முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார், தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  2023-24 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று பல முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் வெளியிட்டார். கரிநாளில்..எம கண்ட நேரத்தில் தாக்கலான பட்ஜெட் உரையில், நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் எனவும்  மகளிர் உரிமைத்தொகைத்' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும். நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4 லிருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. ரூபாய் 4,236 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள்  ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூபாய் 40 லட்சத்திலிருந்து ரூபாய் 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேல

பிரிட்டிஷ் கடற்படை போர்க்கப்பல் எச்எம்எஸ் டமர் சென்னை வருகை

பிரிட்டிஷ் கடற்படை போர்க்கப்பல் எச்எம்எஸ் டமர் சென்னை வருகை பிரிட்டிஷ் கடற்படையின் போர்க்கப்பலான எச்எம்எஸ் டமர் மார்ச் 17ந்தேதி  சென்னைக்கு வந்துள்ளது. வரும் 29ந்தேதி வரை  இந்தக் கப்பல் சென்னையில் இருக்கும். சமீபத்தில் பலதரப்பு  கடற்படை பயிற்சியான "La Pérouse" இல் இக்கப்பல் பங்கேற்றது. கப்பலின் கமாண்டர் டெய்லோ எலியட் ஸ்மித்,  டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் கேப்டன் இயன் லின் ஆகியோர், சென்னையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  கடற்படை பகுதியின் கட்டுப்பாட்டு அலுவலர்  அட்மிரல் எஸ் வெங்கட் ராமனைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விசயங்களைப் பற்றி விவாதித்தனர். இந்தக் கப்பல் சென்னையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையே தொழில்முறை மற்றும் சமூக கலந்துரையாடல்கள்,  விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்  திட்டமிடப்பட்டுள்ளன.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது விமான நிலையத்தின் வளர்ச்சி அம்சங்கள், பயணிகளின் வசதிகள் தொடர்பான இதர அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர்.பாலு தலைமையில், விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. வான்வழி மேம்பாட்டிற்காக பாதுகாப்புத்துறை நிலத்தை இந்திய விமானநிலைய ஆணையத்துக்கு ஒப்படைப்பதற்கு, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டத்தை கூட்டுமாறு ஆலோசனைக்குழு  தலைவர் அறிவுறுத்தினார். பரந்த அளவிலான விமானங்களை இயக்குவதற்கு அணுகுப் பாதையில் உள்ள தடைகளை அகற்ற  உடனடி நடவடிக்கைகளைத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் புதிய முனையம்/ சரக்கு முனையம் முதல் சென்னை பை-பாஸ் வரை இணைப்பு சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் 60 ஏக்கர் நிலம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் “காமராஜ் உள்நாட்டு முனையம்” மற்றும் “அண்ணா சர்வதேச முன

இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அமைச்சர் தகவல்

இந்தியாவின் பரந்த கடல் வளங்களை ஆராய்வதில் முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என்றும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடல் வளங்களை ஆராய்ந்து பயன்படுத்த, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார் இந்தியாவின் பரந்த கடல் வளங்களை ஆராய்வதில் முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என்றும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடல் வளங்களை ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்த,  தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய புவி அறிவியல்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு ஆற்றிய இரண்டு சுதந்திர தின உரைகளில், பிரதமர் மோடி ஆழ்கடல் பணியை குறிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதை அவர் நினைவுகூர்ந்தார். மத்திய அமைச்சர் திரு ஶ்ரீபத் நாயக் மற்றும் கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே தலைமையிலான உயர்மட்ட கோவா அதிகாரிள்  குழுவுடன் டாக்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சிந்தனை மற்றும் கருத்தியல் தேசிய கருத்தரங்கு நிறைவு விழா

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு நம் அனைவரின் பொறுப்பு பேராசிரியர் குர்மீத் சிங் தலைமையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் சிந்தனை மற்றும் கருத்தியல் தேசிய கருத்தரங்கு நிறைவு விழா நடைப் பெற்றது ஜி.டி.பிர்லா நினைவு இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், 'இந்திய உரைநடை இலக்கியத்தில் சுற்றுச்சூழல் சிந்தனை மற்றும் கருத்தியல்' என்ற தலைப்பில், புதுச்சேரி பல்கலைக்கழக இந்தித் துறை மற்றும் யூகோ வங்கியின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நம் அனைவரின் பொறுப்பு என்றும் தற்கால சூழலுக்கு இது மிகவும் பொருத்தமான தலைப்பு என்றும்  இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்ததற்காக இந்தித் துறைக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், யூகோ வங்கியின் சென்னை மண்டலத் தலைவர் ராஜேஷ்குமார் திவாரி பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். ஹிந்தி துறைத் தலைவர் டாக்டர் பத்மபிரியா வரவேற்பு உரையில் பேசுகையில், சுற்ற

