முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கான்பூர் மற்றும் தில்லியை சேர்ந்த மிகப்பெரிய குழுமம் ஒன்றில் வருமான வரித்துறை சோதனை

 நிதி அமைச்சகம்   கான்பூரில் வருமான வரித்துறை சோதனை கான்பூர் மற்றும் தில்லியை சேர்ந்த மிகப்பெரிய குழுமம் ஒன்றில் 2021 ஜூலை 29 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பான் மசாலா மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் அக்குழுமம் ஈடுபட்டுள்ளது. கான்பூர், நோய்டா, காசியாபாத், தில்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள மொத்தம் 31 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பான்மசாலா மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டு தொழில்களிலும் கணக்கில் வராத வருவாயை பெரிய அளவில் குழுமம் ஈட்டி வந்தது. கணக்கில் வராத பணம் போலி நிறுவனங்களின் மூலம் குழும நிறுவனங்களில் வரவு வைக்கப்பட்டதும், போலி நிறுவனங்ளை நாடு முழுவதும் குழுமம் உருவாக்கி இருந்ததும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. மொத்தம் 115 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் முக்கிய இயக்குநர்கள் தாங்கள் போலியானவர்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், கணக்கில் வராத பணம் குறித்த ஆவணங்களை ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருந்ததும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. குழுமத்தின் மொத்த சட்டவிரோத பண பரிவர்த்தனை செயல்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில் ரூ 2

போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 50,484 வழக்குகள் நிறைவு: மக்களவையில் தகவல்i

 பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் 50,484 வழக்குகள் நிறைவு: மக்களவையில் தகவல்i போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம்,  2021 மே மாதம் வரை  நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: இளம் வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வாரியாக  14 முதல் 18 வயதினர் மற்றும் 18 முதல் 30 வயதினர் இடையே தற்கொலை எண்ணிக்கை இணைப்பு -1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டுகளில்,  இதே வயதுப் பிரிவினரில் காரணம் மற்றும் பாலின அடிப்படையிலான தற்கொலை எண்ணிக்கை இணைப்பு-2-ல் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையங்கள்: மாநில வாரியாக, உருவாக்கப்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ளவை, குழந்தை பாதுகாப்பு சேவை திட்டத்தின் கீழ் உதவி

பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலம்: மத்திய அமைச்சர் தகவல்

ஆயுஷ்  பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலம்: மத்திய அமைச்சர் தகவல் பல நாடுகளில் ஆயுஷ் மருந்துகள் பிரபலமடைந்துள்ளதாக  ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்  கூறியுள்ளார். அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: சுகாதாரம், உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. ஆயுர்வேதம், யோகா போன்றவற்றுக்கான தேவை, சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.  நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ஓமன், சவுதி அரேபியா, பஹ்ரைன், மலேசியா, மொரிஷியஸ், ஹங்கேரி, செர்பியா, தான்சானியா, சுவிட்சர்லாந்து, கியூபா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ஆயுர்வேதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ருமேனியா, ஹங்கேரி, லத்வியா, செர்பியா மற்றும் ஸ்லோவேனியாவில் ஆயுர்வேத மருத்துவ முறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.  வங்கதேசம்,  இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  மற்றும் தான்சானியாவில் யுனானி முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மலேசியாவில் சித்தா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சோவா ரிக்பா மருத்துவ முறை, பூட்டான் மற்ற

குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துங்கள்: அறிவியல் சமூகத்தினருக்கு குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல் குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பு மருந்து உருவாக்கத்தை துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அறிவியல் சமூகத்தினரை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார். வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்று கூறிய திரு நாயுடு, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டார். ஹைதராபாத்தின் ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் லிமிடெட் நிறுவன ஆலையை பார்வையிட்ட பின்னர் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களிடையே பேசிய அவர், “தடுப்பு மருந்து தயக்கத்திற்கு இடமில்லை” என்றார். ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்றும், நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்க இதை விட சக்தி வாய்ந்த வழி வேறெதுவும் இல்லை என்றும் திரு நா

இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, 2020-ன் இறுதி முடிவுகள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, 2020-ன் இறுதி முடிவுகள் 2020 அக்டோபர் 16 முதல் 18 வரை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய இந்திய பொருளாதார பணி/இந்திய புள்ளியியல் பணி தேர்வு, 2020-ன் எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், 2021 ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற நேர்முக தேர்வுகளின் அடிப்படையிலும், இந்திய பொருளாதார பணி மற்றும் இந்திய புள்ளியியல் பணியில் நியமிக்கப்படுவதற்காக மதிப்பெண்களின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார சேவையில் உள்ள 15 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு ஆறும், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இரண்டும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மூன்றும், பட்டியல் பிரிவினருக்கு இரண்டும், பழங்குடியினருக்கு இரண்டும் ஒதுக்கப்பட்ட வேண்டும். இந்திய புள்ளியியல் சேவையில் உள்ள 50 பணியிடங்களில் பொதுப்பிரிவினருக்கு 25-ம், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு ஐந்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 12-ம், பட்டியல் பிரிவினருக்கு ஐந்தும், பழங்குடியினருக்கு மூன்றும் ஒதுக்கப்பட

