முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரூபாய் .5 கோடி மோசடி வழக்கு: எஸ்.ஆர்.தேவர் என்ற ராஜசேகர் தெலுங்கானா காவல்துறையினரால் கைது.

ரூபாய் .5 கோடி மோசடி வழக்கு: எஸ்.ஆர்.தேவர் என்ற  ராஜசேகர் தெலுங்கானா காவல்துறையினரால் கைது. தெலுங்கானா மாநிலத்தில் ரூபாய். 5 கோடி மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசிக்கும்  ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரான எஸ் ஆர் தேவர் என்ற ராஜசேகர் என்பவரை தெலுங்கானாவிலிருந்து வந்த ஐந்து பேர் கொண்ட காவல் துறையினர் இன்று ஆகஸ்ட் - 31 செவ்வாய்க்கிழமை கைது செய்து தெலுங்கானாவிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட எஸ்.ஆர். தேவர் 2021 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டவர். இவர் தெலுங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு ரூபாய்.300 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு ரூபாய். 5 கோடிக்கு டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி விட்டு ஏமாற்றியதாக லெட்சுமி நாரயணன் என்பவர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் கிங்கோட்டி சுப்பிரமணியன் மகன் லட்சுமிநாராயணன். இவரது தொழிலை விரிவு படுத்த காரைக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் சந்திரன், பெருமாள்ராஜ் தங்

13 ஆண்டாக காதலித்து ஏமாற்றிய காதலன் வீட்டு வாசலில் விஷமருந்தி பெண் சாவு

தர்மபுரி மாவட்டம்  மாதேமங்கலம் குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் முரளிதரன் பிடெக் படித்த  Er.ஞானமொழியை  திருமணம் செய்வதாக சொல்லி 13 ஆண்டுகள் காதலித்து செய்து ஏமாற்றிய நிலையில்.. அந்த பெண் முரளிதரன் வீட்டு வாசலில் விஷமருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட குடும்பம் புகார் அளித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவும் சவக்கூறாய்வு செய்த அந்த பெண்ணின் சவத்தை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி னார்கள், அதன் விளைவாக தர்மபுரி காவல்துறை ஆய்வாளர் மற்றும் தொப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய இருவரும் சட்டப்படி  நடவடிக்கை எடுப்பதாகவும் , சம்பவம் நடந்த மாலைக்குள் 174 ஆக பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையினை  306 ஆக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்கின்றோம் என்ற உறுதிமொழியை அழித்ததன்  காரணமாக  அந்த பெண்ணின் சவத்தை பெற்று வந்து இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்து  முடித்துள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட எதிர் தரப்பை சேர்ந்த முரளிதரனின் தங்கை கணவர் குமரன் என்பவர் தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்

எந்தவித அச்சுறுத்தலை எதிர் கொள்ளவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் உரை

பாதுகாப்பு அமைச்சகம் எந்தவித அச்சுறுத்தலை எதிர் கொள்ளவும் நாடு தயார் நிலையில் இருக்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மறைந்த பல்ராம்ஜி தாஸ் டேன்டன் தொடர் கருத்தரங்கங்களின் ஒரு பகுதியாக ‘தேசிய பாதுகாப்பு' குறித்து காணொலி வாயிலாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 30, 2021) உரையாற்றினார். தேசிய பாதுகாப்பில் உணர்வுப்பூர்வமாக செயல்படுவதற்கே ஒவ்வொரு அரசும் முன்னுரிமை அளிப்பதாக வலியுறுத்தி,  எதிர்வரும் ஆபத்துகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தயாராகவும் விழிப்புடனும் இருப்பதற்கான  திடமான நம்பிக்கையே தேசிய பாதுகாப்பு என்று அவர் கூறினார். “சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்குள் நிலையில்லா சூழலை உருவாக்க இந்தியாவிற்கு எதிரான சக்திகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நேரடியாக  நம்முடன் போரிட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தபின், மறைமுகமான போரில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவைக் குறிவைக்க தீவிரவாதிகளுக்கு பயிற்சிகளையும் நிதி உதவிகளையும் அளிக்கத் தொடங்கினார்கள்”, என்று அவர் குறிப்பிட்டார். புதிதாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விளைவிக்கும் ஆப்கான

பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு

 பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “உயரே, உயரே எழும்புகிறீர்கள்! தொடர்சியான, சிறப்பான செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக மாரியப்பன் தங்கவேலு திகழ்கிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையைக் கண்டு இந்தியா பெருமையடைகிறது. @189thangavelu #Paralympics #Praise4Para,” என்று  தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில்                                                       பாரலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு ஜப்பான் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தடம் பதிக்கின்றனர். இதுவரை 2 தங்கம் உட்பட 8

