஸ் லாயல்டி, 1919-ம் ஆண்டு  ஏப்ரல் 5ம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட நாளான ஏப்ரல் 5ம் தேதி  தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, ஒருவார கால கொண்டாட்டங்கள் இன்று (2023 மார்ச் 30) தொடங்கின. இதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உடையில் முதலாவது வணிக கடற்படை கொடியை மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அணிவித்தார்.  மத்திய கப்பல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சில் பேசிய மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இந்திய கப்பல் துற

ஏப்ரல் முதல் HUID அடிப்படையிலான ஹால்மார்க்கிங் பெற்ற நகைகளை மட்டுமே விற்க மத்திய அரசு உத்தரவு

  ஏப்ரல் முதல் HUID அடிப்படையிலான ஹால்மார்க்கிங் பெற்ற நகைகளை மட்டுமே விற்க மத்திய அரசு உத்தரவு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. கலப்படத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஹால்மார்க்கிங்கின் நோக்கம் ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது அதன்  தரத்திற்கான அடையாளம். தற்போது, ​​தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது BIS ஹால்மார்க் முத்திரை, காரட்டில் தங்கத்தின் தூய்மை மற்றும் 6 இலக்க எண், எழுத்து கொண்ட HUID குறியீடு ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது. HUID என்பது தனித்துவமான 6 இலக்க எண்ணெழுத்து குறியீடு கொண்ட பிரத்யேக அடையாள குறியீடு ஆகும். தற்போது தமிழகத்தில் 26 மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் 288 மாவட்டங்களில்

கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023

கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும்: பிரதமர் கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சகத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது; “இது இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தருவதாகும்.”

இந்திய கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள்

இந்திய கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன் ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது இது கப்பற்படையை வலுப்படுத்தும் என்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார் இந்தியக் கப்பற்படைக்கு 11 நவீன கடலோர ரோந்து வாகனங்கள், 6 நவீன ஏவுகணை வாகனங்கள் வாங்குவதற்கு இந்திய கப்பல் கட்டும் தளங்களுடன்  ரூ.19,600 கோடிக்கான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் 2023, மார்ச் 30 அன்று  கையெழுத்திட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சக ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது; “இது கப்பற்படையை வலுப்படுத்தும் மற்றும் தற்சார்பு என்ற நமது நோக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும்.”

போப் ஃபிரான்சிஸ் விரைந்து குணமடைய பிரதமர் வாழ்த்து

போப் ஃபிரான்சிஸ் விரைந்து குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் போப் ஃபிரான்சிஸ் நல்ல ஆரோக்கியம் பெற்று விரைந்து குணமடைய  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போப் வெளியிட்ட ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது: “போப் ஃபிரான்சிஸின் நல்ல ஆரோக்கியத்திற்கும், விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.”

நெல் உமிகளை மறுசுழற்சி செய்து, சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்கும் சென்னை ஐஐடி

நெல் உமிகளை மறுசுழற்சி செய்து, சிறப்பு மின்தேக்கிகளை உருவாக்கும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக  (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள், நெல் கழிவுகளை மறுசுழற்சி செய்து தொழில்துறை பயன்பாட்டிற்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும், வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.  நெல் கழிவுகளைப் பயன்படுத்தி தொழில்துறையினர் எரிசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதால். விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க இத்தொழில்நுட்பம் உதவும். வட இந்தியாவில் வைக்கோல் எரிப்பு மற்றும் இதர பண்ணைக் கழிவுகள் எரிப்பதைக் குறைக்க இந்த அணுகுமுறை முக்கிய பங்களிப்பை வழங்கும். கரிமக் கழிவுகள், குறிப்பிட்ட சமையலறைக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு மின்தேக்கிகளில் முக்கிய உதிரிபாகமாகப் பயன்படுத்தப்படும் 'செயல்படுத்தப்பட்ட கார்பனை' உருவாக்குவதன் வாயிலாக புதிய 'பண்ணை ஆற்றல் ஒருங்கியக்கத்தை' (Farm-Energy Synergy) தங்கள் பணியின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நெல் கழிவுகளில் கிடைக்கும் 'செயல்படுத்தப்பட்ட கார்பனால்' தயாரிக்க

தயிருக்கு ஹிந்தியில் தஹி என மாற்றுவதா முடியாது மாநில முதல்வர் தகவல்

ஆவின் தயிர் நிரப்பிய பாலித்தீன் பைகளீல் இனி தயிர் என்பதுடன் ‘தஹி’ என்று குறிப்பிடவேண்டும் என பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்திலுள்ள பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களான ஆவின் மற்றும் நந்தினி ஆகியவற்றில் தயிர் பாக்கெட்டுகள் மீது ‘தஹி’ என்றும் அடைப்புக் குறிக்குள் அந்தந்த மாநில மொழிகளில் தயிர் எனவும்   மொசாரு  எனவும் குறிப்பிடவேண்டுமென்றும் கூறியுள்ளது.  உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கை ஹிந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இணையத்தளங்களில் வானிலையை குறிக்க ‘மௌஸம்’ என்ற வார்த்தை பயன்பாட்டிலுள்ளது போல் நீர்வழி என்பது ஜலசக்தி என அரசு இணையதளங்கள் மற்றும் பல்வேறு செயலிகள் மூலம் ஹிந்தியைத் திணிக்கும் வேலை என்பதனால் பிறமொழிக் கலப்புடன் பேசுபவர்களிடம் அபராதம் விதிக்க நேரிட்டால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அதிக வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.- தயிர் பாக்கெட்டுக்களில் ஹிந்தி வார்த்தைக்கு

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தின் நுழைவுவாயிலில், படப்பிடிப்பால் மக்கள் அவதி

திருவண்ணாமலை தாலுகா  அலுவலகத்தின் நுழைவுவாயிலில், கயிறு கட்டி தடுப்புகளை ஏற்படுத்தி, பொது மக்கள் யாரும் செல்ல முடியாத படி  மக்களை தனியார் நிறுவனம் அமர்த்திய பணிக் காவலர்கள்  சிறைப்பிடித்தனர். அதனால், தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள அரசு விடுதிகளுக்குச்  செல்ல முடியாமல் மாணவிகள் தவித்ததுடன் தாலுகா  அலுவலகத்தில், இ-சேவை மையத்திற்கு வந்த பொது மக்களும், ஊழியர்களும் அங்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.  படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, தாலுகா அலுவலகக் கதவுகளைப் மூடுவதற்கு முயன்றதால், உழவர் சந்தைக்குச் சென்ற விவசாய வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பின்   போது பொதுமக்களின் செல்போன்களைப் பறித்து வைத்துக் கொண்ட தனியார் காவலர்களாக பணிக்கு வந்த  பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாகக் காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு இரண்டு நாட்கள்  நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜி