முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் காலமானார்

இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் இறைவனடி சேர்ந்தார். சில தினங்களுக்கு முன் சளித்தொல்லை காரணமாக சென்னை இராமச்சந்திரா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை. இரண்டாவது பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர் இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் இராம.கோபாலன் 1984 ல் பயங்கரவாதிகள் தாக்குதலில் தப்பியவர் அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என எதிர்பார்த்தனர். அவரது 94 வயது முதுமை காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. வீரத்துறவி இராம கோபாலன் 19 செப்டம்பர் 1927 ல் தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர். 1945 ல் ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக்காகச் சேர்ந்தார். டிப்ளமோ , ஏ.எம்.ஐ.ஈ. படித்து பின் மின் துறை வேலையை உதறி முழுநேர RSS பிரச்சாரக் ஆனார் பிராந்தியப் பிரச்சாரக் (மாநில அமைப்பாளர்) என்ற பொறுப்பு வரை வந்து தமிழகம் முழுவதும் RSS வேலைகள் வளரக் காரணமாக இருந்தவர். 1948 ல் RSS தடை செய்யப்பட்ட போதும் , 1975 மிசா நேரத்திலும் தமிழகத்தில் RSS இயக்கத்தை வழி நடத்தியவர். தமிழகத்தில் 1980 ம் ஆண்டு RSS

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப்போக்குவரத்து முறை எனும் தொலைநோக்குத் திட்டம்

எப்ஏஎம்இ இந்தியா திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து முறை என்னும் தொலைநோக்கை எட்டும் இத்திட்டத்தின் கீழ் திருச்சிக்கு 25 மின்-பேருந்து மின்னூட்ட நிலையங்கள் ஒதுக்கீடு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கை நனவாக்கும் ம் வகையில், மத்திய அரசு, பாஸ்டர் அடாப்சன் அன்ட் மனுபாக்சரிங் ஆப் ஹைபிரிட் எலக்டிரிக் வெகிகிள்ஸ் ( எப்ஏஎம்இ) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருச்சியில், 25 மின்சாரப் பேருந்துகளுக்கான மின்னூட்ட நிலையங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கோவா, குஜராத், சண்டிகார் ஆகிய மாநிலங்களில் 670 மின்சார பேருந்துகளுக்கு மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.  தமிழகம், மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், போர்ட்பிளேர் ஆகிய இடங்களில் எப்ஏஎம்இ திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், 241 மின்னூட்ட நிலையங்களை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கோவா, மகாராஷ்டிரா, நவி மும்பை, ராஜ்கோட், ஆகியவற்றுக்கு தலா 100 மின் பேருந்துகளும், சூரத்திற்கு 150 பேருந்துகளும், சண்டிகருக்கு 80

புறநகர் இரயில் போக்குவரத்து அக்டோபர் ஏமு முதல் இயங்கும்

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர 2020 மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்ட தையடுத்து, மேற்கொண்ட தளர்வுகளில் சரக்கு ரெயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 7 ஆம் தேதியிலிருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படுமென தெற்கு ரெயில்வேயின் தகவல்.புறநகர் ரெயில் சேவையில் பணியாற்றும் 100 சதவீதம் பணியாளர்களையும் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையிலில்லாமல் முழுமையாகப் பணிக்கு வர அறிவுறுத்தியுள்ளது. 450 க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை தினசரி செயல்பட்ட நிலையில் தற்போது தினம் 300 முறை மட்டுமே ரயில்களை இயக்கும் திட்டமெனத் தகவல். பின் தேவைக்கேற்ப முழுமையாகச் சேவை துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் புறநகர் ரயில் சேவை எங்கு வரை செயல்படும் எத்தனை முறை என்ற திட்டம் தற்போது வரையறுக்கப்படுகிறது. இதுவரை புறநகர் ரயில் சேவைக்கான வழிமுறைகளை மத்திய இரயில்வே வெளியிடவில்லை. ஆனால் புறநகர் ரெயில் சேவையை தமிழக அரசு அனுமதிக்கத் தயராகிறதென தெற்கு இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பில் முன் கூட்டிய சதி இல்லை என அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் வழங்கியது. சிறப்பு மத்தியப் புலனாய்வு நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவு. இடிப்பு என்பது முன்பே திட்டமிடப்பட்டதாக நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களில்லை என்று கூறி அனைவரும் விடுவிப்பு. செப்டம்பர் 30 ஆம் தேதி உத்தரபிரதேசம் லக்னோவிலுள்ள மத்தியப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த பாரதிய ஜனதா கடைசியின் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டுக்கு உள்ளான அனைவரையும் விடுவித்து உத்தரவு எஸ்.கே. அத்வானி தவிர, பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமா பாரதி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரான கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரித்தம்பரா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். ராம் ஜன்மபூமி இயக்கம் மீதான எனது தனிப்பட்ட மற்றும் பாஜகவின் நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் இந்தத் தீர்ப்பு நிரூபிக்கிறது" என அத்வானி

