முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி மாணவன் புதுகையில் பரபரப்பு

செய்தியாளர் ஆர்.சரத்பவார்  :               மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி  மாணவன் சிகையைத் திருத்த சொன்ன தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை.. நல்ல ஆசிரியர் கிடைக்க மாணவர்கள் தவம் செய்ய வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்கள் கிடைக்க ஆசிரியர்களும் தவம் செய்ய வேண்டும், அது கடந்த காலத்தில் ஆசான் சீடர் உறவு மேன்மையானது, உ.வே.சாமிநாத ஐயருக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை போல கிட்டினால்  தான் நிறைவான திறன் படைத்த மாணவர்கள் வரமுடியும் ஆனால் இப்போது 70 ,,சதவீதம் நல்ல ஆசிரியரும் இல்லை  நல்ல மாணவர்களும் இல்லை    புதுக்கோட்டை நகரில் மசுவாடி பகுதி அரசினர் மாதிரிப் பள்ளியில் படித்த இரண்டு முடியை வளர்த்து புள்ளிங்கோ எனும் குருவி மண்டை போல செய்தவர்கள் மொத்தம்   மாணவர்கள் 800 க்கும் மேல் படிக்கும் பள்ளியில் நேற்றுக்  காலை தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் அகியோர் மாணவர்களை தலை முடியை வெட்டிச் சீர்திருத்தம் செய்து ஒழுங்காகப் பள்ளிக்கு வர வேண்டும் எனப்  பலமுறை அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் பள்ளியில்  படிக்கும் மாணவர்களை கோபமாகப் பேசியும் திருத்துவதற்கு முயற்சித்து வந்த தலைமை ஆசிரியர்- மற்றும் துணை ஆசிரியர

திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த வீடுகளில் போய் கேமராக்கள் மூலம் பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

இனிமேல் திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த  வீடுகளில் போய் கேமராக்கள் மூலம்  பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை" என அறிவித்திருக்கும் நிலையில் இத்தனை நாளும் அனுமதியை வாங்கிக்கொண்டா அங்கு கேமாராக்கள்  உள்ளே வந்தது? வீட்டுப்பக்கம் நிக்காமல் அப்டியே ரோட்டுப் பக்கமாகவே நின்று சூட் செய்யப் போறாங்க, அவ்வளவு தான்! கேமரா இல்லாமல் மொபைலில் படம் புடிக்கறதுல மீடியா-யூடியூபர்களை விட பொதுமக்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது, அதை என்ன செய்ய முடியும்? ஒழுக்கமும் கருணையும் பிறர்வலியை தன்வலியாய் உணரும் மனிதநேயமும், கூடவே பயணப்பட்டிருந்தால் இது போன்ற 'நோ அட்மிசன்' எனும் நடிகர் சங்கத்தின் கடிதம்  வந்திருக்காது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் , மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் போன்ற திரையுலக ஆளுமைகளின் இறப்பின் போது மட்டும்  இப்படி யாரும் தடுத்துச் சொல்லவில்லை. காரணம்  பிரபல திரைநட்சத்திரம் செத்துப் போனால், அவர் குடும்பத்தையே மொத்தமாய் நொறுக்கிப் போட்டு விடுவதும் அதிலும் சிறப்பாக ஜூஸ் பிழிந்தது நாங்கள் தான் என்று ஒன்றிரண்டு முந்திரிக்கொட்டை சேனல்கள் பிரேக்கிங் நியூஸ் போடுவதும் ஒரு வகை.

யுத் அபயாஸ்-23" பயிற்சியில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டது இந்தியக் குழு

அமெரிக்காவின் அலாஸ்கா வைன்ரைட் துறைமுகத்தில் நடைபெறும் "யுத் அபயாஸ்-23" பயிற்சியில் பங்கேற்க இந்தியக் குழு புறப்பட்டது அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள வெயின்ரைட் துறைமுகத்தில் திங்கள் கிழமை முதல் அக்டோபர் 8 வரை 19வது "யுத் அபயாஸ்" பயிற்சி நடத்தப்பட உள்ளது. இது இந்திய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும் மேற்கொள்ளும் பயிற்சியாகும். இரு நாட்டின் ராணுவம் பங்கேற்கும் முந்தைய 18வது பயிற்சி கடந்த 2022 நவம்பரில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவுலியில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் 350 வீரர்கள் கொண்ட இந்திய ராணுவக் குழு பங்கேற்கிறது. இந்திய தரப்பில் இருந்து முன்னணி பட்டாலியன் மராத்தா லைட் காலாட்படை படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1-24 காலாட்படை பட்டாலியன் 1 வது படையணி போர் குழு அமெரிக்க தரப்பில் இருந்து பங்கேற்கும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இயங்கும் தன்மையை மேம்படுத்த இரு தரப்பும் தொடர்ச்சியான தந்திரோபாய பயிற்சிகளை மேற்கொள்ளும். இரு தரப்பைச் சேர்ந்த வீரர்களும் தங்கள் அனுபவங்கள் மற்றும் சி

