முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெலுங்கானா ஆளுநர் தென்மாவட்டங்களில் பயணம் புதுச்சேரியில் பார்த்த திரைப்படம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி , மற்றும் கேபினட் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காஷ்மீரின் திரைப்பட சிறப்புத் திரையிடலை பிராவிடன்ஸ் மாலில் உள்ள சினிமா ஹாலில் கண்டார் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அது குறித்து  தனது பதிவில் எங்களுடன் சேருங்கள், இப்போது பார்க்கிறேன். கனத்த இதயத்துடன் காஷ்மீர் கோப்புகளைப் பார்த்தோம் - என பதிவிட்டு நிலையில்  பண்டிட்டுகள் தங்கள் சொந்த நிலத்தில் படும் உண்மையான துன்பங்கள். கடினமான உண்மைகளின் அடிப்படையில் உண்மையை வெளிப்படுத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட படம். திரைப்படத்தை உருவாக்கிய விவேக் அக்னிஹோத்ரி குழுவினருக்கு பாராட்டுக்கள், தேசபக்தர்களின் வரலாற்றுக் காப்பகத்தை வெளிப்படுத்தியது. உண்மை வெளிப்பட்டதென்று பலர் தெரிவித்த நிலையில். மாறாக    காஷ்மீர் பைல்ஸ் பலரது பார்வையில் அரைகுறை உண்மைகளும், ஒரு சார்பு கண்ணோட்டமும் மிக ஆபத்தானது இந்தப் படம் என சிலர் கூறினாலும் இன்றைக்கு இந்தியாவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்து-முஸ்லீம் இணக்கத்தையும் அடியோடு கெடுகாக்கப் பார்க்கிறது எனக் கூறுவோரும் உண்டு. ...

தமிழக கேரள முதல்வர்களுடன் பிரதமர் புயல் பாதிப்புத் தடுப்பு நடவடிக்கை குறித்துப் பேச்சு

பிரதமர் அலுவலகம் புரெவி புயலால் நிலவும் சூழல் குறித்து தமிழக முதல்வருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல் புரெவி புயல் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சூழல் குறித்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். "தமிழக முதல்வர் திரு @EPSTamilNadu அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். புரெவி புயலின் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் நிலவி வரும் சூழ்நிலைகளை பற்றி நாங்கள் ஆலோசித்தோம். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்," என்று டிவிட்டர் பதிவொன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும்‌ புரெவி புயலால் நிலவும் சூழல் குறித்து கேரள முதல்வருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல் புரெவி புயல் காரணமாக கேரளாவில் நிலவி வரும் சூழல் குறித்து கேரள முதல்வர் திரு பினராயி விஜயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். "கேரள முதல்வர் திரு @vijayanpinarayi அவர்களுடன் புரெவி புயல...

எல்லைப் பாதுகாப்புப் படை 56 வது உதயதினக் கொண்டாட்டம்

உள்துறை அமைச்சகம் எல்லை பாதுகாப்பு படையின் 56வது உதய தின கொண்டாட்டம் மத்திய உள்துறை இணை அமைச்சர் பங்கேற்பு எல்லை பாதுகாப்பு படையின்(பிஎஸ்எப்) 56வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். எல்லை பாதுகாப்பு படை, தனது 56வது உதய தினத்தை இன்று கொண்டாடியது. இந்த விழா தில்லி சாவ்லா முகாமில் நடந்தது. அப்போது நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் திரு ராகேஷ் அஸ்தானா உட்பட பலர் கலந்து கொ...

அரசின் சீக்கியர்களுடனான உறவு நூல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வெளியீடு

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் சீக்கியர்களுடனான சிறப்பு உறவு' என்னும் புத்தகத்தை திரு ஹர்தீப் சிங் புரியுடன் இணைந்து திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். மத்திய விமான போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரியுடன் இணைந்து,  'பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் சீக்கியர்களுடனான சிறப்பு உறவு' என்னும் புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய திரு புரி, இப்புத்தகத்தை வெளியிட்டதற்காக திரு ஜவடேகர் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தை பாராட்டினார். ஸ்ரீ குரு நானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்த தினத்தைக் கொண்டாட ஒரு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த முடிவுகளை பற்றி குறிப்பிட்ட திரு புரி, அவற்றில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதும் ஒன்று என்றார். இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் குரு நானக் தேவ் அவர்...