நிலக்கரி அமைச்சகத்தின் 278 ஏல டெண்டர் ஆவணங்கள் விற்பனை

நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி பகுதி ஏலம்: 278 டெண்டர் ஆவணங்கள் விற்பனை நிலக்கரி பகுதி ஏலம் விடுதலின் இப்போதைய தொகுப்பில், 38 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலம் கோருவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் 278 ஏல ஆவணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இப்பணியை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட ஆணையம்  29 செப்டம்பர் பிற்பகல் 2 மணி வரை ஏல விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும். 2020 செப்டம்பர் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவை பிரிக்கப்படும்.

சென்னை சுங்கத்துறை சார்பில் ஐந்து லட்சம் மதிப்பு போதைமாத்திரைகள் பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் பறிமுதல் சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, அவற்றில் போதைப்பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.   முதல் பார்சலைத் திறந்ததும், பொதுவாக “பிலிப் ப்ளீன்” என அழைக்கப்படும் “பிபி” குரிஈடோடு 105 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மீட்கப்பட்டன. பார்சல் சென்னை நகரத்தில் உள்ள ஒரு தனி நபரின் விலாசத்திற்கு அனுப்பட்டுள்ளது. விசாரிக்கையில் அந்த விலாசம் போலியானது என்று தெரியவந்துள்ளது. இரண்டாவது பார்சலில் இருந்து 60 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மீட்கப்பட்டன. “ப்ளூ பனிஷர்” என்று அழைக்கப்படும் இந்த மாத்திரைகள் மண்டை ஓடுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 300 மில்லி கிராம் எம்.டி.எம்.ஏ உள்ளது, இது மிக அதிக அளவு ஆகும். வடகிழக்கு நெதர்லாந்தில் உள்ள ஸ்வோல்லே என்ற நகரத்திலிருந்து இந்தப் பார்சல் வந்துள்ளது. திருப்பூரில் உள்ள ஒரு விலாசத்திற்கு அனுப்பட்டுள்ளது. விசாரிக்கையில் அந்த விலாசம் ஒரு ஜவுளி நிறுவனத்துடையது என்றும் அந

இந்திய ரயில்வே பயனாளர் யு டி எம் துவக்கம்

ரெயில்வே அமைச்சகம் இந்திய ரயில்வேயில் பயனாளர் கிடங்கு செயல் திட்டம் (யூ.டி.எம்.) தொடக்கம் ரயில்வே தகவல் வழிமுறைகள் மையம் ( Centre for Railway Information Systems - CRIS) உருவாக்கிய பயனாளர் கிடங்கு செயல் திட்டத்தை (User Depot Module - UDM)  டி & ஆர்.எஸ். (T&RS)  உறுப்பினர் திரு. பி.சி. சர்மா 28.09.2020 அன்று மேற்கு ரயில்வேயின் அனைத்து கிடங்குகளிலும் டிஜிட்டல் வசதி மூலம் தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் விரைவில் இந்தத் திட்டம் அமல் செய்யப்படும்.  இந்திய ரயில்வேயில் கிடங்குகள் சங்கிலித் தொடர் அமைப்பு ஏற்கெனவே டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் பயனாளர் முனையங்களில் அலுவலர்கள் மூலமாகவே இந்தச் செயல்பாடுகள் நடைபெற்று வந்தன. புதிய திட்டம் அமலுக்கு வருவதால் உடனுக்குடன் பரிவர்த்தனைகள் நடைபெறுதல், தொடர்புடைய அனைத்துத் துறையினருக்கும் இடையில் ஆன்லைன் தகவல் பரிமாற்றம் ஆகியவை சாத்தியமாகும். அலுவலர்கள் கையாள்வதில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுவதன் மூலம் இது எளிதாகும்.  பயனாளர் கிடங்கு உள்ளிட்ட முழு சங்கிலித் தொடர் அமைப்பும் டிஜிட்டல் மயமாக்கப்படுவது இ

டேராடூன் கீழ்வழிப்பாதை பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

பாதுகாப்பு அமைச்சகம் டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார் டேராடூன் இந்திய ராணுவ அகாதமியில் கீழ் வழிப் பாதைகள் அமைப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், அகாதமியின் மூன்று வளாகங்களுக்கு இடையே தடையற்றப் போக்குவரத்துக்கு உதவக்கூடிய இந்த கீழ்வழிப் பாலங்களைக் கட்டுவதற்கு அனுமதி கிடைப்பதற்கு 40 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது விநோதமாக உள்ளது என்று கூறினார். இப்போது பயிற்சி அதிகாரிகள் ஒரு வளாகத்தில் இருந்து இன்னொரு வளாகத்திற்கு எளிதாகச் செல்வதற்குப் போக்குவரத்து சிக்னல்கள் இடையூறாக உள்ளன. மேலும் பயிற்சி அதிகாரிகள் செல்லும் போது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் இப்போது இல்லை

சட்டசபை இடைத்தேர்தல் இப்போது இல்லை தமிழகத்தில். கேரளா,தமிழ்நாடு,அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட வேண்டுகோளுக்குப் பிறகு கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் 7 இடங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று இ.சி.ஐ முடிவு செய்கிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடங்களுக்கு இடைத்தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஏ.சி.ஐ 1 மக்களவைக்கு வாக்கெடுப்பு அறிவிக்கிறது (வால்மீகி நகர், பீகார்) இருக்கை மற்றும் 11 மாநிலங்களில் 56 சட்டசபை இடங்கள். நவம்பர் 7,2020 அன்று அனைத்து இடங்களுக்கும் வாக்களித்தல்

மே மாதமே மரணத்தை அறிந்த தீர்க்கதரிசி எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப்பேட்டை சிற்பி உடையார் ராஜ்குமாரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு எஸ்.பி.பி. ஆர்டர் கொடுத்துள்ளார்.  இதையடுத்து, தனது சிலை ஒன்றையும் செய்து கொடுக்கும் படி, ஜூன் மாதமே கேட்டுள்ளார். ஊரடங்கு சமயத்தில் நேரில் வரமுடியாதென்று கூறி தன்னுடைய புகைப்படங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பியுள்ளார். அதன்படி சிலை உருவாகிறது. இறப்பை உணர்ந்து தான் இந்த ஏற்பாடு செய்தாரா தெரியாது பல மொழிகள் பேசுவது பெரிய விஷயமல்ல. அதன் உச்சரிப்புத் தான் முக்கியம். மின்சாரக் கனவு படத்தில், "தங்கத் தாமரை மகளே…" பாடலும் சிந்து பைரவியில் "சிங்காரி சரக்கு நல்ல சரக்கு" பாடலும் அவரே தான்நூற்றுக்கணக்கான பாடகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இசைச் சக்ரவர்த்தியாக மக்கள் அவரைக் கொண்டாடுவது பலரது ரசனையை புரிந்தவர் அவர்

கதை சொல்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தி உரை

பிரதமர் அலுவலகம் கதை சொல்லலின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்தல் தனது மனதின் குரல் நிகழ்ச்சியின் புதிய உரையில், கதை சொல்லலின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்து, வலியுறுத்தினார். மனித நாகரிகம் எத்தனை தொன்மையானதோ அதே அளவுக்குத் தொன்மையானது கதைகளின் வரலாறும் என்று கூறிய அவர், எங்கே ஆன்மா இருக்கிறதோஅங்கே ஒரு கதையும் உண்டு என்றார். கதைகள், மனிதர்களின் படைப்பாற்றலையும், புரிந்துணர்வையும் முன்னிறுத்துகின்றன.  ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டும் வேளையிலோ, அந்தக் குழந்தையைத் தூங்க வைக்கும் வேளையிலோ கதைகளின் வல்லமை என்ன என்பதை நம்மால் பார்க்கமுடியும், உணர முடியும் என்றும பிரதமர் கூறினார். "நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சுற்றித் திரியும் ஒரு துறவியைப் போலவே வாழ்ந்து வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கிராமம், புதிய மனிதர்கள், புதிய குடும்பங்கள் என என் வாழ்க்கை இருந்து வந்தது.  நான் குடும்பங்களின் மத்தியில் இருக்கும் போது, குழந்தைகளோடு கண்டிப்பாக அளவளாவுவேன், சில வேளைகளில், சரி நீங்கள் எனக்கு ஒரு கதை சொல்லுங்களேன் என்று கேட்பேன்.  இல்ல