இந்திய புவியியல் ஆய்வு பயிற்சி மையம், தனது 24 மணி நேர பிரத்தியேக இணையதளத்தை தொடங்கியது

சுரங்கங்கள் அமைச்சகம் இந்திய புவியியல் ஆய்வு பயிற்சி மையம், தனது 24 மணி நேர பிரத்தியேக இணையதளத்தை தொடங்கியது சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஐதராபாத்தில் உள்ள புவியியல் ஆய்வு பயிற்சி மையம்(GSITI), புவி அறிவியல் பற்றிய பல ஆன்லைன் பயிற்சி திட்டங்களை வழங்க, 24 மணி நேரமும் செயல்படும் இணையதளத்தை https://training.gsiti.gsi.gov.in/) தொடங்கியுள்ளது.   மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்துக்கு ஏற்ற வகையில் இது உள்ளது. இந்த இணையதளத்தின் பீட்டா வகை, புவி அறிவியல் பற்றிய பயிற்சியை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட 33 பயிற்சி திட்டங்கள்  (164 வீடியோ உரைகள்) உள்ளன. பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.  மேலும், ஜிஎஸ்ஐடிஐ-யின் அன்றாட செயல்பாடுகள், புதிய பயிற்சி அறிவிப்புகள், ஆன்லைன் பயிற்சிகளில் பங்கு பெறுபவர்களின் பட்டியல் தொடர்ந்து இந்த இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த இணையளத்தில் 12,380க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதிவு செய்து, இந்த பயிற்சி மையம் வழங்கும் தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்று பயனடைந்துள்ளனர்.

காந்தி நகர் தொகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டம்

உள்துறை அமைச்சகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டம்: காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்தார் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க லட்டு விநியோக திட்டத்தை, தனது காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இன்று கிருஷ்ண ஜெயந்தி. 5,100 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணா பிறந்தார். தர்மத்தின் வழியை நாட்டுக்கு காட்ட ஒருவர் தேவைப்பட்ட நேரத்தில் பகவான் கிருஷ்ணா அவதரித்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு வாழ்த்துகள். பகவான் கிருஷ்ணா வடிவிலான குழந்தை, ஆரோக்கியமான குழந்தையாக கருதப்படுகிறது. இன்று முதல் காந்தி நகரில் 7,000 கர்ப்பிணி பெண்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாதந்தோறும் தலா 15  ஊட்டச்சத்து லட்டுகள் இலவசமாக வழங்கப்படும். இதில் அரசு செலவு இல்லை. இதற்கான செலவை தொண்டு நிறுவனங்கள் ஏற்கும். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை பரப்ப ராஜஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி ஊட்டச்சத்து திட்டத்தை பிரதமர

மத்திய அரசு 2021-22 ஆம் நிதியாண்டுக்கான ஜூலை மாதம் வரை கணக்குகளின் மாதாந்திர ஆய்வு

நிதி அமைச்சகம் 2021-22ஆம் நிதியாண்டுக்கான ஜூலை மாதம் வரையிலான, மத்திய அரசு கணக்குகளின் மாதாந்திர ஆய்வு 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திரக் கணக்கு ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முக்கிய அம்சங்கள்: 2021ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை, மத்திய அரசு ரூ.6,83,297 கோடி வருவாய் பெற்றுள்ளது ( நடப்பு வர்த்தக ஆண்டு 2021-22-இன் மொத்த வரவில் 34.6 சதவீதம்) இதில் வரிவருவாய் ரூ. 5,29,189 கோடி (மத்திய அரசின் நிகர வருவாய்), வரியற்ற வருவாய் ரூ. 1,39,960  கோடி மற்றும் ரூ.14,148 கோடி கடனற்ற முதலீட்டு வரவு. கடனற்ற முதலீட்டு வரவில், கடன்கள் மீட்பு ரூ.5,777 கோடி மற்றும் பங்கு விற்பனை நடவடிக்கைகள் மூலம் வரவு ரூ.8,371 கோடி. மத்திய அரசின் வரிப் பங்காக, 2021 ஜூலை வரை, மாநிலங்களுக்கு ரூ.  1,65,064 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மொத்தச் செலவு ரூ.10,04,440 கோடி ( நடப்பு வர்த்தக ஆண்டி 2021-22இல் 28.8 சதவீதம்). இதில் ரூ. 8,76,012 கோடி வருவாய்க் கணக்கிலிருந்தும், ரூ. 1,28,428 கோடி முதலீட்டுக் கணக்கிலும் செலவிடப்பட்டள்ளது. மொத்த வருவாய் செலவில்  ரூ. 2,25,817 கோடி

