முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நடிகர் சித்தார்த்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கன்னட அமைப்பினர் ரகளை

கர்நாடகா மாநிலம்  மாண்டியாவிலும் பெங்களூரிலும் முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த, பல சங்கங்கள் கோரிக்கை விடுத்த முழு அடைப்புக்கு கர்நாடகம்  முழுதும் ஆயிரத்து 900 அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த, காவக்துறை மாநில இயக்குநர் அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார்.  அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடையுத்தரவும் விதிக்கப்படுவதாக மாநகரக் காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளார்.நடிகர் சித்தார்த் நடித்த சித்தா படம் இன்று தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படத்தின் செய்தியாளர் சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக மாநில காவிரி போராட்டக் குழுவினர் திடீரென உள்ளே புகுந்து முழக்கங்கள் எழுப்பியதனால் பாதியிலேயே நடிகர் சித்தார்த் வெளியேறினார். நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது குரல் எழுப

வாச்சாத்தி வன்கொடுமை மேல் முறையீட்டு வழக்கில் நீதி வென்றது

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை   உறுதிப்படுத்தியதில்  நீதி வென்றது;  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரசு வேலையும், இழப்பீடும்  வழங்க வேண்டும் அது நியாயமானதே என பல்வேறு தலைவர்களின் கோரிக்கை தற்போது வலுக்கிறது, தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு  வழங்கப்பட்ட பத்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை இரத்து செய்யக் கோரி  தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை மற்றும் வனத்துறையைச் சேர்ந்த 27 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம், குறவாளிகளான அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  18 பெண்களுக்கு ரூபாய். பத்து லட்சம் இழப்பீட்டுடன்  அரசு பணியும்  அல்லது சுயதொழில் தொடங்க உதவிகளும்  வழங்கப்பட வேண்டுமென்றும் நீதிபதி சட்ட வழிமுறைப்படி ஆணையிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் முழுமையாக  ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதி இங்கு  வென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமாகவேனும்  நீதி கிடைக்கும் என்ற நம்பிக

வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு தலைவர்கள் இரங்கல்

 டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததுடன், நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. விவசாயத்தில் தனது புரட்சிகரமான பங்களிப்புகளைத் தாண்டி, டாக்டர் சுவாமிநாதன் கண்டுபிடிப்புகளின் மையமாகவும், பலருக்கு ஊக்குவிக்கும் வழிகாட்டியாகவும் இருந்தார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடையே அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளது. டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்தியா முன்னேற வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது. அவரது வாழ்க்கையும், பணியும் வரும் தலைம

வங்கியிலுள்ள மொத்த டெபாசிட்டிலிருந்து ரூபாய்.50,000 க்கு மேல் எடுக்க ஆர் பி ஐ அனுமதியில்லை

இந்திய ரிசர்வ் வங்கி, ‘ஒரு டெபாசிட் செய்பவர், வங்கியிலுள்ள மொத்த டெபாசிட்டிலிருந்து ரூபாய்.50,000க்கு மேல் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமலிலிருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வங்கியின் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், 5 லட்சம் ரூபாய் வரையிலான வைப்புத்தொகைக்கு வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து வைப்புத்தொகை காப்பீட்டு நன்மைகளைப் பெறுவார்கள் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கலர் மெர்ச்சண்ட் கூட்டுறவு வங்கியின் முன் அனுமதியின்றி கடன் வழங்கவோ பழைய கடன்களை புதுப்பிக்கவோ முடியாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  இது தவிர, அவர் முதலீடு செய்யவோ, புதிய டெபாசிட் பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

பா ஜ க மாநிலத் தலைமை அலுவலகப் பணியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

சென்னை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகப் பணியாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை - சென்னை தியாகராய நகர் பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதிமணி  வீட்டில் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்கள் முன் சோதனை நடத்தினர். தமிழ் நாட்டில் ரியல் எஸ்டேட் நில வர்த்தகத்  தொழிலில் ஈடுபட்டுள்ள 30 நபரின் வீடுகள்  மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் நேற்றுக் காலையில் துவங்கி அதிரடியாச் சோதனை நடத்தினர். பின்னர்  அமலாக்கத் துறையின் விசாரணையில் ஜோதிமணி கமலாலயத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. மேலும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவரான காளிதாஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகச் செயலாளர் ஆகியோரை ஜோதிமணியின் வீட்டுக்கே வரவழைத்து அமலாக்கத் துறையின் அதிகாரிகள் விசாரித்தனர். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சண்முகம் என்பவருக்கும், ஜோதிமணிக்கும் ஏதாவது தொடர்புள்ளதா, இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்திலும் அமலாக்கத் துற

நிலப்பதிவு மோசடிக்கு வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் மாவட்ட த்தில் நடந்த நிலப்பதிவு  மோசடிக்கு வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தருமபுரி டி.சி.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் : 'விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிராமத்திலுள்ள நிலத்தை நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடமிருந்து நாங்கள் வாங்கி வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால், பாண்டிச்ச்சேரி டி.ராமராஜ், கடலூர் சி.கே.எஸ்.கார்த்திகேயன், சென்னை கோடம்பாக்கம் வேலு, தடப்பெரும்பாக்கம் பொன்.ராஜா, நாமக்கல் எம்.சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிலத்துக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுக்க முடியாதென்றும் பத்திரப்பதிவு அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூபாய். பல லட்சத்தை இலஞ்சமாகத் தர வேண்டுமெனக் கோருகின்றனர். எனவே எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வானூர் சார் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' ,எனக் கோரியிருந்தார். இந்த வழக்கானது நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக முன்

மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி மாணவன் புதுகையில் பரபரப்பு