இந்தியாவிற்கான வெளிநாட்டு நன்கொடை திருத்தச்சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல்

இந்தியாவில் என்.ஜி.ஓக்கள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதற்கான சட்டத் திருத்தங்களுக்கு (FCRA Amendment Act 2020) க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார் எப்போது அமலாகுமென்ற விவரமில்லை. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடவும், ஹிந்து மதத்தை அழிக்கும் விதத்தில் பாரம்பரியத்தை தடுக்கும் வழக்குகள் போடவும், இந்தியாவை உடைக்கவும் வெளிநாடுகளிலிருந்து மதமாற்றம் செய்யவும் என்.ஜி.ஓ வில் சில கைக்கூலிகளும், எதிர்க்கட்சிகளும் எடுத்த முயற்சிகளணைத்தும் தோல்வி. என்.ஜி.ஓக்களின் நிர்வாகிகள் ஆதார் எண்களைப் பகிர வேண்டும், 20 சதத்திற்கும் அதிகமாக நிர்வாகச் செலவுகள் செய்யக்கூடாது, நன்கொடை பெற்ற காரணத்துக்காக மட்டுமே செலவிட வேண்டும், பிற என்.ஜி.ஓக்களுக்கு பணம் வழங்க முடியாது இனி - எனப் பல கட்டுப்பாடுகள். அரசிதழ். The Gazette of India CG-DL-E-28092020-222069 MINISTRY OF LAW AND JUSTICE (Legislative Department) New Delhi, the 28th September, 2020 வெளிவந்தது. சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் என்.ஜி.ஓக்கள் கதறுவது இப்போது காதில் விழுகிறது.. விவரம் கீழே. 2010 ல் வந்த வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழு

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக கேரளாவின் ஷோபா சுரேந்திரன் நியமனம்

இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக கேரளத்திலிருந்து திருமதி ஷோபா சுரேந்திரன் நியமனம். பா ஜ க வில் அடிப்படை உறுப்பினராக,காரிய கர்த்தவாக தன் அரசியல் பயணத்தை தொடங்கியவர் கேரளாவில் சேர்ந்த சகோதரி ஷோபா சுரேந்திரன் எந்த வித அரசியல் குடும்பப் பின்னனியுமில்லை, யார் சிபார்சுமில்லை, பெரிய பணக்கார வீட்டுப்பெண்ணுமில்லை. இவரது நாட்டுப்பற்றையும்,பொதுமக்கள் சேவையையும்,கேரளாவில் பா ஜ க வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய அரும்பனியையும் இனம் கண்டு இவரை தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்ததுள்ளது பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை. தன்னலமற்ற நாட்டுபற்று ,சேவை மனப்பான்மை இருந்தால் போதும் பாரதிய ஜனதா கட்சியில் சாதாரண தொண்டனும் , பெரிய அரசாங்கப் பொறுப்புகளில் வந்து மக்கள் சேவையாற்றலாம் என்று மீண்டும் நிருபித்தது பாரதிய ஜனதா கட்சி. அவருக்கு நமது பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வாழ்த்துகள் சேச்சி.🌷பல ஏழைப் பெண்கள் வாழ்வில் நீதி வழங்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. துன்பத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு தீர்வு காணும் வகையில் அவர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக உதவி மையங்களை ஊக்குவிக்க வேண்டி

கொலிஜியம் பரிந்துரையில் உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பத்து நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரை ஏற்று 23-09-2020 அன்று உச்சநீதிமன்றம் நீதித்துறை நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது: அதன் படி ஸ்ரீ ஜி. சந்திரசேகரன், ஸ்ரீ ஏ.ஏ. நக்கிரன், ஸ்ரீ சிவஞானம் வீராச்சாமி, ஸ்ரீ இளங்கோவன் கணேசன், திருமதி. ஆனந்தி சுப்பிரமணியன். திருமதி. கண்ணம்மாள் சண்முக சுந்தரம், ஸ்ரீ சதிகுமார் சுகுமாரா குருப், 8. ஸ்ரீ முரளி சங்கர் குப்புராஜு, 9. செல்வி மஞ்சுளா ராமராஜு நள்ளையா, திருமதி. தமிழ்செல்வி டி.வலயபாளையம். ஆகியோர் ஆகும்