முனைவர் பா வெங்கட்ராமன் கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மையத்தின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்

முனைவர் பா வெங்கட்ராமன் அவர்கள் கல்பாக்கத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார்.                                      அவர் செயிண்ட் ஜோசப் கல்லூரி (திருச்சி) யில் இயற்பியல் முதுகலைப் பட்டம் பெற்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 27 ஆம் தொகுதியில் தேர்ச்சி பெற்று கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிரியக்க உலோகவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்க்கையை 1984 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்த மையத்தில் தனிச்சிறப்புற்ற விஞ்ஞானியாகவும், ஹோமி பாபா தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுனிலைப் பேராசிரியராகவும் பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு இவற்றுக்கான குழுவின் இயக்குனாரகவும் இதுகாறும் இருந்து வருகிறார். 37 ஆண்டுகளாக அழிவிலா ஆய்வுச் சோதனையின் இயற்பியல் அடிப்படையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஆய்வும் செய்து வருகிறார். அணுசக்தித் துறையில் உள்ள தொழில் நுட்பச் சவால்களுக்கு அழிவிலாச் சோதனையின் மூலம் தீர்வு காணும் திறம் பெற்றவர் இவர். இ கா அ ஆ மையத்தில் நொதுமி (நியூட்ரான்) கொண்டு எடுக்கப்பட்ட முதல் கதிரியக்க நிழற்ப

தமிழ்நாடு, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளராக டி.வெங்கடகிருஷ்ணா பதவியேற்பு

தமிழ்நாடு, நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளராக திரு. டி.வெங்கடகிருஷ்ணா பதவியேற்பு சென்னையில் உள்ள வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி தேசிய வங்கியின் (நபார்டு), தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொது மேலாளராக திரு. டி.வெங்கடகிருஷ்ணா, 2021 செப்டம்பர் 1ஆம் தேதி பதவி ஏற்கிறார்.  இவர் ஐசிடபிள்யுஏ படிப்புடன், வர்த்தகத்தில் முதுநிலைப் பட்டம், சிஏஐஐபி, நிதிப்பிரிவில் முதுநிலைப் பட்டயப்படிப்பு   ஆகியவற்றை முடித்திருப்பவர். நபார்டு வங்கிச் சேவையில் இவர் கடந்த 1988ஆம் ஆண்டு இவர் இணைந்தார். மும்பையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள நபார்டு வங்கி அலுவலகங்களில் இவர் பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் பொறுப்பை வகிக்கிறார். நபார்டு வங்கி தலைமை அலுவலகத்தின் நிதித்துறையில் இவர் பணியாற்றிய போது, இவர் நிபுணத்துவம் பெற்று கரூவூலம் மற்றும் முதலீட்டுத் துறை ஆகியவற்றைக் கையாள்வதில் முக்கியமானவராக இருந்தார். நபார்டு வங்கியின் துணை அமைப்பான, நப்கிசான் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.

வறண்ட இடங்களில் நிலத்தடி நீராதாரங்கள் குறித்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிஎஸ்ஐஆர் ஆய்வு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிலத்தடி நீர் ஆதாரங்களை சிஎஸ்ஐஆர் படமிடுவது குடிநீர் தேவைகளுக்கு உதவுவதோடு பிரதமரின் ‘அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு’ லட்சியத்திற்கு வலுவூட்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வறண்ட இடங்களில் நிலத்தடி நீராதாரங்கள் குறித்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்) ஆய்வு செய்து வருவதாகவும், இது குடிநீர் தேவைகளுக்கு உதவுவதோடு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு’ லட்சிய திட்டத்திற்கு வலுவூட்டும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். வட மேற்கு இந்தியாவில் உள்ள வறண்ட இடங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்களை மேம்படுத்த தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமான என்ஜிஆர்ஐ உடன் இணைந்து சிஎஸ்ஐஆர் பணியாற்றி வருவதாக அமைச்சர் தெர

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் அதன் கொண்டாட்டங்களுக்கும் தடை

சிவகங்கை மாவட்டம்  பிள்ளையார்பட்டி துவக்கத்தில் இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தேசி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நாளை செப்டம்பர் மாதம் .1ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று காலை சங்கல்பமும், இரவில் ஆச்சார்யர் ரக்ஷா பந்தனமும் நடைபெறும். நாளை காலை 9:00 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு அருகில் உற்ஸவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள கொடிமரத்திற்கு பூஜை செய்து கொடியேற்றம், தீபாராதனை நடைபெறும்.தினசரி காலை, மாலை உற்ஸவர் பிரகாரம் சுற்றி வருதல் நடைபெறும்.  விழாவானது செப்டம்பர் .10 ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தியன்று நிறைவடையும். கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி கோவிலின் உட்பகுதியில் மட்டும் உற்ஸவம் நடைபெறும். தேரோட்டம், கஜமுகசூரசம்ஹாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. என பிள்ளையார் பட்டி நகரத்தார் டிரஸ்ட் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் அதன் கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் க