மும்பையின் புகழ்பெற்ற கணபதி பந்தலில் மத்திய உள்துறை அமைச்சர் வழிபட்டார்

மும்பையின் புகழ்பெற்ற கணபதி பந்தலில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வழிபட்டார் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா  மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள உலகப் புகழ்பெற்ற லால் பாக்கா ராஜாவில் விநாயகர் உற்சவ நிகழ்வில் வழிபாடு செய்தார். இதுதவிர மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கணபதி பந்தலில் அமித் ஷா வழிபாடு நடத்தினார். அப்போது மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் மகாராஷ்டிரா முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் திரு தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று கணபதி பப்பாவை   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபட்டார்.

9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி -சென்னை வந்தேபாரத் ரயில் உள்ளிட்ட 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 9 வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்ட புதிய ரயில்கள்: உதய்பூர் - ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹைதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ராஞ்சி - ஹவுரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜாம்நகர்-அகமதாபாத்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் திரு. நரேந்தி

காசி தேசிய கலாச்சார மஹோத்சவ 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரை

 உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தேசிய கலாச்சார மஹோத்சவ 2023 நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்று வந்த தேசிய கலாச்சார மஹோத்சவ நிகழ்வின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுமார் ரூ.1115 கோடி செலவில் கட்டப்பட்ட 16 அடல் உண்டு உறைவிடப் பள்ளிகளை பிரதமர் திறந்து வைத்தார். காசி தேசிய விளையாட்டு போட்டிகளுக்காக பதிவு செய்வதற்கான இணையதளத்தையும் திரு மோடி தொடங்கி வைத்தார். காசி தேசிய கலாச்சார மஹோத்சவத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக அடல் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திரமோடி, பகவான் மகாதேவரின் ஆசீர்வாதத்துடன் காசி மீதான மரியாதை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், நகரத்திற்கான கொள்கைகள் புதிய உயரங்களை அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றியில் காசியின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர்,

நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், என் மண் எனது தேசம் இயக்கம்

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கோவையில் பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு ‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஈரோடு மாவட்ட இளையோர்  நலஅதிகாரி திரு ஆசிஷ் சஞ்சய் சேட் மற்றும் தேசிய இளைஞர் அமைப்பின் தன்னார்வளர்களிடம் இருந்து, மண் கலசங்களை அமைச்சர் பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் இதுவரை 7530 கிராமங்கள் பங்கேற்றுள்ளன. இது மொத்த கிராமங்களில் 40.42 சதவீதம் ஆகும். இதில் கலந்து கொண்ட குடும்பங்கள் 1,68,067. பங்கேற்ற மக்கள் 2,29,562 பேர். 1857 முதல் 1947 வரை, 90 ஆண்டுகள், சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் நடைபெற்ற போது, எண்ணற்ற அறியப்பட்ட மற்றும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த நோக்கத்திற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், என் மண் எனது தேசம் ('மேர

தேவைப்பட்டால் நியோமேக்ஸ் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை

நியோமேக்ஸ் மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்! சென்னை உயர்நீதிமன்றம் மதுரை  கிளை எச்சரிக்கை விடுத்தது, நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி மோசடி செய்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து உயர் நீதிமன்றம் , தேவைப்பட்டால் அவர்களின் தொலைபேசித் தொடர்புகள் ஆய்வுக்குட்படுத்தப்படுமெனவும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவில்லை என்றால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என மதுரை கிளை சென்னை  உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, முக்கியக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் சிவகங்கை, உள்ளிட்ட கிளைகளை நிர்வகித்த 17 நிர்வாகிகள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகிய ஐந்துபேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சார்ந்த கௌதமி  தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். நான் ஒரு கோடி ரூபாய் நியோமேக்ஸில் முதலீடு செய்தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏ

வருமானவரிப் பிடித்தம் மற்றும் வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ்   சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும் அலுவலர்களுக்கு  திரு M முரளி, IRS, வருமானவரி ஆணையர் (டி.டி.எஸ்), சென்னை மற்றும் திரு M அர்ஜுன் மாணிக், IRS, வருமானவரி இணை ஆணையர், டி டி எஸ்   சரகம்-3, சென்னை இவர்களின் அறிவுறுத்தலின்படி,  இன்று (20-09-2023) சிங்காரவேலர் மாளிகை, சென்னையில்  வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் தொடர்பான விழிப்புணர்வு கருதரங்கத்தை நடத்தினர். திரு ராஜன், உதவி சம்பள கணக்கு அலுவலர் (வடக்கு) தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். வருமானவரி அலுவலர் திரு L ராஜாராமன், வருமானவரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு TDS / TCS விதிகளின் சாராம்சத்தை விளக்கினார். மேலும் அவர், வருமானவரிப் பிடித்தம் செய்யவேண்டியதன் முக்கியத்துவம், வருமானவரிப் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்த வேண்டிய கட்டாயம், TDS/TCS காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய தேவை