ஐந்து தென்னிந்திய மாநிலங்களில்.யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்திய அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, தேசிய சுகாதார இயக்கம் ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது பத்திரிகை தகவல் அலுவலகம், களவிளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, அகில இந்திய வானொலி செய்திகள், மாநில நோய் தடுப்பு அலுவலர்கள் மற்றும் ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா) இருந்து தேசிய சுகாதார இயக்கத்தின் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரிவு ஆகியவற்றின் அலுவலர்களுக்கான ஆன்லைன் பயிலரங்கை யுனிசெஃப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் நடத்தியது. சரியான கொவிட் நடத்தை விதிமுறை குறித்த தகவல்களை வலியுறுத்துவதற்காகவும், தடுப்புமருந்து செலுத்திக்கொள்வதை ஊக்குவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட அமர்வுக்கு மத்திய

பதவி உயர்வு பெற்ற ஆறுபேர் உள்ளிட்ட 29 மாவட்ட மக்கள் தொடர்பு அலுலர்கள் பணி மாறுதல் செய்து உத்தரவு

தமிழ்நாட்டில் 32 மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், செயலாக்கங்கள், சாதனைகள் மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளை பயனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு, செய்தி இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி வழியாக விளம்பரப்படுத்தும் பணியினைச் செயல்படுத்துகின்றனர் .  செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அரசின் செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களை வழங்குதல், மக்கள் கூடுமிடங்களில் வீடியோ படக் காட்சிகள் நடத்துதல், பத்திரிக்கையாளர் கூட்டங்களுக்கு  ஏற்பாடு செய்தல், கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் கள விளம்பரப்பணி செய்தல், அரசு விழாக்களை நடத்துதல், பல்துறைப் பணிவிளக்க முகாம்கள் மற்றும் சிறு கண்காட்சிகள் நடத்துதல், நினைவகங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் மேம்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுலர்கள் 29 பேர் இட மாற்றம் செய்யபட்டுள்ளனர். ஏ.பி.ஆர்.ஓ.க்களாக இருந்த 6 பேர் பி.ஆர்.ஓ.க்களாக பதவி

புவிசார் குறியீட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட மிளகாய் வகை நாகாலாந்திலிருந்து முதல் முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி .

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மிளகாயின் அரசன் என்ற மிளகாய் வகை நாகாலாந்திலிருந்து முதன்முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி வடகிழக்குப் பகுதிகளில் இருந்து புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நாகாலாந்தில் இருந்து 'மிளகாயின் அரசன்’ என்று அழைக்கப்படும் மிளகாய் வகை முதன்முறையாக கௌஹாத்தி வழியாக லண்டனுக்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகின் மிக காரமான மிளகாய் என்று கருதப்படும் இந்த வகை மிளகாய், நாகாலாந்தின் பெரென் மாவட்டத்தைச் சேர்ந்த டெனிங் பகுதியில் இருந்து பெறப்பட்டு, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா ஆதரவுடன் குவஹாத்தியில் செயல்படும் கிடங்கில் ஏற்றுமதிக்காக அனுப்புவதற்கு தயார் செய்யப்பட்டது கடந்த 2008-ஆம் ஆண்டு நாகாலாந்தின் இந்த மிளகாய்க்கு புவிசார் குறியீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வடகிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, ஏற்றுமதி வரைபடத்தில் இந்தப் பகுதியில் உள்ள மாநிலங்கள் இடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அபெடா அமைப்பு மேற்கொள்ளும். திரிபுராவின் பலாப்பழங்களை லண்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளு

மீராபாய் சானுவை கவுரவிக்க, வேலூர் தலைமை தபால் நிலையத்தில் பிரத்தியேக மின்னணு-தபால் கவுன்டர் திறப்பு