தேர்தல் நேரத்தில் ஜாதியை முன்னெடுக்கும் பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கேட்டு நாளை போராட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு மடல் என் உயிரினும் மேலான பாட்டாளிச் சொந்தங்களே! தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. போராட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில் போராட்டக் களத்திற்கு புலியென புறப்படுவதற்கான ஆயத்தப்பணிகளில் சிங்கக் குட்டிகளாகிய நீங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள். சமூகநீதி போராட்டம் என்பது முடிவில்லாதது. பல்வேறு தரப்பினருக்காக, பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதி போராட்டம் நீண்டு கொண்டே இருக்கும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊர...

புதுவருடத்தில் நடிகர் ரஜினி புதுக்கட்சி இப்போதே பூத்கமிட்டி முன்னேற்பாடு

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகைக்கான ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினிகாந்த் ‛அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,' ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில், சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, ‛என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்; அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும். பலமுறை எச்சரித்தும், சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை,' என்றார். மேலும், ‛தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா? தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்? கொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி? போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை க...

டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்பாத விவசாய சங்கங்கள் தொடரும் போராட்டம்

விவசாயிகளில் போராட்டம் நடத்துபவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விதித்த நிபந்தனையை ஏற்க. டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டில்லி சலோ' என்ற பெயரில் டில்லிக்கு பேரணியாக கிளம்பினர். ஹரியானா எல்லையில் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடுக்க காவல்துறை முயன்றதால் போராட்டம் பரபரப்பு ஏற்பட்டது. பின் டில்லியின் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விவசாயிகள், , சிங்கு மற்றும் டிக்ரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது. போராட்ட இடத்திலேயே உணவு சமைத்துச் சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டிசம்பர்.,மூன்றாம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும்...

ஸ்ரீகுருநானக் தேவ் பிறந்த நாளில் குடியரசு துணை தலைவர் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து குருநானக் பிறந்தநாள்,  நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  குருநானக் தேவ் ஜி பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சீக்கிய மதத்தை நிறுவிய  குரு நானக் தேவ் ஜி, தனது உன்னத வாழ்க்கையின் மூலம் உண்மை, இரக்கம் மற்றும் நீதியின் சின்னமாக இருந்து வந்தார்.  இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்கள், போதகர்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் புனிதர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. அவரது போதனைகள் உலகளாவிய  வேண்டுகோளை கொண்டுள்ளன மற்றும் இரக்கம்,  அடக்கமான வழியை பின்பற்றவும், சாதி, மதம், ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை காட்டவும் எப்போதும் நம்மைத் தூண்டும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந...

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தடம் பதிக்க நாளை நடக்கும் கூட்டம் இதில் இறுதிமுடிவு

போயஸ் தோட்டத்தில் மக்கள் மன்றம் சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மணிநேரம் ஆலோசனை சென்னை போயஸ் கார்டனில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ரஜினிகாந்த் அரசியலில் வருவாரா? இல்லையா என்பது தெரியும்? அவர் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்ப டுகிறது. நாளை சென்னை இராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் ரஜினிமக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கிறார். காலை 9 மணிக்குத் தொடங்கும் சந்திப்பில் தனது அரசியல் நுழைவு நிலைப்பாடு பற்றிய தனது முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகளை அவர் வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறத...

மஹாராஷ்டிர மாநில இரு விவகாரக்களில் நீதிமன்றம் ஆற்றிய பங்கு அரசியல் நெறி

மஹாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றங்கள்.முதலாவது "நடிகை கங்கனா ரனவுத் வீட்டை மும்பை கார்ப்பரேஷன் இடித்தது அவருக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணமே காரணம்." என்று கூறிய மும்பை உயர் நீதிமன்றம், அந்த சேதாரங்களை மதிப்பிட மதிப்பீட்டாளரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனா தன் வழக்கில் இரண்டு கோடி இழப்பீடு கேட்டிருந்தார். இரண்டாவதாக அர்னாப் கோஸ்வாமி வழக்கில் (abetment to suicide case) உச்சநீதிமன்றம் (சந்திரசூட் அமர்வு), "மும்பை உயர்நீதிமன்றம் அர்னாபுக்கு ஜாமீன் தர மறுத்தது கடமை தவறிய செயல்" என்று கருத்தை பதிவு செய்ததோடு, மும்பை காவல்துறையின் முதல் தகவலறிக்கையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது. "அடுத்த நான்கு வாரங்களுக்கு அர்னாபைக் கைது செய்யக் கூடாது." என்றும் தீர்ப்பளித்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் லவ்ஜிஹாத் பெயரில் நடக்கும் மோசடி தடுக்க அவசரச்சட்டம்

லவ் ஜிகாத்‘ என்ற பெயரில் இந்துப் பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களும் இந்து அமைப்புகளில் பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும்  மத்திய பிரதேசம், அரியானா மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்‘திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளன. அதேபோல், உத்தர பிரதேசத்திலும் லவ் ஜிகாத்திற்கு எதிரான அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தச் சட்டப்படி, ஒருவரை திட்டமிட்டுக் காதலித்து, பின், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து, திருமணம் செய்தால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. அவ்வாறு திருமணம் செய்த வரை, ஜாமினில் வெளிவர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கச் சட்டம் வகை செய்யும். இதன்மூலம் அடுத்த மதப் பெண்களை மதமாற்றம் செய்வது தடுக்கப்படும் . ஏற்கனவே இருக்கும் இந்து திருமண சட்டம், 1955, முஸ்லீம் திருமணங்கள் சட்டம் 1939 இல்  கலைத்தல் மூலம் முஸ்லிம்கள், பார்சி திருமண மற்றும் விவாகரத்து சட்டம், 1936 இல் பார்சிஸ் மற்றும் 1869 இந்திய விவாகரத்து சட்டத்தின் மூல...

நாடாளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகள் மாநாடு நிறைவுக்கூட்டம் பிரதமர் உரையாற்றுவார்

பிரதமர் அலுவலகம். 80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிரதமர் உரையாற்றுகிறார். 80-வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 1921-ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளுமன்ற சட்டமன்ற பேரவைத் தலைவர்கள் மாநாடு தொடங்கியது. இதன் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக குஜராத்தில் உள்ள கேவாடியாவில், நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு நாள் மாநாடு நடக்கிறது. 'சட்டமன்றம், அதிகாரிகள் மற்றும் நிதித்துறைக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பு துடிப்பான...

இந்திய வடகிழக்குப் பகுதியில் தலைமை ராணுவத் தளபதி ஆய்வு

​பாதுகாப்பு அமைச்சகம் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலைமையை ராணுவ தலைமை தளபதி ஆய்வு செய்தார். ராணுவத்தின் தலைமை தளபதியான மேஜர் முகுந்த் நரவனே, வடகிழக்கு பகுதியின் பாதுகாப்பு நிலைமையை 2020 நவம்பர் 24 அன்று ஆய்வு செய்தார். மூன்று நாள் பயணமாக நவம்பர் 23 அன்று நாகலாந்து வந்தடைந்த அவர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் குறித்து ஆய்வு செய்தார். அசாம் ரைபிள்ஸ் தலைமையகத்தை அவர் இன்று பார்வையிட்டார். நாகாலாந்து ஆளுநர் மற்றும் முதல்வரையும் அவர் சந்தித்தார். ​

போலி பில் மூலம் வரி ஏய்ப்பு செய்த நபரை ஜிஏஸடி நுண்ணரிவு தலைமை இயக்குநரகம் கைதுசெய்தது

நிதி அமைச்சகம் போலியான ரசீதுகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்காக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் மேலும் ஒருவரை கைது செய்தது. உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக திரு சத்தேந்திர குமார் சிங்க்லா என்பவர் ஏற்கனவே  கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ரசீதுகளின் மூலம் வரி ஏய்ப்பு செய்ததற்காக திரு விகாஸ் ஜெயின் என்பவரை ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் ரோஹ்த்தக் மண்டல அலுவலகம் கைது செய்துள்ளது. ரூ 27.99 கோடி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக திரு விகாஸ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் ரோஹ்த்தக் மண்டல அலுவலகம் தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட திரு விகாஸ் ஜெயின் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ​

சொந்த ஊர் பெண்கள் கூட்டத்தில் தரையில் வணங்கிய வானதி ஸ்ரீ நிவாசன்

கோயமுத்தூர் பக்கம் சொந்த ஊரிலுள்ள பட்டியலினப் பெண்களின் முன் விழுந்து புதிதாக கட்சிப் பதவி ஏற்ற வானதி சீனிவாசன் ஆசி பெற்றார் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவியாக வானதி சீனிவாசன் அண்மையில் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரது பதவி ஏற்பு விழா டெல்லி கட்சி அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற பதவியேற்றுக் கொண்ட நிலையில் பின்பு கோவை வந்தவர் பேரூர் ஆதீனம் , சிரவை ஆதீனங்களைச் சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து, தன் சொந்த கிராமம் உப்பிலிபாளையத்திற்குச் சென்ற வானதி சீனிவாசனுக்கு ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாரத வகையில், பட்டியலின பெண்களின் முன் தரையில் விழுந்து ஆசி பெற்றார் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  வானதி சீனிவாசனின் இந்த செயல் பெண்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.