ஒரு இசைக்கலைஞர் பல மொழிகளில் பாடும் இனிமையான பாடல்

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை எடுத்துரைக்கும் வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார் ஒரு இசைக்கலைஞர் பல மொழிகளில் பாடும் இனிமையான பாடலைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் சிறந்த வெளிப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "திறமை வாய்ந்த சினேகதீப் சிங் கல்சியின் இந்த அற்புதமான இசையுணர்வைக் கண்டேன். இனிய இசையுடன் இது 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' உணர்வின் சிறந்த வெளிப்பாடாகும். சூப்பர்!"

மூன்றாவது சர்வதேச சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மாநாடு

மூன்றாவது சர்வதேச சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மாநாடு புது தில்லியில் மார்ச் 19 முதல் 21 வரை நடைபெறும் 3வது சர்வதேச சிறு,குறு தொழில்நிறுவனங்கள்  மாநாட்டுக்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம், இந்திய SME மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. முக்கிய பங்குதாரர் மாநிலமாக  மத்தியப் பிரதேசமும்,  உத்தரப்பிரதேச மாநிலம் இணை  பங்குதாரராகவும் இதில் பங்கேற்கின்றன. இந்த மாநாடு மார்ச் 19 முதல் 21  வரை புது தில்லியில் நடைபெறுகிறது. மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு  நாராயண் ரானே, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா, வெளியுறவு துறை இணையமைச்சர்  டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், மற்றும் மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்கப்படுகிறது. தூய்மை தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிசக்தி, உற்பத்தி, சேவைத் துறை, வேளாண் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் செயல்பாட்

உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

தில்லியில் முதலாவது உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டை நடத்துவதற்காக பிரதமருக்கு கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி பாராட்டு புதுதில்லியில் உள்ள புசாவில் முதலாவது உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டை நடத்துவதற்காக  பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று கயானா அதிபர் டாக்டர். முகமது இர்பான் அலி பாராட்டியுள்ளார்.  இந்த மாநாடு உணவுப் பாதுகாப்பின்மை என்ற  உலகின் முதன்மையான சவாலுக்குத் தீர்வு காண்பதில் நெடுந்தொலைவு செல்லும் என்று அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக  ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததை முன்னிட்டு தமது நாட்டில் 200 ஏக்கர் நிலத்தை பிரத்தியேகமாக  சிறுதானிய உற்பத்திக்காக வழங்கியதை கயானாவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் டாக்டர் இர்பான் அலி தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான உணவின் பண்ணை உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்தியா வழங்கும் என்று அவர் கூறியுள்ளார். தினை வகையைச் சேர்ந்த சிறுதானியங்கள் விலை குறைவான, சத்தான உணவு என்பதுடன், பருவநிலை மாற்ற மாறுபாடுகளையும் எதிர்க்கும் தன்மை கொண்டதாகும் என்

அரசு புகைப்படக் கண்காட்சியில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி

அரசு புகைப்படக் கண்காட்சியில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல அலுவலகத்தின் சார்பாக கோயம்புத்தூரில் உள்ள ராமநாதபுரம் எஸ்.என்.மண்டபத்தில் 'அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்' மற்றும் 'மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, நடைபெற்ற காலை அமர்விற்கு இந்திய தர நிர்ணய அலுவலக விஞ்ஞானியும், முதுநிலை இயக்குநருமான திரு கோபிநாத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு  ஹால்மார்க்கிங், அதற்கான சான்றிதழ் மற்றும் தர நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின்  வழக்கறிஞர் திரு மதிவாணன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிற்பகலில் நடைபெற்ற அமர்விற்கு மாவட்ட காசநோய்த் தடுப்பு அலுவலகத்தின் பொது மற்றும் தனியார் இணைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு அருண் பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காசநோய்  குறித்து  முழு விளக்க உ

ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

குடியரசுத் தலைவர் ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தை வழங்கினார் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஐஎன்எஸ் துரோணாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கத்தை கொச்சியில் இன்று (மார்ச் 16, 2023) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் உத்தி, ராணுவ, பொருளாதார மற்றும் வணிக நலன்களுக்கு கடல்சார் வலிமை முக்கியமானது என்று கூறினார். நீண்ட கடற்கரை, தீவுப் பகுதிகள் மற்றும் பெரிய அளவிலான கடலோர மக்கள்தொகையுடன் கூடிய உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா போன்ற நாட்டிற்கு, வலுவான மற்றும் நவீன கடற்படையைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.