மீராபாய் சானுவை கவுரவிக்க, வேலூர் தலைமை தபால் நிலையத்தில் பிரத்தியேக மின்னணு-தபால் கவுன்டர் திறப்பு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு ரூ.10 செலவில் மின்னணு-தபால் மூலம் வாழ்த்துகள் அனுப்பி  கவுரவிக்க, ஒரு பிரத்தியேக மின்னணு-தபால் கவுன்டர் வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் 29.07.2021ம் தேதி அன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. நடக்கவிருக்கும் போட்டிகளுக்கு, இந்திய ஒலிம்பிக் குழுவினருக்கு, நாம் மின்னணு-தபால் மூலம் வாழ்த்துகள் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை கடந்த 2011ம் ஆண்டு ஜார்கண்ட்டில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றும் 2010ம் ஆண்டு உதய்பூரில் நடந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற   திரு எம். தமிழ் செல்வன் தொடங்கி வைத்தார். இவர் தற்போது, தபால் துறையில் தபால்காரராக பணியாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் பிரிவு தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் திரு பி.கோமல் குமார் தலைமை தாங்கினார். மின்னணு-தபால் வசதியை பயன்படுத்தி, இந்தியர்க

ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆய்வு கூட்டம்

 தேர்தல் ஆணையம் ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆய்வு கூட்டம் நடத்தியது அடுத்து நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்கள் தொடர்பான திட்டமிடலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகமான நிர்வச்சன் சதனில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது.  இதில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு.சுஷில் சந்திரா, வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மை ஆகியவை தேர்தல் நடத்துவதற்கு முக்கிய அடையாளங்கள் என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை முன்னிலைப்படுத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தனது உரையின் போது வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதன் முக்கியத்துவதை வலியுறுத்திய அவர், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் நிலுவையில் உள்ள வாக்காளப் பட்டியலில் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ம

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு ஆண்டனி பிளிங்கன் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்புi

 பிரதமர் அலுவலகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு ஆண்டனி பிளிங்கன் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்புi அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  திரு ஆண்டனி பிளிங்கன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அமெரிக்க அதிபர் திரு ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் திருமிகு கமலா ஹாரிசின் வாழ்த்துகளை பிரதமரிடம் திரு பிளிங்கன் தெரிவித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் முன்னதாக தாம் நடத்திய ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை குறித்து பிரதமரிடம் விளக்கிய அவர், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் & முதலீடு, பருவநிலை மாற்றம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தினார். அமெரிக்க அதிபர் திரு ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் திருமிகு கமலா ஹாரிசுக்கு தமது வாழ்த்துகளை திரு பிளிங்கனிடம் பிரதமர்  தெரிவித்தார். குவாட் அமைப்பு, கொவிட்-19 மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றில் அதிபர் திரு பிடன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு இருதரப்பு மற்றும்

சுமார் 2.88 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் : மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சுமார் 2.88 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் : மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பு நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 47.48 கோடிக்கும் அதிகமான (47,48,77,490) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 53,05,260 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 44,74,97,240 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 2.88 கோடி (2,88,55,050) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாட்டில் பணி செய்யும் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை

 தமிழ்நாட்டில் பணி செய்யும் காவலர்களுக்கு கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும்,                                    வார ஓய்வு நாளில் விருப்பத்துடன் பணியாற்றும் காவலர்களுக்கு மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் - தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சுற்றறிக்கை           காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு, பிறந்தநாள், திருமண நாட்களில் விடுமுறை வழங்க வேண்டுமென அறிவிப்பு!  காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிப் பாதுகாக்க ஏதுவாகவும், குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், தமிழ்நாடு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு மற்றும் பிறந்தநாள் திருமண நாட்களில் விடுமுறை வழங்க வேண்டுமென காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு. தமிழ்நாட்டின் அனைத்து மாநகரக் காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை தலைமை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை :- 1. காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். 2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன

ஜல்சக்தி அமைச்சகம் நதிகளை பாதுகாப்பதில் கவனம் குறித்து மக்களவையில் அமைச்சர் தகவல்

ஜல்சக்தி அமைச்சகம் நதிகளை பாதுகாப்பதில் கவனம் நாட்டில் வற்றாத ஜீவ நதிகள் மற்றும் மழை அல்லாத நேரங்களில் வறண்டு காணப்படும் வறண்ட நதிகள் என இரண்டு வகையான நதிகள் உள்ளன.  நகரங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதி அளவாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் நதிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கலப்பது, கழிவுநீர் மறுசூழற்சி நிலையங்கள் சரியான வகையில் இயங்காதது, அவை முறையாகப் பராமரிக்கப்படாதது, வேகமாக அதிகரிக்கும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை நதிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. நதிகளை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மறுசீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் மத்திய அரசு சார்பில் கூடுதலாக நிதி உதவி, தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது. கங்கை மற்றும் அதன் கரையை ஒட்டி அமைந்துள்ள நதிகளை தூய்மைப்படுத்த நமாமி கங்கே திட்டம், மற்ற நதிகளை தூய்மைபடுத்த தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் (NRCP) ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. மேலும், சிறிய நதிகளைப் பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்