செய்தியாளர் ஆர்.சரத்பவார்  :               மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி  மாணவன் சிகையைத் திருத்த சொன்ன தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை.. நல்ல ஆசிரியர் கிடைக்க மாணவர்கள் தவம் செய்ய வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்கள் கிடைக்க ஆசிரியர்களும் தவம் செய்ய வேண்டும், அது கடந்த காலத்தில் ஆசான் சீடர் உறவு மேன்மையானது, உ.வே.சாமிநாத ஐயருக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை போல கிட்டினால்  தான் நிறைவான திறன் படைத்த மாணவர்கள் வரமுடியும் ஆனால் இப்போது 70 ,,சதவீதம் நல்ல ஆசிரியரும் இல்லை  நல்ல மாணவர்களும் இல்லை    புதுக்கோட்டை நகரில் மசுவாடி பகுதி அரசினர் மாதிரிப் பள்ளியில் படித்த இரண்டு முடியை வளர்த்து புள்ளிங்கோ எனும் குருவி மண்டை போல செய்தவர்கள் மொத்தம்   மாணவர்கள் 800 க்கும் மேல் படிக்கும் பள்ளியில் நேற்றுக்  காலை தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் அகியோர் மாணவர்களை தலை முடியை வெட்டிச் சீர்திருத்தம் செய்து ஒழுங்காகப் பள்ளிக்கு வர வேண்டும் எனப்  பலமுறை அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் பள்ளியில்  படிக்கும் மாணவர்களை கோபமாகப் பேசியும் திருத்துவதற்கு முயற்சித்து வந்த தலைமை ஆசிரியர்- மற்றும் துணை ஆசிரியர

திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த வீடுகளில் போய் கேமராக்கள் மூலம் பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

இனிமேல் திரையுலகம் சம்மந்தப்பட்ட 'இறப்பு நடந்த  வீடுகளில் போய் கேமராக்கள் மூலம்  பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை" என அறிவித்திருக்கும் நிலையில் இத்தனை நாளும் அனுமதியை வாங்கிக்கொண்டா அங்கு கேமாராக்கள்  உள்ளே வந்தது? வீட்டுப்பக்கம் நிக்காமல் அப்டியே ரோட்டுப் பக்கமாகவே நின்று சூட் செய்யப் போறாங்க, அவ்வளவு தான்! கேமரா இல்லாமல் மொபைலில் படம் புடிக்கறதுல மீடியா-யூடியூபர்களை விட பொதுமக்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது, அதை என்ன செய்ய முடியும்? ஒழுக்கமும் கருணையும் பிறர்வலியை தன்வலியாய் உணரும் மனிதநேயமும், கூடவே பயணப்பட்டிருந்தால் இது போன்ற 'நோ அட்மிசன்' எனும் நடிகர் சங்கத்தின் கடிதம்  வந்திருக்காது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் , மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் போன்ற திரையுலக ஆளுமைகளின் இறப்பின் போது மட்டும்  இப்படி யாரும் தடுத்துச் சொல்லவில்லை. காரணம்  பிரபல திரைநட்சத்திரம் செத்துப் போனால், அவர் குடும்பத்தையே மொத்தமாய் நொறுக்கிப் போட்டு விடுவதும் அதிலும் சிறப்பாக ஜூஸ் பிழிந்தது நாங்கள் தான் என்று ஒன்றிரண்டு முந்திரிக்கொட்டை சேனல்கள் பிரேக்கிங் நியூஸ் போடுவதும் ஒரு வகை.

யுத் அபயாஸ்-23" பயிற்சியில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டது இந்தியக் குழு

அமெரிக்காவின் அலாஸ்கா வைன்ரைட் துறைமுகத்தில் நடைபெறும் "யுத் அபயாஸ்-23" பயிற்சியில் பங்கேற்க இந்தியக் குழு புறப்பட்டது அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள வெயின்ரைட் துறைமுகத்தில் திங்கள் கிழமை முதல் அக்டோபர் 8 வரை 19வது "யுத் அபயாஸ்" பயிற்சி நடத்தப்பட உள்ளது. இது இந்திய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும் மேற்கொள்ளும் பயிற்சியாகும். இரு நாட்டின் ராணுவம் பங்கேற்கும் முந்தைய 18வது பயிற்சி கடந்த 2022 நவம்பரில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவுலியில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் நடைபெறும் பயிற்சியில் 350 வீரர்கள் கொண்ட இந்திய ராணுவக் குழு பங்கேற்கிறது. இந்திய தரப்பில் இருந்து முன்னணி பட்டாலியன் மராத்தா லைட் காலாட்படை படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 1-24 காலாட்படை பட்டாலியன் 1 வது படையணி போர் குழு அமெரிக்க தரப்பில் இருந்து பங்கேற்கும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இயங்கும் தன்மையை மேம்படுத்த இரு தரப்பும் தொடர்ச்சியான தந்திரோபாய பயிற்சிகளை மேற்கொள்ளும். இரு தரப்பைச் சேர்ந்த வீரர்களும் தங்கள் அனுபவங்கள் மற்றும் சி

மும்பையின் புகழ்பெற்ற கணபதி பந்தலில் மத்திய உள்துறை அமைச்சர் வழிபட்டார்

மும்பையின் புகழ்பெற்ற கணபதி பந்தலில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வழிபட்டார் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா  மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள உலகப் புகழ்பெற்ற லால் பாக்கா ராஜாவில் விநாயகர் உற்சவ நிகழ்வில் வழிபாடு செய்தார். இதுதவிர மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கணபதி பந்தலில் அமித் ஷா வழிபாடு நடத்தினார். அப்போது மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் மகாராஷ்டிரா முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் திரு தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று கணபதி பப்பாவை   மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிபட்டார்.