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் முக்கிய அம்சமான மசோதா, மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் நூற்றி இருபத்தி எட்டாவது திருத்த மசோதா-2023-க்கு ஆதரவு அளித்து அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்கள், கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார் "தேசத்தின் நாடாளுமன்ற பயணத்தில் இது ஒரு பொன்னான தருணம்" "இது பெண்சக்தியின் நிலையை மாற்றி நம்பிக்கையை உருவாக்கி நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்" மக்களவையில் அரசியலமைப்பின் 128-வது திருத்த மசோதா, 2023-க்கு ஆதரவு அளித்து அர்த்தமுள்ள விவாதங்களில்  பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவைத் தலைவர் ஆகியோர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் முக்கிய அம்சமான இந்த மசோதா, மக்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும் அவையில் எழுந்து பேசிய பிரதமர், 'இந்திய நாடாளுமன்றப் பயணத்தின் பொற்காலம்' என்று  நேற்றைய தினத்தைக் குறிப்பிட்டார். இந்த சாதனைக்கு அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும், அவற்றின்

புதுவைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகம் சார்பில் ரத்ததான முகாம்

புதுவைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகம் சார்பில் ரத்ததான முகாம் புதுவை இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனையுடன் இணைந்து புதுவைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநரகம் சார்பில் 20 செப்டம்பர் 2023 அன்று ரத்ததான முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பல்கலைக்கழகத்தின் கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகள் சிறப்பு அலுவலர் பேராசிரியர் ராஜீவ் ஜெயின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,   ரத்த தான முகாம்கள் உயிர் காக்கும் சேவையை செய்யக்கூடிய மிகப்பெரிய சமூகப்பணி என்று தெரிவித்தார். புதுவைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்திய இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் ரத்தமாற்று மருத்துவப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் டயானா ஷர்மிளா பேசுகையில், இத்தகைய மருத்துவ முகாம்கள் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து நடத்தப்படும் போது அது மிகப்பெரிய பலனை அளிக்கிறது என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய தொலைதூரக் கல்வி இயக்குநர் பேராசிரியர் அரவிந்த் குப்தா, ரத்ததான முகாம்களில் தாமாக முன்வந்து ரத்தத்தை கொடையாக அளிக்கும் இளம் மாணவர்கள் சமூகத்தின் நம்பிக்கை நட்சத

ஜி.எஸ்.ஆர் 663 (ஈ) அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது.

தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் போக்குவரத்து வாகனங்களை கட்டாயமாக பரிசோதிப்பதற்கான தேதியை நீட்டிப்பதற்கானஅறிவிப்பு கட்டாய சோதனைக்கான தேதி இப்போது 1 அக்டோபர் 2024 ஆகும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் (சி.எம்.வி.ஆர்) 1989-ன் விதி 175 -ன் படி, பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் போக்குவரத்து வாகனங்களை கட்டாயமாக பரிசோதிப்பதற்கான தேதியை நீட்டிக்க வகை செய்யும் 2023 செப்டம்பர் 12 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 663 (ஈ) அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கட்டாய சோதனைக்கான தேதி இப்போது  2024 அக்டோபர் 1  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விதி 175 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையம் பதிவு ஆணையத்தின் அதிகார வரம்பில் செயல்படும் தானியங்கி சோதனை நிலையம் (இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு வரும்) மூலம் மட்டுமே வாகன தகுதி சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு ஊழல் வழக்கில் கபில் சிபல் ஆஜராகிறார்

எடப்பாடி கே. பழனிசாமி 2017 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக.  இருந்த நிலையில், டி.வி.& ஏ.சி.யால் நடத்தப்பட்ட விசாரணையானது  யாதெனில் அவருக்கு விருப்பமான அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதில் அவர் செய்ததான  டெண்டர் முறைகேடு ஊழல் (Highway Tender Scam Case) வழக்கில் அவரது பங்கு குறித்து விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோரடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், சமீபத்தில், தமிழ்நாடு அரசு, ஒரு புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டதென சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்தாலும் இப்போது உச்சநீதிமன்றத்தில்  விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னால் அமைச்சருமான கபில் சிபல் ஆஜராகக் கூடாதெனவும் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்பட உள்ளது.