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிக பொது சரக்குகளுடன் வந்த கப்பலைக் கையாண்டு புதிய சாதனையும் வா.உ.சி வாழ்வில் நடந்த சோதனைகளும்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 29.08.2021 அன்று அதிக பொது சரக்குகளுடன் வந்த கப்பலைக் கையாண்டு புதியசாதனை படைத்துள்ளது. சிங்கப்பூர்  கொடியுடன் எம்.வி. இன்ஸ் அங்காரா  கப்பல், அரபு நாட்டிலுள்ள மினாசர்க் துறைமுகத்திலிருந்து 93,719 டன் சுண்ணாம்புக் கற்களை செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்காக எடுத்து வந்தது. இதற்கு முன்பு 14.05.2021 அன்று எம்.வி. பேஸ்டியன்ஸ் என்ற கப்பலின் மூலம் 92,935 டன் நிலக்கரி கையாளப்பட்ட சாதனையை முறியடித்தது. இக்கப்பல் சரக்குதளம் 9-ல் 26.08.2021 அன்று வருகை புரிந்து, நாள் ஒன்றுக்கு 50,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்பட்டது. இக்கப்பலின் மொத்த சரக்குகளும் 29.08.2021 அன்று கையாளப்பட்டது. இக்கப்பலின் முகவர்கள் மேக்சன்ஸ் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி மற்றும் சரக்கு கையாளும் முகவர்கள் தூத்துக்குடி செட்டிநாடு லாஜிஸ்டிக்,  ஆகும். சிறந்த சாதனைக்கு தனது முழு ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பையும் தந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், சரக்குகள் கையாளும் முகவர்கள், பளுதூக்கி இயந்திரம் இயக்குபவர்கள்,

திரிபுராவில் 132/33/11 கி.வா மோகன்பூர் துணை மின் நிலையத்தை நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார்

எரிசக்தி அமைச்சகம்  திரிபுராவில் 132/33/11 கி.வா மோகன்பூர் துணை மின் நிலையத்தை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் திரிபுராவில் 132/33/11 கி.வா மோகன்பூர் துணை மின் நிலையத்தை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்தத் துணை நிலையம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. 27 ஆகஸ்ட், 2021 அன்று நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்ச்சியில் திரிபுரா மாநில முதல் அமைச்சர், திரு பிப்லப் குமார் தேப், திரிபுரா மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. ஜிஷ்ணு தேவ் வர்மா மற்றும் திரிபுரா மாநிலக் கல்வி அமைச்சர்,  திரு. ரதன் லால் நாத் ஆகியோர் முன்னிலையில் நிதி அமைச்சர் இந்த துணை மின் நிலையத்தைத் தொடக்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் சேவை உரிமை சட்டம் வருமா

அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கு இரண்டு பிரதான பிரச்சனைகள். லஞ்சம் கேட்டு நிர்பந்தம் செய்வது, லஞ்சம் கொடுக்கும் வரை வேலையை செய்து முடிக்காமல் கால தாமதம் செய்து இழுத்தடிப்பு செய்வது.  இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் என்ன தீர்வு? அறப்போர் இயக்கம் உங்கள் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு சேவை உரிமை சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற மாதிரி சட்டத்தை அனுப்ப இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை உருவாக்கும் முன்பு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.அரசாங்க சேவைகளை பெற்றுக் கொள்ள, கிட்டத்தட்ட அனைவரிடமும் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது போன்ற லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை தடுக்க தண்டிக்க சேவை பெறும் உரிமை சட்டம் உதவும்.  அறப்போர் இயக்கம் மக்கள் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு சேவை உரிமை சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சட்ட மாதிரி வரைவை அனுப்ப இருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த சட்டத்தை உருவாக்கும் முன்பு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது.அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர

ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் வாழ்த்து டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது தடகள வீரர்கள் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறார்கள்! பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனை படைத்த சுமித் அந்திலால் நாடு பெருமை கொள்கிறது. மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற சுமித்துக்கு வாழ்த்துகள். உங்க சமள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒரே நாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவின் வெற்றி பயணம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்கிறது பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமித் அந்தில் தங்கம் வென்றதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்  கோவிந்த் மற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன