முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திம்மியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மக்களை மதம் மாறும் படி, வலியுறுத்திய கும்பல் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத மாற்றம் செய்ய ஊருக்குள் புகுந்த நபர்களை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் விரட்டிய நிலையில் அவர்கள் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட  நபர்களை விடுதலை செய்யக் கோரியும், மத மாற்றம் செய்யும் அமைப்புகளுக்குத் துணை போனதாக காவல்துறை ஆய்வாளரைக் கண்டித்தும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திம்மியம்பட்டி கிராமம். கிராமத்தில் வசிக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் படி, கும்பல் ஒன்று பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதையறிந்த அக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கணேஷ் பிரபு, அந்தக் கும்பலைக் கண்டித்திருக்கிறார். அதனால் கணேஷ் பிரபு மீது காவல்நிலையத்தில் புகார்  கொடுத்த நிலையில். காவல்துறை என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே கணேஷ் பிரபு மீது பொய்யான வழக்கை பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாகவும். அதைக் கண்டித்து, திம்மியம்பட்டி கிராம மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் மேலும்,  இச்செயலை கண்டித்து நேற்று மாலை 3 மணியளவில் புதுக்கோட்டை மாவ

மின் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக ரூ. 7,309 கோடி

மின்சாரத் துறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரமாக மாநிலங்களுக்கு ரூ 7,309 கோடி வழங்கப்பட்டுள்ளது; முன்வடிவை சமர்ப்பித்துள்ளது தமிழகம் மின் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக 7,309 கோடி ரூபாய் கூடுதல் கடன் வாங்க இரண்டு மாநிலங்களுக்கு நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை அனுமதி வழங்கியுள்ளது. சீர்திருத்தச்  செயல்முறையைத்  தொடங்க ஊக்கத்தொகையாக ரூ 5,186 கோடி கூடுதல் கடன் பெற ராஜஸ்தானுக்கும், ரூ 2,123 கோடி கூடுதல் கடன் வாங்க ஆந்திரப் பிரதேசத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் துறையில் மாநிலங்கள் மேற்கொண்ட சீர்திருத்தத்தின் அடிப்படையில், பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரைகளைச்  சார்ந்து, 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம் வரை கூடுதல் கடன் வாங்குவதற்கான வசதியை மாநிலங்களுக்கு வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மின் துறை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட்ட கூடுதல் கடன் வாங்கும் தகுதியைப் பெற, கட்டாயச்  சீர்திருத்தங்களை மாநில அரசு  மேற்கொள்ள வேண்டும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன

ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள்

ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் : நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடக்கம் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும்  தேவாஸ் நகரில் உள்ள வங்கி  நோட்டு அச்சகத்தில்  இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய நிறுவனம்(எஸ்பிஎம்சிஐஎல்) தொடங்கியது . நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகத்தில், புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை  நிதியமைச்சகத்தின் சிறப்புச்  செயலாளர் திருமதி மீனா ஸ்வரூப் ஜனவரி 27ம் தேதி தொடங்கி வைத்தார்.  தேவாஸ் நகரில்  உள்ள வங்கி  நோட்டு அச்சகத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை  ஆலோசகர் திரு சசாங் சக்சேனா காணொலிக்  காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்

தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன், டாக்டர் வி. ஆனந்த நாகேஸ்வரன் எழுத்தாளராகவம், ஆசிரியராகவம், ஆலாசகராகவும் பணியாற்றினார்.  இவர் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொழில் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் கற்பித்துள்ளார். ஏராளமான புத்தகங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.  ஐஎப்எம்ஆர் ஸ்கூல் ஆப் பிசினஸ் தலைவராகவும் , க்ரேயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப்  பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இந்தியப்  பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இவர் பகுதி நேர உறுப்பினராக 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இருந்து வந்தார். அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ படித்த இவர், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

இரயில்வே தேர்வர்களின் தேர்வு குறித்த கவலைகளைப் போக்க அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி

இரயில்வே தேர்வர்களின் தேர்வு குறித்த கவலைகளைப் போக்க அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் உறுதி “ரயில்வே தேர்வர்கள் மற்றும் தேர்வெழுத விரும்புவோரின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள்வோம்,” என்று ரயில்வே அமைச்சர்  அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். டிடி நியூஸ் தொலைக்காட்சியுடனான தமது உரையாடலின் போது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி நடத்திய தேர்வு ஒன்று குறித்து சில விண்ணப்பதாரர்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து பதிலளித்தார். இந்த விவகாரம் மிகுந்த கவனத்துடன் கையாளப்படும் என்று கூறிய அவர், இதற்காக அமைக்கப்பட்ட மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழு, தேர்வர்களின் கருத்துகளை ஏற்கனவே பெறத் தொடங்கியுள்ளது என்றார். ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய மூத்த அதிகாரிகள் மாணவர் குழுக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப்  பெறுகிறார்கள். தேர்வர்கள்/மாணவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்படும் என்றும், யாருடைய வார்த்தைகளாலும் குழப்பமடையவோ அல்லது பாதிப்படையவோ தேவையில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும், ரயில்வே உள்கட்ட

பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்ய ரூ. 5,000 இலஞ்சம்: தொ.மு.ச., செயலாளர் பணிநீக்கம்.

பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்ய ரூ. 5,000 இலஞ்சம்: தொ.மு.ச., செயலாளர் பணிநீக்கம். :சேலம் கோட்டம் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பணி ஒதுக்கீடு செய்ய, 5,000 ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட, தொ.மு.ச., செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மானாத்தாள் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், (வயது 48). இவர், தாரமங்கலம் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிவதோடு, அங்கிருந்து திருவாரூருக்கு இயக்கப்படும் பேருந்தில், ஓட்டுனராகவும் பணிபுரிகிறார். ஆட்சி மாற்றத்துக்கு பின், அதே பேருந்தில் தொடர்ந்து ஓட்டுநராகப் பணியாற்ற விரும்பி. அதற்காக பணிமனையில், தொ.மு.ச., செயலாளராகப் பணியாற்றும், மேட்டூர் அருகே கோல்காரநூர் வளவைச் சேர்ந்த குணசேகரன், (வயது 47), என்பவரை அணுகினார். அவர் திருவாரூரில் பேருந்தில் பணி ஒதுக்க, 5,000 ரூபாய் இலஞ்சமாகக் கேட்டுள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜிடம், பரமசிவம் புகார் அளித்தார். இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிவுரையின்படி, பினாப்தலின் இரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை

ரூ.3,500 இலஞ்சம் வாங்கி பணத்தை டாய்லெட்டில் போட்ட கூட்டுறவு வங்கியின் செயலாளர் கைது

ரூ.5,000 கேட்டு ரூ.3,500 இலஞ்சம் வாங்கி பணத்தை டாய்லெட்டில் போட்ட கூட்டுறவு வங்கியின் செயலாளர் கைது: 2 மணி நேரம் போராடி மீட்ட இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ்பாட்சாபேட்டையில் K.K. 140 அரூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நிலவள வங்கி) செயலராக முருகன்(வயது 50) பணிபுரிகிறார். இவ் வங்கியில், 1982 ஆம் ஆண்டில் அரூர் அருகே கோட்டப்பட்டி விவசாயி நாகராஜன் (வயது 57) டிராக்டர் வாங்குவதற்காக ரூபாய் 63 ஆயிரம் கடன் வாங்கியுள்ளதை 1987 ஆம் ஆண்டு திருப்பி செலுத்தி விட்டார்.  இரு தினங்களுக்கு முன்பு கடன் முடித்த NOC சான்றிதழை வாங்க வங்கிக்கு சென்ற போது, ரூ 5,000 கேட்டு பின்னர் ரூ.3,500 கொடுத்தால் தான் சான்றிதழ் தரமுடியும் என செயலாளர் கூறவே. இலஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் அறிவுரையின் பேரில் நேற்று பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய 3,500 பணத்தை எடுத்துச் சென்று முருகனை சந்தித்து கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பிடித்தனர

தூக்கில் தொங்கிய.கர்நாடகா முன்னால் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி டாக்டர் சௌந்தர்யாவின் உடல்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் பேத்தியான சௌந்தர்யாவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. டாக்டரான சௌந்தர்யாவுக்கு, இரண்டாண்டுகளுக்கு முன் டாக்டர் நீரஜ் என்றவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சௌந்தர்யாவின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்படும் மருத்துவமனைக்கு விரைந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது எடியூரப்பா குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது.

ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது. கங்கேயத்தைச்  சேர்ந்த நபர் தன்னுடைய 75 லட்ச ரூபாய் சொத்து மதிப்புக்கு சால்வன்சி சான்றிதழ் கேட்டு உரிய ஆதாரங்கள் இணைத்து பணம் வங்கி மூலம் செலுத்திய பிறகு காங்கேயம் வருவது  வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் அதற்காக சான்றிதழை வழங்க 1.50 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டுமென கேட்டு வட்டாட்சியர் சிவகாமி டிமான்டு செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாதென விண்ணப்பித்த நபர் தெரிவித்ததால் இறுதியில் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சான்றிதழ் தருகிறேன் என வட்டாட்சியர் சிவகாமி கராராக பேசிய பின்.  அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.  ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் புகார் தாரர் கொண்டு வந்த பணத்தை இரசாயனம் தடவிய பின்  விண்ணப்பதாரரிடம் வழங்கி. அந்த நோட்டுகளை வட்டாட்சியரிடம் விண்ணப்பதாரர் அரசு தரப்பில் சாட்சியுடன் இணைந்து கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்

பத்ம விருதுகளால் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள்

பத்ம விருதுகளை பெரும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டு பத்ம விருதுகளை பெறவுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;  “பத்ம விருதுகளைப் பெறவுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்.  அவர்களது செயல்பாடுகளை  ஒட்டுமொத்த நாடும் போற்றுவதோடு, சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பால் நாம் அனைவரும் பெருமிதம் அடைகிறோம்“  என்று தெரிவித்துள்ளார்.    பத்ம விருதுகளால் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் * சதிராட்டத்தில் சாதனை படைத்த முத்து கண்ணம்மாள் *தூய்மையே வெல்லும் என உழைக்கும் தாமோதரன் தங்களது துறைகளில் அரிய சாதனைகளை செய்திருந்தாலும் அதிகம் அறியப்படாத இரு தமிழர்களை பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. பரதநாட்டியத்தின் முன்னோடியான சதிராட்டம் என்னும் நடனத்தில் கைதேர்ந்த விராலிமலையைச் சேர்ந்த முத்து கண்ணாம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக 1,000-க்கும் மேற்பட்ட நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 84 வயதான இவர், இளம் கலைஞர்களுக்கு இன்னமும் பயிற்சி அளிக்கிறா

பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படை மேற்கொண்ட கூட்டு கடல்சார் பயிற்சி நிறைவு

பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படை மேற்கொண்ட கூட்டு கடல்சார் பயிற்சி நிறைவு ‘பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படையின் மேற்கு மண்டலக்  கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட கூட்டுக்  கடல்சார் பயிற்சி  2022 ஜனவரி 25ம் தேதி நிறைவடைந்தது. இந்தியக்  கடற்படை, விமானப்படை, ராணுவம் மற்றும் கடலோரப்  பாதுகாப்புப்  படைகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காகவும், தனது செயல்பாட்டுத்  திட்டங்களை மதிப்பிடுவதற்காக இந்திய கடற்படையின் மேற்கு மண்டலக்  கட்டுப்பாட்டு மையம் இந்த கூட்டுப்  பயிற்சியை 20 நாட்கள் நடத்தியது. கடற்படையின் மேற்கு மண்டலக்  கட்டுப்பாட்டு மையத்  தலைமை அதிகாரியின் கீழ் இந்தப்  பயிற்சி நடத்தப்பட்டது. இந்த கூட்டுப்  பயிற்சியில், இந்தியக்  கடற்படையின் 40 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்  கப்பல்கள் பங்கேற்றன.  மேலும், சுகாய், ஜாக்குவர், விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம், அவாக்ஸ் ரேடாருடன் கூடிய விமானங்கள் ஆகியவற்றை விமானப்படை அனுப்பியது. கடற்படையின் கண்காணிப்பு விமானங்கள் பி8ஐ, டார்னியர், ஐஎல் 38, மிக் 19கே ரக விமானங்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றன. இந்திய ராணுவத்தின் படைப்ப

மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 11 நபர்கள் அரசு நிலங்களை அரசுக்கே விற்பனை செய்து ஊழல்

அரசு நிலங்களை அரசுக்கே விற்பனை செய்து ரூபாய்.பல கோடி மோசடி: திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்கு. சமுதாய வளர்ச்சிக்காக, புதிய சாலை அமைப்பது, பழைய சாலைகளை விரிவுபடுத்துவது, 'சிப்காட்' எனப்படும் பொருளாதார சிறப்பு மண்டலங்களை உருவாக்கும் பணிகள் அரசின் சார்பில் தொடர்ந்து கூடுதல் பணிகள் நடைபெறும்  மாவட்டங்களில், காஞ்சிபுரமும் ஒன்றாகும்.  அதில் முதற்கட்டமாக தனியாரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி, அதற்குரிய இழப்பீடு வழங்கி அந்த நிலங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.  அவ்வாறு நில எடுப்பு செய்த நிலங்களில், வருவாய் துறையினர் நடத்திய முறைகேடுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளி வந்துகொண்டிருக்கிறது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிலள்ள பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு தனியார் உரிமை கோணாமல் இருக்கும் அனாதீன நிலங்களை முறைகேடாகப் பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரம் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  வெளிவந்ததில், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் மாவட்ட

குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை பிரதமர் வாழ்த்து

குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை அன்பான நாட்டு மக்களே! வணக்கம்! நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். இது நாம் அனைவருக்கும் பொதுவான, இந்தியத்தன்மையை கொண்டாடுவதற்கான தருணம். 1950ம் ஆண்டு இதே தினத்தில்தான், நம் அனைவரின் புனிதமான சாரம், ஒரு முறையான வடிவத்தை பெற்றது. இந்நாளில்தான், இந்தியா மிகப் பெரிய ஜனநாயக குடியரசாக நிறுவப்பட்டது மற்றும் இந்திய மக்களாகிய நாம், அரசியல் சாசனத்தை, நமது ஒட்டுமொத்த தொலைநோக்காக நடைமுறைப்படுத்தினோம். நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை மற்றும் உயிரோட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்த ஒற்றுமை உணர்வு, ஒரே நாடாக இருப்பதுதான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் பெருந்தொற்று காரணமாக எளிமையாக இருக்கலாம். ஆனால் உணர்வு எப்போதும்போல் வலுவாக உள்ளது. இந்நிகழ்ச்சியில்,  சுயராஜ்ஜியத்துக்காக தங்கள் ஈடுஇணையற்ற வீரரத்தை வெளிப்படுத்திய மற்றும் மக்களை தூண்டிய சுதந்திர போராட்ட

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது

கிழக்குக் கடற்படைத் தலைமையகத்தில் குடியரசு தின அணிவகுப்பு 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஐஎன்எஸ் சர்கார்ஸில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் 26 ஜனவரி 2022 அன்று அணிவகுப்பு நடைபெற்றது. கிழக்குக்  கடற்படைத்  தலைமையக தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  அனைத்து கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தளங்களைச்  சேர்ந்த கடற்படை வீரர்களை உள்ளடக்கிய படைப்பிரிவுகளை அவர் பின்னர் ஆய்வு செய்தார். அணிவகுப்பு நடத்தும் அதிகாரியாக வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இருந்தார். அனைத்து பிரிவுகளைச்  சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். விழாவின் போது கொவிட் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை ஒழித்து துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக நவீன் குமாருக்கு நவ  சேனா பதக்கம் வழங்கப்பட்டது. இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படைக்கு ஆற்றிய ஒட்டுமொத்தப்  பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ராகுல் விலாஸ் கோகலேவுக்கு நவ  சேனா பதக்கம் வழங்கப்பட்டது. திறம்பட பங்காற்றிய இதர வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அணிவகுப்பில்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் வேட்பு மனுக்கள் பரீசலனை : பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் தேதி : பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி. தேர்தலில் வாக்குப்பதிவு : பிப்ரவரி மாதம்  19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முடிவு பிப்ரவரி மாதம்  22 ஆம் தேதி .மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ஆம் தேதியோடு முடிவுக்கு வரும். சென்னையில் மூன்று இ ஆ ப அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள் எனவும். 80,000 காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா காட்சி கண்காணிப்புடன் நடைபெறுமெனவும் தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.