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை

 பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(வயது16) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார், 12 ஆம் வகுப்பில் படித்து வந்த லாரா மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், சென்னை, டிடிகே சாலையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணியளவில்  மன அழுத்தம் காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை 3 மணியளவில் இவர் மின்விசிறியின் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்…விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது, அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், வீட்டிலுள்ள பணியாளர்கள் உதவியுடன் மீட்டு உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்

மகளிர் உதவித் திட்டம் ஆயிரம் வந்ததும் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சத் தொகை பிடித்தமாகவே மக்கள் சீற்றம்

கல்வியை மருத்துவத்தை, மின்சாரத்தை இலவசமாக வழங்கினால் அடித்தள மக்கள் வாழ்வாதாரம் செழிப்பாகும் ஆனால் மாதம் ஆயிரம் வாங்கும் எந்தக் குடும்பமும் நிரந்தரமாக முன்னேறப் போவதில்லை என்பது மட்டும் உண்மை ஆனால், இதனால் தமிழ்நாடு அரசு பெரும் பொருளாதார இழப்பைச்  சந்திக்கும் நிலை .  இதைச் சரிக்கட்ட, எந்த வழியிலாவது, 1000 வாங்கும் குடும்பம் மற்றும்  வாங்காத குடும்பம் எனப்பாராமல் எல்லாக் குடும்பத்திலி ருந்தும், மாதம் ரூபாய் 2000 எந்தவகையிலாவது சுரண்டப்படும் என்பதே சுற்றுப் பொருளாதாரம் .ஆயிரம் ரூபாய் மாநில அரசு தந்தது. ஆயிரம் வந்த உடனேயே வங்கிக் கணக்கில் குறைந்த பட்சத் தொகை இல்லை என வங்கியில் தண்டனையாக 937 ரூபாயை  எடுத்துக் கொண்டது. பாவம் வக்கியில் கடன் பெற்று தலைமறைவாகி பின் தள்ளுபடி கேட்கும் பாவிஸ்ட்டுகளுக்குக் கொடுக்க வேண்டுமே..ம போச்சே”.. வந்தவுடன் மாயமான ரூபாய்.1000 மகளிர் உரிமைத் தொகை.. என அதிர்ச்சியான பெண்கள்! வேலையை காட்டிய வங்கிகள் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 பணம் வங்கிக் கணக்கில் வந்துள்ள நிலையில், அந்தப் பணம் சில நிமிடங்களிலேயே மாயமானதாகக் குற்றச்சாட்டு எழு

ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ் க்கு ரூபாய்.5 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் சித்தனவாசல் சிவலிங்கம்.  சித்தனவாசல் பூங்காவில் 1988-ஆம் ஆண்டு முதல்  இரவுக் காவலராகப் பணிபுரிந்தவர் பணி நிரந்தரம் கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் பல ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டும் அவர் ஆஜராகாததால் பொன்னையாவுக்கெதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில் செப்டம்பர் மாதம் .22-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சென்னை மாநகரக் காவல்துறை  ஆணையருக்கு நீதிபதி  உத்தரவிட்ட நிலையில். சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் ஆஜரானார்  பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா ஐஏஎஸ்  நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு பொன்னையா ஐஏஎஸ் நேரில் ஆஜரானார். அப்போது அவர் பல்வ

சட்டவிரோத போதைப் பொருட்களை அழித்தது டில்லி சுங்கத் துறை

ரூ.396.5 கோடி மதிப்புள்ள 147 கிலோ சட்டவிரோத போதைப் பொருட்களை அழித்தது டில்லி சுங்கத் துறை போதைப்  பொருட்களுக்கு (என்.டி.பி.எஸ்) எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தில்லி சுங்கத்துறை ரூ .396.5 கோடி மதிப்புள்ள 147 கிலோ சட்டவிரோத போதைப் பொருட்களை அழித்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் (சி.பி.சி.பி) அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மை மையத்தில் இந்தப் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. இந்த மையத்தில், 56.346 கிலோ ஹெராயின், 2.150 கிலோ எம்.டி.எம்.ஏ ஹைட்ரோகுளோரைடு, 0.2193 கிலோ மரிஜுவானா மற்றும் 1.6475 கிலோ கஞ்சா உள்ளிட்ட 60.3628 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் 87 கிலோ எடையுள்ள 10,894 என்.டி.பி.எஸ்-டி.டி.ஜி.இ.சி காப்ஸ்யூல்கள் ஆகியவை எரித்து அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட போதைப்பொருட்கள், புதுதில்லியில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் கைப்பற்றப்பட்டவையாகும். இந்த அழிப்பு நடைமுறை முழுவதும் உயர்மட்டக் குழுவால் கண்காணிக்கப்பட்டது. அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (எம் & டிஎம்) விதிகள்-2016-ன் கீழ் இந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.