நண்பர்கள் பணத்தால் பிரிந்த வேதனை. இந்த மோட்சதீபம் அமைதி தருமா

மறைந்த S P பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இசைஞானி இளையராஜா அவர்கள் திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில சற்று முன் மோட்ச தீபம் ஏற்றினார் . . .இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என பார்க்கப்படுகிறது. உண்மையைச் சொன்னால் இருவருக்கும் கடந்த ஆறு மாத காலமாகவே பனிப்போர் நடந்தது என்று கோலிவுட்டில் பேசும் நிலை. 2019 ஆம் வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு ஏழு லட்சம் வாங்கிக் கொண்டிருந்த எஸ்பிபி.திடீரென்று இருபது லட்சம் தந்தால் தான் வருவேனென தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு நிகழ்ச்சியைப் புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்தப் பிரச்னை எனவும், இளையராஜா- எஸ்.பி.பி பிரச்சனை அவர்களின் வாரிசுகளுக்கிடையேயானது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணமாம். காப்புரிமைச் சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை

பிரதமர் பசல்பீமா பயிர் காப்பீட்டுத் திட்டம் ரூ 1258 கோடி தமிழகத்தில்

பயிர் நஷ்டத்தால் ஏற்படும் விவசாயிகளின் துயரை துடைப்பதற்காக பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு ரூ 1258 கோடி காப்பீட்டை இந்த திட்டம் வழங்குகிறது கே தேவி பத்மநாபன், கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி பெருந்தொற்று காலத்திலும் கடுமையாக உழைத்து பெருமளவு அறுவடையை உறுதி செய்திருக்கும் விவசாயிகளின் கைகளில் நாட்டின் உணவுப் பாதுகாப்பு பத்திரமாக இருக்கிறது. பயிர் நஷ்டத்தால் ஏற்படும் நிதிச்சுமையால் விவசாயிகள் அவதியுறாத வகையில் பிரதமரின் பசல் பீமா காப்பீட்டு திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சராசரி விளைச்சலை கருத்தில் கொண்டு நிதியின் அளவை மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளும் வாய்ப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம் இல்லாத பயிர்களுக்கு 30 சதவீதமும், நீர்ப்பசனம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 25 சதவீதமும் மத்திய மானியம் கிடைக்கும். தானியங்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 327-க்கும், வேர்க்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிர்களை ஒரு ஏக்கருக்கு ரூ 540-க்கும், சோளம் வி

வாரிசுச் சான்றிதழ் பதினைந்து நாட்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும் என்பது சுற்றறிக்கை

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் மனுதாரர்களின் வாரிசுச் சான்றிதழ்களை பதினைந்து நாட்களுக்குள் வழங்கிட தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் 09 .08 .2017 தேதியிட்ட சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஐந்து நாட்களிலும், பிர்க்கா வருவாய் ஆய்வாளர் நான்கு நாட்களிலும் வருவாய் வட்டாச்சியர் ஆறு நாட்களிலும் முடித்து வாரிசுச் சான்றுகளை வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப் படுகிறது பல இடங்களில் காலதாமதம் செய்து முறையாக ஆவணம் இருந்தும் கையூட்டு நோக்கில் இனி தாமதம் செய்ய முடியாது அதை மீறி தாமதம் செய்தால் இந்த அரசாணை சார்ந்த சுற்றறிக்கை நமது வாசகர்களுக்கு உதவும்

வேளாண்மை சட்டத்திருத்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மூன்று வேளாண்மை சட்டத் திருத்த மசோதா பில்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை அளித்துள்ளார் உழவர் உற்பத்தி வர்த்தக மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, 2020 விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020 அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 ஆகியனவாகும்

சுகாதாரத் துறையின் சஞ்சீவினி தொலைதூர மருத்துவ சேவையில் தமிழகம் முன்னணியில்

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையை பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் பல்வேறு வெளி நோயாளி பிரிவுகள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல மையங்களில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு மற்றும் உத்திரப் பிரதேசத்தில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைதூர ஆலோசனைகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த இரு மாநிலங்களும் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் 1,33167 தொலைதூர ஆலோசனைகளும், உத்திரப் பிரதேசத்தில் 1,00124 தொலைதூர ஆலோசனைகளும் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்றின் போது பயனாளிகளின் உடல் இடைவெளியை உறுதி செய்து பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது. மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக இந்த கைபேசி செயலியை 18 க்கும் அதிகமான மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன. நாட்டில் முதல் பத்து இடங்களை பிடித்த மாவட்டங்களில் ஏழு தமிழ்நாட்டில் உள்ளன. அவை விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை

வீரதீரச் செயல்களுக்கான 2020 கடற்படை விருதுகள் வழங்கும் விழா

பாதுகாப்பு அமைச்சகம் கடற்படை விருது விழா - 2020 குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடற்படையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு  அறிவிக்கப்பட்ட வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் சார்பில் தென் மண்டல கடற்படை தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா கொச்சி கடற்படை தளத்தில் நடந்த விழாவில் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 10 பதக்கங்கள் வழங்கப்பட்டன. 4 நவ் சேனா பதக்கங்கள்(வீரதீர) , 2 நவ் சேனா (அர்ப்பணிப்பு),  நீண்ட காலம் பணியாற்றிய 4  பேருக்கு விஷிட் சேவா பதக்கங்களும் வழங்கப்பட்டன. கடற்படையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில்  வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு, இந்நிகழ்ச்சியில் ஜீவன் ரக்‌ஷாக் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டன. விருது பெற்றவர்களின் விவரங்கள்: நாவோ சேனா பதக்கம் (துணிச்சல்) தளபதி ஷைலேந்திர சிங் தளபதி விக்ராந்த் சிங் லெப்டினன்ட் கமாண்டர் ரவீந்திர சிங் சவுத்ரி சுஷில் குமார், முன்னணி சீமான் நாவோ சேனா பதக்கம் (கடமைக்கான பக்தி) கமடோர் எம்.பி. அனில் குமார் கமடோர் குர்ச்சரன் சிங் விஷிஷ்ட்சேவா பதக்கம் பேக் அட்மிரல் தருன்சோப்தி கமடோர் அஜித் வி குமார் கமடோர் ஆர் ராமகிருஷ்ணன் அய்யர் கேப்டன் கே நிர்மல்

உள்நாட்டு விமான சேவையில் ஒருகோடி பயணிகள் பயணம்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர் 2020 மே 25 அன்று உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். இந்த தகவலை விமான போக்குவரத்து இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து 1,08,210 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், அதில் ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து கொவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தில் இந்த மைல்கல்லை அடைந்ததற்காக பங்குதாரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகள் 2020 மார்ச் 25 அன்று நிறுத்தப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2020 மே 25 அன்று, விமான சேவைகள் மீண்டும் தொடங்கின.

பா ஜ க அமைப்புச் சட்ட விதிகளின் படி எழுபது நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 12 துணைத் தலைவர்கள், 23 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட 70 தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலை அதன் தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதில் தான் தமிழக பாஜக தலைவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. அத்துடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவ் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் இந்த பட்டியலில் ஏற்கனவே தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்த எச். ராஜாவின் பெயரும் கூட இல்லை. இதனால் தமிழக பாஜகவின் அமைப்புச் சட்டம் மற்றும் துணை விதிகள் அறியாத பலரும் அறியாமல் பேசி பதவிகள் இல்லை என வரும் தகவல்கள் பரபரப்பாக வலம்வருகிறது. புதிய துணைத் தலைவர்கள்: ராமன்சிங் (சத்தீஸ்கர்), வசுந்தரராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ராதாமோகன்சிங் (பீகார்), பைஜந்த் ஜெய் பாண்டா (ஒடிசா), ரகுபர்தாஸ்(ஜார்க்கண்ட்), முகுல் ராய் (மேற்கு வங்கம்), ரேகா வர்மா (உபி), அன்னபூர்னா தேவி (குஜராத்), டிகே அருணா (தெலுங்கானா), சசூபா ஆவோ (நாகாலாந்து), அப்துல்லா குட்டி(கேரளா) புதிய பொதுச்செயலாளர்கள் தேசிய பொதுச்செயலாளர்கள்: பூபேந்திரன் யாதவ் (ராஜஸ்தான்), அருண் சிங் (உபி), கைலாஷ் விஜவர்ஜியா (மபி), துஷ்யந்த் குமார்